துலா ராயிசினரின் தணித்தன்மை! - திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/tula-raisiners-softness-tirukovilur-paranitharan

நாம் பிறந்த ராசியின் அதிபதியைக் கொண்டே நம்முடைய பொதுப் பலன்களை அறியமுடியும். அந்தவகையில் துலா ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.

சகல கலைகளுக்கும் காரகனான சுக்கிரனே துலா ராசியினரின் ராசிநாதனா வார். இவரைப்பற்றி சொல்லவேண்டுமென் றால் அழகன், அழகை ரசிப்பவன், விநோத கன், அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவன், காதலை உண்டாக்குபவன், கற்பனைகளுக்கு ஊற்றானவன், காவியங்களைத் தோற்றுவிப்பவன். மனதிற்குக் களிப்பூட்டு பவன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். வாசனை இவர்; மலர் இவர்; மங்கை இவர்; அன்பு இவர்; காதல் இவர்; காமம் இவர்; ஆசையும் இவரே.

tt

நடனக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தோற்றுவிப்பவர். திரைப்படத்திற்கு ஆதாரம் இவர். மனதை மயக்கும் இசைக்கும் நாயகன். பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ் டம் என்று வாழ்க்கையின் மகிழ்ச்சிகள் அனைத்தும் சுக்கிரனாலேயே உண்டாகின் றன. வாகனங்களை வழங்கி அதில் பயணம் செய்ய வைப்பவர். வியாபாரத்தில் ஆதாயத்தை வழங்குபவர். வித்தைகளால் உலகத்தின் பார்வையைக் கவர வைப்பவர். கண்களைப் பிரதிபலிப்பவர். ஜனன உறுப்புகளைக் காப்பவர். சிற்றின்பத்தை நுகரவைப்பவர். ஆண்களுக்குப் பெண்களின் சேர்க்கை யையும், பெண்களுக்கு ஆண்களின் சேர்க்கை யையும் அளிப்பவர். காதலில் வெற்றிதருவார். ஊழியர்களின் உதவிகளைப் பெற்றுத்தருவார். வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வாரி வழங்குபவர். அணிமணிகளால் அழகை அதிகமாக்குவார். நீர்நிலைகளில் சஞ்சரிக்க வைப்பார். உடலில் வீரியம் இவர். புளிப்புச் சுவைக்குரியவர். ராஜஸ குணத்துடையவர். வாதம் கபம் இரண்டுக்கும் உரியவர். வெள்ளி எனும் பெயர்பெற்றவர். வெள்ளி உலோகத்திற்கு அதிபதியானவர். பஞ்ச பூதங்களில் நீர் இவர். வைரம் இவருக்குரியது.

ஜாதகத்தில் களத்திர காரகனான இவரது சுப பலத்தைக்கொண்டே வாழ்க்கைத் துணைவி, சுகயோகம் முதலான முக்கிய அம்சங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

நாம் பிறந்த ராசியின் அதிபதியைக் கொண்டே நம்முடைய பொதுப் பலன்களை அறியமுடியும். அந்தவகையில் துலா ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.

சகல கலைகளுக்கும் காரகனான சுக்கிரனே துலா ராசியினரின் ராசிநாதனா வார். இவரைப்பற்றி சொல்லவேண்டுமென் றால் அழகன், அழகை ரசிப்பவன், விநோத கன், அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவன், காதலை உண்டாக்குபவன், கற்பனைகளுக்கு ஊற்றானவன், காவியங்களைத் தோற்றுவிப்பவன். மனதிற்குக் களிப்பூட்டு பவன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். வாசனை இவர்; மலர் இவர்; மங்கை இவர்; அன்பு இவர்; காதல் இவர்; காமம் இவர்; ஆசையும் இவரே.

tt

நடனக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தோற்றுவிப்பவர். திரைப்படத்திற்கு ஆதாரம் இவர். மனதை மயக்கும் இசைக்கும் நாயகன். பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ் டம் என்று வாழ்க்கையின் மகிழ்ச்சிகள் அனைத்தும் சுக்கிரனாலேயே உண்டாகின் றன. வாகனங்களை வழங்கி அதில் பயணம் செய்ய வைப்பவர். வியாபாரத்தில் ஆதாயத்தை வழங்குபவர். வித்தைகளால் உலகத்தின் பார்வையைக் கவர வைப்பவர். கண்களைப் பிரதிபலிப்பவர். ஜனன உறுப்புகளைக் காப்பவர். சிற்றின்பத்தை நுகரவைப்பவர். ஆண்களுக்குப் பெண்களின் சேர்க்கை யையும், பெண்களுக்கு ஆண்களின் சேர்க்கை யையும் அளிப்பவர். காதலில் வெற்றிதருவார். ஊழியர்களின் உதவிகளைப் பெற்றுத்தருவார். வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வாரி வழங்குபவர். அணிமணிகளால் அழகை அதிகமாக்குவார். நீர்நிலைகளில் சஞ்சரிக்க வைப்பார். உடலில் வீரியம் இவர். புளிப்புச் சுவைக்குரியவர். ராஜஸ குணத்துடையவர். வாதம் கபம் இரண்டுக்கும் உரியவர். வெள்ளி எனும் பெயர்பெற்றவர். வெள்ளி உலோகத்திற்கு அதிபதியானவர். பஞ்ச பூதங்களில் நீர் இவர். வைரம் இவருக்குரியது.

ஜாதகத்தில் களத்திர காரகனான இவரது சுப பலத்தைக்கொண்டே வாழ்க்கைத் துணைவி, சுகயோகம் முதலான முக்கிய அம்சங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இத்தகைய சுக்கிர பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள் துலா ராசியில் பிறந்த வர்கள்.

தாங்கள் எதிர்பார்த்து செயல்படுகின்ற காரியத்தில் வெற்றியை எட்டுகின்றவரை யில் துவளாத மனதோடு துடிப்போடு செயலாற்றக் கூடியவர்கள். பழக்கத்திற்கு இனியவராய், அடுத்தவரை வசீகரிப்ப வராய், மனதில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்ளாதவராய் வாழ்ந்து வருபவர்கள். குடும்பத்திலும் தொழில்புரியும் இடத்திலும் தனக்கென ஒரு தனி கௌரவம் வேண்டுமென்று நினைப் பவர்கள். நன்றி மறக்காதவர்கள். ஒருமுறை ஒருவர் செய்த உதவியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமாட்டார்கள்.

எல்லாரையும் எளிதில் கவரும் ஆற்றல் இவர்களுக்குண்டு. இவர்களுடைய அணுகுமுறை மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாத வகையில் அமையும். நீதி நேர்மைக்கென்று இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் இவர்களுக்கென்று ஒரு தனிக்கூட்டம் எப்போதும் இருக்கும். பஞ்சாயத்துகளில் இவர்களுடைய பேச்சைக்கேட்டு நடக்க பலரும் காத்திருப்பார்கள்.

பார்ப்பதற்கு பசுவைப்போன்று காணப்பட்டாலும் இவர்களுக்குள் இவர்கள் ஆவேசக்காரர்கள்; அவசரக் காரர்கள். நிதானிக்காமல் பல காரியங் களில் ஈடுபடக்கூடியவர்கள். ஒரு கட்டத்திற் குப்பின் இவர்களே அதுபற்றி யோசிக்கவும் ஆரம்பிப்பார்கள். முன்கோபமே இவர்களின் முதல் எதிரியாக இருக்கும். அதனை உணர்ந்தபிறகு ஆன்மிகத்தில் ஈடுபட்டுத் தெளிவார்கள். வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழத் தொடங்குவார்கள்.

இவர்களுடைய ராசிநாதன் களத்திரக் காரகன் என்பதால் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும்போது பொருத்தம் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையென்றால் இவர்களுடைய நோக்கமறிந்து அவர்கள் செயல்படமாட்டார்கள். அதனால் மண வாழ்க்கையில் சங்கடங்கள் உண்டாகும்.

அள்ளிக் கொடுப்பவரான சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டதால் அதிர்ஷ்டக் காரர்களாகவே இருப்பார்கள். செல்வச் செழிப்பு உள்ளவராக மாறவேண்டுமென்றால் சுக்கிரனுக்குரிய நட்சத்திரத்தில் அவருக் குரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்.

நோய்கள் என்று பார்த்தால் மர்ம உறுப்புகளில் கோளாறு, அல்சர், ஒவ்வாமை, வயிற்று உபாதை, சிறுநீரகக் கோளாறு, தலைவ-, தோல்சார்ந்த நோய்கள் என்று ஒருசிலரை வாட்டும். நோய் வரும்போது அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வதுடன் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.

மேஷ ராசியினர்மூலம் உலக விவரங் களையும், வித்தைகளையும் கற்றுத் தேர்ச்சிபெறும் இவர்களுக்கு கும்ப ராசியினர் உதவிக்குரியவர்களாக இருப்பார்கள். மகர ராசியினரிடம் எப்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டியதாக இருக்கும். வேலைவாய்ப்பு சார்ந்த உதவிக்கு கடக ராசியினரின் ஒத்துழைப்பு நற்பலனைத் தரும்.

துலா ராசிக்காரர்களுக்கு அரசியல் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதே போல் அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். காவல், இராணுவம், பதிப்புத்தொழில், பத்திரிகைத்துறை, ஓட்டல் போன்ற தொழில்களில் முத்திரைப் பதிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு புத்திர பாக்கியம் என்பது வரம்போன்றது என்றே ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குழந்தை பாக்கியத்தில் அளவுடன் நிற்பவர்கள் என்றாலும், சிற்றின்பத்தை நுகர்வதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.

தன்னுடைய ராசியில், தன்னுடைய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் மட்டுமல்ல; தன்னுடைய தசாபுக்தி நடப்பவர்களுக்கும், அதுவரையில் அனுபவித்திராத எல்லையற்ற இன்பத்தை வழங்குபவர் இவர்களுடைய ராசிநாதன் என்பதால், காமத்தில் மூழ்கி முத்தெடுப்பவர்களாகவே இருப்பார்கள்.

வாக்கு சாதுர்யமும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் ஆற்றலும் பெற்ற இவர்களுக்கு நாற்பது வயதுவரை வாழ்க்கை மிகவும் போராட்டமாகத்தான் இருக்கும். கடன் வாங்குவதும், அதற்கு வட்டி கட்டுவதும் என்றே இவர்களுடைய வருமானம் சிதறிப்போகும். கூட்டு வியாபாரத்தின்போதும் கூட்டாளிகளிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ராஜ கிரகமான சூரியன் இவர்களுக்கு நட்பாகவோ, உச்சமாகவோ, ஆட்சியாகவோ அமைந்திருக்கும்போது அரசாங்க வேலைகள் கிடைக்கும். சூரியன் பகை பெற்றிருந்தால் அரசு வேலையைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் அவர்களுக் கேற்ற நிலையை உணர்ந்து, அதற்கேற்ப வழியை உருவாக்கிக்கொண்டு வாழமுடியும்.

உறவினர்களிடம் எப்போதும் பற்றுடைய வர்களாகவே இருப்பார்கள். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள், வசதிகள் அனைத் தையும் சேகரித்துக்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். நயமாகப் பேசுவதில் சாமர்த்திய சாலியான இவர்களது பேச்சினால், எதிர்பாலினர் இவர்களிடம் பேசிப்பழகவும் அன்பைப் பெறவும் முயற்சிப்பார்கள். இவர்களின் சிறந்த குணாதிசயங்கள், வாக்கு வண்மை, வசீகரம் போன்றவற்றால் மற்றவர் களை எளிதில் தங்கள் வசமாக்கிக் கொள்வார்கள்.

நிதானமாகச் செயல்படுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள் அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் இறங்கமாட்டார்கள். இவர்களை உதாசீனம் செய்வோர் பற்றி எப்போதும் கவலைப்படவும் மாட்டார்கள். மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்றும் கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்குத் தெரிந்தவற்றைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையை உணர்ந்துகொள்வார்கள். தங்களுடைய கருத்தை எந்த இடத்திலும் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் துணிந்து எடுத்துச் சொல்வார்கள்.

நீதி, நியாயம், நேர்மை இவற்றிலிருந்து துளியளவும் தவறக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உழைப்பால் வரும் ஊதியத்தையே உயர்ந்த வருவாயாகக் கருதுவார்கள். பொதுநலத்தில் சிறிதும் சுயநலமற்று உழைக்கும் இவர்களை ஊரே போற்றும். கல்வியில் மிகப்பெரிய இலக்கை எட்டமுடியாமல் போனாலும், இயற்கையில் அறிவுத்திறமை மிக்கவர்களாகவே இருப்பார்கள். அனுபவத்தால் எதையும் கற்றுக்கொள்வார்கள். எந்தப் பொறுப்பு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். ஏற்ற பொறுப்பினை தங்கள் திறமையால் சரியாக நடத்தியும் காட்டுவார்கள்.

சிறுவயதில் சிரமப்பட்டாலும் நடு வயதில் வறுமை நீங்கியவராகவும், வாழ்வின் இறுதியில் எல்லாம் பெற்ற திருப்தி உடையவராகவும் இருப்பார்கள். ஆன்மபலம் குறைந்தவர்களான இவர்கள் எந்தவொரு விஷயத்திலும் வலியச்சென்று தலையிட்டு மாட்டிக்கொள்ளமாட்டார்கள். இவர்களில் பலருக்கு முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளை அடையவும் முடியாது. தந்தையின் ஆதரவும் இருக்காது. பெருந்தன்மையும், மன்னிக்கும் இயல்பும் இவர்களிடத்தில் இயற்கையாகவே அமைந்திருக்கும். மற்றவர்கள் இவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும் அதைக் கண்டுபிடித்து அவர்களிடமே அதுபற்றி கேட்டும் விடுவார்கள். மற்றவர்களுக்குப் புலனா காத அற்புத விஷயங்களும், கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத நுண்ணிய விஷயங்களும் இவர்களுக்கு எளிதில் தெளிவாகும்.

இவர்களுக்கு தெய்வ பக்தியாலேயே எல்லாம் கிடைக்கும் என்றாலும், அதைப் புரிந்துகொள்ள நாட்களாகும். பக்தியிலுள்ள பரவசத்தாலும் உண்மை பக்தியாலும் அருங்கலைகள் அனைத்தும் இவர்களுக்கு கைவரப் பெறுவதுடன், பிறரைத் தன்வயப்படுத்தும் சக்தியையும் அடைவார்கள். தொழில்துறையில்கூட அதிக லாபம் இல்லாவிட்டாலும், வம்பு வழக்கில்லாத தொழில்களையே செய்ய விரும்புவார்கள். நஷ்டம் வருமென்று தெரியும் தொழிலிலோ, அதிக லாபம் கிடைக்குமென்று தோராயமாகத் தெரியும் தொழிலிலோ தலையிட்டுக்கொண்டு தவிக்கமாட்டார்கள்.

இவர்களுக்குப் பின்னால் இவர்களைப் பற்றி குற்றம் பேசுபவர்களும், நேரில் கண்டால் பயந்து பணிந்து மரியாதை செலுத்துவார்கள். தராசு இவர்களுடைய ராசியின் சின்னம் என்பதால், அறிவு நுட்பமிக்கவர்களாக இருப்பார்கள். ஒழுக்கமாக, சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வதே இவர்களுடைய குணமாக இருக்கும். சமநீதி, சமதர்மம், நியாயம், பாரபட்சமற்ற முறையில் செயல்படுவதையே விரும்புவார்கள்.

இவையெல்லாம் துலா ராசியில் பிறந்த வர்களின் பொதுப்பலன்கள் ஆகும்.

அடுத்த இதழில் துலாம்...

செல்: 94443 93717

bala220422
இதையும் படியுங்கள்
Subscribe