னிதன் பிறந்ததிலிருந்து ஒவ் வொரு பருவ கால கட்டத் திலும் ஊராரின் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டியிருக்கிறது.

"இன்னுமா குழந்தை பிறக்க வில்லை?' என ஆரம்பித்து, "இன்னுமா தவழவில்லை- இன்னுமா படிக்கவில்லை- இன்னும் வயதுக்கு வரவில்லையா- திரு மணம் முடிக்கவில்லையா' என தொடர்ந்து, "அவனுக்கு குழந்தை பிறக்க வில்லையா?' என ஒரு சுற்று கேள்விகேட்டு நம்மைத் திக்குமுக்காடச் செய்வார்கள்.

இத்தகைய கேள்விகள் ஒருபுறம் எரிச் சலையும் கோபத்தையும் கொடுத்தாலும், மறுபுறம் யோசிக்கும்போது இவையே மனித வாழ்வில் கிரியா ஊக்கிகளாக இருப் பது புரியும். பிறகுதான் சம்பந்தப்பட்ட வர்கள் குறிப்பிட்ட கேள்வியின் தாமத நிலையைப் புரிந்துகொள்வார்கள். பிறகு தான் இவர்களுக்கே ஊர்க்காரர்கள் கேட்பதும் சரிதான்; நமது வீட்டில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

இந்த தாமதத்திற்கு முழுக் காரணமாக ஜோதிடம் குறிப்பிடுவது சனி பகவானை மட்டும்தான். மனிதரின் வாழ்வுக் கட்டத்தில் ஒவ் வொரு நகர்வையும் தாமதப்படுத்தி, தடையை ஏற்படுத்தி, மந்தப்படுத்தி, இடையூறு உண்டாக்கி, வெறுப்பை வளர்த்து, முயற்சியை முறியடித்து, பயப்படுத்தி, காயப்படுத்தி ஊராரை சிரிக்கச்செய்வது சனிபகவானே ஆவார்.

Advertisment

ஒரு ஜாதகர் நிறைய கேள்விகளை சந்திப்பது திருமண விஷயம் சார்ந்துதான். திருமணம் என்றவுடன் அதன் காரகன் சுக்கிரன்தான் நினைவுக்கு வருவார். பின் குரு பார்வை, கோட்சாரத்தில் 7-ஆமிடம், 7-ஆமதிபதி, 2-ஆமிடம், 12-ஆமிடம் போன்றவை ஆராயப்படும். மாங்கல்ய ஸ்தானாதிபதியின் தொடர்பு 8-ஆடத்திற்குக் கிடைத்தாலும் திருமணம் நடந்துவிடும்தான். சுக்கிரன் கெடாமல் ஓரளவு சுபமாக இருப்பினும் கெட்டிமேள சத்தம் கேட்டுவிடும்தான்.

இந்த எளிய அழகான அமைப்புக்குள் சனிபகவான் நுழைந்துவிட்டால் சிக்கல் தான். ஆம்; சனிபகவான் ஏழில் இருந்தா லும் பார்த்தாலும் தாமதத் திருமணம்தான். சனி குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டைப் பார்த்தாலும் திருமணம் தாமதமாகும். ஏழாமிடத்தில் சனியும் செவ்வாயும் கூடி யிருந்தாலும் தாமதத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம். ஏழில் சனியுடன் ராகு அல்லது கேது இருப்பின் தாமதம் அல்லது கலப்புத் திருமணம். ஏழில் நீச சனி அல்லது நீச சுக்கிரன் இருப்பது திருமணத் தாமதத்தைத் தரும் அல்லது திருமணமே நடக்காமல் செய்யும். ஏழில் சனி, சூரியன் சிலருக்குத் திருமணத்தை தாமதப் படுத்தும்; சிலருக்குத் திருமணமே நடப்ப தில்லை. லக்னம் அல்லது ராசிக்கு சனி பார்வை இருப்பினும் தாமதத் திருமணம்தான்.

தாமதத் திருமணத்திற்கு வேறுசில காரணங் களும் உள்ளன. ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருப் பது; பன்னிரண்டாமதிபதி ஏழில் இருப்பது போன்றவையும் திருமணத் தாமதத்தைத் தரும்.

Advertisment

எட்டாமிடத்தில் பலமற்ற சுக்கிரன் இருந்தால் வயது கடந்தபின் திருமணம் நடக்கும். ஏழாமதிபதியும் சுக்கிரனும் நீசமாகி மறைந்தால் திருமணத்தில் விருப்ப மில்லாமல் போய்விடும். ஏழாமதிபதி பலமற்று, பலமான ஐந்தாமதிபதியுடன் அமர்ந்தாலும் திருமணத்தில் விருப்ப மிருக்காது இந்த அமைப்பு சிலருக்கு காதல் தோல்வியினாலும் ஏற்படும். ஏழாமதிபதி எட்டில் மறைந்தாலும், ஏழாமதிபதி ஆறாமதிபதியுடன் அல்லது எட்டாமதிபதியுடன் சேர்ந்தாலும் திருமணம் தாமதமாகும்.

ஏழாம் வீட்டில் கிரகயுத்த அமைப் பிருந்தாலும், வக்ர கிரகம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும். ஏழில் சூரியன் இருப்பின் சிலருக்குத் திருமணமே நடப்பதில்லை. இதற்குக் காரணம், காலபுருஷ தத்துவப்படி ஏழாமிடமான துலாத்தில் சூரியன் நீசமாவார். ஏழில் சுக்கிரன் இருந்தாலும் தாமதத் திருமணமே. இது களஸ்த்ரோ பாவ நாஸ்தி எனும்படி, காரகத்துக்குரியவர் அதே காரகத்தில் அமையும்போது திருமணம் தாமதமாகும்.

இவையெல்லாம் போக இருக்கவே இருக்கிறது செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவை. ஏழாமதிபதி பாபகர்த்தாரி அமைப்புக்குள் அகப் பட்டுக்கொண்டால், வருகின்ற சம்பந்தம் அனைத்தும் கத்தரித்து, திருமணம் முடியாமல் போய்விடும்.

மேலும் சனி ஒரு அலி கிரகம். அது புத்திர ஸ்தானமான ஐந்தாமிடம் அல்லது ஐந்தாமதிபதியுடன் சம்பந்தம் பெறும் போது குழந்தைப் பேற்றைத் தாமதப் படுத்துவார். சிலருக்கு இந்த காரணத் தினாலும் திருமணம் தாமதமாகும்.

ஐந்தாமிட சனி சம்பந்தம் ஜாதகரை, கரி புத்தி என்று சொல்லும்படி, எளிதில் புரியாத அறிவைக் கொடுத்துவிடுவார். இதனால் ஜாதகருக்கு கல்வியறிவு தடைப் படும். எல்லாரும், "இவன் எப்போது படித்து முடிப்பான்?' என்று கேட்பார்கள்.

இதுபோல சனிபகவான் ஒவ்வொரு பாவகம், அந்த பாவகாதிபதியுடன் சம்பந்தம் பெறும்போது அந்த நிகழ்வுகள் நகராமல் தாமதப்படும்.

சனி மூன்றாமதிபதியுடன் சேர, ஜாதகருக்கு தைரியம், வீரியம் குறைவுபடும். தகவல் தொடர்பு குறுகும். ஜாதகர் தனித்து விடப்பட்டவர்போல ஆகிவிடுவார். பிறர் இவரைப் பார்த்து கேலி செய்வார்கள்.

saturn

சனி நான்காமிட சம்பந்தம் பெற, கல்வித் தடை ஏற்படும். வீடு, வாகனம், வயல், தோட்டம் போன்றவை வாங்க முயற்சிக்கும்போது ஜாதகர் பெரும் தடைகளை சந்திப்பார். செகண்ட் ஹேண்ட் எனப்படும் பழைய வண்டியை வாங்கும்போதும் தாமதம் ஏற்படும். பிறர் இவர்களைப் பார்த்து, "என்னப்பா, இன்னுமா வீடு வாங்கல?' என்றோ, "ஒரு வண்டிகூட இல்லையா...' என்றோ ஏளனம் பேசுவர்.

இதே சனி வேலைக்குரிய ஆறாமிடத்தில் இருந்தால் வேலை கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். அதனால்தான் எங்கு சனி தனித்து, இருபுறமும் கிரகங்கள் இல்லாமல் இருக்கும் ஜாதகர்கள் கிடைக்கும் வேலையை விடவேகூடாது என்பர். ஒரு வேலையை விட்டால் மறு வேலை கிடைக்க மிகவும் தாமதமாகிவிடும்.

இந்த ஆறாமிட சனி ஜாதகர்களை பரபரவென்று வேலை பார்க்கச் செய்தோம்- கடனை வாங்கியாவது முன்னேறுவோம் என்பதுபோன்ற யோசனைகளைத் தரவேமாட்டார். "என்ன உழைத்து என்ன பெரிதாக வாரிக்கொள்ளப் போகிறோம்; போனால் போகட்டும்' என விட்டேத்தியான மனோபாவத்தைக் கொடுத்துவிடுவார்.

இவர்கள் எப்போதும் மந்தமாய் ஒரே இடத்தில் அமிழ்ந்து, ஆழ்ந்துவிடுவர். மற்றவர்கள், "இவனுடன் சேர்ந்திருந்தவர்கள் எல்லாம் நன்றாக முன்னறிவிட்டனர். இவன் மக்குமாதிரி இருக்கிறானே' என எண்ணி, "ஏம்பா, வேலையில ஒரு உயர்ந்த நிலைக்குப் போவியா மாட்டியா' என ஏளனமாக நினைப்பார்கள்.

ஒன்பதாமிடத்தில் சனி இருப்பின் தந்தைக்கும் ஜாதகருக்கும் எப்போதும் "கெமிஸ்ட்ரி' ஒத்துப்போகாது. எல்லாரும், "ஏம்பா, எப்ப பாரு அப்பாகூட சண்டை போடலாமா' என போகிற போக்கில் கேட்டு விட்டுச் செல்வார்கள். 9-ஆம் வீடென்பது அதிர்ஷ்ட இல்ல ராசி. அதில் தடை, தாமதம் ஏற்படுத்தும் சனி அமர்ந்துவிட்டால் இவர்களது அதிர்ஷ்டம் போக்கு காட்டும். பசிக்கு உணவு கிடைக்காததுபோல தேவைக் குரிய பலன்கள் கிடைக்காமல் கைநழுவிப் போய்விடும்.

எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்காத நிலையாக இருக்கும்.

குடும்பங்களில் மற்ற அனைவருக்கும் செய்ய வேண்டிய சீர், பங்குபாகம் பிரிக்கும்போதே அவர்களுக்கு சரியாகச் சென்று சேர்ந்துவிடும் ஆனால் இந்த ஜாதகருக்கென்று எடுத்து வைக்கும்போது பெரிய தடங்கல் வந்துநிற்கும். வீட்டிலுள்ளவர்கள் எரிச்சலடைவார்கள். "இவனேக்கென்று ஆரம்பித்தாலே இப்படி தான் எதுவுமே நடக்காது' என ஆதங்கப்படு வார்கள். இதை நிறைய பெண்கள் அனுபவித் திருப்பார்கள். இதையெல்லாம் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்த சனி படுத்தும் பாடுதான். இவர்கள் மன உளைச்சலோடு வாழவேண்டி நேரும்.

பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும். அதனால் பத்தில் சனி இருப்பது குற்றமல்ல, எனினும் தொழில் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். பிறர் இவர்களைப் பார்த்து, "உங்க தொழில் மிக மெதுவாகதான் பிக்கப் ஆகிறது' என விமர்சனம் செய்வார்கள்.

11-ல் சனி இருக்கும் பெண்கள், இன்றைக்கு சமையல் செய்ய ஆரம்பித்தால் என்றைக்கு முடிப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. வீட்டிலுள்ளவர்கள், "இது எப்போ சமையல் செய்து எப்போ சாப்பிடுவது' என தலையில் அடித்துக்கொள்வார் கள். அவ்வளவு மெதுவாக சமையல் கலையைச் செய்வர்.

11-ல் சனி உள்ள ஆண்களுக்கும் அரசியல், மற்ற பதவி உயர்வு போன்றவற்றை எப்படி- எப்போது நாசுக்காகக் கையாண்டு உயர்நிலைக்குச் செல்வது, நல்ல பதவியைப் பிடிக்க முயல்வது என்பதில் கருத்தாக- கவனமாக இருக்கத் தெரியாது. அதனால் ஊர்க்காரர்கள், "இவனுடன் சேர்ந்தவனெல்லாம் பெரிய பதவிக்குப் போயிட்டான். இவன் மக்குபோல இருக்கி றானே' என நையாண்டி செய்வர். பாவம்; சனி பகவானுக்கு சந்துபொந்தெல்லாம் வண்டி ஓட்டி விரைவாக முன்னேறமுடியாது.

பன்னிரண்டாம் இட சனி தேவையற்ற செலவுகள் தருவார். அது பணம் உடலுறுப்பு கள், தூக்கம் என விரயம் தருவார். சிலரை எப்போது பார்த்தாலும் தூங்கச் செய்வார். இதனைப் பார்க்கும் ஊரார், "தூங்குமூஞ்சிப் பய' என்று எரிச்சல்படுவர்.

இரண்டாமிட சனி பணவரவைத் தாமதப்படுத்துவார். பணப்புழக்கம் சரளமாக இருக்காது. சிலருக்கு திக்கிப் பேசும் சூழல் அமையும். சனி சற்று நல்ல நிலையில் இருந்து இரண்டில் அமர்ந்தாலும், ஜாதகரை பணம் செலவழிக்க விடாமல் தடுத்து, கஞ்சத்தனம் கொண்டவர் என பெயர் வாங்க வைத்துவிடுவார். ஒரு பெரிய மனிதர் தன் வெள்ளி வெற்றிலைப் பெட்டி நிறைய நல்ல வெற்றிலைகளை வைத்திருந்தும், அவர் கடைசிவரை ஒரு புதிய தளிர், நல்ல வெற்றிலையைப் போட்டுக்கொள்ளவில்லை என்பார்கள். இது சனியின் குணத்துக்கு சரியான எடுத்துக்காட்டாகும்.

லக்னத்திலுள்ள சனி என்ன செய்வார்?

ஜாதகரை சோம்பேறியாக, நோயாளியாக, தூக்கம் மிகுந்தவராக, பேராசை கொண்ட வராக, விசால மனமற்றவராக, மற்றவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்பவராக மாற்றிவிடுவார். சனி பலமாக இருப்பினும் ஜாதகர் மேற்கண்ட குணத்தில் பாதியாவது கொண்டவராக இருப்பார். மற்றவர்கள் எப்போதும், "இவன்கூட பேசணுமா...

அடக்கடவுளே' என பதட்டமடைவர். இவ்வாறு லக்ன சனி ஆக்கிவிடுவார்.

சனியின் தாமதச் செயல்களை முழுவதும் நீக்க முடியாவிட்டாலும், ஓரளவு குறைத்து ஊரார் கிண்டல், கேலி, நக்கல், எகத்தாளம் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.

சிவபெருமான்தான் சனிக்கு ஈஸ்வர பட்டம் கொடுத்தவர் என்பர். எனவே சிவனை வணங்குவது மிக நல்ல பலனைத் தரும்.

சனி ஒரு இருள் கிரகம். எனவே உங்களால் முடிந்தவரை முடிந்த கோவில்களில் தீபமேற்றுங்கள். அந்த தீப ஒளியானது உங்கள் வாழ்வில் தடைகளையழித்து நன்மை பயக்கும்.

சனி ப்ரீதிக்கு இரும்பு, கேழ்வரகு, கருமை நிறப் பொருட்கள் ஆகியவற்றை தானம் செய்வது ஏற்புடையது. தசரதர் அருளிச்செய்த சனி ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம். சனி அஷ்டோத்திரம் படித்தல் நன்று.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கென சில பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் இருக்கும். அதனைப் பின்பற்றாமல் நிராகரிக்கும்போது அந்தக் குடும்ப உறுப்பினர்கள் பிறரால் கேலிப் பொருளாக்கப்படுகின்றனர். இது போலவே குலதெய்வத்தை மறந்தவர்கள், குலதெய்வத்தை நினைக்காதவர்கள், வருடம் ஒரு முறையேனும் குலதெய்வ வழிபாட்டில் கலந்துகொள்ளாதவர்கள் பிறரின் ஏளனத் துக்கு ஆளாகிறார்கள்.

சனி ஒரு பழைமை விரும்பி கிரகம். மேலும் எதையும் நிறுத்துப் பார்த்து நன்மை- தீமையைக் கணித்து ஜாதகருக்கு பலன் தருவார். உங்களின் ஆச்சாரக்குறைவு, தலைமுறையாக வந்த பழக்கங்களை "மாடர்ன்' என்ற பெயரில் மறத்தல், குலதெய்வத்தைத் தள்ளிவைத்தல், ஒழுக்கம் தவறுதல் என இவைபோன்ற செயல்களை சனி ஒருபோதும் மன்னிப்பதில்லை. அவரது கோபம் ஜாதகரின் வாழ்வுச் சக்கரத்தின் வேகத்தைத் தடுக்கும். வாழ்வின் நிகழ்வுகள் மிக மெதுவாக மாறுகிறது.

ஒரு கணம் பொறுமையோடு உங்கள் வாழ்வு செம்மையாக உள்ளதா என சிந்தித்து, அதன் குறைகளை நீக்குங்கள். சனிபகவானும் "நன்று நன்று' என மகிழ்ந்து, தடைகளை நீக்கி தாமதமின்றி செயல்களை நடத்திக் கொடுப்பார்.