"விள்ளிய விரல் மடிப்பில் விளங்கிடும் கிளைகள் தம்மில்
துள்ளிய குருசு தோன்றில் தொடுங்கிலை பிறவியர்கு
அள்ளிய அதிஷ்டம் தன்னில் அமைந்திடும் குடும்பம்விட்டு
தள்ளிய பயணம் காட்டும் கலல்தனை தாண்டத்தானே.'
பொருள்: பெருவிரல், பின் மடிப்பு ரேகைகளில், ஒரு பெரிய குருசுக் குறி (சிலுவை) தோன்றினால், அந்த அமைப்பு உடையவரின் சகோதரர் கடல் கடந்து, வெளிநாடு சென்று பொருளீட்டுவார்.
தவளையைப் பாம்பு உண்ணும்போது, தவளையின் ஆயுட்காலம் அழிந்து பாம்பின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. ஆர்ப்பரித்து ஓடும் நதிகள், முடிவில் கடலில் காணாமல் போவதுபோல், எல்லா உயிர்களும் ஒருநாள் முடிவை நெருங்கும். காலம் மட்டுமே நிலையானது.
இறந்த காலத்தை விழுங்கி நிகழ்காலமும், நிகழ்காலத்தை முடிக்கக் காத்திருக்கும் எதிர்காலமு
"விள்ளிய விரல் மடிப்பில் விளங்கிடும் கிளைகள் தம்மில்
துள்ளிய குருசு தோன்றில் தொடுங்கிலை பிறவியர்கு
அள்ளிய அதிஷ்டம் தன்னில் அமைந்திடும் குடும்பம்விட்டு
தள்ளிய பயணம் காட்டும் கலல்தனை தாண்டத்தானே.'
பொருள்: பெருவிரல், பின் மடிப்பு ரேகைகளில், ஒரு பெரிய குருசுக் குறி (சிலுவை) தோன்றினால், அந்த அமைப்பு உடையவரின் சகோதரர் கடல் கடந்து, வெளிநாடு சென்று பொருளீட்டுவார்.
தவளையைப் பாம்பு உண்ணும்போது, தவளையின் ஆயுட்காலம் அழிந்து பாம்பின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. ஆர்ப்பரித்து ஓடும் நதிகள், முடிவில் கடலில் காணாமல் போவதுபோல், எல்லா உயிர்களும் ஒருநாள் முடிவை நெருங்கும். காலம் மட்டுமே நிலையானது.
இறந்த காலத்தை விழுங்கி நிகழ்காலமும், நிகழ்காலத்தை முடிக்கக் காத்திருக்கும் எதிர்காலமும் தொடர் சங்கிலியாக இருப்பதால், காலத்திற்கு மரணமில்லை. காலத்தைத்தேடி, எந்த காலத்திலும் காலன் (எமன்) வரமாட்டான். அந்த கால விஞ்ஞானத்தை ஊடுருவிப் பார்க் கும் திறமை ஜோதிடத்திற்கு மட்டுமே உண்டு. ஜனன ஜாதகத்தைக் கொண்டும், கைரேகைகளின் அமைப்பைக் கொண் டும் பலனறிவது, நம் நாட்டு அறிவின் மேன்மையைப் பறை சாற்றுகிறது.
கைரேகையும் புதிரான அடையாளங்களும் விபத்து பகுதி, வேத்தடை போன்ற சாலைவிதிகளை அறிவுறுத்தும் போக்குவரத்து சின்னங்கள் உள்ளன. அதேபோல் உள்ளங்கைகளில், சாலை களாக ஓடும் ரேகைகளிலும், மேடுகளி லும் பல எச்சரிக்கைக் குறியீடுகள் அமைந்து வாழ்க்கைப் பாதையை விளக்குகிறது. நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டால் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
பெருக்கல் குறி: பெரும்பாலும் ஜோதிடர்கள் ஒருவர் உள்ளங்கையில் முதலில் ஆராய்வது, பெருக்கல் குறியைதான். பெருக்கல் குறி எந்த மேட்டில் உள்ளது என்பதை முக்கியமாகப் பார்க்கவேண்டும். பெருக்கல் குறியில், இரு கோடுகளும் ஒரே அளவில் உள்ளதா அல்லது ஒரு கோடு நீளமாக, மற்றொரு கோடு சிறிதாக உள்ளதா என்பதையும் ஆராயவேண்டும். பொதுவாக உள்ளங்கையில் பெருக்கல் குறி உள்ளவர்கள், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய தனித்துவமான குணமும், செயலும் மக்களால் மதிக்கப்படும் தலைவராக மாற்றும்.
ப் முக்கோண வடிவத்தில் பெருக்கல் குறி அமைவது சிறப்பான பலன்களைத் தரும்.
ப் அதிகமான பெருக்கல் குறிகள் உள்ளங் கையில் காணப்படுவது ஏமாற்றத்தையே தரும். மற்றவர்களுக்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து, முடிவில் ஏமாற்றத்தை சந்திப்பார்.
ப் இரண்டு பெருக்கல் குறிகள் இருப்பது, வாழ்க்கையை வளமாக்கும்.
ப் நடுவிரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையே பெருக்கல் குறி காணப்பட்டால் அது மலட்டுத்தன்மையைக் குறிக்கும்.
ப் ஒரு ஆணின் கையிலுள்ள சுக்கிர மேட்டில் பெருக்கல் குறி இருந்தால், ஆணுக்கு பாலுணர்வு குறைபாட்டைக் காட்டும்.
ப் இரண்டு கைகளிலும், ஒரே மேட்டில் பெருக்கல் குறி இருந்தால் அரசராக விளங்குவார்.
ப் சுக்கிர மேட்டிலும், குரு மேட்டிலும் பெருக்கல் குறி அமைந்தவருக்கு காதல் வெற்றி தரும்.
ப் திருமண ரேகையில் பெருக்கல் குறி வந்தால், திருமண வாழ்க்கை இனிக்காது.
ப் குருமேடு வலுத்து, அந்த மேட்டின்மேல் பெருக்கல் குறி இருந்தால், வருமுன் உரைக்கும் ஜோதிடராகலாம்.
பெருக்கல் குறியும், கிரக மேடுகளும்
ப் சூரிய மேடு: பெருக்கல் குறி- பெற்ற பெருமைகளை இழத்தல்.
ப் புதன் மேடு: வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.
ப் சுக்கிர மேட்டிலும், சனிமேட்டிலும்: ஒரே கையில் பெருக்கல் குறி அமைந்தால், காதலில் தோல்வி. சுக்கிர மேட்டிலும், குரு மேட்டிலும் பெருக்கல் குறி அமைந்தவருக்கு காதல் வெற்றி தரும் ப் செவ்வாய் மேட்டில் பெருக்கல் குறி- சண்டை அல்லது எதிர்பாராத விபத்தால் உயிராபத்து உண்டாகும்.
ப் சந்திர மேட்டில்: அவமானம், ஏமாற்றம், மனக்குழப்பம்.
ப் சனி மேட்டில்: காரியத் தடை, ஆரோக்கியம் கெடும்
ப் குரு மேட்டில்: சாஸ்திர ஞானம், வருமுன் உரைத்தல்.
மாதங்கி முத்ரா
இரண்டு கை விரல்களையும் ஒன்றோ டொன்று இணைத்து, பின்னர் இரண்டு நடு விரல்களையும் மேலே உயர்த்தவேண்டும்.
பலன்
தன்னம்பிக்கை மற்றும் மன மகிழ்ச்சி தரும்.
செல்: 63819 58636