நவ கிரகங்களின் தன்மை ஒவ்வொரு ராசி யினரிடமும் மேலோங்கியிருக்கும். ஜாதகரீதியாக, ராசி, நட்சத்திரம், லக்னம், தசாபுக்தி, கிரகங்களின் ஸ்தான நிலைகளை வைத்து ஒவ்வொருவருக்கும் பலன்களில் மாறுபாடு இருக்குமென்றாலும், ஒவ்வொரு ராசியினருக்கும் அவரவருடைய ராசியாதிபதியைக் கொண்டு பொதுப் பலன்களை அறியமுடியும்.
அந்த வகையில் ரிஷப ராசியில் பிறந்தவர் களின் பொதுப்பலன்களை இப்போது பார்ப்போம்...
ரிஷப ராசியினர் அழகு, கவர்ச்சி, திறமை, இனிமை, வளமை, ஆற்றல் என்ற நிலையை உடைய வர்கள் என்பதால், ஈர்ப்புசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ராசியாதிபதியான சுக்கிரன்தான் அனைத்து கலைகளுக்கும் காரகன். களத்திரத்திற் கும் காரகன். காதல், கற்பனை, காவியம், களிப்பு, ரசிப்பு, ஆசை, அன்பு, மயக்கம் என்ற நிலைகளை அனைவருக்கும் வழங்கிடக் கூடியவரும் சுக்கிர பகவானே!
பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ்டம், வாகனம், வித்தைகள் என்று வழங்கக் கூடிய சுக்கிர பகவானே கண்களைப் பிரதிபலித் திடக் கூடியவர். அதனால் இவர்கள் கண்களில் ஒரு கவர்ச்சி இருக்கும். மர்ம உறுப்புகளுக்கும் சிற்றின்ப சுகங்களுக்கும் காரகனானவரும் சுக்கிரன் என்பதால், இன்பத்தை அடைவதிலும், அதை வழங்குவதிலும் இவர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். வளமான வாழ்க்கைக்கு ஆதாரமானவர், உடல் வீரியத்திற்கு சக்தியானவர் சுக்கிரன் என்பதால், தங்களின் கவர்ச்சியாலும், திறமையாலும், இனிமையாகப் பழகுவதாலும்- எல்லாரிடமும் நெருக்கம் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவார்கள்.
ஒவ்வொரு சொல்லையும் எப்படி உபயோகிக்க வேண்டும்- கேட்டுக்கொண்டிருப்பவர் எப்படிப்பட்டவர்- அவருடைய பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை அறியும் சக்தியும், அதற்கேற்றாற்போல் பேசி அவர் மனதில் நன்மதிப்பைப் பெறும் ஆற்றலும் இவர் களுடைய பலமாகும். மற்றவர்களால் இவர்கள் அடைந்த வெற்றிகளைவிட- நன்மைகளை விட தங்களுடைய முயற்சிகளால், உழைப்பினால் இவர்கள் அடைந்தவையே எல்லாமுமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை என்பது இவர்களது அறிவாற்ற லைக் கொண்டதாகவே இருக்கும். மனைவி, வாகனம், வளம் இவற்றுக்கெல்லாம் அதிபதியும் ஆதிக்கவானுமாகிய சுக்கிரனின் அம்சம் கொண்டவர் ரிஷப ராசியினர் என்பதால், இவர்கள் மனம் அவற்றின்மீது எப்போதும் ஈடுபாடு கொண்டதாகவே இருக்கும்.
ஒவ்வொன்றையும் தெரிந்துகொண்டு தங்கள் செயல்திறனால் அதில் வெற்றிபெற்று தங்களுக்குத் தேவையானவற்றை அடைந்துவிடுவார்கள். எந்த விஷயத்திலும் எப்போதும் அவசரம் காட்டமாட்டார்கள். எதற்காகவும் ஆத்திரப்படவும் மாட்டார்கள். எந்தவொரு செயலில் ஈடுபடுவதாக இருந்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை நன்றாக யோசித்து அதன்பிறகே செயலில் இறங்குவார்கள்.
ரிஷபத்தாருக்கு இயல்பாகவே மன ஆற்றலும், மனவுறுதியும் நெஞ்சழுத்தமும் இருக்கும். கஷ்டத் தையும் பொருட்படுத்த மாட்டார்கள்; சுகத்தையும் பெரிதுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். இரண்டையும் சமமாகவே கருதும் மனநிலை பெற்றவர்கள்.
எந்த சுகமாக இருந்தாலும் அதை சுவைப்பதில் ஒரு நிறைவுபெற்றால் மட்டுமே இவர்கள் மனம் திருப்தியடையும். அழகானவற்றின்மீது மனம் மையல் கொள்ளும். அதை அடைந்தாலும், அத்துடன் மனம் நின்றுவிடாது. வேறொன்று கண்களுக்கு அழகாகத் தெரிந்தால் அதன்பின்னால் மனம் செல்ல ஆரம்பிக்கும் என்பதால், சுயக் கட்டுப்பாட்டையும் நற்சிந்தனைகளையும் இவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். எந்த ஒன்றையும் அடைய நினைக்கும்போதே ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது அவசியம்.
பொருள் சேர்ப்பதில் எப்போதுமே இவர்களுக்கு ஆர்வமும் ஆசையும் இருக்கும். பொருளாதாரம் வாழ்க்கையின் எதிர்காலத் தேவை என்று இவர்கள் மனம் சுழலும். இயற்கையிலேயே பயமற்றவர் என்றாலும், சிலருக்கு அளவிற்குமீறிய சுயநலத்தால் எதிர்காலத்தைப் பற்றிய பிரமைகளால் உள்ளூர ஒருவித பயமும் பலவீனமும் தோன்றும். உணர்ச்சி வேகங்கள் இவர்களுக்கு சாதகமாகவேண்டுமே ஒழிய, அவை பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவே, ஒவ்வொரு செயலிலும், ஆசையிலும் உஷாராக யோசித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியாளராக உலாவர முடியும்.
தங்கள் திட்டங்களை சீர்படுத்தி அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி பெறுபவர்களான இவர்கள், தங்களுடன் போட்டியிடுபவர்களை எப்படியாவது வீழ்த்திவிடுவார்கள். தங்களுக்குப் பிடிக்காதவரை அவர் வழியிலேயே சென்று வீழ்த்துவதில் திறமைசாலியாக இருப்பார்கள்.
தங்களைச் சார்ந் தவர்களுக்கு ஏதே னும் பிரச்சினை என்று வந்து விட்டால் அதை எதிர்த்துப் போராடு வதில் முதல் ஆளாக இருப்பார்கள். மாற்றங்களை எப்போதும் விரும்பும் இவர்களால் பொதுவாழ்விலும் புகழடைந்திட முடியும். புகழ்பெற்ற கலைஞர்களில் பலர் ரிஷப ராசியில் பிறந்தவர்கள்தான்.
ராசிக்கு அதிபதியான சுக்கிரன்தான் களத்திரக் காரகன் என்பதுடன், காதலுக்கும் காரகன் என்பதால் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது பொருத்தங்கள் பார்த்துத் தேர்வு செய்வதுடன், தங்கள் மனதிற்குப் பிடித்தவராகவும் தேர்வுசெய்ய வேண்டும். இல்லையெனில் மனைவியைவிட அல்லது கணவரைவிட வேறு அழகானவரைப் பார்க்கும்போது இவர்கள் கவனம் அவர்மீது செல்லக் கூடும். சிலர் எப்படியாவது அவரை அடையவும் முயலுவார்கள்.
உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன் ரிஷப ராசியில்தான் உச்சம்பெறுகிறார் என்பதால், இவர்களிடம் கற்பனாசக்தி நிறைந்திருக்கும். புதுமைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். என்றாலும், அலைபாயும் மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அதேநேரத்தில் இவர்களுடைய யோசனைகள் மற்றவர்களுக்குப் பயன்தரும் என்பதுடன் வெற்றியையும் உண்டாக்கும்.
எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். உணவு, ஓய்வு என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகவே இருக்கும். எவ்வளவு உச்சத்திற்குப் போனாலும் ஒரு தொழிலாளியைப்போலவே உழைப்பார்கள். என்றாலும், எப்போதும் இவர்களுக்கு ஒரு தூண்டுகோல் தேவையாகவே இருக்கும். ஒரு சிலவற்றை போட்டியாளர்கள் செய்யும்போது, "அப்போதே செய்யாமல் போனோமே' என்று வருந்துவார்கள்.
மனதைத் தேவையற்ற வழிகளில் செலுத்தமாட்டார்கள் என்பதால், இவர்களை எவராலும் தங்கள் வழிக்குத் திருப்பிவிட முடியாது. திடீர் யோகத்தைவிட படிப்படியாக உயர்ந்து நிலையான இடத்தை எட்டக்கூடியவர்களாகவே இருப்பார்கள். சாதாரணமானவற்றின்மீது கவனத்தை செலுத்தவும் மாட்டார்கள். ஆசையும் கொள்ளமாட்டார்கள். ஒரு பொறுப்பை இவர்களிடம் கொடுத்தால் எவ்வளவு விரைவில் அதை முடிக்கமுடியுமோ அவ்வளவு விரைவில் முடித்துவிடும் ஆற்றல் இவர்களுக்குண்டு. இதன் காரணமாகவே இவர்களிடம் பொறுப்புகள் தானாகவே வந்து சேரும்.
வாழ்க்கைநிலை எந்த அளவில் இருந்தாலும், இவர்கள் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றும் ஆடம்பரமான, விலை உயர்ந்த, மதிப்புடைய, அழகு மிக்கவையாகவே இருக்கும். இயல்பாகவே இவர்களுக்குப் போதிய வசதிகள் அமைந்திருக்கும்.
அமையாவிட்டாலும் அமைந்தே தீருமென்று சொல்லலாம். பிறர் நம்பிடும் வகையில் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதுடன், தங்கள் தகுதியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தங்கள் நலன், தங்கள் குடும்ப நலன் என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதன் உயர்வின்மீது இவர்களது முழு கவனமும் சிந்தனையும் இருக்கும்.
மனித உடலில் ரிஷப ராசி குரல்வளைக்கு சம்பந்தப்பட்டது என்பதால், செயல்புரியும் அளவுக்கு பேசமாட்டார்கள். வீண் அரட்டை களும் இவர்களுக்குப் பிடிக்காதென்றே சொல்லலாம்.
இயற்கையான உடல்வாகினைப் பெற்றிருந்தாலும் விரைவில் சோர்ந்துவிடக் கூடியவர்களாகவும், உடல்நிலைக் கோளாறுகளால் அவதிப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். உடலில் கழுத்து, தொண்டை, காதுகள், தாடைகள் போன்றவற்றில் பாதிப்புகளோ, நோய்த்தொற்றோ ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தலையிலும், முதுகுத்தண்டிலும் வலிகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சமயங்களில் அவை அதிக அளவில் வேதனைகளையும் தரக்கூடும் என்பதால் மருத்துவ ஆலோசனைகளும், அதன்படி வாழ்வதும் நன்மைகளை உண்டாக்கும்.
பிரச்சினைகளுக்கு ஆளாகும்போதெல் லாம், அதை எப்படி எதிர்கொள்வது? அதிலிருந்து எப்படி மீள்வது என்பதுபற்றி தனிமையில் இருக்கும் நேரங்களில் தங்களுக்குள்ளாகவே விவாதிக்கவேண்டும். எந்த நிலையிலும் எதற்காகவும் மற்றவர்களிடம் சென்று பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் கேட்கக்கூடாது.
ரிஷப ராசியினர் பலர் மூளை பலம் மிக்கவர்களாகவும், கல்வி யாளர்களாகவும், ஆராய்ச்சியாளர் களாகவும், ஆலோசகர்களாகவும், ஆசிரியர்களாகவும், பத்திரிகையாளர் களாகவும், பதிப்பாளர்களாகவும், தொகுப் பாளர்களாகவும் இருப்பார்கள். கம்பெனி நிர்வாகத்தில் மூளையாகவும் இருப்பார்கள். நகை வியாபாரம், பேன்சி ஸ்டோர், வட்டிக் கடைகள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றின் வழியாக அதிகபட்ச லாபம் காணக் கூடியவர்கள். பருப்பு வகைகள், தேன், கடலை, சீரகம், புத்தக வியாபாரம் போன்றவையும் இவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.
அடுத்த இதழில் மிதுனம்...
செல்: 99406 86060