ஐந்தாம் பாவகமே உயர்ந்த பாவகம் ஒரு ஜாதகத்தில் அடிப்படைத் தேவையான உணவு, உடை, வாடகை வீட்டுத் தேவையை நிறைவேற்றுவது இரண்டாமிடம். தனது மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் முழுமை யான தேவைகளை கடனில்லாமல் நிறைவேற்றக் கூடியது ஐந்தாம் பாவகம். தனது மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் தேவையை நிறைவுசெய்து, தனது அடுத்த தலைமுறைக்குத் தேவையானதை சேர்த்து வைப்பது எட்டாமிடமாகும்.
பணபர ஸ்தானத்தின் இயக்கம் இவ்வாறு பாவகத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும். நான்கு பணபர ஸ்தானமும் ஒருசேர யாருக்கும் இயங்காது. பூர்வபுண்ணிய பலப்படி இரண்டாமிடம் மட்டும் சுபத்துவம் பெற்றவருக்கு- அதாவது அடிப்படை வாழ்வாதாரத்தை மட்டும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற ஒருவருக்கு 11-ஆமிடத்தை இயக்கி பெரும் கோடீஸ்வரனாக முடியாது.
11-ஆம் அதிபதியின் தசாபுக்தி நடந்தால் "மல்டி மில்லியன'ராக, கோடீஸ்வரான மாற முடியும். ஒவர் நைட்டுல ஒபாமாவாக முடியும்.' மேலும் 2-ஆம் பாவகம் பலம்பெற்ற ஒருவருக்கு 2-ஆம் பாவகத்திற்கு அடுத்த ஸ்தானமான 5-ஆமிடத்தை- பூர்வபுண்ணிய ஸ்தானத்தை இயக்கி வீடு, வாசல், நல்ல பிள்ளைகள், அன்பான மனைவி, ஆறுதலான பெற்றோர் களுடன், கடனில்லாப் பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தரமுடியும். இதைத்தான் "ஆல்பா மைன்ட் பவர்' எனப் படும் ஆழ்மனப் பயிற்சி கற்பிக்கிறது.
தற்போது பணவரவை மேம்படுத்தக் கூடிய பயிற்சி வகுப்புகள் பல நடந்து கொண்டிருக்கிறது. 30 நாட்களில் உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுதலையாகும் பயிற்சி வகுப்புகள் பல உள்ளன. ஏன்- மூன்று மணி நேரத்தில் எப்படி பணத்தை வரவழைக்கும் பயிற்சி வகுப்புகளும் உள்ளன. இதுபோன்ற வகுப்புகளை நம்பி 5,000 முதல் 10,000 ரூபாய்வரை இழந்தவர்கள் அதிகம். பயிற்சி வகுப்பு நடத்துபவருக்கு 5-ஆம் பாவகம் இயங்கி, அவரின் குடும்பம் வறுமை மற்றும் கடனில்லாமல் வாழும். 5-ஆம் பாவகம் என்பது மதிநுட்பத்தைப் பயன்படுத்தி பிறரைக் கவர்ந்திழுப்பதாகும்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர் களுக்கு 5-ஆம் பாவகம் வலிமை குறைவாக இயங்கும். அதனால்தான் மதிமயங்கி, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைந்து மேலும் ஏமாறுகிறார்கள்.
பயிற்சி வகுப்பை நடத்துபவர்களும் இந்த 5,000, 10,000-த்திற்கு தான் அவஸ்தைப் படுகிறார்கள் என்ற ஞானம் 5-ஆம் பாவகம் பலம் குறைந்தவர்களுக்குப் புரியாது. ஒருவரின் ஞானம் மற்றும் ஆழ்மன சிந்தனைகளைக் கூறுவதும் 5-ஆமிடம்தான்.
பயிற்சியில் பங்குபெற்றவர்கள் தனக்குப் பணம் வரவில்லை என்று பயிற்சியாளரிடம் கேட்டால், "நீங்கள் பணத்தைக் காதலிக்க வில்லை' என்று பதில் கூறுகிறார்களாம். காதலும் 5-ஆம் பாவகம்தானே. யாருடைய காதல் வெற்றியில் முடிகிறதோ அவர்களுக்கு 5-ஆம் பாவகம் வலிமையாக உள்ளது என புரிந்துகொள்ளவேண்டும். நான் இங்கே வெற்றி என்று கூறுவது, திருமணமாகி தம்பதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிரிவினையின்றி ஆயிரம் காலத்துப் பயிராக சேர்ந்துவாழ்வது. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என ஆறு மாதத்திலோ சில வருடங்களிலோ குழந்தையைப் பெற்றபிறகு பிரிந்துவாழ்வதோ அல்ல.
என் அனுபவத்தில் காதலில் வெற்றியைத் தழுவி ஈருடலும் ஓருயிருமாக சேர்ந்துவாழும் தம்பதிகள், பிறவியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந் திருந்தாலும் திருமணத்திற்குப்பிறகு மிக உயர்வான நிலையை அடைகிறார் கள். செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கௌரவம் என அவர்களது வாழ்க்கை வாழையடி வாழையாக வளர்கிறது. பூர்வஜென்மத்தில் ஆதர்சன தம்பதிகளாக வாழ்ந்தவர்கள் மட்டுமே இந்த ஜென் மத்தில் காலம் முழுவதும் ஒருமித்த கருத்துடன் வாழ முடியும்.
அதேபோல் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமாக இருந்தால், முதல் குழந்தை பிறந்தபிறகு வாழ்க்கை செழிப்பாக மாறினாலும் அவர்களது ஜாதகத்திலும் பூர்வஸ்தானம் சிறப்பாக உள்ளதென்று பொருள். பெற்ற பிள்ளைகளால் மன உளைச்சல் இல்லாத வாழ்க்கையை யாரெல்லாம் வாழுகிறார் களோ அவர்களுக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானம் சுபத்தன்மையாக இருக்கும். அதே போல் குலதெய்வம் தெரியாதவர்களுக்கும், பூர்வீகம் தெரியாதவர்களுக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானம் மிக மோசமான நிலையில் இருக்கும். ஆனால் தாராளமான பணப்புழக்கம் இருக்கும்.
பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாடு சென்று பிழைப்பு நடத்தி பணக்காரராக வாழ்பவர்கள் ஜாதகத்தில் 9-ஆம் பாவகம் சுபத்துவத்துடன் இருக்கும். பங்குச் சந்தை ஒருவருக்கு திடீரென உபரி லாபத்தை வழங்கினால் 5-ஆம் அதிபதி அல்லது 5-ல் நின்ற கிரகத்தின் சம்பந்தம் உள்ளதென்று பொருள். இதற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் பலம்பெறவேண்டிய அவசியமில்லை. அதிர்ஷ்டமிருந்தால் போதும். பங்குச் சந்தை ஒருவருக்கு காலைச் சுற்றும் வளர்ப்பு நாயாக இருந்தால் 5, 11-ஆமிடம் வலுவாக அமைந்திருக்கும். பங்குச் சந்தை ஒருவருக்கு காலைச் சுற்றிய பாம்பாக வேலைசெய்தால்- அதாவது பங்குச் சந்தையில் திடீரென அதிக பணம் சம்பாதிப்பது, சம்பாதித்ததைவிட அதிகமான பணத்தை இழப்பது. காலையில் பங்குச் சந்தையில் சம்பாதித்த லாபத்தை மாலையில் இழந்தால் அவர்கள் ஜாதகத்தில் 8, 11-ஆம் பாவக சம்பந்தம் இருக்கும்.
ஒரு பாவகத்தின் வலிமையை இப்படித்தான் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு கிரகமோ ஒரு பாவகமோ நான்கு விதமாகவே பலன் வழங்கும்.
1. பொருள் காரகத்துவத்தை அபரிமிதமாக வழங்குதல். பொருள் காரகத்துவம் என்றால் தேவைக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளை வழங்குதல்.
2. போதிய பணவசதி இல்லாவிட்டாலும், உயிர் காரகத்துவங்களால் அதீத அன்பைப் பெறுவது அதாவது- உற்றார்- உறவினர் கள், பெற்றோர்கள், மனைவி, மக்களின் அன்பு, மரியாதை யைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வது.
3. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் பரிபூரண மாகக் கிடைத்து நிம்மதியாக வாழ்வது. தேவைக்கு அதிகமான பணம், உபரியான சொத்துகள், சிறப்பான தொழில் அல்லது கௌரமான உத்தியோகம், நல்ல பெற்றோர் கள், அன்பான வாழ்க்கைத் துணை, அனுசரணையான பிள்ளைகள் என சகல ஐஸ்வர்யத்துடன் வாழும் வாழ்க்கை.
4. உயிர் காரகத்துவம், பொருள் காரகத் துவம் இரண்டுமின்றி வாழவேண்டிய நிலை. அடிப்படைத் தேவைக்குக்கூட திணறும் நிலை, உறவினர்களால் மன உளைச்சல். பூமியில் ஏன் பிறந்தோமென்று நிர்பந்தத்திற்காக வாழ்தல். உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டின் முழு சுபத்துவமும் 5-ஆம் பாவகம் பலம்பெற்றவர்களுக்கு மட்டுமே உண்டு. எனக்கு 5-ஆம் பாவகம்தான் மிகப்பிடித்த பாவகம். கணவன்- மனைவி இருவரும் இணைந்து ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு நடத்துவது, பிள்ளைகளைத் தங்களது நேரடி கவனிப்பில் வளர்ப்பது, கணவன் மனமறிந்து மனைவி வாழ்வது, மனைவியின் விருப்பத்தைக் கணவன் புரிந்துகொள்வது, சமுதாயத்தில் தலை சிறந்த குடிமகனாகப் பிள்ளைகளை வளர்ப்பது, பெற்றோர்களின் அன்பிற்குப் பிள்ளைகள் கட்டுப்பட்டு வளர்வது. கடனில்லாத- நிம்மதியான- கட்டுக்கோப்பான குடும்பம் ஆகியவற்றை வழங்குவது 5-ஆமிடம்.
5-ஆம் பாவகத்திற்கு மேலாக 8, 11-ஆம் பாவகத்தை அனுபவிப்பவர்கள் வீட்டில், பொருள் காரகத்துவத்தின் இயக்கம் மட்டுமே இருக்கும். உயிர் காரகத்துவம் செயலிழந்து நிற்கும்.
5-ஆம் பாவகத்திற்குமேல் ஆசைப்பட்டு 8, 11-ஆம் பாவகத்தை அடையும் பொழுது நிம்மதி இருக் காது. பல வீடுகளில் கோடி கோடி யாகப் பணம் சம்பாதிப்பார்கள். வீட்டில் ஆளுக்கொரு ஏசி அறையில் தங்கி யிருப்பார்கள். அந்தக் குடும்பத்தை பணமும் வேலைக்காரர்களும்தான் நிர்வகிப் பார்கள். கணவன் எங்கே செல்கிறார் என்று மனைவிக்குத் தெரியாது. சம்பாதித்து கணவன் அயர்ச்சியுடன் வீட்டிற்கு வரும்போது பரிவுடன் தண்ணீர் கொடுத்து, அருகில் உட்கார்ந்து உணவு பரிமாற மனைவி இருக்கமாட்டார். பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா? நல்ல ஆரோக்தியத்துடன் உள்ளார்களா? அவர்கள் என்ன படிக்கிறார் கள் என்றுகூட பெற்றோருக்குத் தெரியாது. இன்னும் ஒருபடி மேலே போய், பிள்ளைகளைக் காரணமின்றி விடுதியில் சேர்த்துப் படிக்கவைப்பது போன்ற பலன்கள் நடக்கும். உண்மையில் 8, 11-ஆம் பாவகப் பணத்தை அனுபவிப்பவர்கள் பாவாத்மாக்கள். 5-ஆம் பாவகப் பணத்தை நுகர்பவர்கள் பாக்கியவான்கள்.
ஒருவருக்கு எல்லாவிதமான சுபத்துவத்தை வழங்குவது 5-ஆம் பாவகம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. இதைத்தான் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
எனது எண்ண ஓட்டத்தை எழுத்தாக வடிவமைக்க தொடர்ந்து "பாலஜோதிட'த் தில் எழுத வாய்ப்பு வழங்கிவரும் நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் வாசகரும், "பால ஜோதிட'த்தில் நான் எழுதக் காரணமானவருமான மலரோன் அய்யா அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரம். பல வருடங்களாக எனக்கு ஆதரவுதரும் "பாலஜோதிட' வாசகர் களுக்கு நன்றிகள். பரிகாரம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும், தனது நிலை என்ன என்பதை வாசகர்கள் உணரவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
8-ஆம் பாவகம்
பணமிருந்தால் மட்டும் ஒருவர் வாழ்க்கை சொர்க்கமாகுமா? என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் பணமில்லாவிட்டால் வாழ்க்கை நரகத்தை நோக்கிச் செல்லும் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். கடந்த ஆறு மாதங்களாக ஜாதகம் பார்க்க வருபவர்கள் அதிகமாக இழந்த பணம்பற்றிக் கேட்க வருகிறார்கள். குறிப்பாக பெரும் பண இழப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். என்னிடம் ஜாதகம் பார்த்த "பாலஜோதிட' வாசகர்கள், ஜாதகத்தைக் கொடுத்தவுடன் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்பதை நானே கூறிவிடுவேன் என்று அறிந்திருப்பீர்கள். பண இழப்பு பற்றிய கேள்வியா என்று கேட்டவுடன், புழுவாகத் துடிப்பதைப் பார்க்க மிக வேதனையாக உள்ளது.
சமுதாயத்தில் அந்தஸ்தான பெரிய தொழிலதிபர்கள் பலர் பண மோசடியில் சிக்குகிறார்கள். பல கோடிக்கணகான பணத்தை மிகக் குறைந்த வட்டிக்குத் தருவதாக வும் அதற்கான பிராசஸிங் சார்ஜ், டாக்கு மென்ட் சார்ஜ் போன்ற வற்றிற்காக சில கோடிகளை முன்பணமாக வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். ஒருவருக்கு திடீரென அதிக பணம் வந்தாலும் 8-ஆம் பாவகம்தான் காரணம். அதிக பணத்தை இழந்தாலும் 8-ஆம் பாவகம்தான் காரணம்.
தொடரும்....
செல்: 98652 20406