நாம் பிறந்த ராசியின் அதிபதி யைக்கொண்டே நம்முடைய வாழ்க் கையை, செயல்களை, உறவுகளை, பொதுப்பலன்களை நம்மால் அறிய முடியும். அந்த வகையில் தனுசு ராசியில் பிறந்தவர்களின் பொதுப்பலன்களை இப்போது பார்ப்போம்.

தனத்திற்கும், புத்திரர்களுக்கும், தொழிலுக்கும் காரகனான குரு பகவானே தனுசு ராசியினரின் ராசிநாதனாவார்.

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குரு வானவர் இவர். மூவுலகங்களுக்கும் புத்தியாகவும் சக்தியாகவும் விளங்கி வருபவர். தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப்பொருளானவர் இவர். ஒளிபடைத்த மேதைகளுக்கும், பிரம்மத்தை உணர்ந்த ஞானிகளுக்கும் மூலகர்த்தா இவரே ஆவார். பலம் படைத்த இவரது தசை இளமையில் வந்தால் கல்வியில் முதல்நிலை உண்டாகும்.

நடு வயதில் வந்தால் சகல பாக்கியங் களும் ஏற்படும். வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார் கள்.

Advertisment

தலைவணங்காத தலைமைப் பதவியைத் தரக்கூடிய வர் குரு பகவான். மாபெரும் சாதனைகளைச் செய்யவைத்து உலகோரால் மதித் திடக்கூடிய நிலையை உண்டாக்குபவர் குரு பகவான். நாட்டை ஆள வைப்பார். நல்லோரு டன் சேர வைப்பார். புதுப்புது உத்திகளைக் காண வைப்பார். மென்மைக்கும் தன்மைக்கும் வித்தாவார் இவர். விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவராக மாற்றம் செய்வார்.

அந்தஸ்தையும் ஆற்றலையும் வாரி வழங்குவார். கம்பீரக்குரலைத் தந்து பலரையும் பணியவைக்கும் ஆற்றலைத் தருவார். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர். வடகிழக்கு இவரது திசை. கிரகங்களில் மிகமிக மேலான சுபகிரகம் இவர். ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலை ஏறத்தாழ இருந்தாலும்கூட, நாம் உயர்வதற்கு இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்தி ருந்தால் போதுமானது. பிரகஸ்பதி என்று அழைக் கப்படுபவர் குரு பகவான். பிரகஸ்பதி என்ற சொல்லின் பொருள், "ஞானத்தலைவன்' என்பதாகும்.

Advertisment

thh

அதனால் சகல சக்திகளையும் அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவர் இவர். செல்வாக்கு, உயர்ந்த அந்தஸ்து, சொல்வாக்கு பலிதம், உடல்நலம், நல்லறிவு, நினைவாற்றல், ராஜ தந்திரங்கள், ஆய கலைகள், நற்பேறு, பதினாறுவகை செல்வங்கள், சாஸ்திர அறிவு, வாகன யோகம், உபகாரம், உபதேசம், தானதர்மங்கள் ஆகிய அனைத்தையும் வழங்குபவர் குருபகவான்.

இத்தனை சிறப்புகளையும் கொண்ட செல்வத்திற்கும், பிள்ளைகளுக்கும், தொழிலுக் கும் காரகனான குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள். குருபகவானின் காரகத்துவம் என்னவோ அவற்றையெல்லாம் கொண்டவர்களாக, சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக, ஆலோசனைகள் வழங்கி அடுத்தவர்களை உயர்த்துபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

பொதுவாக மதிநுட்பத்தினால் எதிர்ப்பு களை சமாளிக்கும் ஆற்றலும் பேச்சு சாதுரியத் தால் எதிரிகளை நண்பராக்கிக் கொள்ளும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

துணிச்சலுடன் எதையும் யூகித்தறியும் ஆற்றலும் கொண்ட இவர்களுக்கு நாளை நடக்கப்போவதை இன்றே அறிந்திடக்கூடிய வல்லமை நிறைந்திருக்கும். ஆழ்ந்த சிந்தனையும், ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்ட இவர்களின் ஆலோசனைகள் பலருடைய வாழ்வை முன்னேற்றமடைய வைக்கும். இவர்களின் வாக்கு எப்படியும் பலிதமாகி மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். எதிரிகளைப் பேசவைத்து எடைபோடுவதில் வல்லவரான இவர்களிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்திருக்கும். எந்த ஒன்றையும் சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பது இவர் களுக்குக் கைவந்த கலையாக இருந்தாலும், இவர்களால்தான் மற்றவர்களுக்கு முன்னேற் றமே ஒழிய இவர்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். சாதனைகள் படைக் கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட இவர் களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் கூட முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சக்தி நிறைந்திருக்கும்.

ஒளிவு மறைவில்லாதவர்களாகவும் இருப்பார்கள். எதிலும் நிதானமாக செயல் பட்டாலும் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் இவர்களுக்குண்டு. தகுதி குறைவானவர் களுடன் நட்புகொள்ள பிடிக்காது. உயர்ந்த எண்ணங்களும் உயர்வான கொள்கையும் கொண்டவர்களாக எப்போதும் இருப்பார் கள்.

ஓய்வுநேரத்தைக்கூட வீணடிக்காமல் உழைப்பதிலும், உழைத்து உயர்வடைவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும் அதைச் சிறப்பாக செய்து வெற்றியும் காண்பார்கள். கூட்டுத்தொழில் எப்போதுமே ஒத்துவராது. அதனால் லாபமும் கிடைக் காது. காரணம், இவர்கள் தற்பெருமை அதிகம் கொண்டவர்கள் என்பதால் அதன்காரண மாகவே கூட்டாளிகளும் இவர்களை வெறுத்து ஒதுக்குவார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் முதலிடம் வகிப்பவர் இவர்களாகத்தான் இருப்பார்கள். உதவி செய்வதால் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்பவர்களும் இவர்களாகத் தான் இருப்பார்கள்.

செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்டவர் களாக விளங்கும் இவர்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டும் பொருத்தம் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போதுதான் மண வாழ்க்கை மகிழ்ச்சி வாழ்க்கையாக இருக்கும்.

களத்திரக்காரகன் சுக்கிர பகவான் இவர்களுக்குப் பகைவன் என்பதால் மண வாழ்க்கை அமைவது மட்டும் இறைவன் கொடுத்த வரமாகவே இருக்கும். எளிய தோற்றத் தைக் கொண்டவர்களாக இருந்தாலும் எப்போதும் இவர்களுடைய சொல்லுக்கு தனி மதிப்பிருக்கும். வாழ்வின் பிற்பகுதிதான் இவர்களுக்கு யோகமான காலமாக இருக்கும்.

இவர்களுடைய வாழ்க்கை இயல்பாகவே வசதிக்குறைவாக அமைந்துவிடும். பண வரவில் தடைகள் இருந்தாலும் கடன் வாங்கியாவது வீடு, மனை, வாகனம் என்று அமைத்துக்கொள் வார்கள். வீட்டிற்குள் இவர்கள் எப்படியிருந்தா லும் வெளிவட்டாரத்தில் மதிப்புடையவர் களாகவே இருப்பார்கள்.

எங்கு சென்றாலும் இவர்களுக்கு முதலிடம் கிடைத்துவிடும். இவர்களுடைய வார்த்தை களைக் கேட்டு மற்றவர்கள் செயல்படுவார்கள் என்றாலும், எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுத்துப் பின்வாங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இவர்களிடம் பிடிவாத குணம் மேலோங்கியிருக்கும். இளவயதிலேயே பார்வையிலும் மார்பு சம்பந்தமாகவும் பிரச்சினைகள் உண்டாகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலை சிலருக்கு வரும். இரக்க குணமும், இரக்க சுபாவமும் கொண்ட இவர்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பெரிதாக சந்தோஷம் அடைவார்கள். அதே போல் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு பெரிதாக வருந்துவார்கள்.

சுதந்திர மனோபாவத்தை பிறவியிலேயே உடையவர்கள். அதனால் இவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. யாருக்கும் கட்டுப் படவும் மாட்டார்கள். இவர்கள் போக்கில் செல்வதே இவர்களுக்கும், இவர்களை நம்பி இருப்பவர்களுக்கும் முன்னேற்றத்தை உண்டாக்கும். எதையும் ஊடுருவிப் பார்க்கும் இவர்களிடம் சுறுசுறுப்பும், வேகமும், அசாத்தியமான துணிச்சலும் இருக்கும். பிறர் உள்ளத்தில் இருப்பதை சுலபமாக அறிந்துகொள்ளும் சக்தியும் இவர்களுக்கிருக்கும். இந்த ஆற்றலை வளர்த்துக்கொள்ள வளர்த்துக்கொள்ள இவர்கள் எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

இவர்களில் பலர் சட்ட மேதைகளாகவும், தத்துவ வாதிகளாகவும், கல்வியாளர்களாகவும், ஆன்மிக பிரசங்கிகளாகவும் இருப்பார்கள். எதிர்காலத்தின்மீது எப்போதும் எச்சரிக்கை யாக இருப்பார்கள். ஒருவர் பேசுவதை வைத்தே அவர் பொய் பேசுகிறாரா? உண்மை பேசுகி றாரா என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். பிறருக்கு வழிகாட்டியாக விளங்கும் இவர்களுக்கு, எல்லாருக்கும் நன்மை செய்யவேண்டுமென்ற எண்ணம் எப்போதும் நிறைந்திருக்கும்.

இவர்களுடைய ராசியாதிபதி தேவ குருவான குரு பகவான் என்பதால், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அதன்மூலம் வசதிகளும் இவர்கள் வாழ்வில் கண்டிப்பாக வந்து சேரும். இவர்கள் இருக்குமிடத்தில் இவர்களின் ஆலோசனைக்கு எப்போதும் தனி மதிப்பிருக்கும். என்றாலும், அதை வைத்து முன்னேறுவதும், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. மற்றவர்களின் செயல்களை வழிமுறைப் படுத்தித்தரும் ஆற்றல் இயல்பாகவே இவர்களுக்கிருக்கும். நிர்வாகத் துறையில் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கையில் அலங்காரத்தைவிட வசதியாக வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள். ருசியான உணவும் அதிகமான இன்ப உணர்ச்சியும் இவர்களின் தேவையாக இருக்கும். அதை அடையும் வகையில் இவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். வெற்றியும் தோல்வியும் இவர்களைப் பொருத்தவரையில் சமநிலையிலேயே எப்போதும் இருந்துவரும்.

சுய கௌரவத்தை எப்போதும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இவர்கள் பொருளீட்டுவதும் அந்த வகையில்தான் இருக்கும். இவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதில் லாபத்தை உண்டாக்கிக் கொடுத்துவிடுவார்கள். இவர்கள்மீது வைத்த நம்பிக்கையையும் வலுப்படுத்துவார்கள். இவர்கள் எந்த ஒரு காரியத்தை தங்கள் கையில் எடுத்தாலும் அதை முடிக்காமல் ஓயமாட்டார்கள்.

நல்லமுறையில் நேர்மையாக வாழவேண்டுமென்று நினைக்கும் இவர்கள், பிறர் செய்யும் குற்றங்களைக் கண்டு கோபப்படுவார்கள். அவர்களிடமே அதுபற்றிச் சொல்லி அவர்களைத் திருத்தவும் முயல்வார்கள். உணர்ச்சிவசப்பட்டு கண்டிக்கவும் செய்வார்கள். அதனால் மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைப் பார்கள்? எப்படி பேசுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். இவர்களைப் போலவே எல்லாரும் நீதியாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டுமென்று நினைக்கும் இவர்கள் சில சமயங்களில் அதில் ஏமாற்றமும் அடைவார்கள். நேர்மையாக, உண்மையாக இவர்கள் பேசும் வார்த்தைகள் இவர்கள்மீது மற்றவர்களுக்கு வெறுப்பையும் ஏற்படுத்த வைக்கும்.

தான் சார்ந்த மதத்தின்மீதும், பக்தியின் மீதும் ஒருவகை நம்பிக்கை இவர்களுக்கிருக் கும் என்பதால், தெய்வீக விஷயங்களில் இவர்கள் மனம் ஒன்றிவிடும். காலநிலைகளை யும், சூழ்நிலைகளையும், மக்களின் மனநிலை களையும் புரிந்துகொண்டு செயல்படும் இவர்களுக்கு பக்தியின் மூலமாகவே வாழ்வதற்கேற்ற வழியும் உண்மையின் உயர்ந்த விளக்கமும், எல்லாவற்றையும் உணரும் சந்தர்ப்பங்களும் உண்டாகக்கூடும். மேஷம், சிம்மம் ராசி, லக்னக்காரர்களுடன் இவர்களுக்கு உறவோ தொடர்போ இருக்கும். பொதுவாக இவர்கள் எப்போதும் உஷாராகவே நடந்துகொள்ளக் கூடியவர்களாக வும் அறிவுப்பூர்வமாக செயல்படக்கூடியவர் களாகவும் இருப்பார்கள். இவர்களுடைய மனமும் உடலும் அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்வது அவசியம்.

அடுத்த இதழில் மகரம்...

செல்: 9444 393 717