ம் ஒவ்வொருவருடைய ராசியாதிபதி யைக்கொண்டு நம்முடைய பொதுப் பலன்களை நம்மால் அறியமுடியும். அந்தவகையில் கன்னி ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.

கல்விக்கும் அறிவுக்கும் காரகனான புதன் பகவானே கன்னி ராசியினரின் ராசிநாதன் என்பதால், கல்வியில் தேர்ச்சி மிக்கவர்களாகவும், பட்டங்கள் பெற்றவர்களாகவும், மேதைகளாகவும், பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கன்னி ராசியினர் இருப்பார்கள். கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு எல்லாவற்றிற்குமே மூலகர்த்தா புதன் பகவானே.

ஜாதகத்தில் உச்சம் அல்லது ஆட்சிபெற்று, சுப கிரகங்களோடு சேர்ந்திருந்தார் என்றால் இவரது தசை அல்லது புக்தி நடக்கும்போது அந்த ஜாதகரை உன்னதமான நிலைக்கு உயர்த்திவிடுவார். "பெருந்திறல் புதனெனும் பெயரினால்...' என்று பாகவத புராணம் புதனது ஆற்றலைப் போற்றுகிறது. சீரும் செல்வமும் வழங்கிடக்கூடியவர். எப்போதும் ஆனந்தத் தோடு விளங்கிடக்கூடியவர். இவரை வணங்கி வருபவர்க்கு கவிஞராகும் திறமையுண்டாகும் என்றும் கூறுவார்கள். அறிவை அளிப்பவனாத லால் புத்தி தாதா என்றும், தனம் தருவோனாத லால் தனப்ரதன் என்றும் இவர் பாராட்டப் படுகிறார். காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வாரி வழங்கும் ஆற்றல் படைத்தவர் இவரே.

Advertisment

kanni

இத்தகைய புதன் பகவானை தங்களின் ராசிநாதனாகக் கொண்டவர்கள் இவர்கள். புதனின் காரகத்துவம் என்னவோ அவற்றை யெல்லாம் கொண்டவர்களாக இருப்பார் கள். தோற்றத்தில் அமைதியானவர்களாக வும், இனிமையாகப் பேசுகின்ற ஆற்றல் கொண்டவர்களாகவும், அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவர் களாகவும், எந்த நேரத்திலும் நிதானத்தை இழந்துவிடாத மனநிலை கொண்டவர் களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அதிகபட்சமான செல்வாக்கு கொண்டவர்களாகவே இருந்தாலும் அடக்க மானவர்களாகவே காட்சியளிப்பார்கள். பார்ப்பதற்கு எளிமையானவர்கள்போல் இருப்பார்கள். என்றாலும், தங்களுடைய உடல் அழகின்மீது எப்போதும் தனி கவனம் செலுத்துவார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் மிகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற எண்ணம் இவர்களுடைய மனதில் மேலோங்கியிருக்கும். ஆர்ப்பாட்ட வழியைப் பின்பற்றா மல் அமைதியான வழியில் செல்லக் கூடியவர்களாக இருப்பதால்தான் இவர்களால் அனைத்திலும் வெற்றிகளைக் காணமுடிகிறது. வெளியுலகிற்கு சிக்கனமானவர்கள்போல் தோன்றினாலும் உலகை மிக நன்றாகப் புரிந்தவர் கள் என்பதால், வருமானகேற்ப செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள்ள பிரச்சினைகள், கவலைகள் பற்றி யாரிடமும் எப்போதும் மூச்சுவிட மாட்டார்கள். எத்தகைய துன்பம் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு காரியமாற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.

காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் இவர்களுக்கு முன்னால் உள்ள வேலைகளை உடனுக்குடன் செய்வதுடன் அதில் வெற்றியை யும் அடைவார்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளைக்கூட எளிதில் முடித்து விடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களில் சிலர் மூலதனம் இல்லாமல் கூட மிகப்பெரிய செல்வந்தராக உருவெடுத்து விடுவார்கள். இவர்களுடைய வாக்கிற்கு இருக்கும் மதிப்பும் உண்மைத் தன்மையும் பிறரை நம்பவைப்பதுடன், இவர்களை மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும்.

இவர்களுக்கு நண்பர்களாக வாய்ப்பவர் களே இவர்களுடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அவ்வப் போது எதிர்ப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கும் என்றாலும், அவற்றையெல்லாம் முறியடிக்கும் வலிமையும் இவர்களிடம் இருக்கும். நாளை நடக்கப்போவதை இன்றே அறிந்துகொள்ளும் ஆற்றல்பெற்றவர் களாக இருக்கும் காரணத்தினால், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதை எதிர் கொள்ளும் வலிமையும் இவர்களுக்கிருக்கும். எந்தவொரு செயலையும் நன்றாக சிந்தித்து அதன்பிறகே அந்த செயலில் இறங்குவார்கள். எதையும் திறமையாக செய்து அதில் புகழ்பெறவேண்டும்- வாழ்வில் வெற்றிபெறவேண்டும் என்பது இவர்களின் பிறவி குணமாகவே இருக்கும்.

திறமையாகப் பேசுவதிலும் தர்க்கம் செய்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். பிறர் செய்யும் நன்மைகளைவிட அவர்கள் செய்யும் குற்றங்களே இவர்களுடைய பார்வையில் எப்போதும் பளிச்சென்று தோன்றும். குற்றத்தைக்கண்ட இடத்திலேயே ஒளிவு மறைவில்லாமல் எடுத்துக்கூறி குற்றம் செய்தவரைத் திருத்த நினைப்பது இவர் களுடைய குணமாக இருக்கும். இவர்களைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாலும், இவர்களுக்கென்று ஒன்று வரும்போது மற்றவர்களின் உதவிகளை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தன்மானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எதிலும் எச்சரிக்கையாகவும், மிகவும் கௌரவமாகவும் வாழ விரும்புவார்கள். எதைச்செய்தாலும் அதை மிகவும் நன்றாக யோசித்து அதன்பிறகே செய்வார்கள். யாரையும் எளிதாக நம்பிவிட மாட்டார்கள். இவர்களுடைய தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். கண்ணியமான- கௌரவ மான ஆடைகளையே அணிவார்கள். இவர் களுக்கு கோபம் அதிகமாக வராது. வந்தாலும், வந்த வேகத்தில் தணிந்துவிடும். ஆனால், சுய கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும் வகையில் இவர்களை யார் சீண்டினாலும் அதை மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.

எதையும் அலசி ஆராய்ந்து விமர்சித்துப் பார்க்கும் ஆற்றல் இயற்கையாகவே அமைந் திருக்கும். என்றாலும், இவர்களுக்கு எந்த விஷயத்தில் திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பார்கள். குடும்பம், தொழில் என்று சதா சர்வநேரமும் சிந்திப்பதும் அதற்காகவே செயல்படுவதுமாக இருப்பதால், இவர்களுடைய மூளைக்கு ஓய்வென்பதே இல்லாமல் போகும். எனவே ஓய்வு நேரத்தை திட்டமிட்டு இயற்கை வாசஸ்தலங்களுக்குச் சென்றுவந்தால் இவர்களுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும்.

செயல்படுவதில் வல்லவர்களாக இருப்ப தால் இவர்கள் ஆற்றலை வருவாயாக்கும் வகைகளில் அவசரமின்றியும் நிதானமாகவும் செயல்படுவார்கள். எல்லாரையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது இவர்களுடைய தன்மையாக இருக்கும். அதனால் சில இழப்பு களையும் சந்திக்க வேண்டியவர்களாக இருப்பார்கள். அடுத்தவர் மனம் புண்படாத வகையில் வாழவேண்டும்- எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே இவர் களின் நோக்கமாக இருக்கும். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியைக் காண்பது மட்டுமே இவர்களின் லட்சியமாக இருக்கும்.

ராசிநாதன் புதன் இவர்களுடைய ராசியில்தான் உச்சமடைகிறார் என்பதால் கல்வி அறிவுடன், மாமன். மைத்துனர்வழி ஒத்துழைப்புடன் வாழக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாகவே அத்தகைய வாய்ப்புகள் அமைந்துவிடும். இவர்களுடைய யோசனைகளைக் கேட்டு முன்னேறியவர்கள் நிறையபேர் உண்டு. அதேநேரத்தில் உறவினர் களுக்கு இவர்கள் எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களிடம் நன்றியை எதிர் பார்க்கவே முடியாது. அதுபோல உறவினர் கள் இவர்களுக்குத் தொல்லைகள் கொடுத்தா லும் அதையெல்லாம் மறந்து அவர்களுக்கு உதவிகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

தங்களுக்குள் இருக்கும் ஒப்பற்ற திறமை களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் இவர்களுக்கு எப்போதும் வெற்றிமேல் வெற்றிதான். சிந்தித்து செயல் படுவதில் வல்லவரான இவர்களுடைய எண்ணம் எல்லாம் முன்னேற்றத்தின்மீதே இருக்கும். அதேநேரத்தில் மிக முக்கியமான ஒன்றையும் இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதுபோல் கன்னிக்கு கன்னியே எதிரியாகலாம். எனவே, இரண்டு கன்னி ராசிக்காரர்கள் ஒரே வீட்டில் இருந்தால் பிரச் சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என்பதால், இரண்டு கன்னி ராசிக் காரர்கள் வீட்டில் இருந்தால் ஒருவரைவிட்டு ஒருவர் விலகியிருப்பது இருவருக்குமே நன்மையாகும்.

மற்றவர்கள் மன நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால் இவர்களுடைய செயல்களில் எப்போதும் வெற்றி என்றே சொல்லலாம். இடம், சூழல் தெரிந்து அதற்கேற்ப செயல்படக் கூடியவர் களாகவே இருப்பார்கள். கெட்டவர்களை யும் எதிரிகளையும்கூட நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆற்றல்பெற்றவர்களாக இருப் பார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று பேதம் பார்க்காமல் அனைவரையும் சரிசமமாக நினைத்துப் பழகக்கூடிய இவர்களுக்கு இல்லறத் துணையின்வழியே ஏற்றம் உண்டாகும்.

பொருளாதார நிலை என்பது எப்போ தும் இவர்களுக்கு உயர்வாகவே இருக்கும்.

தேவைக்கேற்றதை எப்படியும் அடைந்து விடுவார்கள். பொதுவாக தேனிபோல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்கும் ஆற்றல்பெற்றவர்களாக இருப்பார்கள். கிடைக்காத எந்த ஒன்றுக்கும் எப்போதும் ஏங்கமாட்டார்கள். என்றாலும், வீடு, வாகனம் என்று வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வற்றையும் அடைய முயற்சிப்பார்கள்.

கலைத்துறையில் புகழ்பெற்று விளங்கு கின்றவர்களாகவும், ஆசிரியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், கம்பெனி நிர்வாகி களாகவும், தவணைமுறைத் தொழில் செய்பவர்களாகவும், மிமிக்ரி செய்பவர்களாக வும், கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுபவர் களாகவும், பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டி ருப்பவர்களாகவும், மாந்திரீகம் புரிபவர்களாக வும், பேச்சாளர்களாகவும், நகைச்சுவை நடிகர் களாகவும், தகவல் தொடர்பு சாதனங்களில் பணிபுரிகின்றவர்களாகவும். விளம்பரத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களாகவும், போக்குவரத்துத் துறையில் பணியாற்று பவர்களாகவும், ஜோதிடத்தில் சிறந்து விளங்கு கின்றவர்களாகவும், மொழிபெயர்ப்பாளர் களாகவும், தூதரகங்களில் பணிபுரிபவர் களாகவும், வியாபாரிகளாகவும். இசையமைப் பாளர்களாகவும், நடன அமைப்பாளர் களாகவும், பாடலாசிரியர்களாகவும், ஆடிட்டர், வங்கி கணக்காளர், புலனாய்வுத் துறையினர் என்று பல்வேறு தொழில்களில் பணியாற்றுபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

அடுத்த இதழில் துலாம்...

செல்: 94443 93717