ங்களகாரகன், பூமிகாரகன் என்று போற்றப்படும் செவ்வாயின் ஆளுமைகொண்டது, வாரத்தின் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமையாகும். அழகன் முருகனை அதிதேவதையாகக்கொண்ட கிழமையாக இது பிரதிபலிக் கிறது.

"எட்டு செவ்வாயில் ஒரு கெட்ட செவ்வாய் உண்டு' என்பதும், "செவ்வாய் வெறும் வாய்' என்பதும் வழக்கு மொழியாக இருந்தாலும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் பொழுது இந்த செவ்வாய்க்கிழமை பெரும் நற்பலன்கள் அளிப்பதைக் காணமுடிகின்றது.

"இது வெறும் வாய்' என்பதற்கு செவ்வாயன்று பேசாமல் மௌன விரதம் இருந்தால் அடையமுடியாத சிறப்புகளையும் அடைந்துவிடமுடியும் என்பதே பொருளாகும்.

மேலும், பிறந்த குழந்தைக்கு முதல் மருந்தூற்றும் நாளாக செவ்வாய்க்கிழமையைதான் நமது பெரியோர்கள் தேர்ந்தெடுத்தர்கள்.

அதோடு பூமி யோகமே இல்லாதவர்களுக்குக்கூட செவ்வாய்க்கிழமைகளில் செய்யப்படும் பரிகாரங்களின் மூலம் தங்களுக்கென்று ஒரு பிடி மண்ணாவது சொந்தமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அதேபோன்று பலகாலமாக நோயின் தாக்கத்தில பீடிக் கப்பட்டவர்கள்கூட, இந்த செவ்வாயின் அருள்பெற்ற நாளில் சிகிச்சைக்கான மருந்து உட்கொள்ளும் சூழலை அமைத்துக் கொள்ளும்பொழுது குணமாவதைக் காணமுடிகிறது.

நோயென்றாலே உடலிலுள்ள ரத்தத்தின்மூலம்தான் தன்னை வளர்த்து, அதன் தன்மைக்கேற்ப உடல் பாகங்களில் அதன் வீரியத்தை வெளிப்படுத்தும். ரத்தக்காரகனான செவ்வாயின் இணக்கமான சூழலால், இதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும் என்பதே உண்மை.

bb

செவ்வாய்க்கிழமைகளிலும், மேஷம், விருச்சிக ராசி, லக்னங்களிலும், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களிலும், 9, 18, 27 ஆகிய தேதிகள் பிறந்தவர் களும் செவ்வாயின் ஆதிக்கத்தை நேரடியாகப் பெற்றவர் களாவர்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் நீசமானால், அவர்களிடம் பத்துபேர் முன்னால் நின்று தனக்கான உரிமையைக் கேட்கும் மனோதைரியம் இருக்காது. அதோடு இவர்களுக்கு எப்பொழுதும் ஒருவித பயமும், பதட்டமும் இருந்துகொண்டே இருக்கும்.

Advertisment

மேலும் 4, 7, 8, 10, 12-ஆமிடங்களில் செவ்வாய் அமர்வது தோஷமாகக் கருதப்படுகின்றது. இந்த தோஷம் அந்த ஜாதகரின் உடலிலுள்ள ரத்தத்தைப் பிரதிபலிக்கும் தன்மையாகும். எனவேதான் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தை அதே அமைப்பைக்கொண்ட ஜாதகங்களோடு இணைக்க ஜோதிடர்கள் முற்படு கிறார்கள்.

எட்டாமிடத்தில் செவ்வாய் சிம்மமாகவோ, தனுசாகவோ அமர்ந்தால் இவர்களுக்கு "நெகட்டிவ்' (சங்ஞ்ஹற்ண்ஸ்ங்) தன்மையுள்ள ரத்தப் பிரிவு இருப்பதை பெரும்பான்மையாகக் காணமுடிகிறது. இது ரத்தம் சார்ந்த "ஆர்.எச். ஃபேக்டர்' (தஐ ச்ஹஸ்ரீற்ர்ழ்) என்ற சூழலை உருவாக்கும். எனவேதான் செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தை இணைப்பது உத்தமம்.

அதோடு சுரப்பிகளின் தலைவன் என்று அழைக்கப் படும் பினியல் (ல்ண்ய்ண்ங்ப்) சுரப்பியைக் கட்டுப் படுத்தும் வல்லமைபெற்ற "ஹிபோதாலமஸ்' (ஐஹ்ல்ர்ற்ட்ஹப்ஹம்ன்ள்) சுரப்பியின் ஆணையினைச் செயலாற்றும் தன்மையை இந்தச் செவ்வாய் கையாள் கிறது. உடலிலுள்ள அத்துணை கணக்கீடுகளையும்- அதாவது ரத்த சர்க்கரை அளவு, இதயத்துடிப்பின் எண்ணிக்கை, உடலின் தட்பவெப்ப நிலை ஆகியவற்றிற்கு ஆணையிடும் சுரப்பியான "ஹிபோதாலமஸ்' சுரப்பியை சூட்சுமமாக இந்த செவ்வாய் கையாள்கிறது. குருவின் உடல்மொழியைப் பின்பற்றினாலும், இதன் உள்ளிருந்து இயக்குவது செவ்வாயே ஆகும். எனவேதான் செவ்வாய் நீசமானவர்கள் மற்றவர்களைக் கட்டுப்படுத்தவோ ஆணைக்கு அடிபணிய வைக்கவோ முடிவதில்லை.

Advertisment

சிவனின் வியர்வைத் துளியிலிருந்து வந்த அங்காரகனாக செவ்வாய் திகழ்கிறார். இவரை வளர்த்தது பூமாதேவியாகும். எனவே வியர்வையின்மூலம் உழைப்பைக் கொடுத்தாலும், விளையாட்டின்மூலம் வியர்வையை அளித்தாலும், அங்கு செவ்வாயின் வீரியம் வெளிப்பட்டு வெற்றியை அளிக்கிறது.

இடையறாத சிகிச்சையும், உடல்நலக்குறைவும் ஏற்பட்டவர் களுக்கும், தொடர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் செவ்வாய்க் கிழமையில் வரும் சனி ஓரையில் சிகிச்சை எடுக்கும்பொழுதும், மருந்து உட்கொள்ளும்பொழுதும் உடல் நலத்தை விரைவில் பெறமுடியும்.

அதேபோன்று செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் ஓரையில், முருகன் ஆலயத்தின் முதல் ஒன்பது படிகளை சுத்தம்செய்து, இருபுறங் களிலும் மஞ்சள், குங்குமம் வைத்து, சிறிதளவு துவரையைப் பரப்பி, அதில் ஒரு படிக்கட்டுக்கு இரண்டு விளக்குகள் என்ற எண்ணிக்கையில் நெய்யூற்றி சிவப்புநிறத் திரியிட்டு தீபமேற்றி ஒன்பது வாரங்கள் வழிபட்டுவர, இதுவரை வீடு, மனை அமையாத நபர்களுக்கு நிச்சயமாக சொந்தமாக மண்மனை அமையும்.

அதேபோன்று தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியன்று வீட்டில் ஒரு மரக்கால் நெல், அதன்மீது வெற்றிலைப் பாக்கு, தட்சணை ஆகியவற்றை வைத்துப் படையிலிட்டு, அந்த நெல்லை சிவப்புத் துணியில் கட்டி பழனி கோவிலில் செலுத்த, நிச்சயமாக சொந்த வீடு அமையும்.

செய்யக்கூடியவை

செவ்வாய்க்கிழமைகளில் தங்கம் வாங்கலாம்.

சிகிச்சைக்குச் செல்லலாம்.

கடன் தொகையில் முதல் தொகையை அளிக்கலாம்.

எலுமிச்சம்பழம் சுற்றிப் போடுவது சிறப்பு.

செய்யக்கூடாதவை

நிச்சயமாக செவ்வாய்க்கிழமைகளில் நகை அடகு வைக்கக்கூடாது.

தானியங்கள் கடன் கொடுக்கக்கூடாது.

முடி வெட்டக்கூடாது.

ஆண்களுக்கு அரைஞாண் கயிறு கட்டக்கூடாது.

வீட்டை சுத்தம்செய்து ஒட்டடை அடிக்கக்கூடாது.

பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் அன்று கீரை உண்ணக்கூடாது.

செல்: 80563 79988