12-ஆமிடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் நிற்கும் பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். இன மற்ற கிரகங்களின் பலன்களைக் காண்போம்.
புதன்
பன்னிரண்டாமிடத்தில் புதன் கற்ற வித்தையை மங்கச்செய்யும். புத்தி தடுமாற்றம் ஏற்படும். புதனின் தன்மையான இரட்டை சிந்தனையைக் கொடுக்கும். அதனால் இரட்டை வாழ்க்கை ஏற்படுத்தும். திடீர் திடீரென வாழ்க்கையில் ஏற்ற- இறக்கம் வரும். புதனின் காரகம் மாமன். மாமனுக்கு பாதிப்பு அல்லது தாய்மாமனால் சுகம் கெடும். தவறான முடிவுகளை முன்னெடுப்பதால் தொழில் நஷ்டம் ஏற்படும். விரய புதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு வீரியக் குறைவுண்டாகும். திறமைக் குறைவுண்டு. பல்துறை வித்தகர்போல காட்டிக்கொள்வார். எல்லாவற்றிலும் அரை குறையாகத் தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந் ததுபோல் காட்டிக்கொள்வார். சுபகிரகப் பார்வை பெற்றால் திறமைக்கேற்ப முன்னேற் றம் அடையாவிட்டாலும் ஓரளவு புகழ்பெறு வார். பாவகிரகத் தொடர்பிருந்தால் நல்லதைப் பேசமாட்டார். நல்லதும் செய்யமாட்டார். பொறாமை, அடுத்தவரை மட்டம்தட்டிப் பேசும் குணத்துடன் இருப்பார். யாரையும் மனதாரப் புகழாமல் எதிலாவது குற்றம் கண்டுபிடித்துப் பேசும் குணத்தைப் பெற்றிடு வார்.
தனுசு, மீனத்திற்கு புதன் பாதகாதிபதி; விருச்சிகம், தனுசு, கும்பம், மீனத்திற்கு மாரகாதிபதி; மேஷம், மகரத்திற்கு ஆறாமதிபதி; விருச்சிகம், கும்பத்திற்கு எட்டாமதிபதி; கடகம், துலாத்திற்கு பன்னிரண்டாமதிபதி. புதன் சுபகிரகமாகி மறைவது நல்லதல்ல. ஆனால் மேற்கண்ட லக்னங்களுக்கு புதன் மறைவது, சுபகிரகப் பார்வை பெறுவது, சம்பந்தம் அடை வது, புதன் நீசமடைவது மற்றும் கெட்டுப் போவது நன்மையைத் தரும். பன்னிரண்டில் இருக்கும் புதன் பாவகிரகப் பார்வை, இணைவு, சேர்க்கை பெறுவது பலவீனத்தையே தரும். சுப தசாபுக்திகள் நடந்தால் நல்ல பலன்களே நடக்கும். பலவீனமான தசாபுக்தி வந்தால் தீமைகள் உண்டு.
குரு
பன்னிரண்டில் குரு மறைவது நல்லதல்ல. அறிவு காரகரான குரு பன்னிரண்டில் மறைந்தால் அறிவைப் பயன்படுத்தத் தெரியாது. திறமை குறைவு. அறிவு, திறமை இருந்தாலும் சரியான நேரத்திற்கு சரியான முடிவெடுக்க முடியாமல் போய்விடும். நல்ல குருமார்கள் அமையமாட்டார்கள். குருவால் நோகடிக்கப்படுவார். கற்றுக்கொடுத்த குருவால் சபிக்கப்படுவார் அல்லது குருவுக்கு துரோகம் செய்வார். சரிவர சாஸ்திரத்தின் உள்ளர்த்தங்கள் புரிந்துகொள்ள மாட்டார். நுனிப்புல் மேய்வதால் சாஸ்திர, சம்பிரதாயத்தை மதிக்காதவர். முறையற்ற உறவு சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர். சமூகத்திற்கு முரணான எண்ணத்தால் தாலிகட்டாத மனைவி அமைவார். அவர் பேச்சை மீறமாட்டார். குரு புத்திரகாரகர். பன்னிரண்டில் குரு மறைந்து கெட்டால் புத்திர தோஷத்தைக் கொடுக்கும். பிள்ளைகளுக்கு நஷ்டம் அல்லது பிள்ளைகளால் நஷ்டம் ஏற்படும். சுபகிரகப் பார்வை, தொடர்பு நன்மை செய்யும்.
மிதுனம், கன்னி லக்னத்திற்கு பாதகாதிபதி; ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி லக்னத்திற்கு மாரகாதிபதி, கடகம், துலா லக்னத்திற்கு ஆறாமதிபதி, ரிஷபம், சிம்மத்திற்கு அஷ்ட மாதிபதி, மேஷம், மகரத்திற்கு பன்னிரண்டாமதிபதி. எனவே குரு நீசம்பெற்று கெட்டிருந்தாலும், சுப பலம் பெற்றால் நன்மையைத் தன் தசாபுக்திக் காலங்களில் செய்துவிடும். தனுசு, மீன வீட்டிற்கு குரு மறைந்திருப்பதும் நீசம்பெறுவதும் கெடுதலையே செய்யும். குரு, சந்திரன் இணைந்தால் குருச்சந்திர யோகம், குரு, செவ்வாய் இணைந்தால் குருமங்கள யோகத்தையும், குரு, கேது இணைவு கோடீஸ்வர யோகத்தையும், சுப பலத்துடன் இருந்தால் பணம், புகழ், அந்தஸ்தையும் கொடுத்தே தீரும். குரு முழுமையான சுபகிரகம் என்பதால் குரு, சூரியன் அரசாங்க யோகத்தையும், குரு, புதன் நல்லறிவையும், குரு, சுக்கிரன் நிதானத்தையும், குரு சனியுடன் சேர்ந்து அரசாங்க நன்மையையும், குரு, ராகு சம்பந்தம் யாரும் கண்டறியா விஷயத்தைக் கண்டறியும் ஆற்றலையும் தருகிறது. குரு பன்னிரண்டில் மறைவது சுபப் பலனைக் குறைத்தாலும், சம்பந்தப் படும் கிரக வலுவால் ராஜயோகத்தைத் தருவார்.
சுக்கிரன்
சுக்கிரன் பன்னிரண்டில் மறைந்து பலவீனமாக இருந்தால் வாழ்வின் சுகபோகங்களை அடைவதில் பலவித சிக்கலையே தரும். ஆண்களுக்கு மனைவியுடன் சந்தோஷமாக வாழ வழிகிடைக்காது. பெண்களால் தேவை யற்ற கெட்ட பெயரையும், ஏமாற்றத்தையும் அடையநேரும். இல்லற சுகம் கெடும். புரிந்து கொள்ளாத மனைவி, நஷ்டத்தை உண்டாக்கும் மனைவியைத் தரும். மேஷ லக்னத்திற்கு பன்னிரண்டில் சுக்கிரன் உச்சமடைந்து பலம் பெற்றாலும்,கணவன்- மனைவிக்குஅல்லது மனைவி- கணவனுக்குப் பிடிக்காத செயலை அதிகம் செய்வார்கள். அடிக்கடி காவல் நிலையம் செல்லநேரும். கணவன் அல்லது மனைவியால் மாறிமாறி அவதூறு பரப்பி நஷ்டமடைவர். ஆடம்பரச்செலவு செய்து வீண் செலவுகளை அதிகப்படுத்துவர். ஆண்களுக்கு களத்திரகாரக கிரகமான சுக்கிரன் கெடுவதால் பலதார அமைப் பைத் தரும். மனைவியை இழக்கவோ, பிரியவோ நேரும்.வாழ்க்கைத் துணைவரால் நஷ்டம் அல்லது வாழ்க்கைத் துணைவருக்கு நஷ்டம் உண்டாகும்.
உறவினர்கள் பலரை பகைத்துக்கொள்வர். சுக்கிரன் சுபகிரகமாக இருப்பதால், கெட்டபின் ஞானம்பெற்றுத் திருந்துவார். சுக்கிரன் மறைவிடத்தில் இருப்பது- கெட்டுப்போவது மனைவிக்கு நல்லதல்ல. மனைவியைவிட பிறர் மீது ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் பெண்பித்தராக இருப்பர். சுபகிரகத் தொடர்பு- ஆடம்பர அலங்கார வாழ்க்கை, சந்தோஷம், செல்வாக்கு மனைவி யால் நன்மைகளையும் தரும். பாவகிரகத் தொடர்பு சுகங்கள் அத்தனையையும் கெடுக்கும். பன்னிரண் டில் சுக்கிரன் மறைந்து பாவகிரகத் தொடர்பு- பெற்றால் நேர்வழியை மறந்து கெட்டவழியில் நுழைந்து சந்தோஷங்களை இழப்பார். சிற்றின்பத் தைத் தேடி பேரின்பத்தைப் பெறத் தவறிவிடுவார்.
கடகம், கும்பத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி; மேஷம், சிம்மம், கன்னி, தனுசுக்கு மாரகாதிபதி; ரிஷபம், தனுசுக்கு ஆறாமதிபதி; துலாம், மீனத் திற்கு அஷ்டமாதிபதி; மிதுனம், விருச்சிகத்திற்கு பன்னிரண்டாமதிபதி. சுக்கிரன் மேற்கண்ட லக்னக்காரர்களுக்கு மட்டும் பகை, நீசமென வலுக்குறைந்திருந்தால் துன்பங்கள் குறையும்.
சுக்கிரன் பாவகிரகங்களுடன் தொடர்பு கொள்வது பாதிப்பைத் தரும். சூரியன், சுக்கிரன் சம்பந்தப்பட்டால் வீண் பகையையும், செவ்வாய், சுக்கிரன் கெட்ட குணத்தையும், தேய்பிறைச் சந்திரன், சுக்கிரன் வீண் கற்பனைகளையும், சனி, சுக்கிரன் தீயவழி தொழிலையும், ராகு, சுக்கிரன் நீசத் தொழிலையும், கேது, சுக்கிரன் வேடதாரியாகவும் உருவாக்கி, முறையற்ற சிந்தனை, சட்டத்திற்கு எதிரான- சமூகத்திற்கான முரணான செயல்களை செய்யத் தூண்டிவிடும். வளர்பிறைச் சந்திரன், சுக்கிரன் கற்பனை செய்த சுகத்தையும், குரு, சுக்கிரன் கலவையான பலனையும், சுக்கிரன், புதன் சம்பந்தம் கலைதுறையில் சாதனையையும் தரும். நல்ல தசையில் சுக்கிரனின் மறைவிடப் பலன் தீமைகளைத் தராது.
சனி
பன்னிரண்டில் சனி உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தராது. சொந்த ஊரைவிட்டு வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்ட நேரும். போதிய மரியாதை இருக்காது. அறிவைவிட உடலுழைப்பை நம்பி தொழில் செய்யவேண்டிவரும். கடினமான பணிகளைச் செய்வார். சனியின் காரக மான வேலையாட்களால் நஷ்டம் அல்லது வேலையில் நஷ்டத்தை அடைவார். எப்போதும் கடினமாக உழைக்கவேண்டி வரும். எத்துறை யிலும் எதிலும் அடிக்கடிநஷ்டத்தை சந்திப்பார்.
விரய ஸ்தானத்தில் சனி இருப்பதுஆயுள் பலத்தைக் குறைக்கும். முழு பாவகிரகம் சனி நீச வலுப்பெற்று பலம்குறைந்தால் நன்மை தான். அதேசமயம் தீயகிரகம் கெட்டவனாகி கெட்டுப்போயிருந்தால் விபரீத ராஜயோகத் தைச் செய்வார்.
மேஷம், ரிஷப லக்னத்திற்கு சனி பாதகாதிபதி; கடகம், விருச்சிகம், தனுசு, மகரம், மீன லக்னத்திற்கு மாரகாதிபதி; சிம்மம், கன்னிக்கு ஆறாமதிபதி; மிதுனம், கடகத்திற்கு அஷ்டமாதிபதி; மகரம், கும்ப லக்னத்திற்கு பன்னிரண்டாமதிபதி. எனவே சனி நல்ல பலனைத் தரமாட்டார். அதிக கெடுபலனையும் தரமாட்டார். சனி நீசமாகி சுபர் தொடர்பி ருந்தால் ராஜயோகப் பலனைத் தருவார். சுபயோக தசைகளில் சனியால் பாதிப்பு குறையும். தீயகிரகம் மற்றும் மோசமான தசைகளில் மருத்துவமனை, சிறை, அடிமை வாழ்க்கை, கடனால் அவமானம், ஏமாற்றம், சில நேரங்களில் தன் புக்தியில்கூட கண்டத்தைத் தந்துவிடும். சனியுடன் சேரும் சுபகிரகம் தன் நல்லவற்றை இழந்து தீய சிந்தனைக்குச் செல்வர்.
சனியுடன் சேரும் பாவகிரகங்கள் இரக்கமற்ற கொடூர செயல்களில் ஈடுபடுத்தும்.
ராகு
பன்னிரண்டில் ராகுதந்தைவழி முன்னோர் களுக்கு பாதிப்பைத் தரும். அப்பாவின் அப்பா வுக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும், சிலருக்கு கண்டத்தையும் தரும். நீச ராகு தாத்தாவின் ஆயுளை பாதிக்கும். பேரன் நீச ராகுவில் பிறந்தால் தாத்தா இறந்திருப்பார் அல்லது நீண்டநாள் இருக்கமுடியாது. பூர்வீக சொத்து கைவிட்டுப் போகும். ராகுவின் காரகர்களான நீசர்களால் நஷ்டம் உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளுக்கு இழுத்துச்சென்று நஷ்டமாக்கி விடும். பன்னிரண்டில் ராகு இருப்பவர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவது கடினம். நண்பரின் மனைவியால்கூட நஷ்டமே உண்டாகும். நல்ல பெயரெடுப்பது, எடுக்க முயல்வது தோல்வியையே தழுவ வைக்கும்.
சொந்த நாட்டைவிட்டு அந்நிய தேசவாசம் செய்யநேரும். சொல்லமுடியா கஷ்டங்கள் பலவற்றை அனுபவிப்பார். "ராகுபோல கொடுப் பாரில்லை' என சொன்னாலும், பன்னிரண்டில் ராகு நாகதோஷத்தைத் தரும். திருமணத்தில் தொல்லை அல்லது நஷ்டத்தைத் தரும். விரய ராகு பல போராட்டத்தைத் தரும். எட்டில் ராகு மாங்கல்ய தோஷத்தைத் தரும். ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் இருக்கிறாரோ, அந்த இடத்திற்குரிய பலனைத் தருவார். ராகு சனிபோல செயல்படுவார்.எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்திற்கு3, 6, 11 ஆகிய வீடுகளில் ராகு இருந்து தசை நடந்தால் நன்மையைத் தரும். ராகுவுடன் சுபகிரக சேர்க்கை நற்பலனையும், பாவகிரக சம்பந்தம் நஷ்டத்தையும் தரும். ராகு சுபர் சாரம்பெற்றால் அதியோகத்தைச் செய்வார்.
கேது
பன்னிரண்டாமிடத்தில் கேது நின்றால் கடைசிப்பிறவி என்பார்கள். ஞானகாரகரான கேது இங்கிருந்தால் பல ஜென்ம கர்மாவை இந்த ஜென்மத்தில் கழிக்க நேரும். "கேதுபோல் கெடுப்பாரில்லை' என்பது உண்மைதான். உடலாலும் மனதாலும் தொல்லைகளைக் கொடுத்து வாழ்க்கையை வெறுக்கவைத்து, "ஏன்டா பொறந்தோம்... எல்லாம் மாயை' என சொல்லுமளவு பிழிந்தெடுத்துவிடுவார். அதைத் தான் கெடுத்துக் கொடுப்பார் என சொல்வார் கள். வாழ்க்கையைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பார். தனுசு லக்னக்காரர்களுக்கு பன்னிரண்டில் கேது உச்சமாகி படாதபாடு படுத்தி நன்மை செய்வார். பாவி மறைவிடத்தில் இருப்பது நன்மையென சொல்வதற்கில்லை. நீசர்களால் நஷ்டம்,நண்பரால் தொல்லை களைக் கொடுப்பார். மொத்தத்தில் கேது பன்னி ரண்டில் நிம்மதியில்லா பிழைப்பைத் தருவார்.
ஜென்ம கேது உடலை பலவீனப்படுத்தும். இரண்டில் கேது நாக தோஷத்தையும், நான்கில் கேது சுகத்தையும், பெண்களுக்கு வயிறு, கர்ப்பப்பையையும் பாதிக்கும். ஐந்தில் கேது புத்திர தோஷத் தைத் தருவார். ஏழில் கேது களத்திர தோஷத் தையும், எட்டில் கேது மாங்கல்ய தோஷத்தையும், பன்னிரண்டில் கேது பல நஷ்டத்தையும் தருவார். மற்ற இடங் களான 3, 6, 10, 11-ல் சுபவலுவைப் பொருத்து தன் தசாபுக்திக் காலத்தில் பெருத்த யோகத்தைத் தருவார். குருவுடன் கேது சேர்ந்து கோடீஸ்வர யோகத் தைத் தருவார். பாவ கிரகமான கேது சுபகிரக சம்பந்தம் பெறுவது லாபத்தைத் தரும். அசுப சம்பந்தம் கதறவைத்து விடுவார்.
பன்னிரண்டில் இருக்கும் எந்த கிரகமும் விரயத்தையே செய்யும். லக்னத் திற்கு தீயகிரகமாகி பன்னிரண்டில் அமர்ந் தால் நன்மையைச் செய்வார். பலமிழந்த பாவகிரகங்களை பலப் படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. சுபகிரகங்களும் சுப ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களும் வலுக் குறைந்தால் அந்த கிரகத்தை வலுப்படுத்த வேண்டும். பன்னிரண் டாமிடமான மறை விடத்தில் நின்ற கிரகங்களின் கோவில் களுக்குச் சென்று அர்ச் சனை, அபிஷேகம் செய்யவேண்டும். சுபகாரியங்களையோ புதியதொழில் தொடங்கு வதையோ கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டும். பன்னிரண்டா மதிபதி தசை, பன்னிரண்டில் நின்ற கிரகதசை வராமல், சுபதசை நடந்தால் பரிகாரம் தேவையில்லை. பாவ வலுப்பெற்று அசுப தசை நடந்தால் மட்டும் கிரகசாந்தி செய்துகொள்ளவேண்டும்.
செல்: 96003 53748