னிதர்களுக்கு ஆபத்துக் காலங்களில் கலங்கரை விளக்கமாக இருப்பது ஜோதிடம். பரிகாரம் என்ற ஒரு நிவர்த்தி அத்தியாயம் இல்லையெனில் ஜோதிடத்தை யாரும் விரும்பமாட்டார்கள். தற்போது சாஸ்திரங்களில் உபதேசிக்கப்படாத பல பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களின் வெற்றி விகிதத்திற்கு உத்தரவாதம் கிடையாது.

ஆனால் சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்டுள்ள பரிகாரங்களுக்கு வெற்றி விகிதம் நூறு சதவிகிதம் உறுதி.

ஒருவரின் வளமான வாழ்க்கைக்குப் பணம் மிக முக்கிய காரணியாகும். லௌகீக வாழ்விலுள்ள அனைத்து தேவைகளை யும் நிறைவுசெய்துகொள்ள மனிதனால் படைக்கப்பட்ட பணம் தற்போது மனிதனை ஆள்கிறது. பிரபஞ்ச சக்தி என்ற ஒன்று இல்லாவிட்டால் பணம் உற்பத்திசெய்யும் இயந்திரத்தை ஒவ்வொரு குடும்பமும் வாங்கி வைத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு உலகின் போக்கு விந்தையாகவும், வியப்பாகவும் உள்ளது.

ss

Advertisment

உளவியல்ரீதியாக பணம் என்ற விஷயத்தை உற்றுநோக்கினால் ஒரு உண்மை அனைவருக்கும் புலப்படும். இந்த வாசகத்தை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்துகொண்டால் பணம் என்ற மூன்றெழுத்து மாயையை நோக்கி யாரும் செல்ல மாட்டார்கள். யாரெல்லாம் பணத்திற்காக வேலை செய்கிறார்களோ அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற் காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். யாருக்கெல் லாம் பணம் வேலை செய்கிறதோ அவர்கள் பணத்தை எளிமையாக ஏவல்செய்யும் சூட்சும வலிமை படைத்தவர்கள். அதாவது ஒருவருக்கு பணம் வேலை செய்தால் அவருக்குப் பணம் அடிமை. ஒருவர் பணம் சம்பாதிக்க வேலைசெய்தால் பணத்திற்கு அவர் அடிமை. பணத்தை அடிமையாக்கத் தெரியாத பலர் கடனாளி யாக வாழ்கிறார்கள்.

பணத்தை ஆளத் தெரிந்தவர்கள் பணக்காரர் களாக இருக்கிறார்கள்.

ஒருவருக்கு சமுதாய அங்கீகாரத்தை வழங்கும் பணத்தின் தேவை அதிகரிக்க பொருளாதாரரீதியான காரணம் விண்ணைத் தொடும் பணவீக்கம். பல அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது பணம். பணப் பற்றாக்குறை காரணமாக மக்களிடம் நிதி நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. நிதி நெருக்கடி மற்றும் கடனில் சிக்கித்தவிக்கும் மக்கள் பலர் தற்கொலை போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகஜமாகிவிட்டது.

Advertisment

நிறைய பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை மறந்துவிடுகிறார்கள். செல்வம் எப்படி வாழ்க்கையை உருவாக்குகிறதோ, அதேபோல் செல்வம் மனிதனை எல்லாவற்றையும் இழக்கத் தூண்டுகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் "பணம் பாதாளம்வரை பாயும்' என்று சொல்லி வைத்தார்கள்.

பணபர ஸ்தானம்

ஜோதிடரீதியாக ராசிக் கட்டத்திலுள்ள பன்னிரு பாவகங்களில் பணபர ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே பணம் எனும் தனம் வசப்படும். பணபர ஸ்தானம் என்பது ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 5, 8, 11-ஆம் பாவகங்களாகும். இந்த பாவகங்களுக்கும், பாவக அதிபதிகளுக்கும், இந்த பாவகங்களில் நின்ற கிரகங்களுக்கும், பாவகத்தைப் பார்த்த கிரகங்களுக்கும் பணவரவைத் தூண்டும் அதிகாரம் உண்டு. இந்த நான்கு பாவகங்களும் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமைக்கேற்பவே தனது பலனை வழங்கும்.

அதேபோல் இந்த நான்கு பாவகங்களுமே யாருக்கும் ஒருசேர இயங்காது. ஏதாவது ஒரிரு பாவகங்கள் மட்டுமே தனது பணியைச் செய்யும். இந்த கட்டுரையில் பணபர ஸ்தான இயக்கத்தைப் பற்றியும், அதை பலப்படுத்தும் பரிகாரங்கள் பற்றியும் பார்க்கலாம்.

இரண்டாம் பாவகம்

2-ஆமிடம் என்பது தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம்.

ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்பானதா அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா? சுயதொழில்மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா அல்லது உத்தியோகத்தின்மூலம் ஏற்படுமா? வாழ்க்கைத்துணைமூலம் செல்வச் சேர்க்கை உண்டாகுமா? அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டா போன்றவற்றை தன ஸ்தானமே தீர்மானிக்கும். தன ஸ்தானம் பலம்பெற்றால் நிலையான, நிரந்தரமான பணவரவுண்டு.

லக்ன பாவத்திற்கு இரண்டாம் பாவகம் என்பதால் தனத்தைப் பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தைக் காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்த லாக இருக்கும். ஜாதகர் எவ்வளவு திறமை யானவராக இருந்தா லும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானம் வராது. சம்பாதித்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தத்தில் ஜாதகர் இருப்பார். பேச்சுத் தொழிலை மூலதனமாகக் கொண்டவர்கள். பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். கலகலப்பாகப் பேசி தன்னைச் சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்றுவார்கள். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும். குடும்ப உறவுகள் இவரின் அன்பிற்குக் கட்டுப் படுவார்கள். குடும்ப உறுப்பினர் களின் உணவு, உடை மற்றும் வாடகை வீட்டில் வசிக்கத் தேவையான வருமானம் மட்டுமே இருக்கும். மிச்சம் பிடிப்பதென்ற பேச்சிற்கே இடம் கிடையாது.

இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தமிருந் தால் அல்லது தன ஸ்தானம் பலம் குறைந்தால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழமுடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு, மரியாதையின்மை, பிறரை அண்டிப் பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும்.

பரிகாரம்

சுய ஜாதகரீதியாக, 2-ஆம் அதிபதியின் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க கடன், வறுமை வராது.

குளத்து மீன்களுக்குப் பொரி போட வேண்டும்.

ஒருவர் வாழ்ந்தாலும் சனிபகவானே காரணம்; வீழ்ந்தாலும் சனி பகவான்தான் காரணம். பூர்வபுண்ணிய பலப்படி உபரி வருமானத்தை வழங்குவதும் சனி பகவான்தான். வறுமை, கடன், தரித்திரம் போன்ற அசுபப் பலனை வழங்குபவரும் சனி பகவான்தான். எனவே வறுமை அகல "இடரினும் தளரினும்' எனத் துவங்கும் தேவாரப் பாடலை தினமும் காலை, மாலை யில் படிக்க, குடும்பம் வறுமையின்றி நடக்கும்.

மேலும் சனிக்கிழமை சனி ஓரையான காலை 6.00-7.00, பகல் 1.00- 2.00, இரவு 8.00-9.00 மணியளவிலான காலங்களில் சமைக்கக்கூடாது; சாப்பிடக்கூடாது.

மௌன விரதம் இருக்கவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406