ஐஸ்வர்யங்கள் பெருக்கும்! பஞ்சாங்க ரகசியங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/wealth-abounds-almanac-secrets-prasanna-astrologer-i-anandi

னித வாழ்வில் கடைப் பிடிக்கவேண்டிய நெறி முறைகள், சாஸ்திரம் தொடர்பான தகவல்களைத் தரும் நல்ல வழிகாட்டியாக ஜோதிடம் திகழ்கிறது. ஜோதிட மென்பது நவகிரகங்களின் இயக்கத் தைக் கணிக்கும் கணித முறையாகும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்மூலம் நவகிரகங்கள் உலகத்தை இயக்கு கின்றன. நவகிரகங்களின் செயல்பாடு களைப் பற்றிக் கூறுவது ஜோதிடம்.

அதேபோல் வாரம், திதி, நட்சத் திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக்கொண்ட பஞ்சாங்க மின்றி ஜோதிடமில்லை. பஞ்சாங்கமே ஜோதிட சாஸ்திரத்தின் அரிச்சுவடி என்றால் மிகையாகாது.

ஒருவர் பிறந்தநாளின் பஞ்சாங்கத்தை வைத்து அவரின் வாழ்க்கை முறையை அறியமுடியும். அதேபோல தினசரி பஞ்சாங்கம் உலகியல் மாற்றத் தினால் தனி ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டும். நவகிரகங்களின் இயக்கத்தைக் கணிக்க உதவியாக இருக்கும் பஞ்சாங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அனைவரின் கடமையாகும்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர் களுக்கும், பாரம்பரியத்தைப் பின்பற்று பவர்களுக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இருக்கும். பல சிவ, விஷ்ணு ஆலயங்களில் மூலஸ்தானத்திலுள்ள இறைவனுக்கு தினமும் காலை நேரத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இன்றும் இருந்துவருகிறது. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் சுபநாள் பார்க்க பஞ்சாங்கம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

நவகிரகங்களின் செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்துகொள்பவர் களுக்கு எல்லாவிதமான சுபப் பலன்களும் உண்டாகும். விரோதிகள் புறமுதுகு காட்டு வார்கள். ஜாதகத்திலுள்ள தோஷங்கள் விலகும். நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வர்யங் களும் உண்டாகும். தினமும் பஞ்ச அங்கங் களைப் பற்றித் தெரிந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அளவிடமுடியாது.

தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாவம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொண்டு அன்றாடப் பணிகள

னித வாழ்வில் கடைப் பிடிக்கவேண்டிய நெறி முறைகள், சாஸ்திரம் தொடர்பான தகவல்களைத் தரும் நல்ல வழிகாட்டியாக ஜோதிடம் திகழ்கிறது. ஜோதிட மென்பது நவகிரகங்களின் இயக்கத் தைக் கணிக்கும் கணித முறையாகும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்மூலம் நவகிரகங்கள் உலகத்தை இயக்கு கின்றன. நவகிரகங்களின் செயல்பாடு களைப் பற்றிக் கூறுவது ஜோதிடம்.

அதேபோல் வாரம், திதி, நட்சத் திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக்கொண்ட பஞ்சாங்க மின்றி ஜோதிடமில்லை. பஞ்சாங்கமே ஜோதிட சாஸ்திரத்தின் அரிச்சுவடி என்றால் மிகையாகாது.

ஒருவர் பிறந்தநாளின் பஞ்சாங்கத்தை வைத்து அவரின் வாழ்க்கை முறையை அறியமுடியும். அதேபோல தினசரி பஞ்சாங்கம் உலகியல் மாற்றத் தினால் தனி ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டும். நவகிரகங்களின் இயக்கத்தைக் கணிக்க உதவியாக இருக்கும் பஞ்சாங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அனைவரின் கடமையாகும்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர் களுக்கும், பாரம்பரியத்தைப் பின்பற்று பவர்களுக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இருக்கும். பல சிவ, விஷ்ணு ஆலயங்களில் மூலஸ்தானத்திலுள்ள இறைவனுக்கு தினமும் காலை நேரத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இன்றும் இருந்துவருகிறது. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் சுபநாள் பார்க்க பஞ்சாங்கம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

நவகிரகங்களின் செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்துகொள்பவர் களுக்கு எல்லாவிதமான சுபப் பலன்களும் உண்டாகும். விரோதிகள் புறமுதுகு காட்டு வார்கள். ஜாதகத்திலுள்ள தோஷங்கள் விலகும். நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வர்யங் களும் உண்டாகும். தினமும் பஞ்ச அங்கங் களைப் பற்றித் தெரிந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அளவிடமுடியாது.

தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாவம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொண்டு அன்றாடப் பணிகளை அனுசரிப்பது நல்லது. இனி பஞ்ச அங்கங்களைப் பற்றிய விரிவான தகவல்களைக் காணலாம்.

1. வாரம், 2. திதி, 3. நட்சத்திரம், 4. யோகம், 5. கரணம் ஆகியவையே பஞ்ச அங்கங்கள்.

1. வாரம்

வாரம் என்றால் கிழமை அல்லது தினமென்று பொருள். பஞ்சபூதங்களில் அக்னியைக் குறிக்கும் கிழமையானது ஒருவரின் ஆற்றல், செயல், உடல் வலிமையைக் குறிக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகள் வாரம் எனப்படும். ஒவ்வொரு கிழமையும் சூரியன் உதயமாகும் நேரத்தில் ராகு- கேது நீங்கலாக ஏழு கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும். சூரியன் உதயமாகும்போது இருக்கும் கிரகத்தின் ஆதிக்கத்தின் அடிப்படையில் அந்தந்த கிரகங்களின் பெயர்களை நமது முன்னோர்கள் சூட்டியுள்ளார்கள்.

வாரத்தை இரு கண்ணுடைய நாள் (சுப வாரம்), கண்களற்ற குருட்டு நாள் (அசுப வாரம்), ஒரு கண்ணுடைய நாள் (மத்திமமான சுப வாரம்) என மூன்றாக வகைப்படுத்தலாம். அதன் அடிப்படையில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் இரு கண்ணுடைய சுபநாட்கள் என்பதால், சுப நிகழ்வுகளை நடத்தலாம். செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிழமைகள் கண்களற்ற குருட்டு நாள் என்பதால் சுப நிகழ்வுகளைத் தவிர்ப்பது உத்தமம். ஞாயிற்றுக்கிழமை ஒரு கண்ணுடைய மத்திமமான நாள் என்பதால் இயன்றவரை சுப நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும்.

ஒருவரின் பிறந்த கிழமையின் அதிபதி வாராதிபன். கிழமைநாதன் சுபத்துவம் பெற்றிருக்கவேண்டும். உதாரணமாக, பிறந்த கிழமை புதனென்றால் வாராதிபன் புதன். இவர் ஜாதகத்தில் 3, 6, 8, 12-ல் மறையக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட அசுபர்களின் இணைவு, பார்வை பெற்றால் ஜாதகருக்கு உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். இதற்கு எந்த மருத்துவ சிகிச்சை எடுத்தாலும் தீர்வாகாது, வாராதிபனுக்குப் பரிகாரம் செய்தால் உடல்ரீதியான பிரச்சினைகள் எளிதில் குணமாகும். வாராதிபதிக்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இல்லையென்றால் ஜாதகருக்கு நீடித்த நோய்கள் இருக்காது. வந்தாலும் எளிதில் குணமாகிவிடும்.

ss

2. திதி

திதி என்பது வானில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே உள்ள தூரமாகும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேரெதிரில் 180 டிகிரியில் இருப்பார்கள். சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறார் என்பதைக் குறிப்பதே திதியாகும். அமாவாசையன்று சேர்ந்திருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமையன்று பிரிந்து, மீண்டும் சேர்வதற்கு 30 நாட்களாகும். இந்த 30 நாட்களும் 30 திதியாகும்.

அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் (15 நாட்கள்) தொடங்கி பௌர்ணமிவரை சுக்லபட்ச திதிகள் (வளர்பிறை); பௌர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசைக்கு முந்தைய நாள்வரை கிருஷ்ண பட்ச திதிகள் (15 நாட்கள் தேய்பிறை) என்று அழைக் கப்படும். ஆக மொத்தம் 30 திதிகள்.

பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தைக் குறிப்பது திதி. ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உறவுமுறை பேணுவதில் அவருக் குண்டான தகுதியை சுட்டிக்காட்டும். திதி சந்திரனின் நாளாகும். பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடிவரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப் பட்டிருக்கும். அந்த திதிகளுக்கேற்ற காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு.

பிரதமை: இந்த திதியின் அதிதேவதை அக்னி என்பதால் அக்னி சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். மத சடங்குகளை மேற்கொள்ளலாம். வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகந்தது. திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்யக்கூடாது.

துவிதியை: இந்த திதியின் அதி தேவதை பிரம்மன். அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரத மிருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபட லாம்.

திரிதியை: இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி). சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி. குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம்.

சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னி பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்கள்) செய்ய உகந்த திதி. இதன் அதிதேவதை விநாயகர். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன்மூலம் கேது தோஷம் விலகும்.

பஞ்சமி: இதன் அதிதேவதை நாகம் என்பதால் இது நாக வழிபாட்டுக்கு உகந்த திதியாகும். நாகதோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகப் பிரதிஷ்டைசெய்து வழிபட, நாகதோஷம் விலகும். நாக பஞ்சமி மிக விசேஷமானது. எல்லா சுப காரியங்களையும் செய்ய ஏற்ற திதியாகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்துகொள்ளலாம். விஷபயம் நீங்கும்.

சஷ்டி: இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன். முருகனை சஷ்டி விரத மிருந்து வழிபட சகல நலன்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன்மூலம் நன்மைகள் பெருகும். சிற்ப, வாஸ்து காரியங் களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர் களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

சப்தமி: இதன் அதிதேவதை சூரியன் என்பதால் இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும். பயணம் மேற்கொள்ள உகந்த திதி. இதில் வீடு, வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்துகொள்ளலாம். திருமணம் செய்யலாம். ஆடை, ஆபரணங்கள், இசைக்கருவிகள் வாங்கலாம்.

அஷ்டமி: ஐந்து முகம்கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை என்பதால், தீராத பிரச்சினைக்கு இந்தநாளில் சிவ வழிபாடு செய்யலாம். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நடனம் பயிலத் தொடங்கலாம்.

நவமி: இந்த திதியின் அதிதேவதை அம்பிகை என்பதால் சத்ருஜெயம் உண்டாகும். எதிரிபயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம்.

தசமி: இந்தத் திதிக்கு அதிதேவதை தர்மராஜன். அனைத்துவிதமான சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப் பயணங்களுக்கு உகந்த நாளிது. கிரகப் பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

ஏகாதசி: இதன் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். விரதமிருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்துகொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

துவாதசி: இதன் அதிதேவதை விஷ்ணு ஆவார். மதச்சடங்குகளில் ஈடுபடலாம்.

திரயோதசி: இதன் அதிதேவதை நந்திதேவர். சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். தெய்வ காரியங் களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர் களாக்கிக்கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி: இந்த திதியின் அதிதேவதை காளி. ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயிலவும் உகந்த நாள் இது. சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. துர்மரணம் அடைந்தவர்களுக்குத் திதி கொடுக்கலாம்.

பௌர்ணமி: இதன் அதிதேவதை பராசக்தி. மங்கள காரியங்களில் ஈடுபடலாம். காரியசித்தி தரும் விரதங்களை மேற்கொள்ளலாம்.

அமாவாசை: இதன் அதிதேவதை சிவன், சக்தி. பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளைச் செய்யலாம். தான, தர்ம காரியங்களுக்கு உகந்த நாள்.

திதிகளை சுப- அசுப மற்றும் மத்திம திதிகள் என மூன்றாக வகைப்படுத்தலாம். துவிதியை, திருதியை, பஞ்சமி, தசமி, திரயோதசி , சதுர்த்தசி ஆகிய திதிகள் சுப நிகழ்வுகளுக்கு மிகமிக உன்னதமானவை.

பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகளில் அசுபத் துவம் நிறைந்திருப்பதால் சுப நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும். சஷ்டி, சப்தமி, ஏகாதசி, துவாதசி மற்றும் சதுர்த்தசி ஆகியவை மத்தி மமான திதிகள் என்பதால் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

திதி சூன்யம்

சூரிய- சந்திரர்களின் கதிர்வீச்சுகள் 12 ராசிகளுக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும் போது மட்டுமே ஒவ்வொரு ராசியும், அதில் நின்ற கிரகங்களும் தத்தம் வேலையை பரிபூரணமாக நடத்தும். சூரிய- சந்திரருடைய கதிர்வீச்சு கிடைக்காத ராசியே திதிகளின் விஷ சூன்ய ராசிகள் எனப்படும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பன்னிரு ராசிகளுக்கும் பரிபூரண கதிர்வீச்சு கிடைக்கிறது. மற்ற திதிகளில் பிரதமைமுதல் திரயோதசி வரையான நாட்களில் இரண்டு ராசிகள் சூன்யமடைகின்றன. சதுர்த்தசி திதியில் மட்டும் நான்கு ராசிகள் சூன்யமடைகின்றன.

திதி சூன்ய ராசிகள் ஜாதகப் பலன்களைத் தீர்மானம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி, உச்சமடைந்து வலிமைபெற்ற லக்ன சுப கிரகங்கள்கூட மிகுதியான அசுபப் பலனையும், அசுப கிரகங்கள் சுபப் பலனையும் தந்து விடும். சூன்யமடைந்த கிரகத்தின் நட்சத் திரத்தில் அமர்ந்த கிரகமும் வலிமையிழக்கும்.

இரண்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகத்தின் ஒரு வீடு சூன்யமடைந்தாலும் மற்ற வீட்டிற்கு சுப பலம் ஏற்படும். ஒரே காலகட்டத்தில் இரண்டு பாவகம் பாதிக்கும் சூழழும் சிலசமயம் உருவாகும். திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் என்பதால், சூன்யமடைந்த திதியின் அதிதேவதையை வழிபடலாம் அல்லது சூன்யமடைந்த கிரகத்தை வலிமைப்படுத்த பாதிப்பு குறையும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala270522
இதையும் படியுங்கள்
Subscribe