நாம் பிறந்த ராசியின் அதிபதியைக் கொண்டு நம்முடைய வாழ்க்கையின், செயல்களின், உறவுகளின் பொதுப் பலன்களை நம்மால் அறியமுடியும். அந்தவகையில் மகர ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.
ஆயுள் காரகனான சனிபகவான்தான் மகர ராசியினரின் ராசிநாதனாவார். நீண்டகால வாழ்வுக்கும் மரணத்திற்கும் காரகன் சனி பகவான். இவருடைய பலம்பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறுவதற்கு வாய்ப் புண்டு. உழைப்பவர்களையும், சுயநல மற்ற தியாகிகளையும், மாபெரும் தேசத் தொண்டர்களையும், சமூகநல ஊழியர் களையும் உருவாக்கும் ஆற்றல் சனி பகவானுக்கே உண்டு. மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் பொருட்களை வெளிக்கொண்டுவரும் தகுதியையும், அந்தத் துறையில் அறிவையும் அளிப்பவர் சனிபகவான். ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் ஒரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்புண்டு. குறைந்தபட்சம் ஒரு நகரத்திற் காவது தலைமை தாங்கும் தகுதி அவருக்கு உண்டாகும். சனி பகவான் ஒருவருக்கு பலம்பெற்றிருந்தால் உலகியல் அறிவை வழங்குவார். வெளிநாட்டு மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகச் செய்வார். விஞ்ஞானத்தில் தேர்ச்சிபெற வைப்பார். நீண்டகாலம் வாழவைப்பார்.
இரும்புக்குக் காரகன் இவர். எண்ணெய்க் கும் பொறுப்பானவர். கறுப்பு தானியங்களின் பிரதிநிதி. கறுமை நிறத்திற்கு உரிமையுடையவர். இயந்திரத் தொழிலில் ஈடுபடுத்திடக்கூடியவர். பெரிய இயந்திரச் சாலைகளை இயக்குவோரின் ஜாதகங்களில் இவரின் பலம் நிறைந்திருக் கும். கிரகங்களில் சேவகர் இவர். உடலில் நரம்பு இவர். தவறு செய்பவர்களை தயவு தாட்சண்ய மின்றி தண்டிப்பவர். நீதி வழுவாதவர். அவரவர் செய்யும் நன்மை- தீமைகளுக்கேற்ப நலத்தையும் பாதகத்தையும் பாரபட்சமில்லாமல் வழங் கிடக்கூடியவர் என்றும் இவரைக் கூறலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் உச்சமாகவோ- ஆட்சியாகவோ இருந்து சுபகிரகச் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று சுப ஆதிபத்தியம் அடைந்து சுப வீடு களில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகர்களை இமாலய உச்சி என்பார்களே- அந்த அளவுக்கு உயர்த்திவிடுவார் சனிபகவான்.
இத்தனை சிறப்புகளையும்கொண்ட ஆயுள் காரகனான சனிபகவானை தங்களு டைய ராசிநாதனாகக்கொண்டவர்கள் மகர ராசியில் பிறந்தவர்கள். சனி பகவானின் காரகத்துவம் என்னவோ அவற்றையெல்லாம் கொண்டவர்களாக, நேர்மையானவர்களாக, நீதிநெறிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக- அதே நேரத்தில் மிகவும் கடுமையானவர்களாகவும், எதையும் செய்ய அஞ்சாத வர்களாகவும் இருப்பார்கள்.
தோற்றத்தில் அமைதியானவராகவும், நினைத்ததை சாதிப்பதற்காக முடிந்தவரை நிதானத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பார்கள். பார்வைக்கு மென்மையானவராகவும், பழகுவதற்கு இனிமையானவராக வும், கள்ளங் கபடமற்றவராகவும் காட்சி யளித்தாலும் தங்களுடைய குறிக்கோளில் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். எப்பாடுபட்டாலும் நாணல்போல் வளைந்து கொடுத்து சாதிக்கவேண்டியதை சாதித்துக் கொள்வார்கள்.
அன்புக்கு அடிமையானவர்கள். ஆற்றலையும் அனுபவ அறிவையும் கொண்டு மற்றவர்கள் மனதில் இடம்பிடித்துவிடுவார்கள். உழைக்கத் தயங்காதவர்கள். எந்த நேரத்திலும் எதற்காகவும் சோர்ந்துவிடாத இரும்பு மனிதர் கள் இவர்கள். தேடிப்போய் உதவிபுரிவதிலும் முதல் நபராக இருப்பார்கள். சனிபகவான் இவர்கள் ராசியாதிபதி மட்டுமல்ல; அவரே குடும்ப, தனாதிபதியாக வும் இருப்பதால் இவர்களை மிகவும் அழுத்த மானவர்கள் என்றே கூறவேண்டும். எதற்காக எதைச் செய்கிறார்கள் என்பது இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவும் இருக்கும்.
தாங்கள் ஈடுபட்ட செயல்களில் தோல்வி யென்றாலும் அதற்காக சோர்ந்துவிட மாட்டார்கள்.
இவர்களுடைய ராசிக்கு களத்திர ஸ்தா னாதிபதியான சந்திரன் பகைவர் என்பதால், திருமண வாழ்க்கையில் இவர்கள் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடித்தாக வேண்டும். அதேநேரத்தில் களத்திர காரகனான சுக்கிரன் ராசிநாதனுக்கு நட்பானவர் என்பதால், நினைத்தபடியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.
மகர ராசிக்காரர்களில் சிலருக்கு வாழ்க்கைத் துணையால்தான் குடும்ப வாழ்க்கை சிறக்கும். குடும்பப்பாசம், தெய்வீக சிந்தனை, மதப்பற்று நிறைந் திருக்கும். வீண்பேச்சு, விதண் டாவாதம் இவர்களுக்குப் பிடிக்காது என்றாலும், சில நேரங்களில் கீழ்த்தரமாகப் பேசுவது, ஏசுவது என்ற நிலைக்கு சிலர் மாறிவிடுவார்கள்.
இவர்களுடைய ராசிநாதனுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் என பிறந்த இடத்தின் உறவுக் குக் காரணமான கிரகங்கள் பகைவர்கள் என்பதால், பிறந்த குடும்பத்திற்கும் இவர்களுக் கும் ஒட்டுறவில்லாத நிலையே ஏற்படும். தந்தையின் துணை இல்லாமலேயே தனியாக முன்னேறி வெற்றி காண்பவர்களான இவர் களுக்கு சகோதரர்களும் பகைவர்களாக மாறிவிடுவார்கள்.
பொதுவாகவே இவர்களை மதித்து, இவர்களை நாடிவருபவர்களுக்கு உதவக்கூடிய மனம் படைத்தவர்கள். சுயமாக சம்பாதித்து வாழவே பெரிதும் விரும்புவார்கள். இவர்களை அலட்சியப்படுத்தி அடக்கியாள நினைப்பவர்களை கொஞ்சமும் விரும்பமாட்டார்கள்.
மகர ராசியில் பிறந்தவர்கள் தொழில் கூடங்கள் அமைத்து அதில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அல்லது பலர் பணிபுரியும் இடத்தில் மேலாளராக இருப்பார்கள். கட்டடத்துறை, பொறியியல் துறை, பதிப்புத்துறை என்று இவர்களில் பலருக்கும் வேலைவாய்ப்பு அமையும். ஏற்றுக்கொண்ட தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முதன்மையானவராக வருவார்கள்.
வாழ்வின் முற்பகுதி உழைப்பு உழைப்பென்று சென்றாலும் பிற்பகுதி யோகமாகவே இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு யோகம், உதவியென்பது சிரமம்தான். கடைசி காலத்தில்கூட இவர்களுக்குப் பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள் என்று கூறமுடியாது.
இல்லற வாழ்வில் தாமதமாக மணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். தாமதத் திருமணம்தான் இவர்கள் வாழ்வில் நற்பலன்களை வழங்கும். இளம்வயது திருமணத்தால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருப்பினும் கணப்பொருத்தம்., மகேந்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத் தம் ஆகியவை பொருந்துமானால் வாழ்க்கைத் துணையால் இவர்களுக்கு வளர்ச்சிகள் கூடும். இவர்களின் ஆட்சிநாதன் சனிபகவான். இவர் கள் ராசியில் குருபகவான் நீசமடைகிறார்;
செவ்வாய் உச்சமடைகிறார் என்பதால், தைரிய மும் தன்னம்பிக்கையும் இருந்தாலும் ஆன்மிக வழிகாட்டிகளாலும், ஆன்மிக ஈடுபாட்டினா லும்தான் வாழ்வில் மாற்றங்கள் நிகழும்.
ஒரேசமயத்தில் இருவேறு நன்மைகளை அடைய முயல்வார்கள். ஒரு வகையில் செலவு செய்தால் பலவகையில் வருமானம் அல்லது ஆதாயம் வர வேண்டுமென்று கருதியே செலவுசெய்வார்கள். எந்த நேரத்தில் எந்தக் காரியத்தை எத்தகையவகையில் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசித்தும், ஆழ்ந்த யோசனையுடனும் செய்வார்கள். இவர் களுடைய போக்கும் நடவடிக்கையும் விசித்திர மாகவே இருக்கும். பலர் பக்தர்களிடம் பரம பக்த சிகாமணிபோலவும், நாத்திகர்களிடத்தில் மூட நம்பிக்கைகளை ஒழித்து சீர்திருத்தம் செய்ய வந்தவர்போலவும் நடித்து காரியத்தை நிறைவேற்றிக்கொள்வதில் கண் ணும் கருத்துமாக இருப்பார்கள். இவர்களை நம்புகிறவர்களின் நிலைதான் பரிதாபமாக இருக்கும். சுய முயற்சியும், சொந்த அனுபவப் பயிற்சியும்கொண்ட இவர்கள் வெற்றியை நோக்கி உறுதியுடன் உழைப்பார்கள்.
சில சமயங்களில் சிலருடைய புத்தி பேதலிக் கும். அதனால் பிரச்சினைகளுக்கும் ஆளா வார்கள். நிறைய சவால்களை சந்திக்க வேண்டிய வர்களாகவும் இருப்பார்கள். ஒருசிலருக்கு உயர்வை அடையவேண்டிய நேரத்தில் மனநிலையில் மாற்றமும் சோர்வும் உண்டாகி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடும்.
இவர்களில் சிலர் நன்மையானவற்றை இழந்து விட்டு, "ஐயோ, தவறு செய்துவிட்டோமோ' என்று வருந்துவார்கள்.
ராசியின் அதிபதி சனிபகவான் என்பதால் எவ்வளவு தைரியம் உடையவர்களாக இருந்தா லும் பலருக்கு பயமும் கட்டுப்பாடுகளும் இயற்கையாகவே ஏற்படும். வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்ப சூழல்கள், நிகழ்ச்சிகள் முதலியவற்றில் சில இவர்களை பயமுறுத்தும். அறிவுக்குப் புல னாகாத ஏதோவொன்றுக்கு பயப்படுவார்கள். உடும்புப்பிடிக்குள் சிக்கிக்கொண்டதைப்போல அவதிப்படுவார்கள்.
சிலர் ஈடுபடும் செயல்களில் தோல்வி வருமென்று தெரிந்தால் சோர்ந்து போவார்கள். சோகத்தில் மூழ்கிவிடுவார்கள். வாழ்க்கையில் இவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்றால் எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுத்துவிடக்கூடாது. இவர் களுடைய ராசிநாதன் தர்ம நியாயத்தின்படி நடந்து கொள்பவர். தவறு செய்பவர் களை தயவு தாட்சண்ய மின்றி தண்டிப்பவர் என்பதை மறந்துவிடக் கூடாது. இவர்கள் தவறு செய்ய ஆரம்பித்தால் அதனால் பயங்கரமான விளைவுகளையும் சங்கடங் களையும் சந்திக்க வேண்டிய தாக இருக்கும்.
தோல்வி என்பது இவர் களின் அகந்தையின் காரணத்தினாலேயே உண் டாகும். சுயநலனுக்காக மற்றவரது பலவீனங் களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறப்பு இவர்களில் பலருக்கும் இருக்கும். பல நேரங் களில் இவர்களின் உள்ளுணர்வே இவர்களுக் குப் பகையாகிவிடும்.
பொதுவாகவே இவர்களை நம்புகிறவர்கள் பெற்றோராகவே இருந்தாலும், வாழ்க்கைத் துணையாக இருந்தாலும்கூட சங்கடத்திற்கு மேல் சங்கடம்தான். மலருக்கு மலர்தாவும் குணமுடைய சிலரது போக்கு வாழ்க்கைத் துணைக்கே எரிச்சலை உண்டாக்கும். இவர் களில் சிலர் இன்ப சுகத்திற்காகத் தகுதியறியா மல் உறவுகொண்டு ரகசிய நோய்க்கும் ஆளாகி விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் அதனால் துன்பப்படவும் செய்வார்கள்.
வாழ்க்கையில் நன்மைகளைக் காண வேண்டுமென்றால் நல்லவராகவும், ஒழுக்கமான வராகவும், நீதிநெறிப்படி வாழக்கூடிய வராகவும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அடுத்த இதழில் கும்பம்...
செல்: 9444 393 717