செய்யும் தொழில் நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்தால், சரியான லாபத்தைக் கொடுக்கவில்லை என்றால், கடையில் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்றால், மிக சுலபமாக வியாபாரம் வசியமாக, ஒரு வழிபாட்டுப் பரிகார முறை உள்ளது. தொழில் நல்ல லாபத்தை கொடுக்கின்றது என்றாலும், உங்களுடைய கடையில் நல்ல வியாபாரம் நடக்கிறது என்றா லும் அவற்றை விரிவுபடுத்தவும் இந்த பரிகாரத்தைச் செய்து பயனடையலாம்.

ஏலக்காய் 2, கிராம்பு 2, பட்டை 2 துண்டு, பச்சைக் கற்பூரம் சிறிய துண்டு, மாசிக்காய் 1. இந்த எல்லா பொருட்களையும் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போட்டு தொழில் செய்யுமிடத்தில் சுவாமி படத்திற்குமுன்பு வைத்துவிடுங்கள்.தொழில் செய்யும் இடத்தில் விளக்கு வைத்திருப்பீர்கள் அல்லவா.

loss

அந்த விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய்யூற்றி ஏற்றவேண்டும்.

Advertisment

தினமும் தீபமேற்றும்போது இந்த ஒரு வரி மந்திரத்தை மனதார உச்சரித்துக்கொண்டே ஏற்றுங்கள்.

மந்திரம்:

"ஓம் ஸ்ரீம் அம் அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி'.

Advertisment

தீபத்தை ஏற்றிவிட்டு, மனதார, "உங்களுடைய தொழில் லாபத்தில் செல்கிறது; உங்களுடைய கடைக்கு வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள்‌; நிறைய பொருட்கள் விற்பனையாகிறது; நிறைய லாபம் கிடைக்கிறது' என்று நேர்மறையாக நினைத் துக்கொண்டு' குலதெய்வத்தைப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். அதன்பின்பு தொழிலைத் தொடங்குங்கள்.

தீபத்தை ஏற்றிவிட்டு நேர்மறையாகதான் நினைக்க வேண்டும். தவிர என்னுடைய கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை; தொழிலில் நஷ்டம்; கஷ்டம் பின்தொடர்ந்துவருகிறது; கையில் காசு இல்லை. என்ற வார்த்தைகளை ஒருபோதும் தொழில் செய்யுமிடத்தில் மனதில்கூட நினைக்கக்கூடாது. (பாட்டிலில் போட்டு வைத்திருக்கும் பொருட்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால்கூட போதும்.)

தினமும் இதேபோல் தீபமேற்றி குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்துவர, நிச்சயமாக தொழிலில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். கைநிறைய லாபத்தை சம்பாதிப்பீர்கள். மனநிறைவோடு தொழிலைச் செய்வீர்கள்.

இதேபோல் உங்களுடைய வீட்டிலும் இந்த மந்திரத்தை உச்சரித்து தீபமேற்றலாம். அஷ்ட ஐஸ்வரியங் களும் உங்களை வந்தடையும்.

செல்: 98425 50844