விநாகயரை வணங்கி வெற்றிகளைக் குவிக்கலாம் என்று முக்கல புராணம் சொல்- வைத்தாலும் அந்த வெற்றியை எல்லாரும் பெற்று விடுவதில்லை. ஒரு ஜோதிடர் ஒரு இளைஞரின் ஜாதகத்தைப் பார்த்து உனக்குக் கடன் அதிகமாக இருக்குமே! என்ன செய்யப் போகிறாய் என்றார். அதற்குத் தீர்வு கேட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றிட, விநாயகப் பெருமானை நான்கு வாரங்கள் வழிபட்டு வருக. என்றிட தாங்கள் சொல்வது சரிதான்...
அவர் வழிகாட்டட்டும். உங்களுக்கான கட்ட ணத்தை காசு வந்தபின் தருகிறேன் என்று கடன் சொல்-ச்சென்றார். இன்றைய நாட்களில் எதற்கும் கடன் சொல்ல வும் கேட்கவும் யாரும் தயங்குவதில்லை.
யார் கடன் தொல் லைக்கு ஆளாவார்? என் றால் பிள்ளையாரைப் பிடிக்கச் சென்ற சனி பகவான் திரும்ப வரும் போது மனிதர்களைப் பார்த்து பிடித்துக் கொண்டார் என்பது வழக்க மொழி. கி.பி. ஆறாம் நூற் றாண்டில் இடர்களையும் பிள்ளையார் வழிபாடு வந்தத்தி-ருந்து இன்று வரை பல பொருட் களால் விநாயகர் வழிபடப் படுகிறார். ஆனால் கடன் தீர்வு தரும் விநாயகர் வழிபாட்டை தங்கள் விருப்பப்படி எல்லாம் மாற்றிக்கொள்கின்றனர்.
மிகச்சிறிய விநாயகர் சந்நிதிக்குச் சென்ற பக்தர் கடன் தீர்வுக்கும் வேலை கிடைக்க வேண்டியும். 108 தீபங்களை அவரைச் சுற்றி ஏற்றிவைத்தார். கோவிலே புகைமண்டலமாக மாறிவிட்டது. எளிமையில் இறைமை காணும் விதிப்படி அந்த சிவமைந்தனிடம் சௌபாக்கியம் பெற கடன் தீர்வு, பிரச்சினைகள் எதுவாயினும் விரைவில் தீர்ந்து நிம்மதி அடைய சக்திவாய்ந்த விநாயகர் சப்தகத் துதியால் அவரை மனம் ஒருமித்து பிரார்த்தனை செய்துவந்தாலே நல்ல பலன் கிடைத்துவிடும். இந்த மகிமைத் துதியில் விநாயக ரகசியம் பதிந்துள்ளதால் வீட்டில் நல்லமாற்றம் நிகழ மண்டலமிட்டு வழிபட்டுவரலாம்.
சப்தகத் துதியின் சிறப்பு
விநாயகர் பூஜை நியதிகளில் மண்ணால் செய்த விநாயகர் நற்பதவியும் புற்று மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால் வியாபார லாபமும், கல்லால் செய்தவரை வழிபட்டால் எதிலும் வெற்றி உண்டாகும் என்ற கருத்து உள்ளது. அதன்படியே தினமும் பக்தர்கள் வணங்கச் செல்லும் கோவில்களில் கருங்கல்லால் செய்த விநாயகர் பிம்பத்தை பிரதிஷ்டை செய்து அதன் ஜீவநாடியை மந்திரத்துதியால் இயங்கிடச் செய்தனர்.
விக்னங்களைக் களைந்திடும் விநாயகர் துதிகளில் எளிதாகவும், அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் கிடைத்திருப்பது சப்தகத் துதி. சப்தம் என்றால் ஏழு. இந்தத் துதியில் அவரது ஏழு வகை தெய்வத் தன்மையும் அருளும் குணமும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு மூன்று முறை இந்தத் துதியைப் பாராயணம் செய்து ஏழு நெய் தீபங்கள் ஏற்றி வைக்கவேண்டும். விநாயகரை வலம்புரி கணேசரான, ஆற்று மண், புற்றுமண், களிமண், செம்மண், துளசிவேர் மண்வில்வ மரத்தடி மண். மந்தாரைச் செடி மண் கலந்து மஞ்சள் நீர்விட்டுக் கலந்து பிம்பம் செய்து ஒரு தட்டில் நெல் பரப்பி அதன்மேல் வைத்து பிரார்த்தனை செய்வது முறை. இவ்வாறு மண்டலம் செய்துவருதல் வேண்டும். நிவேதனமாக கல்கண்டு பால், பழம், மோதகம் படைத்து ஆரத்தி செய்யலாம். கல்லால மரத்தின் இலைகள் செல்வயோகம் தந்துவிடுபவை. பொன் வகை மரத்தின் வேர்பகுதி மண் கலந்து விநாயகர் உருசெய்து சதுர்த்தி திதி தொடங்கி இத்துதியோடு ஐவகை உபசாரங்கள் செய்து "ஓம் கம் கணபதியே நம' என்று 108 முறை ஜெபித்துவர கடன் தீர்த்து செல்வ யோகம் உண்டாகும்.
விநாயகர் சப்தகத் துதி
1. குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன்
குவலயம் போற்றும் கணநாதா!
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலனின் சோதரனே!
அருள்வாய் உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள்மகனே
திருமால் மருகா! திருவடி சரணம்
தீனரகூகனே கணநாதா!
2. ஆனையின் அன்பன் அழகு முருகனின்
அண்ணனாய் உலகில் அவதரித்தாய்
ஆனை முகத்தோடு ஐங்கரங் கொண்டதோர்
அற்புதவடிவே! கணநாதா
யானென தென்றும் எண்ணங்கள் நீக்கி
இகபர சுகமதை எனக்களிப்பாய்
யானுனை என்றும் கிராப்பகல் தொழுதேன்
என்துயர் களைவாய் கணநாதா!
3. குஞ்சரனே! எழிற் குஞ்சரி நாதனாம்
குகசரவணபவ சோதரனே!
வெஞ்சம ரெதிலும் வெற்றியே தருவாய்
வேழ முகத் தோய் கணநாதா
அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய்
அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய்
பஞ்சமி பைரவி! பர்வத புத்திரி
பார்வதி மைந்தா! கணநாதா!
4. வல்லமை நாதா விக்ன விநாயகா
வாழ்த்திப் பணிந்தேன் உன் பதமே!
வல்வினை எல்லாம் வ-மை இழந்தே
வாடிடச் செய்வாய் கணநாதா!
தொல்வினை யா-வன் துயருறும் அடியேன்
துன்பமெல்லாம் நீ துடைத்திடுவாய்
அல்லொடு பகலும் அனவரதமும் உன்
அடியினைத் தொழுவேன் கணநாதா!
5. வானொடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் உன் வடிவே
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
மங்கலப் பொருளே கணநாதா
தேனொடு பாலும் தெங்கொடு பழமும்
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்
ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்
உன்னடி தொழுதேன் கணநாதா!
6. ஓமெனும் வடிவே உன் வடிவாமென
உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய்
ஆம் எனச் சொல்வாய் அன்னை குமாரா
ஆதரித்தருள்வாய் கணநாதா!
ஓமெனும் ஒ-யில் உன் குரல் கேட்டே
உளமகிழ்ந்துன் புகழ் பாடிடுவேன்
ஓமெனும் பொருளே உமையவள் பாலா
ஒரு பரம்பொருளே! கணநாதா!
7. சங்கரன் மகனே! சஞ்சலம் தீர்ப்பாய்
சக்தி குமாரா! கணநாதா!
ஐங்கரனே உன் அடியினைத் தொழுதேன்
அடைக்கலம் நீயே கணநாதா
சங்கரித்திடுவாய் சங்கட மெல்லாம்
சம்பு குமாரா! கணநாதா!
சங்கரி மைந்தா! சந்ததம் பணிவேன்
சரணம்! சரணம்! கணநாதா!
பலன் கேட்கும் துதி
வந்தெனை வாட்டிட வந்தெனுள் டிகுந்ததோ!
கடனும் பல்வினை ஆகியதே!
சிந்தையுள் தைவத்தால் சீக்கிரம் காண்பாய்
சக்தியின் மூத்த பாலகனே!
எந்த மலர் வேண்டும்? ஏதுகனி வேண்டும்...?
என் செவி சொல்-டு கணநாதா!
சொந்தமும் சுற்றமும் நீ ஒருவன் ஆனாய்
சுகமும் பொருளும் கொடுத்தருள்க!
பிரயோக ஜோதி என்னும் பூஜை விதியில் கண்டுள்ளபடி ஏழுவகை மண்களைச் சேகரித்துப் பலன்காண இயலாதவர்கள் கடன்தீர பரிகாரத்தலமான குன்றத்தூர் தோரண கணபதி கோவி-ல் வளர்பிறை சுக்கில சதுர்த்தியன்று மாலை நடைபெறும் ருணவிமோசன கணபதி யக்ஞம் நடக்கும் காலத்தில் பிரயோக விதானத்தில் சொல்-யவாறு ஏழுவகை மண் பயன்படுத்தப் படுகிறது. ஆலயத்தில் தோரண கணேசர் எதிரிலுள்ள வெள்ளெருக்கு விருட்சவேர் மண்ணுடன் ஏழுவகை மண்ணும் பிரசாதமாக எடுத்துச் சென்று விநாயகர் பிரதிமையைச் செய்துகொள்ளலாம்.
அனைவருக்கும் கடன்கள் தீர்ந்து செல்வங்கள் பெருக கணேசனருள் சித்திக்கட்டும்!
செல்: 95511 84326