வேலை வாய்ப்பின்மை, குடும்ப ஒற்றுமையின்மை, மணவாழ்வில் சோதனை, பணவிரயம், ஆரோக்கியக் குறைகள், சுற்றுச்சூழல்- சுற்றத்தாரால் நிம்மதியில்லாமை, தீராத மனக்குறைகள் போன்ற இன்னும் பல வாஸ்துவினால் ஏற்படும் பின்னடைவுகள் எனலாம்.

பொதுவாக வாஸ்துக்குறைக்கு பஞ்சபூத அமைப்புகளும், ஜாதக அமைப்பும், பிற சாஸ்திரங்களும் துணைபோகும். தொழில் நுட்பத்தால் திடமான கட்டடம், வீடுகளை உருவாக்கிவிடலாம். எனினும் நிம்மதிதான் பற்றாக்குறையாகும்.

ஒருவரது ஜாதகத்தில் 10-ல் எந்த கிரகமும் காணப்படாவிட்டால் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பது கடினம். வேறு வழிகளைத்தான் நாடவேண்டும்.

10-ல் சூரியன், செவ்வாய் காணப் பட்டாலோ, பார்வை இருந்தாலோ அரசு சார்ந்த வேலைக்கு மிகத்தகுதியானவர். அதிலும் 5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந் திருந்தால் அரசுப்பணி உத்தமம்.

Advertisment

இனி வாஸ்து எவ்வாறு பின்னடைவைத் தருமென ஆய்வு செய்வோம்.

வீட்டை, தங்குமிடத்தைப் பாருங்கள்.

வடகிழக்கு மூலையில் கழிப்பிடம் இருந்தால் அந்த அமைப்பே நீண்ட வேதனையை உண்டாக்கும். சுலபமான பரிகாரம்- ஊமத்தங்காயில் குண்டூசியை வெளியே தெரியாத வண்ணம் உட்செலுத்தி கழிவறையில் தொங்கச்செய்யவும்.

Advertisment

அல்லது ஒரு பீங்கான் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, அதன்மேல் ஒரு துண்டு நிலக்கரியை வைத்து கழிவறை மூலையில் வைத்தல் போதுமானது. அதில் கரும்புள்ளிகள் தென்பட்டால் அதை மாற்றிவிட்டு புது உப்பை வைக்கவேண்டும். தடைகள் நிவர்த்தியாகும்.

ஒரே வீட்டில் பலகாலம் இருந்து வந்தால்- அதுவும் மூன்று, நான்கு தலைமுறை என்றால், வாஸ்து தோஷம் படிப்படியாக ஸ்திர நிலைக்கு வந்துவிடும். அதற்கான சுலப பரிகாரம்:

இருப்பிடத்தின் மையப்பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். (மொட்டை மாடி உத்தமம்). அங்கு ஒரு புது செங்கல்லை சமநிலை யில் நேராக இருக்க வைத்து, அதன்மேல் சந்தனம், குங்குமம் வைத்து, சுற்றிலும் மலர்களைத் தூவி, அதன்முன் வெற்றிலை, பாக்கு, நான்கு எலுமிச்சை, நான்கு மைக்குப்பி (கண்மை), நான்கு மாதுளம் பழம், ஒரு செந்தாமரைப்பூ வைத்து, கிழக்கு நோக்கி நின்று குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வணங்கி, மனக் குறைகளைச் சொல்லி நலம்புரியுமாறு தெய்வத்தை வேண்டியபின் மாதுளம் பழத்தை நீங்கள் சாப்பிடலாம். மைக்குப்பிகளை வீட் டிற்கு வெளியே நான்கு திசையில் வீசிவிடவும். மீதமுள்ள யாவற்றையும் ஒரு பையில் போட்டு ஓடும் நீரில் போடவேண்டும். வெள்ளி, புதன் கிழமை உத்தமம்; கெடுதல் அகலும்.

"பிறந்த வீடு பெற்றோர்களின் சொந்தம்; புகுந்த வீடு கணவரின் சொந்தம்' என இருவகை யான பந்தங்களை பெண்கள் சந்திக்க வேண்டி யுள்ளது. திருமணமானவுடன் புகுந்த வீட்டில் குடியேறும்போது சில கட்டுப்பாடு களை எதிர்நோக்க நேரும். கற்பனை எதிர் பார்ப்புகளுடன் வரும் பெண்ணுக்கு அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு தரவேண்டியது புகுந்த வீட்டின் கடமை. தம்பதிகளுக்குள் திருமணமான புதிதில் உருவாகும் சந்தோஷம், அனுசரணைதான், வாழ்நாள் முழுவதும் குடும்ப ஒற்றுமையைக் குலைக்காமல் பாதுகாக்கும்.

புகுந்த வீட்டில் வாஸ்துரீதியாக வடகிழக்கில் பூஜையறை, தென்கிழக்கில் சமையலறை, வடமேற்கில் பிரசவ இடம், தென்மேற்கில் படுக்கையென அமைந்த வீடு, நற்செய்கைக்கு வாஸ்துரீதியாக வழிகாட்டும். நிம்மதியான புகுந்த வீடாக அமையப்பெறும்.

லக்னத்திற்கு 7-ஆமிடம் கணவன்- மனைவியைக் குறிக்கும் களத்திர ஸ்தானம்.

7-ஆமிடத்திற்கு 4-ஆமிடம் அல்லது 10-ஆமிடம் மாமியாரையும், 7-ஆமிடத்திற்கு 9-ஆமிடம்- அதாவது லக்னத்திற்கு 3-ஆமிடம் மாமனாரையும் குறிக்கும். 3, 10-ஆமிடங்களில் உள்ள கிரகம், 3, 10-ஆம் அதிபதிகள் நிலை, கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளைச் சார்ந்து மாமனார்-

மாமியாரால் நன்மை- தீமை ஏற்படும்.

இன்றைய மாமனார்- மாமியார் என்பவர் கள் நேற்றைய மருமகன்- மருமகளாக இருந்துவந்தவர்களே. குடும்ப வாழ்க்கை பற்றி பலவருட அனுபவம் பெற்றவர்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பா னவை தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுவிடக்கூடாது என்றெண்ணி அவர்களின் சந்தோஷத்திற்கு உறுதுணை யாக இருக்கவேண்டும். எப்படியெனில் 3-ஆமதிபதி கேந்திர (1, 4, 7, 10) திரிகோண (5, 9) ஸ்தானங்களில் இருந்தால் நல்ல மாமனார் அமைந்துவிடுவார். குரு, சுக்கிரன் பார்வை 3-ஆம் அதிபதிக்கு இருந்தால் மருமகளுக்கு மதிப்பளித்து அன்போடு நடந்துகொள்வார்கள்.

vasthu

வாஸ்து சொல்வது என்ன?

தென்மேற்கு மூலையில் குளியலறை இருந்தால் பலத்த தோஷத்தை உண்டாக் கும். அதை சாதாரண உபயோக அறையாக மாற்றவேண்டும். கிழக்கு திசையில் குளியலறை அமைத்தல் நன்று. தவிர்க்க முடியா சூழ்நிலையில் தென்கிழக்கிலோ, வடமேற்கிலோ வைக்கலாம்.

படுக்கையறை மேற்கில் இருக்கலாம்; தெற்கில் அமையலாம். தென்மேற்கு உத்தமம். இதர திசைகளில் அமைப்பது நற்பலனைத் தராது. வடமேற்கில் படுக்கை யறை அமைத்தால் படுத்து உறங்கலாம்; உடலுறவு கூடாது.

படுக்கை போடும் முறைகள்

அறையின் மூலையில் படுக்கையைப் போடாதீர்கள். படுக்கையோ கட்டிலோ- எந்த சுவரையும் இடித்துக்கொண்டு இருப்பது கூடாது. கதவருகே படுக்கைபோட வேண்டாம்.

ஆழ்ந்த உறக்கத்தில் பங்கம் ஏற்படும். கதவுகள் எங்கே இருக்கின்றனவோ அந்தச் சுவரை ஒட்டிப் படுக்கை போடவேண்டாம். அவ்வாறு இருந்தால் மறுநாள் காலையில் பலமிழந்து சோர்ந்து காணப்படநேரிடும். சுற்றிலும் பொருட்கள் இருக்க, அதன் நடுவே படுக்கை போடக்கூடாது. இரண்டு தூண்களிடையே படுக்கை போடக்கூடாது. படுக்கை உள்ள சுவருக்கு மறுபக்கத்தில் அடுப்பு, பூஜையறை, இறைவன் திருவுருப் படங்கள் இருக்கக்கூடாது. கதவுக்கு நேராகப் படுக்கை அமையக்கூடாது. இவற்றைக் கடைப்பிடித்தால் வாஸ்து தோஷம் அகலும்.

மருமகன் அல்லது மருமகளிடம் உதவிகளைப் பெற்றுக்கொண்டு, நன்கு கவனிக்கும் அவர்களைக் குறைகூறிக் கொடுமைப்படுத்தும் சில மாமியார்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தன் மகள் அல்லது மகன் தன்னைவிட்டுத் தனித்துச் சென்றுவிடுவார்களோ என்று பயந்து செயல்படுவர்களும் உண்டு. ஜாதகத் தில் 10-ஆமதிபதி 6, 8, 12-ல் இருந்தாலும், 10-ஆமிடத்தில் 6, 8, 12-ஆம் அதிபதிகள் நின்றாலும் மாமியாரால் பகைபெற்று தீமை அடைவர். 10-ஆமதிபதி 6-ஆம் அதிபதி யுடன் இணைந்து 8-ஆம் வீட்டிலோ, 8-ஆம் அதிபதியுடனோ இருந்து, பாவ கிரகப் பார்வை பெற்றால் மாமியார் கொடுமை இருக்கத்தான் செய்யும். 10-ஆமதிபதி 2-ல் 6-ஆமதிபதியுடன் இணைந்தாலோ அல்லது சனி, ராகு, கேதுவால் பார்க்கப்பட்டாலோ மாமியார் கொடுமையை எதிர்கொள்ள நேரிடும்.

4-ஆம் வீட்டுடன் தொடர்பிருந்தால், வீட்டுடன் இருந்து மருமகன் அல்லது மருமகளை சுடுசொற்களால் திட்டியவாறே இருப்பர். 10-ஆமதிபதி கேந்திரத்தில் பகைவீட்டிலோ அல்லது பாவ கிரகமாகவோ இருந்தால் மாமியாரால் லாபம் இருக்கும். ஆனால் தவிர்க்கமுடியாத துன்பத்தைக் கொடுப்பார்.

பரிகாரம்: 3-ஆமதிபதி, 10-ஆமதிபதி கெட்டவர்கள், அதற்குரிய கிரகங்களின் பலத்தை அதிகரிக்கவேண்டும். 3, 10-ஆமதிபதி பாதிக்கப்பட்டவர்கள் மாமனார்- மாமியார் இல்லாத வீட்டில் திருமணம் செய்தல் சிறப்பு. 3-ஆமதிபதிக்குரிய தெய்வத்தைக் கண்டறிந்து பரிகாரம் செய்துகொள்வது, 10-ஆம் அதிபதிக்குரிய அதிதேவதை வழிபாடு கள் தீமைகளை இல்லாமல் செய்யும்.

பெண்ணுக்கோ ஆணுக்கோ ஆயுள் ரேகையை அடுத்துள்ள கீழ் செவ்வாய் மேட்டில்- அதாவது சுக்கிர மேட்டின் ஆரம்ப நிலையில் பல படுக்கை ரேகைகள் காணப் பட்டால் 28 வயதுக்குமேல் 30 வயதுக்குள் காலம் தாழ்ந்து திருமணம் செய்துகொள்ளல் நன்று.

வாஸ்துப் பரிகாரம்

வில்வத்தையோ, வேம்பையோ வீட்டின் சுற்றுச் சுவருக்குள், தெற்கு அல்லது மேற்கில் நடவும். இதனை சரியாக கவனித்துப் பாதுகாக்கவேண்டும். குடும்பம் நிம்மதி பெறும். பூந்தொட்டியில் இருக்கச்செய்வதும் போதுமானது. சண்டை, சச்சரவு, வம்புகள் நீங்கி நிம்மதியை எதிர்பார்க்கலாம். ஈசான்ய மூலையில் இருப்பது கூடாது.

வீட்டிலுள்ள தென்மேற்கு திக்கில், உங்கள் அறையில் தெற்கில் தலைவைத்து வடக்கில் கால் வைத்துத் தூங்கலாம். கட்டிலின் கீழ்பாகத்தில் ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துவிட்டுத் தூங்கி, மறுநாள் அதனை தெருவாசலில் அல்லது வாஷ்பேசினில் ஊற்றினால் சோம்பல் மறையும்.

வீட்டைச் சுற்றி சிவப்புநிற மலர்கள் வளர்த்தால், காம்பவுண்ட் சுவருக்குமேல் உயரம் போகாமல் இருத்தல் வேண்டும். வளர்ந்த செந்நிறப் பூக்கள் சூரிய தோஷத்தை ஏற்படுத்தும். பிறர் கண்களை ஈர்த்து திருஷ்டியை ஏற்படுத்தும்.

செல்: 93801 73464