கிரக சஞ்சார பலன்கள் கோட்சார பலன்களில் இருந்து மாறுபட்டதாகும்.
கோட்சார பலன் என்பது சந்திரனை மையமாகக்கொண்டு கிரகங்கள் சந்திராலக்னத்திலிருந்து 12 பாவங்களிலும் சஞ்சரிக்கும் பலன்களை குறிப்பதாகும்.
ஒவ்வொரு ராசிகளிலும் அந்த கிரகம் தங்கியிருக்கும் காலத்தில் உருவாகக் கூடிய பலன்களை மட்டுமே கோட்சார பலன்கள் சொல்கின்றன.
சஞ்சார பலன்கள் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியிலும் தங்கும்போது அதன் பலன்களை சொல்வதுடன். அந்தந்த ராசிகளில் இருக்கக்கூடிய கிரகங்களுடன் இணைந்து இருக்கும்போது (ஒரே பாகையில்) அதன் பலன்கள் என்ன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
சனிபகவானின் சஞ்சாரமும் அதன் நன்மைகளும் மந்திரம்
ஓம் அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸஹீத
சநைச்ரவ க்ரஹ ப்ரஸாத ஸித்த்திரஸ்து.
சனியானவர் 12 ராசியையும் ஒரு சுற்று சுற்றிவர சுமாராக 30 ஆண்டுகள் ஆகிவிடும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டையாண்டு காலம் தங்கியிருப்பதால் முக்கியத்துவம் வகிக்கிறது.
சனியின் தன்மை
சனியின் பணிகள், சுவாசம்- ரோமம், எறும்புகள் நகங்கள், பல், காது, முழங்கால், முட்டி, நரம்புகள், பாதம், கால்கள் இவையாவும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பவை. ஒருவருடைய உடம்பில் (மயிர்) முடி அதிகம் காணப்பட்டால் அவர் சனியின் ஆதிக்கம் நிறைந்தவர் எனலாம்.
என்ன நோய்க்கு வழிவகுப்பார் காது கேளாமை, பல் வலி, இதய சம்பந்த மான நோய்கள், மூட்டுவலி, குடல் நோய்கள், பக்கவாதம், காக்காய் வலிப்பு, கர்பப்பை கோளாறு, கை- கால் நடுக்கம், கழுத்து வலி, விபத்துகளுக்கும் துணைபோவார்.
நன்மைகள்
சனிபகவான் குருவின் வீடாகிய தனுசு, மீனம் ராசிகளில் இருந்தால், பணவசதிமிகுந்த செல்வந்தராக்குவார். சனி 3, 6, 10, 11-ஆம் பாவங்களில் இருக்கப்பெற்றால் நற்பலனை அள்ளி தருவார். சனி, 2-ஆம் பாவத்தில் இருந்தால் அரசியலில் ஜொலிக்கலாம். நேரு, அண்ணல் காந்தி ஜாதகத்தில் இருப்பார். 10-ல் இருந்தால் ஆன்மிக ஈடுபாடு புகழை பெற்றுதரும். சனி, 6-ஆம் பாவத்தில் இருந்தால்
கிரக சஞ்சார பலன்கள் கோட்சார பலன்களில் இருந்து மாறுபட்டதாகும்.
கோட்சார பலன் என்பது சந்திரனை மையமாகக்கொண்டு கிரகங்கள் சந்திராலக்னத்திலிருந்து 12 பாவங்களிலும் சஞ்சரிக்கும் பலன்களை குறிப்பதாகும்.
ஒவ்வொரு ராசிகளிலும் அந்த கிரகம் தங்கியிருக்கும் காலத்தில் உருவாகக் கூடிய பலன்களை மட்டுமே கோட்சார பலன்கள் சொல்கின்றன.
சஞ்சார பலன்கள் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியிலும் தங்கும்போது அதன் பலன்களை சொல்வதுடன். அந்தந்த ராசிகளில் இருக்கக்கூடிய கிரகங்களுடன் இணைந்து இருக்கும்போது (ஒரே பாகையில்) அதன் பலன்கள் என்ன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
சனிபகவானின் சஞ்சாரமும் அதன் நன்மைகளும் மந்திரம்
ஓம் அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸஹீத
சநைச்ரவ க்ரஹ ப்ரஸாத ஸித்த்திரஸ்து.
சனியானவர் 12 ராசியையும் ஒரு சுற்று சுற்றிவர சுமாராக 30 ஆண்டுகள் ஆகிவிடும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டையாண்டு காலம் தங்கியிருப்பதால் முக்கியத்துவம் வகிக்கிறது.
சனியின் தன்மை
சனியின் பணிகள், சுவாசம்- ரோமம், எறும்புகள் நகங்கள், பல், காது, முழங்கால், முட்டி, நரம்புகள், பாதம், கால்கள் இவையாவும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பவை. ஒருவருடைய உடம்பில் (மயிர்) முடி அதிகம் காணப்பட்டால் அவர் சனியின் ஆதிக்கம் நிறைந்தவர் எனலாம்.
என்ன நோய்க்கு வழிவகுப்பார் காது கேளாமை, பல் வலி, இதய சம்பந்த மான நோய்கள், மூட்டுவலி, குடல் நோய்கள், பக்கவாதம், காக்காய் வலிப்பு, கர்பப்பை கோளாறு, கை- கால் நடுக்கம், கழுத்து வலி, விபத்துகளுக்கும் துணைபோவார்.
நன்மைகள்
சனிபகவான் குருவின் வீடாகிய தனுசு, மீனம் ராசிகளில் இருந்தால், பணவசதிமிகுந்த செல்வந்தராக்குவார். சனி 3, 6, 10, 11-ஆம் பாவங்களில் இருக்கப்பெற்றால் நற்பலனை அள்ளி தருவார். சனி, 2-ஆம் பாவத்தில் இருந்தால் அரசியலில் ஜொலிக்கலாம். நேரு, அண்ணல் காந்தி ஜாதகத்தில் இருப்பார். 10-ல் இருந்தால் ஆன்மிக ஈடுபாடு புகழை பெற்றுதரும். சனி, 6-ஆம் பாவத்தில் இருந்தால் கவிஞராகலாம். சனி, 1, 4, 7, 12 பாவங்களில் இருந்தால் கேந்திர மேன்மை பெறலாம்.
* சனிபகவான் பாதக ஸ்தானங்களில் காணப்பட்டால் அதாவது கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் இருந்தால், உடல்நோய், ஊனம் போன்றவை தவிர்க்க இயலாது.
* கற்பனை வளம் நிறைந்தவர்களை உருவாக்குவதில் வல்லவர்.
சனி, 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு காரகராகி ஆயுள்காரகன் மாரகாதிபதி யாகுகிறார்.
சனியின் சஞ்சாரம்
முதல் பாவம்- சனி லக்னபாவத்தில் சஞ்சரிக் கும்போது எண்ணங்களை அப்படியே செயல் படுத்த முடியும். செல்வாக்கு உயர்வடையும். பொறுப்புகள் மிகையாகும். உடல் சோர்வு ஓய்வை விரும்பும். பழைய நடைமுறைகளை, விட்டுவிட்டு புதிய உத்திகளை கையாண்டு செயல்படவேண்டும். அது நெருக்கடிகளை தரத்தான் செய்யும். வசதியில்லா பள்ளி மாணவர்களுக்கு ஷூ தானமாக தருதல் நன்று. சனிக்கிழமை நல்ல எண்ணைய் பாக்கெட் வாங்கி இலவசமாக கொடுப்பதும் நன்று; கெடுதல்கள் குறையும்.
இரண்டாம் பாவத்தில் சனி
பணிபுரியும் இடத்தில் பலவிதமான நிதி பொறுப்புகளை ஏற்கநேரிடும். வியா பாரத்தில் கணிசமான முன்னேற்றத்தை எதிர் பார்க்கலாம். கடுமையான உழைப்பு நிதி வசதியை பெற்றுத்தரும். அரசு சார்ந்த சட்ட சிக்கல்கள் வரும். சனி அசுப பார்வை பெற்றிருந் தால் தொழில்- நஷ்டத்தை நோக்கி செல்லும்.
பரிகாரம்: கற்பூரம், தேங்காய் எண்ணை யில் கலந்து நெற்றியில் பூசல் நன்று. இரவு வேளையில் தனிமையான இடங்களுக்கு செல்வது கூடாது. பர்சில் ஒரு சிறு ஆணியை இருக்கச் செய்தல் நன்று.
மூன்றாம் பாவத்தில் சனி
மூன்றாம் பாவத்தில் சஞ்சரிக்கும்போது உங்களுடைய பாட்டில் பல மாறுதல்கள் தெரியவரும். விஞ்ஞானம், கணிதம், தத்துவம் பொருளாதாரம், பணவிஷயம் போன்றவற்றில் கவனம் செலுத்தி முன்னேறலாம்.
கல்வித்துறையில் வேலை வாய்ப்புக்கு முயல லாம். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நன்மதிப்பைப் பெறலாம்.
நான்காம் பாவத்தில் சனி
சனி சஞ்சரிக்கும்போது குடும்பத்தில் பல சங்கடங்களும் பிரச்சினைகளும் கட்டுக் கடங்காமல் வேதனைபடுத்தும். நிதானமாக குடும்ப பிரச்சினைகளை கையாளவேண்டும். கூட்டு வியாபாரத்தில் பின்னடைவுகள் வரும். ரியல் எஸ்டேட் தொழில் நலிவடையும். தென்னந்தோப்பு, மாந்தோப்பு இவற்றிலும் போதிய லாபம் பெற இயலாது.
பரிகாரம் ஓரளவு சீர்செய்யும்: இயன்ற அளவு கருப்பு நிற ஆடைகள், தானியங்களை சனிக்கிழமை தானமாக நலிந்தோருக்கு இலவசமாக தருதல் நன்று. சனி ஹோரையில் சுத்தமான தண்ணீர் பருகுதல் கூடாது. கிராமத்தில் ஊரின் மேற்கு பாகம் இருக்கும் கிணற்றுநீரை எடுத்து குளிப்பது நன்று. அதில் கிருஷ்ண துளசியையும், (கரும் துளசி) கருப்பு எள்ளையும் கலந்து குளித்தால் தோஷம் விரைவாக விடை கொடுக்கும். எட்டு கருங்கல் சல்லி துண்டை நீரில் ஊறவைத்து மேற்கு நோக்கி நின்று ஸ்நானம் செய்யலாம்.
ஐந்தாம் பாவத்தில் சனி
குழந்தைகள் கல்வி சார்ந்த கவலைகள் மறையும். ஹார்ட் வொயர் ஷாப், இரும்பு வியாபாரம் ஆதாயம் தரும். ஷேர் மார்க்கெட்டிலும் கவனம் செலுத்தலாம். கலைஞர்களுக்கும் ஒப்பந்தம் வரும். அரசியலில் மாற்று எண்ணம் உடையோர் அபிலாசைகள் ஈடேறும். மேற்கு தலைவாசல் உடையோர் சில நல்லவை நடப்பதை உணரலாம்.
ஆறாம் பாவத்தில் சனி
உயர் பதவியில் இருப்போருக்கு, பொறுப்புகள் மேலும் அதிகமாகும். எனினும் உங்கள் சாதனை பெருமையடையச் செய்யும். மருத்துவத்துறையில் கவனம் செலுத்தலாம். லக்னத்திற்கு 10-ல் ராகு இருக்கப்பெற்றால், மருத்துவர்கள், சித்தா, ஹோமியோ, யுனானி எதுவென்றாலும் தன்னிறைவு பெறலாம்.
கெடுபலன்: உடல்ரீதியாக பல நோய்கள் வரத்தான் செய்யும். தனவரவும் தள்ளாடும். தேவைக்கேற்ப பணவசதி இருக்காது.
பரிகாரம்: தொடர்ச்சியாக 5, 11 அல்லது 43 நாட்கள் சனிபகவானை வணங்கவேண்டும். கருங்குவழை மலர் சிறந்தது. தினகூலி செய்யும் தொழிலாளர்களை வஞ்சிப்பது கூடாது. தந்தையின், மூத்தவர்- இளையவர்களை மதிப்பது மிக நல்லது.
ஏழாம் பாவத்தில் சனி
உத்தியோகத்தில் இருப்போர் ஊதிய உயர்வுக்காக போராட நேரிடும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையால் பிரச்சினைகள் வரும். உடல்நலம் கவலை தரும். உறவினர்களின் பணவரவும் தேவைக்கு ஏற்ப வராது. எனினும் சனி பகவான பார்வை சீராக இருந்தால் திருமணம் நிச்சயமாகும். ஜாயிண்ட் பிசினஸ் சக்சஸ். மனைவியை ஏதோ காரணங்களால் பிரிந்திருந்தால் மறுமணம் மகிழ்வைதரும். வசதிபடைத்த துணை வரும்.
எட்டாம் பாவத்தில் சனி
நிர்வாக ஆலோசகராக பணி செய்யலாம். அக்கவுட்டண்ட் நிதி ஆலோசகராகி பெரிய ஸ்தாபனத்தில் வேலை வாய்ப்பை தேடலாம். சிலருக்கு உயிர் பிரிந்தவர்களின் சொத்தை நிர்வகிக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம். மந்திரம், தந்திரம் போன்ற ஆன்மிக சங்கதிகளிலும் மனம் ஈடுபடும். சிலருக்கு தொழிலில் உள்ளங்கையில் நடுவிரலுக்கு நேர்கீழ் சனி மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால் இரவு தனிமையில் இருட்டில் போவது கூடாது. விலங்கால் கேடுவரும். கையில் "டர்கயஸ்' மோதிரம் (ராசிக்கல்) அணிவது நன்று. இரும்பு பாத்திரம் தண்ணீர் பருக உபயோகிப்பது நல்லது.
ஒன்பதாம் பாவத்தில் சனி
சட்ட துறைக்கான கல்வி மேன்மை தரும்.
பொருளாதார மேதையாகலாம். டிராவல் ஏஜென்சி, ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை, வெளிநாட்டு, ஏற்றுமதி- இறக்கு மதியும் அதிக நற்பலனை பெற்றுதரும். கைப்பொருள் விற்பனை செய்யலாம். யோகா பயிற்சியளிக்கலாம். ஆன்மிக சுற்றுலா செல்ல மனம் உற்சாகப்படுத்தும்.
சனி: பின்டைவுடன் காணப்பட்டால், பணம் தேவைக்கு ஏற்ப வர தயங்கும். இரவு நேரங்களில்தான் கவலைகள் பெருக்கெடுக்கும். விரோதிகளைச் சமாளிக்க நேரிடும். வயோதிகத் தில் உயிர் பிரியும்முன் மகனை சார்ந்த கவலை இருக்கும்.
பரிகாரம்: ஆற்று மீனை தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமை, கருப்பு துணியில் கருப்பு எள்ளை போட்டு, துருப்பிடித்த சிறு ஆணி அல்லது இரும்பு உருண்டையை முடித்து மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர் நிலையில் போடுவது நல்லது. சனிக் கிழமை, நீல நிற நொச்சி இலையும் ஏழு எருக்கம் மர பூவையும் சிறிது நேரம் கிணற்று தண்ணீரில் மிதக்கவைத்து, முகத்தை அலம்பு தல் போதுமானது; கெடுதல்போகும்.
பத்தாம் பாவத்தில் சனி
உத்தியோகத்தில் இருப்போர் பதவி உயர்வை யும் விரும்பும் இடமாற்றமும் பெறலாம். தொழில்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெறும். விவசாய உபகரணம் விற்போர் அதிக லாபம் பெறலாம். பொறுப்புகள் அதிகமாகும்.
அரசியல் பிரமுகர்களும் பொருள் ஈட்டலாம். ஆனால் கடின உழைப்புதான் மிகமேன்மைக்கு வழிகாட்டும். வெளிநாட்டிலும் புகழ் சேர்க்க லாம்.
பதினோறாம் பாவத்தில் சனி
கல்வித்துறையில் பெரிய சாதனைபுரிவது கடினம் என்றாலும். நிர்வாகத்தில் தனித்தன்மை காட்டலாம். அனேக நண்பர்களை எதிர் பார்க்கலாம். ஆடம்பரமான நாலு சக்கர வாகனத்தை வாங்கி மகிழலாம். அதிகமான பணியாட்கள்மூலம் நிம்மதி வாழ்க்கையும் எதிர்பார்க்கலாம். தடைகள், தெரியவந்தால், சனிபகவானை சனிக்கிழமை காலில் செருப்பு அணியாமல் சென்று மனக்குறைகளை கூறிவந்தால், பிற கிரக நாதர்கள் உருவாக்கும் தடைகளையும் வெல்லலாம். வாகனம் வாங்கும்போது கூட்டு எண் 3, 4, 9 நல்லது.
பன்னிரண்டாம் பாவத்தில் சனி
விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். சனி 12-ல் சஞ்சரிக்கும்போது, நண்பர்களால் பண விரயம் ஏற்படும். கூடாநட்பு வேண்டாம். வீடு, தோட்டம், மனை போன்றவற்றை, விற்றல்- வாங்கலில் அதிக கவனம் வேண்டும். சோம்பல் தொற்றிக்கொள்ளும். கை ரேகை சாஸ்திரத்தில் ஆயுள் ரேகையில் சதுரம் காணப்பட்டால் அந்த கால அளவில், ஒரு நாளாவது ஜெயில் வாசம் அனுபவிக்க நேரிடும்.
சுலப பரிகாரம்: 12 பாதம் பருப்பை கருப்பு துணியில் முடிந்து இரும்பு பெட்டியில் வைத்து இருட்டறையில் இருக்கச் செய்யுங்கள்; கெடுதல் மறையும்.
முக்கிய குறிப்பு
சனியோடு பிற கிரகங்கள் இணையும்போது சில மாற்றம் நிம்மதி தரும்.
பிரார்த்தனை
முனிவர்க டேவ ரேனு
மூர்திகண் முதலி னோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வு
மகிமை நல்லா துண்டோ
கனிவுள தெய்வ நீயே
கதிர்சேயே காக மேறும்
சனியனே அனைத்து திப்பேனே
அருள் செய்வாயே
செல்: 93801 73464