"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா.''
இவை கவிஞர் சுரதாவின் பாடல் வரிகள். ஆடி அடங்கும் மனித வாழ்க்கையில் கோடி கோடியாக சம்பாதித்தவர்களும், கோடித் துணியை பார்க்காதவர்களுக்கும் வாழ்நாள் முடிவில் ஆறடி நிலம் மட்டுமே சொந்தம். ஏன் எரித்து பஸ்பமாக்கிவிட்டால் ஆறடிகூடத் தேவையில்லை. நிலையற்ற, நிரந்தரமற்ற மனித வாழ்வில் முடிவில் மனிதன் தன்னுடன் எடுத்துச்செல்வது தான் சேர்த்து வைத்த பாவ- புண்ணியம் மட்டுமே. இதுதான் பிரபஞ்ச நியதி. பாவங்களும், புண்ணியங்களும் ஒருவரின் நடத்தையால் மட்டுமே உருவாகும்.
உலகம் நியாயப்படி இயங்குகிறதா? தர்மத்திற்கு கட்டுப்பட்டு காலச் சக்கரத்தை சுழற்றுகிறதா? மனிதர்களாய் பிறந்த அனைவரின் எண்ணங்களும் லட்சியங்களும் தான் நினைப் பது மட்டுமே நடக்கவேண்டும் என்பதாகும். அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நியாயம் உண்டு. தான் மட்டுமே நியாயவாதி என்ற எண்ணமே இதற்குக் காரணமாகும்.
மனிதனுக்கு மனிதன் நியாயங்கள் மாறுபடுகிறது என்பதால் உலகம் தர்மப்படி மட்டுமே இயங்கும்.
இயலாமை எப்பொழுதெல்லாம் எழுகி றதோ அப்பொழுதெல்லாம் மனிதர்களை ஆட்டுவிப்பது கோபம்.
மிகக் குறிப்பாக ஒருவர் பக்கம் நியாயம் இருந்தாலும் நியாயத்திற்கு எதிரான அநீதி நடக்கும் போதெல்லாம் உருவாவது கோபம்.
அந்த கோபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படச் செய்தவருக்கு விடுவது சாபம். ஆற்ற முடியாத மனவருத்தத்தில் பாதிக்கப்பட்டவர் எதிராளிக்கு விடுவது.
சாபம் விட்டவரின் கோபத்தில் நியாயம் இருந்தால் சாபம் பெறப்பட்டவர் தக்க காலம் வரும்போது உலக வாழ்க்கையை வெறுக்கும் வகையில் துயரத்தை நிச்சயமாக அனுபவிப்பார். இந்த சாபம் ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் தோஷமாக உருமாறி அமரும்.
பூர்வஜென்ம பாவ- புண்ணியங்களை அனுபவிக்கவே மனிதப்பிறவி நிகழ்கிறது. ஒரு ஜாதகத்திலே 9-ஆமிடம்தான் "உயர் வானதை அடைவது' இந்த உலகத்தில் பிறந்து ஆசைகளை அடைகின்ற பகுதி 9-ஆமிடமான பாக்கியஸ்தானம். அந்த 9-ஆவது இடத் தில் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதையும் அடைந்து விடுகிறார். ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இவைகளெல்லாம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார். இலக்கை அடைய பிறரின் கோபத்தையும், சாபத்தையும் பெறுகிறார் கள்.
ஒரு உயிர் தாயின் கருவறையில் உருவாகி இடுகாடு செல்வது வரை அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் விருப்பப்படியே நடக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த நவநாகரீக உலக இயக்கம் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப் படுவதால்தான் இறந்த வருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை. இறந்தவனை உயிர்ப்பிக்கும் ரகசியத்தை மட்டும் பிரபஞ்சத்திடமிருந்து யாரும் அறிய முடியவில்லை.
சக மனிதருக்குள் உருவாகும் கோபமும் சாபமுமே மறு பிறவிக்கு காரணமாக அமைகிறது. பிறரின் கோபமும் சாபமும் ஒருவருக்கு இல்லையென்றால் மறுபிறவி என்ற ஒன்றும் கிடையாது.
கிரகங்களும் கோப- சாபங்களும்
ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக கூறப்படும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி. ஆத்மகாரகன் சூரிய பகவான் லக்னத்தில் சூரியன் நின்றால் சுட்டெரிக் கும் கோபம் நியாயமான செயலுக்கு மட்டுமே வரும்.
உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருக்கும் செவ்வாய் லக்னத்தில் நின்றால் அடக்கமுடியாத ஆண வம் நிறைந்த கோபம்.
லக்னத்தில் சனி நியாயத்தை நிலை நாட்டும் கோபம். நம் கர்ம காரகன் சனி பகவான்தானே. அதனால் தான் துலாத்தில் உச்சம் அடைகிறார்.v சனி, செவ்வாய் ராகு- கேது, மாந்தி யுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்து கிறது.
திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும், சாபமும் ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீளமுடியாத தாக்கத்தை உருவாக்கும்.
கண்ணுக்கு தெரிந்த- தெரியாத பல்வேறு தோஷங்கள் இருந்தாலும் பிரதானமாக ஜாதகத்திலும் பிரசன்னத்திலும் 21 வகையான தோஷங்கள் கண்டறியப்படுகின்றன. அவை:
1. பாலாரிஷ்டம்
2. குடும்ப தோஷம்
3. வாக்கு தோஷம்
4. பிரபலாரிஷ்ட தோஷம்
5. தெய்வ தோஷம்
6. சர்ப்ப தோஷம்
7. ஜீவன தோஷம்
8. கால தோஷம்
9. பிதுர் தோஷம்
10. மாதுர் தோஷம்
11. குரு சாபம்
12. பிராமண தோஷம்
13. செய்வினை தோஷம்
14. சத்ரு தோஷம்
15. மித்ரு தோஷம்
16. திருஷ்டி தோஷம்
17. இட தோஷம்
18. பிரேத சாபம்
19. கன்னிப்பெண் சாபம்
20. களத்திர தோஷம்
21. இயற்கை விடும் சாபம்
காற்றை மாசுபடுத்துவதால், சுத்தமான காற்றைத் தரும் மரங்கள் அழிகின்றன. மழை நீர் பூமிக்குள் சென்று தங்கமுடியாமல் மறுசுழற்சியாக முடியாத பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை பயன்படுத்தி பூமியை மாசுபடுத்துவதால் பூமி வறண்டு போகிறது. மழைநீர் பயனற்று போகிறது. மேலும் நீர் நிலைகளை அழித்து குடியிருப்பு பகுதி யாக்குவது போன்ற இயற்கை பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இயற்கை நிச்சயம் பதிலடி கொடுக்கும்.
புனித யாத்திரை செல்லும் பயணிகள் புண்ணிய புனித தீர்த்தங்களில் மலம், சிறுநீர் கழிப்பது, உடுத்திய உடைகளை நீரில் விடுவது, எண்ணெய், சோப்பு, ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தி புனித நீரை அசுத்தம் செய்வது நிச்சயம் கர்மாவை கூட்டும். புனித நீரின் கோபத்தையும், சாபத்தையும் உருவாக்கும். வினைப்பயனை குறைக்க புனித நீர் நிலை களுக்கு சென்று தவறான வழிமுறையைப் பயன்படுத்தி கூடுதல் வினையை சேர்த்த பலன் கிடைக்கும்.
பசுவை வதை செய்பவர்களுக்கு கோ சாபம் ஏற்படும். உண்ண முடியாத உணவை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது. பறவை களை கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு பட்சி சாபம் ஏற்படும்.
மனிதனுக்கு மனிதன் விடும் கோப சாபத்தைவிட இயற்கை விடும் சாபமும் வாயில் லாத ஐந்தறிவு ஜீவன் விடும் சாபத்திற்கும் வலிமை அதிகம்.
தோஷமும் சாபமும் உருவாகும் காலம்
ஒருவர் அறிந்தோ- அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம். இந்த தோஷம் மூன்று காரணங்களால் உருவா கிறது.
1. பகை
பகை என்பது சக மனிதர்களுக்குள் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி. பெரும்பான்மை யான பகை கருத்து வேறுபாட்டாலும், கொடுக்கல்- வாங்கல் மூலமாகவும் உருவா கிறது. இங்கே கொடுக்கல்- வாங்கல் என்பது பணத்தையோ- பொருளையோ மட்டும் குறிப்பது அல்ல. நம்பிக்கை துரோகம், ஏமாற்றத்தால் உருவாவதே பகை.
ஒருவருக்கு 6-ஆம் அதிபதி 6-ல் நின்ற கிரகம் 6-ஆமிடத்தைப் பார்த்த அதீத அசுபத் துடன் இயங்கக்கூடாது. 6-ஆம் அதிபதி தசை காலங்களில் அல்லது கோட்சாரத்தில் 6-ஆமிடம் அசுபத்தை அதிகமாக வெளிப் படுத்தும்போது ஒருவரின் உண்மையான சுயரூபம் தெரியவரும்போது பகை உருவாகிறது.
2. கோபம்
கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப் பாடு. இயலாமை. பகையின் உச்சம். இதையே வேறுவிதமாக கோபம் என்பது ஏமாந்தவர் ஏமாற்றப்பட்டவர்மீது வெளிப்படுத்தும் உணர்வு. சுய ஜாதகத்தில் 8-ஆம் அதிபதி 8-ல் நின்ற கிரகம் 8-ஆமிடத்தைப் பார்த்த அதீத அசுபத்துடன் இயங்கக்கூடாது. 8-ஆம் அதிபதி தசை காலங்களில் அல்லது கோட்சாரத்தில் 8-ஆமிடம் அசுபத்தை வெளிப்படுத்தும்போது ஒருவரின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். அல்லது ஒருவரின்மேல் கோபம் உருவாகிறது. ஆக எட்டாமிடம் என்பது கோபம்.
3. சாபம்
சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். சாபம் என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பதுதான் சாபம். ஒருவரின் சுய ஜாதகத்தில் 12-ஆம் அதிபதி 12-ல் நின்ற கிரகம் 12-ஆமிடத்தைப் பார்த்த அதீத அசுபத்துடன் இயங்கக்கூடாது. 12-ஆம் அதிபதி தசை காலங்களில் அல்லது கோட்சாரத்தில் 12-ஆமிடம் அசுபத்தை வெளிப்படுத்தும்போது ஒருவரின் சாபத் திற்கு ஆளாகிறார்கள். அல்லது ஒருவரை சபிக்கிறார்கள்.
ஆக 12-ஆமிடம் என்பது சாபம். சுருக்க மாக சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங் களான 6, 8, 12-ஆமிடத்துடன். சம்பந்தப் படும் கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் தோஷமும் சாபமும் உருவாகும். கோட்சார கிரகங்கள் 6, 8, 12-ஆமிடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் பகையோ, கோபமோ, சாபமோ, தோஷமோ ஏற்படாமல் போகாது. பகலில் "பக்கம் பார்த்துப்பேசு; இரவில் அதுவும் பேசாதே'' என்பது பழமொழி. ஒருவரின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகாமல் நடந்துகொள்வது மிக முக்கியம். அநீதிக்கு எதிரான செயல்மூலமாக பெறப்பட்ட கோபமும் ஜாதகத்திலுள்ள நல்ல பலன் களைக் குறைத்துவிடும்.
தசாபுக்தியும் தோஷங்களும் சாபங்களும்
பலவருட நண்பர்கள் திடீரென பகையாவது, ரத்த பந்த உறவுகள், குடும்ப உறவுகள், வெறுப்பை உமிழ்வது, ஒர் உயிரும் இரு உடலுமாக வாழ்ந்த தம்பதிகள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சபிப்பது, பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடம் முரண்பாடுகள் உருவாவது, நல்ல அரசியல் நண்பர்களிடம் புரிதல் குறைவால் கட்சியில் பிளவு ஏற்படுவது போன்ற அனைத்தும் பகை கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதிகமாக உண்டாகும். அதீத கோபத்தினால் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்து தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். என் அனுபவத் தில் நான் பார்த்த பல ஜாதகங்களில் இது போன்ற தசா புக்தி காலங்களில் கோபத் தாலும் சாபத்தாலும் பலர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஏன் பலர் ஏமாற்றம் தாங்க முடியாமல் தங்கள் உயிரைக்கூட துச்சமாக நினைக்கிறார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய் ல சனி, ராகு- கேது.
சுக்கிரன், புதன் ல குரு.
பெரும்பாலும் ராகு- கேது தசாபுக்தி நடப்பில் வரும் காலங்களில் பிறரின் கோபம் அல்லது சாபம் நிச்சயம் உருவாகும்.
"தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.''
சினம் காக்கப்படாவிட்டால் அது தன் னையே அழித்துவிடும் என்பது வள்ளுவரின் எச்சரிக்கை.
பரிகாரம்: ஒருவரின் உண்மையான உணர்வினை புரிந்துகொள்ளும் போது பகை, கோபம், தோஷம், சாபம் செயல் இழக்கும். மீள முடியாத கோபமும், சாபமும் உள்ளவர்கள் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி நாட்களில் உபவாசம் மற்றும் மௌன விரதம் கடைபிடிப்பது சாலச் சிறந்தது.
செல்: 98652 20406