திருவாதிரை என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரமாகும்.

இது மிதுன ராசியில் அமையப் பெற்ற பிரகாசமான, பிரம்மாண்டமான, ஒளிரும் தன்மையுடைய, உடைபடாத முழு நட்சத்திரமாகும். இதனை வெறும் கண்களாலேயே வானில் காணமுடியும். இதனுடைய அறிவியல் பெயர் ஞழ்ண்ர்ய்ண்ள் ஆகும். மேற்கத்திய உலகத்தில் இதற்கு இங்ற்ங்ப்ஞ்ங்ன்ள்ங் என்ற பெயர் வழங்கப்படுகின்றது.

இந்திய வானியலின் பழைய மரபுப்படியும், ஜோதிட மரபுப்படியும் இந்த நட்சத்திரமானது மிதுன ராசியில் கணக்கிடப்படுகிறது. இந்த நட்சத்திரத்தினை மூதிரை, செங்கை, யாழ், ஈசர் தினம், யாதிரை ஆகிய தமிழ்ப் பெயர்களை திவாகரம் மற்றும் பிங்கல நிகண்டுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

திருவாதிரையின் நட்சத்திரநாதன் ராகுவாகவும், ராசிநாதன் புதனாகவும், நவாம்சநாதர்களாக, திருவாதிரை ஒன்றாம் பாதமென்றால் குருவும், திருவாதிரை இரண்டென்றால் சனியும், மூன்றென்றாலும் சனியும், நான்காம் பாதம் என்றால் மீண்டும் குருவாகவும் அமையப்பெறுகின்றனர்.

Advertisment

dd

27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே "திரு' என்னும் அடைமொழி உள்ளது. அவற்றில் ஒன்று திருவாதிரையாகும்.

சந்திரன் திருவாதிரையில் பயணிக்கும் நேரத்தில் ஜனித்தவர்களின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும்.

இது சிவபெருமானின் நட்சத்திர மென்றும், சிவபெருமானின் அம்சமான ருத்ரனின் ஜென்ம நட்சத்திரமென்றும் ஜோதிட புராணங்கள் கூறுகின்றன.

திருவாதிரை ராகுவின் நட்சத்திரமென்று அறியப்படுகின்றது. ராகு என்றால் மூதாதையர்கள், பாட்டன்- பாட்டிவழி உறவென்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் முற்பிறவியில் சிவனுக்குத் தொண்டு செய்து, பிறவிக்கடனைக் கழிப்பதற்கு இந்தப் பிறவியில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறப் பெடுப்பார்கள் என்கின்றது ஐதீகங்கள். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் சாபம்பெற்றதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறப்பெடுக்கும் குழந்தைகளின் வம்சாவளியில் கணவன்- மனைவி பிரச்சினை, மதம் மாறிய திருமணங்கள் போன்றவை நிகழ்ந் திருக்கக்கூடும்.

திருவாதிரை அமையப்பெற்ற மிதுன ராசியில், செவ்வாயின் மிருகசீரிடமும், குருவின் புனர்பூசமும் அமையப்பெற்று நடுவில் திருவாதிரை நிற்பதனால், இவர்கள் சற்று கோபம், பிடிவாதம், நினைத் ததை மாற்றிப் பேசுவது போன்ற குணங்களோடு இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி நிலை பெரும்பாலும் சிறப்பாக இருப்பதில்லை. ராகுவின் நிலையைப் பொருத்தே உயர்கல்வி அனுமதிக்கப்படுகின்றது. மேலும் சந்திரனும் இதற்குப் பொறுப்பேற்கிறார். இந்த நட்சத்திரம் சற்று காமம் மிகுந்ததாக அறியப்படுகின்றது, உலக சுகங்களை, பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஈர்க்கும், அடைய எண்ணும் நட்சத்திரமாக திருவாதிரை இருக்கிறது.

பெரும்பாலும் இவர்களில் பலருக்கு இளமையிலேயே திருமணம் நிகழ்வதை நிதர்சனத்தில் காணலாம்.

இணைவு, தொடர்பு, ஒப்பந்தம், காமத் திரிகோணம், ஆண்- பெண் இணை உருவம் போன்றவற்றைக்கொண்ட மிதுனத்தில் அமையப்பெறுவதனால் இவர்களுக்கு இயல்பாகவே எதிர்பாலின ஈர்ப்பு மிகுதியாக இருக்கும்.

மேலும் ராகுவின் தொடர்பு பெறுவதனால் இந்த ஈர்ப்பானது நடுத்தர வயதில் ஒரு அவப்பெயரை உருவாக்கிவிட வாய்ப்புகள் உள்ளது. ஆணென்றால் பெண்ணின்மூலமும், பெண்ணென்றால் ஆணின்மூலமும் சற்று அவமானங்களை சந்திக்கும் விதிகொண்ட நட்சத்திரமாக திருவாதிரை அறியப்படுகின்றது.

இதில் பிறந்தவர்கள் அதீத சுறுசுறுப்பு, சம்பாதிக்கும் ஆர்வம் போன்றவற்றைப் பெற்றி ருப்பார்கள். என்ன தான் சம்பாதிக்கும் ஆற்றலையும், அறிவினையும், நுட்பத்தையும் அறிந்திருந்தாலும், சம்பாதித்த செல்வத்தை சேர்த்துவைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உருவாவதில்லை. சேமித்தாலும் தக்கசமயத்தில் உபயோகப்படுவதில்லை. இவர்களை மற்றவர்கள் எளிதில் உபயோகித்து காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். காரியம் முடிந்தவுடன் ஒதுக்கியும் விடுவார்கள். இதனால் இவர்கள் மன உளைச்சலுடன் வாழும் சூழ்நிலை உருவாகும்.

இந்த நட்சத்திரத்தின் குணாதிசயமே முன்னுக்குப்பின் முரணாகப் பேசுதல், சொன்ன வார்த்தையை இல்லையென்று மறுப்பது, தன்னை ஒரு அநியாயக்காரனா கவே வெளிப்படுத்திக் கொள்வது போன்ற எதிர்த்தன்மை குணம் இயல்பாகவே இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முன்னோர்கள் யாரேனும் பூசாரி அல்லது திருநீறு இடுதல் போன்றவர்களாக இருந்திருக்க கூடும். இவர்கள் ஆவேசமான தன்மையினைப் பெற்றிருப்பார்கள்.

திருவாதிரை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

சந்திரன் நவாம்சத்தில் தனுசு ராசியில் அமையப்பெறுவார். இந்நிலையானது புதன், ராகு, குரு, சந்திரன் ஆகியோரின் கூட்டு நிகழ்வதனால், ஒன்றாம் பாதத்தில் பிறந்த வர்கள் கல்வியின்மூலமும், பிறரை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமும் சிறப்பினை அடைவார்கள். குருவின் வீட்டுடன் சந்திரன் தொடர்புகொள்ளும்பொழுது மறுக்கப்பட்ட சில சுகங்கள் இவர்களுக்கு வழங்கப்படும். பெரியோரின் சொல்கேட்டு நடப்பதன்மூலம் வாழ்வில் சிறப்புகளைப் பெற்றுவிடுவார்கள்.

திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

சந்திரன் நவாம்சத்தில் மகர ராசியில் விழும் பொழுது அங்கே புதன், ராகு, சனி, சந்திரன் ஆகியோரின் கூட்டு நிகழ்கிறது. இங்கு சனியின் தொடர்பு ஏற்படுவதனால் இருள்சூழ்ந்த நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார். இவர்களின் எண்ணமானது சற்று வஞ்சகம், பிறர் சொல் கேளாமை, மனரீதியான உளைச்சல், பேசியதை மாற்றிப் பேசுதல் போன்ற சூழ்நிலைக்கு ஆட்படுவார்கள். இவர்கள் நம்பத் தகுந்தவர் அல்ல என்ற நிலையில் மற்றவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

திருவாதிரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இரண்டாம் பாதத்தில் பலனை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும். இங்கேயும் புதன், ராகு, சனி, சந்திரனின் கூட்டு நிகழ்வதால் மேற்கூறிய அதே பலன் இவர்களுக்கும் நிகழும்.

திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

சந்திரன் நவாம்சத்தில் மீனத்தில் அமையப் பெறும். இது காலபுருஷனுக்கு மோட்சவீடு என்பதனால், இந்த நான்காம் பாதத்திற்கு மட்டும் இந்த குணங்கள் சற்று மாற்றி அமைக்கப்பட்டு, சில சிறப்பான குணங்கள் அமைந்திருக்கும். இங்கு புதன், ராகு, குரு, சந்திரன் என்னும் கூட்டு நிகழ்வு. அதனால் கல்வி, ஒழுக்கம், தொழில், பெரியோர்களின் சொல் கேட்பது, சாஸ்திரரீதியான அணுகு முறை போன்றவை இவர்களை சிறப்படையச் செய்யும்.

திருவாதிரையின் சின்னமாக விசிறியை குறிப்பிடப்படுகிறது. இந்த விசிறி உருவத்தை தொழிற்கூடங்களிலும் வியாபாரத் தலங் களிலும் சின்னமாகவோ, உருவமாகவோ வைக்கும்பொழுது தொழில் மேன்மையும், வருமானமும் கிடைக்கப்பெற்று வாழ்வில் சிறப் படையலாம்.

வழிபடவேண்டிய தெய்வங்கள்: துர்க்கை, காலபைரவர்.

ரத்தினம்: கோமேதகம்.

விருட்சம்: செங்கருங்காலி.

(அடுத்த இதழில் புனர்பூசம்)

செல்: 80563 79988