Advertisment

கடக லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்! - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/tuesday-12-sins-kataka-laknath-mahesh-verma

டக லக்னத்தில் செவ்வாய் நீசமடைகிறார்.

அதனால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடல்நலத்தில் சிறிய பிரச் சினைகள் உண்டாகும். படிப்பு விஷயத்தில் தடைகள் ஏற்படும். தந்தையுடனான உறவில் பிரச்சினை இருக்கும். அன்றாடச் செயல்களில் பல தடங்கல்களைக் கடந்தே வெற்றிகிடைக்கும். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். சிலருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியனின் சிம்ம ராசியில் இருந்தால் ஜாதகர் கம்பீரமாகப் பேசுவார். நல்ல பணவசதி இருக்கும். குடும்பசுகம் இருக்கும். பெயர், புகழ் கிட்டும். தந்தையால் மகிழ்ச்சி உண்டாகும். ஜாதகருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக் கும். பல நல்ல காரியங்களைச் செய்வார்.

Advertisment

tt

3-ஆம் பாவத்தில் செவ்வாய் புதனின் கன்னி ராச

டக லக்னத்தில் செவ்வாய் நீசமடைகிறார்.

அதனால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடல்நலத்தில் சிறிய பிரச் சினைகள் உண்டாகும். படிப்பு விஷயத்தில் தடைகள் ஏற்படும். தந்தையுடனான உறவில் பிரச்சினை இருக்கும். அன்றாடச் செயல்களில் பல தடங்கல்களைக் கடந்தே வெற்றிகிடைக்கும். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். சிலருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியனின் சிம்ம ராசியில் இருந்தால் ஜாதகர் கம்பீரமாகப் பேசுவார். நல்ல பணவசதி இருக்கும். குடும்பசுகம் இருக்கும். பெயர், புகழ் கிட்டும். தந்தையால் மகிழ்ச்சி உண்டாகும். ஜாதகருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக் கும். பல நல்ல காரியங்களைச் செய்வார்.

Advertisment

tt

3-ஆம் பாவத்தில் செவ்வாய் புதனின் கன்னி ராசியில் இருந்தால் ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பகைவர்களை வெல்வார்.

4-ஆம் பாவத்தில் செவ்வாய் சுக்கிரனின் துலா ராசியில் இருந்தால் ஜாதகருக்கு சுமாரான வசதி இருக்கும். தாயாரால் மகிழ்ச்சி கிடைக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஜாதகர் தன் பேச்சுத் திறமை யால் வெற்றி காண்பார்.

திரிகோணமான 5-ஆம் பாவத்தில், சுய வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். குழந்தை பாக்கியம் இருக்கும். பெயர், புகழுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்.

6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். அவரைப் பார்த்து விரோதிகள் அஞ்சுவார் கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலருக்கு மனதில் அமைதி இருக்காது. சிலருக்கு உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

7-ஆம் பாவத்தில் எதிரியான சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமாக இருந்தால் ஜாதகருக்கு பெண்களால் ஆதாயம் இருக்கும். இல்வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். வியாபாரத் தில் நிறைய சம்பாதிப்பார். பணத்தை சேமிப்பதற்கு விரும்புவார். நல்ல பேச்சாற்றல் இருக்கும்.

8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகும். பிள்ளைகளுடன் பிரச்சினை இருக்கும். உடன்பிறப்புகளால் மகிழ்ச்சி கிட்டும். கடுமையாகப் பேசுவதால் இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டா கும். திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும்.

திரிகோணமான 9-ஆம் பாவத்தில், குரு பகவானின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் தலை யெழுத்து நன்றாக இருக்கும். படிப்பால் போதிய அளவுக்கு ஆதாயம் கிடைக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் பெயர், புகழ், வெற்றிகளுடன் சந்தோஷமாக வாழ்வார்.

10-ஆம் பாவத்தில் தன் சுயவீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தன் குடும்பத்தில் விளக்கைப்போல பிரகாசிப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசியலில் ஈடுபடுவார்கள். சிலர் சட்டங்களை நன்கு தெரிந்தவராக இருப்பார்கள். சிலர் மெலிந்த தோற்றத் துடன் இருப்பார்கள். ஜாதகருக்கு அன்னையுடன் சிறிய கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகர் சில நேரங்களில் மனதில் அமைதியற்றுக் காணப்படுவார்.

11-ஆம் பாவத்தில் செவ்வாய், சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால், ஜாதகர் பணத்தை சேமிப்பதற்காக மிகவும் கடுமையாக உழைப்பார். நல்ல பணவரவு இருக்கும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் ஆதாயம் கிட்டும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் அவர்களை ஜாதகர் வென்றுவிடுவார். ஜாதகர் அறிவாளியாக இருப்பார்.

12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளால் ஜாதகருக்கு நல்ல ஆதாயம் இருக்கும். புகழில் குறையுண்டு. சிலருக்கு படிப்பில் தடைகள் இருக்கும். சிலர் அதிகமாகக் கோபப்படுவார்கள். சிலருக்கு மனதில் கவலைகள் இருக்கும்.

bala210122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe