இராமாயணத்தில் இரண்டுவிதமான சக்திகள் கூறப்படுகின்றன. ஒன்று தெய்வ சக்தியான இராமன்; மற்றொன்று இராம நாமம். இது இராமனைவிட மேலான சக்தி யாகக் கூறப்படுகிறது. இராமனின் உருவ வழிபாடு கண்களுக்கு காட்சியாக உள்ளதென் றும், இராமநாமம் உடல், உயிர், ஆன்மா இவை மூன்றிற்கும் சக்தியையும், ஆயுள் நீட்சியையும் தருகிறது என்றும், முற்பிறவி கர்மவினை, பாவ- சாபப் பதிவுகளால் உண்டாகும். சிரமங் கள், தடைகளை தன் சுயபுக்தி, உடல்வலிமையால் தடுத்துக்கொள்ளும் வழியைத் தருகிறது என்பதும் ரிஷிகள் வாக்காகும்.
இந்த பூமியில், வைணவ சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்து வாழும் மக்களுக்கு இராமநாம மந்திரம் உபதேசம் செய்துவைக்கும் குருமார்கள் இராமநாமத்தை, எப்போது- எதற்காக- எவ்வாறு ஜெபிக்கவேண்டும்- அதனால் எவ்வளவு நன்மைகளை அடையலாம் என்பதை விளக்கமாகக் கூறா மல், வெறுமனே ராமா, ராமா என்று கூறச் சொல்லியும், மனதினால் நினைத்துக் கொண்டே இருக்கவும், ஸ்ரீராமஜெயம் என்று பேப்பரில் எழுதவும்தான் கூறுகிறார் கள். இராமநாமத்தை எப்படிக் கூறினால் இராமனின் அருள் கிடைக்கும் என்பதை அறிவோம்.
வைஷ்ணவர்களுக்கு "ராமா' என்னும் சொல் பிரணவ மந்திரமாகும். சிவனை வணங்கும் சைவர்களுக்கு "ஓம்' என்னும் சொல் பிரணவ மந்திரமாகும். இவையிரண்டும் ஒரே சக்தியைக் கொண்டவை. ஒரே பலனைத் தரக்கூடியவையாகும். இந்த பிரணவ மந்திரங்களே பிராணாயாம மந்திரங்களாகும்.
காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளையும் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) செய்பவர்கள், இந்த மந்திரங்களை முறைப் படி மனதினால் கூறிக்கொண்டே பயிற்சி செய்யவேண்டும். இதனை முறையாக எப்படிக் கூறவேண்டும் என்பதை சித்தர்கள் கூறியுள்ளதை அறிவோம்.
ஏகாந்தமான ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, வலக்கை மோதிர விரலால் மூக்கின் இடப்பக்க துவாரத்தை அடைத்துக் கொண்டு, வலப்பக்க துவாரத்தின் வழியாக மூச்சுக் காற்றினை இழுக்கும்போது, "ரா' என்று மனதினால் நினைத்துக்கொண்டு, மூச்சுக் காற்றுடன் இணைத்து உள்ளே இழுக்கவேண்டும்.
உள்ள இழுக்கும் காற்று இராம பாணத்தைப்போல் சக்தியுடன் சென்று இடுப்பில் மூலாதார சக்கர பகுதியினைத் தாக்கும். இந்தக் காற்றை உடம்பினுள்ளே சில நொடிகள் நிறுத்தி (கும்பகம்), பின் அந் தக் காற்றை "ம்' என்ற எழுத்தையோ, "மா' என்ற மந்திரத்தையோ நினைத்துக்கொண்டு மூக்கின் இடப்பக்க துவாரத்தின் வழியாக வெளியே விடவேண்டும்.
மறுபடியும் மூச்சை உள்ளே இழுக்கும் போது வலக்கை விரலால் மூக்கின் வலப்பக்க துவாரத்தை அடைத்துக்கொண்டு, "ரா' என்னும் சொல்லை நினைத்துக்கொண்டு, காற்றுடன் இந்த எழுத்தைச் சேர்த்து உள்ளிழுத்து, பின் இடப்பக்க துவாரத்தின் வழியாக "மா' என்னும் எழுத்தை இணைத்து வெளியே விடவேண்டும்.
பிராணாயாமம் செய்யும்போது முக்கிய மாக ஒன்றைக் கடைப் பிடிக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக் கும்போது வேகமாக இழுக்கவேண்டும். வெளியே விடும்போது மெதுவாக சீராக விட வேண்டும். அதே போன்று "ராம்' என்றோ, "ராமா' என்றோ வாயினால் சப்தம் போட்டுக்கூறக் கூடாது.
மௌனமாக மனதினுள் ளேயே கூறவேண்டும். பொதுவாக ராம், ராமா, நமோ நாராயணா போன்ற மந்திரங்களை சாதாரணமாகக்கூட சப்தம் போட்டு சொல் லக்கூடாது. மனதினுள்ளே மௌனமாக கூறிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனதினுள் ளே கூறுவதால் மந்திர சக்தி உடம்பின் உள் ளேயே சுழன்று, கனன்றுகொண்டு வலிமை பெறும். இதுதான் மூச்சுப் பயிற்றி, தியானம், பிராணாயாமம் செய்யும் முறை.
சிவபெருமானை வணங்கும் சைவர்கள், "ஓம்' என்னும் மந்திரச் சொல்லை. மனதில் கூறிக் கொண்டே மூச்சுப் பயிற்சி செய்யலாம். காற்றை உள்ளே இழுக்கும்போது, "ஓ' என்ற ஒற்றை எழுத்தை மனதில் நினைத்துக் கொண்டு, காற்றுடன் இணைத்து உள்ளே இழுக்கவேண்டும். வெளியில் விடும்போது, "ம்' என்ற எழுத்தை காற்றுடன் இணைத்து மெதுவாக வெளியில்விட வேண்டும்.
முருகனைப் பற்றிய புராணக் கதையில், "ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு முருகன் பிரம்மாவிடம் விளக்கம் கூறும்படி கேட்ட தாகவும், இதற்கு விளக்கம் கூறத்தெரியாத தால் பிரம்மாவை முருகன் சிறையில் அடைத்த தாகவும் ஒரு கதை உண்டு. "ஓம்' என்பதன் விளக்கம் இதுதான். தென்புல தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த அகத்தியர் முதலான சைவத் தமிழ்ச் சித்தர்கள் 18 பேர் மூச்சுக்காற்றின் சக்தியை அறிந்து, வாசியோகம், குண்டலினி யோகம் செய்து அட்டமகா சக்திகளை அடைந்து, மரணத்தை வென்று இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சித்தர் பெரு மக்கள் கடவுளை வணங்கி சித்த சக்திகளைப் பெறவில்லை. மூச்சுக்காற்றை உடம்பில் கட்டியே சக்திகளைப் பெற்றுள்ளார்கள்.
எனவே புராணங்கள், இதிகாசங்கள் கூறும் உண்மையான பொருளை உணர்ந்து, நம் அறிவால் முன்வினைப் பதிவுகளைத் தீர்த்துக்கொள்ள முயலவேண்டும்.
(முற்றும்)
செல்: 99441 13267