விருச்சிக லக்ன 5-ஆம் அதிபதி குரு. ராசி மீனம்.
விருச்சிக லக்ன 5-ல் சனி
பூர்வீக சொத்தை ஒருத்தருக்கும் தெரியாமல் விற்று, முழுத்தொகையையும் இவரே எடுத்திருப்பார். இவரது இளைய சகோதரம் மனநிலை பாதிப்பு உடையவராக இருந்திருப்பதால், அவரை தனியாக, அழுக்கான இடத்தில் அடைத்து வைத்திருப்பார். தனது முறையற்ற துணையின்மேல் உள்ள அளவற்ற ஆசையால், சொத்துகளை அவருக்கு எழுத, பத்திரம் பதிவு பண்ணி கொடுத்திருப்பார்.
இந்த ஜென்மத்தில் பூர்வீக சொத்துகளை விற்று தீர்த்திருப்பார். அல்லது இவருக்கு கிடைக்காமல் போய்விடும். ஆனால் இவரின் இளைய சகோதரருக்கு சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். இவரின் நண்பர்கள் இவரை ஏமாற்றி சொத்தை வாங்கிவிடுவார். அல்லது பங்கு பத்திரம், கைபேசி விளையாட்டு, கைபேசி லிங்க் என ஏதோ ஒரு விதத்தில் பணம், சொத்தை இழந்துவிட நேரிடும்.
குலதெய்வத்துக்கு, விளக்கேற்றி வழிபடவும். குலதெய்வக் கோவிலுக்கு இரும்பு அல்லது எவர்சில்வர் பொருள் தானம் செய்யவும்.
விருச்சிக லக்ன 5-ல் செவ்வாய் போன ஜென்மத்தில் ஆக்ரோசமான பேச்சால், அனைவரையும் நோகடித்திருப்பீர்கள். எதிரிகளை கர்ணகொடுரமாக தாக்கி, அவர்களது வீடுகளை நீங்கள் கைப்படுத்தியிருப்பீர்கள். மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களை சொல்லித்தரும் ஆசானாக இருந்திருப்பீர்கள். தட்சணையை கறாராக வாங்கி யிருப்பீர்கள். கல்வி என்ற சொல்லை கண்டாலே ரௌத்ரம் ஆகியிருப்பீர்கள். கை நாட்டு பேர் வழியாக இருந்திருப் பீர்கள்.
இந்த ஜென்மத்தில் பேச்சு குறைபாடு, திக்குவாய் போன்றவை இருக்கும். உங்கள் வீட்டை எதிரி அல்லது கடன் அல்லது நோய் சார்ந்து இழக்க நேரிடும் கல்வி தடை உண்டு. உங்களின் நண்பர்களே, எதிரியாகிவிடும். ந
விருச்சிக லக்ன 5-ஆம் அதிபதி குரு. ராசி மீனம்.
விருச்சிக லக்ன 5-ல் சனி
பூர்வீக சொத்தை ஒருத்தருக்கும் தெரியாமல் விற்று, முழுத்தொகையையும் இவரே எடுத்திருப்பார். இவரது இளைய சகோதரம் மனநிலை பாதிப்பு உடையவராக இருந்திருப்பதால், அவரை தனியாக, அழுக்கான இடத்தில் அடைத்து வைத்திருப்பார். தனது முறையற்ற துணையின்மேல் உள்ள அளவற்ற ஆசையால், சொத்துகளை அவருக்கு எழுத, பத்திரம் பதிவு பண்ணி கொடுத்திருப்பார்.
இந்த ஜென்மத்தில் பூர்வீக சொத்துகளை விற்று தீர்த்திருப்பார். அல்லது இவருக்கு கிடைக்காமல் போய்விடும். ஆனால் இவரின் இளைய சகோதரருக்கு சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். இவரின் நண்பர்கள் இவரை ஏமாற்றி சொத்தை வாங்கிவிடுவார். அல்லது பங்கு பத்திரம், கைபேசி விளையாட்டு, கைபேசி லிங்க் என ஏதோ ஒரு விதத்தில் பணம், சொத்தை இழந்துவிட நேரிடும்.
குலதெய்வத்துக்கு, விளக்கேற்றி வழிபடவும். குலதெய்வக் கோவிலுக்கு இரும்பு அல்லது எவர்சில்வர் பொருள் தானம் செய்யவும்.
விருச்சிக லக்ன 5-ல் செவ்வாய் போன ஜென்மத்தில் ஆக்ரோசமான பேச்சால், அனைவரையும் நோகடித்திருப்பீர்கள். எதிரிகளை கர்ணகொடுரமாக தாக்கி, அவர்களது வீடுகளை நீங்கள் கைப்படுத்தியிருப்பீர்கள். மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களை சொல்லித்தரும் ஆசானாக இருந்திருப்பீர்கள். தட்சணையை கறாராக வாங்கி யிருப்பீர்கள். கல்வி என்ற சொல்லை கண்டாலே ரௌத்ரம் ஆகியிருப்பீர்கள். கை நாட்டு பேர் வழியாக இருந்திருப் பீர்கள்.
இந்த ஜென்மத்தில் பேச்சு குறைபாடு, திக்குவாய் போன்றவை இருக்கும். உங்கள் வீட்டை எதிரி அல்லது கடன் அல்லது நோய் சார்ந்து இழக்க நேரிடும் கல்வி தடை உண்டு. உங்களின் நண்பர்களே, எதிரியாகிவிடும். நிலை வரும். ஒரு தெருவில் சண்டை நடந்தால், பக்கத்து தெரு வழியாக ஓடிவிடுவீர்கள். அம்புட்டு தைரியசாலி நீங்கள்.
கடல் அருகிலுள்ள திருச்செந்தூர் முருகர் வழிபாடு அவசியம்.
விருச்சிக லக்ன 5-ல் ராகு போன ஜென்மத்தில், வீட்டிலுள்ள பழமையான சுவாமி விக்ரகங்களை விற்று காசாக்கி ஜாலியாக இருந்திருப்பீர்கள். பக்கத்து ஊர் ஆடு மாடுகளை, நைஸாக உங்களிடம் கொண்டு வந்து சேர்ந் திருப்பீர்கள். அல்லது உங்கள் மாடுகளை பக்கத்து வயக் காட்டில் மேயவிட்டுவிட்டு, கமுக்கமாக இருந்திருப்பீர்கள். வயக்காட்டில், தண்ணீர் வெட்டிவிடுவதிலும் ஏகப்பட்ட வில்லங்கம் செய்திருப்பீர்கள். அந்தக் காலத்து, பஞ்சாயத்து குடவோலை முறையில், எல்லா ஓலைகளிலும் உங்கள் பெயரை மட்டும் பதித்து ஜெயித்திருப்பீர்கள். லாபம் அதிகரிக்க, கள்ளக் கணக்கு எழுதுவதில் கில்லாடியாக இருந்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில், குடிப்பழக்கம் அதிகமிருக்கும். வீட்டிலேயே டாலர் பணம் அச்சடித்து பயன்படுத்துவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய புதுமைகள் புகுத்துகிறேன் என்பீர்கள். ஆனால் புதுமைக் குள் கள்ளத்தனம் நிறைந்திருக்கும். அரசியலில் அகட விகடம் செய்து, அனைத்து கேப்மாரித் தனமும் செய்து, ஒரு மந்திரி பதவியை பிடித்துவிடுவீர்கள்.
தில்லை நடராஜரை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவிலில் நடராஜப் பெருமானை வழிபடவும்.
விருச்சிக லக்ன 5-ல் கேது சென்ற ஜென்மத்தில் நிறைய பொய் பேசியிருப்பீர்கள். வன்மம் காரணமாகக் குடும்பத்தை பிரித்திருப்பீர்கள். குலப் பெருமைக்கு ஒவ்வாத உணவை புசித்திருப்பீர் கள். பொய் சாட்சி சொல்லியிருப்பீர்கள். பிறரின் அந்தரங்க, ரகசிய விஷயங்களை கஷ்டப்பட்டு தெரிந்துகொண்டு, அதை எல்லாரிடமும் பரப்பி, பிறரை அழவும் அவமானப்படவும் வைத்திருப்பீர்கள். பிறருக்கு தவறான ஆலோசனைகளை கூறி, பின் அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து மிக மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் எதிலும் பிடிப்பில்லா மல் சன்யாசி வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்வின் பொருளாதாரநிலை, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருக்கும். அரசியலில் அனேக குட்டிக்கரணம் அடித்தாலும், அதிர்ஷ்டம் என்பது பக்கத்தில்கூட வராமல், சாதாரண தொண்டாகவே இருக்க நேரிடும்.
உங்கள் ஊரில் நதி, ஆறு, வாய்க்கால் அருகிலுள்ள விநாயகரை தினமும் சேவிக்கவும்.
இவ்விதம், விருச்சிக லக்னத்துக்கு 5-ல் பாபர் உள்ளவர்கள். கடல் அருகிலுள்ள முருகரை வணங்கவும். அருகிலுள்ள முருகருக்கு, பன்னீர் வாங்கிக் கொடுங்கள். புது வஸ்திரமும் வாங்கிக் கொடுப்பது நலம்.
திருந்செந்தூர் அல்லது பழனி முருகரை வணங்குவது நல்லது.
தனுசு லக்ன ஊழ்வினை விளைவுகள்!
தனுசு லக்ன 5-ஆம் அதிபதி மேஷம் செவ்வாய்.
தனுசு லக்ன 5-ல் சனி
தனுசு லக்னத்தில் சனி நீசமடைவார். இவர்களுக்கு பேச்சு குறைபாடு அல்லது செவித்திறன் குறைவு இருந்திருக்கும். இவருடைய வாழ்க்கைத் துணை இவரை விட்டு பிரிந்திருக்கக்கூடும். நண்பர்களிடம் நிறைய கடன் வாங்கிவிடுவதால், வீட்டை இழந்திருப்பார். இனம் வயதிலேயே தந்தையை இழந்திருப்பார். அல்லது தந்தைக்கும் இவருக்கும் சண்டை வருவதால், தந்தையைவிட்டு விலகியிருப்பார்.
இந்த ஜென்மத்தில், எப்போதும் வம்பு, வதந்தி, கோள் பண்ணுவது என வேண்டாத பேச்சு, செயல்களில் பிஸியாக இருப்பார். இளைய, மூத்த உடன்பிறப்புகளுடன் சதா சண்டையிடுவார். இவரின் கம்பீரமான தந்தை, இவரது வேண்டாத சில்லுண்டித் தனம் தாங்காமல் வீட்டைவிட்டு துரத்தி விடுவார்.
தனுசு லக்ன 5-ல் சனி நீசபங்கம் ஆகாமல், நீசமாகிமட்டும் இருந்தால், போன ஜென்மம் மட்டுமல்ல, இந்த ஜென்மத்திலும் வீடு, வாசலின்றி, ஒரு சன்யாசியைப்போல் தெருவில் அலையநேரிடும்.
சனீஸ்வர பகவானையும், ஆஞ்சனேயரை யும் வணங்கவேண்டும்.
தனுசு லக்ன 5-ல் செவ்வாய்
இங்கு செவ்வாய் ஆட்சி பலம் பெறுவார்.
போன ஜென்மத்தில், பூர்வீகம், குழந்தை களை அம்போவென்று விட்டுவிட்டு, வெகுதூரம் பிரிந்து வாழ்ந்திருப்பீர்கள்.
தனது ஆசைத் துணைக்காக, கடன் வாங்கி யும், இருப்பதை விற்றும், அவள் காலடியில் கொட்டியிருப்பீர்கள். எல்லாரும் தன்னை பாராட்டவேண்டும் அல்லது வீட்டு உறுப்பி னர்கள் மேலுள்ள கோபத்தில் அனைத்து சொத்துகளையும் கோவிலுக்கு எழுதி கொடுத்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் மனை தங்காது, கணவர் பிரியநேரிடும். இளைய சகோதரம் மடத்தில் சேர்ந்து சௌக்கியமாக இருப்பார்.
மருமகளுடன் சதா சண்டையும், வெச்சு செய்வதையும் எதிர்கொள்ள வேண்டியிருக் கும். இவருடைய தந்தை மிக ஈகோ உடையவர். அவரின் ஆர்ப்பாட்டத்தைத் தாங்காமல் ஜாதகர் தப்பி ஓடிவிடுவார்.
மலைமீதுள்ள முருகரை வணங்கவேண்டும். பழனி முருகன் வழிபாட்டுக்கு உரியவர் ஆவார்.
தனுசு லக்ன 5-ல் ராகு
சென்ற ஜென்மத்தில், உங்கள் இளைய சகோதரன் அல்லது கணவனை ரத்தம் வரும் அளவிற்கு அடித்து துன்புறத்தியிருப்பீர்கள். பூர்வீக சொத்தை விற்று குடித்திருப்பீர்கள். பிறமதப் பெண்ணை காதலித்து, கல்யாணம் முடிக்காமல், சும்மா வைத்திருப்பீர்கள். வெளிநாடு சென்று, நிறைய சம்பாதித்து, வீட்டை கவனிக்கிறேன் என கப்பல் ஏறினவர் அப்படியே அங்கேயே செட்டில் ஆகியிருப் பீர்கள். குழந்தைகளும், உங்கள் தந்தையும் இங்கே அல்லாடியிருப்பார்கள்.
இந்த ஜென்மத்தில் உயர்கல்வி, வேலை, தொழில் என எந்த விஷயமாக வெளிநாடு செல்ல நினைத்தாலும், பெரிய தடை ஏற்பட்டு, ஏர்ஃபோர்ட் பக்கம் வந்தே இருக்கு உனக்கு என மிரட்டும். உங்கள் சின்னவூட்டு விஷயம் அல்லது லவ் மேட்டர் குடும்பத் துக்கு தெரிந்து, மனைவி உங்களை நிராகரித்து விலகிவிடுவார். அரசாங்கத்தில் பெரிய பதவி கிடைக்கும்போது, உங்களின் சில கெட்ட பழக்கங்கள் வெளியாகி, அந்த லிஸ்ட்டில் இருந்தே உங்கள் பெயரை நீக்கிவிடுவர்.
உக்கிரமான துர்க்கையை கண்டிப்பாக வணங்கவேண்டும்.
தனுசு லக்ன 5-ல் கேது
சென்ற ஜென்மத்தில், மிக விரும்பிய மனிதரை திருமணம் செய்ய தடை ஏற்பட்டிருக்கும். பெண்களுக்கு கொடுக்க வேண்டிய வேலை செய்த கூலியை கொடுக்க விடாமல் தடுத்திருப்பீர்கள். சில பெண்கள் 2-ஆவது திருமணம் செய்ய முயலும்போது, அது நம் குலத்துக்கு ஆகவே ஆகாது என முரண்டுபிடித்து முட்டுக்கட்டை போட்டிருப்பீர்கள். உங்கள் தந்தை தர்ம விஷயமாக செலவழிக்க முன்வரும்போது, பணத்தை புடுங்கி, உள்ளே கொண்டு வைத்து, தர்மத்துக்கு தடை போட்டிருப் பீர்கள்.
இந்த ஜென்மத்தில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, அனைத்து சொத்தையும் இழந்து, அம்போவென நிற்பீர்கள். உங்கள் மனைவிக்கு ஏதோ ஒரு காரணத்தால் உங்களை பிடிக்காமல் போய்விடும்.
எனவே எப்போதடா விவாகரத்து வாங்கிவிட்டு ஓடலாம் என காத்திருப்பாள். உங்கள் தந்தை தனது சம்பாத்தியம், முதலீடு எல்லாவற்றையும், தண்டமாக விரயம் ஆக்கிவிட்டு, உங்களை ஒன்றுமில்லாமல் நிற்க வைத்துவிடுவார். மலைமேல் இருக்கும் விநாயகரை வணங்கவும். இவ்விதம் தனுசு லக்னத்துக்கு 5-ல் பாபர் கொண்டவர்கள் மலைமேல் இருக்கும் முருகரை வணங்கவும். கனக துர்க்கை போன்று மலைமேல் உள்ள துர்க்கையை வணங்குவது சிறப்பு.
செல்: 94449 61845