கால மாற்றங்களும் வழிபாடுகளும்! -அஸ்ட்ரோ பாபு

/idhalgal/balajothidam/time-changes-and-worship-astro-babu

ந்தக் கட்டுரை, நம் முன்னோர்கள் இயற்கை யில் ஏற்படும் கால மாற்ற்களையும், அதன் விளைவான தட்ப வெப்ப மாறுதல்களையும் எவ்வாறு கையாண்டு இயற்கையை சாதகமாக்கி மனித வாழ்க்கையை மேம்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றியது.

சூரிய வட்டப் பாதையில். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவதும், அந்த வட்டப்பாதை நீள்வட்டத்தில் இருக்கிறதென்பதும், அந்த நீள்வளைவுப் பாதை ஒவ்வொரு 30 டிகிரி கோணத்திலும் ஒரு வளைவாக வளைகிறதென்பதும், மொத்தம் 360 டிகிரியாக நீள்வட்ட பாதை இருக்கிறதென்பதும் நாம் அறிந்ததே. இதில் 30 டிகிரி பாதையை பூமி கடக்க 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அதாவது ஒரு நாளுக்கு பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் ஒரு டிகிரி கடக்கிறது.

dd

பூமி கிழக்கு- மேற்காக தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அதன் சுற்றுப்பாதையின் 0 டிகிரியான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தைத் துவக்கி சுற்றிவருகிறது. அவ்வாறு வருகையில் ஒவ்வொரு வளைவு மூலையிலும் பூமியின் சுழற்சி, பூமியின் சுற்றுப் பாதையில் இருக்கும் சூரியனின் விலக்கு சக்தி மற்றும் காந்த சக்

ந்தக் கட்டுரை, நம் முன்னோர்கள் இயற்கை யில் ஏற்படும் கால மாற்ற்களையும், அதன் விளைவான தட்ப வெப்ப மாறுதல்களையும் எவ்வாறு கையாண்டு இயற்கையை சாதகமாக்கி மனித வாழ்க்கையை மேம்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றியது.

சூரிய வட்டப் பாதையில். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவதும், அந்த வட்டப்பாதை நீள்வட்டத்தில் இருக்கிறதென்பதும், அந்த நீள்வளைவுப் பாதை ஒவ்வொரு 30 டிகிரி கோணத்திலும் ஒரு வளைவாக வளைகிறதென்பதும், மொத்தம் 360 டிகிரியாக நீள்வட்ட பாதை இருக்கிறதென்பதும் நாம் அறிந்ததே. இதில் 30 டிகிரி பாதையை பூமி கடக்க 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அதாவது ஒரு நாளுக்கு பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் ஒரு டிகிரி கடக்கிறது.

dd

பூமி கிழக்கு- மேற்காக தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அதன் சுற்றுப்பாதையின் 0 டிகிரியான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தைத் துவக்கி சுற்றிவருகிறது. அவ்வாறு வருகையில் ஒவ்வொரு வளைவு மூலையிலும் பூமியின் சுழற்சி, பூமியின் சுற்றுப் பாதையில் இருக்கும் சூரியனின் விலக்கு சக்தி மற்றும் காந்த சக்திகளின் கலவை ஒவ்வொருவிதமான சக்திகளை வெளிபடுத்துகிறது.

அதாவது 0 டிகிரியான மேஷத்தில் துவங்குமிடம் சித்திரை 1-ல், ரிஷபம் கடந்து மிதுனத்தில் ஆடியில் ஒரு வளைவைத் தாண்டும்பொழுது ஒரு சக்தியையும், கடகம், சிம்மம் கடந்து புரட்டாசியில் கன்னியில் நுழைந்து அவ்வளைவைத் தாண்டும்போது ஒரு பரிமாணத்தையும், துலாம், விருச்சிகம் கடந்து மார்கழியில், தனுசுவில் வேறொரு சக்தி வடிவத்தையும், மகரம், கும்பம் கடந்து பங்குனியில் மீனத்தில் நுழையும்போது வேறொரு சக்தியையும் இந்த பூமி- சூரிய பாதையில் உண்டாக்கி உள்வாங்குகிறது.

அப்படிப் பார்க்கையில் ஆடி- மிதுனம், புரட்டாசி- கன்னி, மார்கழி- தனுசு, பங்குனி- மீனம் என்ற மாதக் கணக்கில் பூமி ராசிகளைக் கடக்கும் காலம், தட்ப வெப்ப துவக்க காலங்களாகவும் இது பிரிகிறது, அதாவது, இளவேனிற்காலத் துவக்கம் (ஆடி), மழைக்காலத் துவக்கம் (புரட்டாசி), குளிர் (மார்கழி), வெய்யில் காலத்துவக்கம் (பங்குனி), இம்மாறுதல்கள் இந்த பூமியிலுள்ள உயிரினங்களில் எந்தவிதமான மன, உடல் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதை உணர்ந்து அதிலிருந்து மக்களைக் காக்க ஒவ்வொருவிதமான நுட்பங்களை நம் முன்னோர்கள் கையாண்டு, அந்த தாக்கத்தை மனித இனத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த சாதக ரகசியத்தை கடவுள் வழிபாடாக மாற்றி மக்களுக் குக் கொடுத்தார்கள்.

இந்த நான்கு பருவ நிலைகளில் இரண்டு பருவங்கள் சூரியனின் உத்தராயண காலத்திலும், இரண்டு பருவங்கள் சூரியனின் தட்சிணாயன காலத்திலும் இயற்கை நமக்கு வழங்குகிறது.

ஆடி, பங்குனி (மிதுனம்) அம்மன், கிராம தேவதைகள் வழிபாடு; புரட்டாசி, மார்கழி (கன்னி, தனுசு) பெருமாள் வழிபாடு என மக்களை ஆன்மிக சிந்தனைக்குள் கொண்டுசென்று மனம், உடல்நிலை மாற்றங்களை மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி, அந்த மாதங்களில் எவ்வித மாறுபட்ட விஷயங்களும் நடக்காதவாறு பார்த்துக்கொண்டார்கள். வெய்யிலின் தாக்கத்திலிருந்து உடம்பும் மனதும் மாறுகிற காலம் ஆடிக் காற்றடிக்கிற காலம். கிழக்கு திசையின் காந்த சக்தி தாக்குகிற காலம், விவசாயிகள் விதையிடுகிற காலம். பூமி நன்றாக காய்ந்து மண் விரிந்து நீருக்காக ஏங்குகிற காலம். வெய்யிலில் சிரமப்பட்டு ஒரு அலுப்பை மனத்திற்கும், உடம்பிற்கும் கொடுக்கும். ஆதலால்தான் எவ்வித புது முயற்சிகளும் எடுத்தால் தீவிர மனநிலை இல்லாதபொழுது அதில் தீவிரம் மற்றும் தீர்க்கம் இருக்காதென்பதால்தான் புதுவித முயற்சிகள் எடுக்காமல், அயர்ந்திருக்கும் மனதை உற்சாகப்படுத்த தூண்டுசக்தியான மாரியம்மன் வழிபாடு, சூட்டால் ஏற்படும் நோய்களைத் தணிக்க வேப்பிலை, இளநீர், மஞ்சள் போன்றவற்றைப் பயன்படுத்தியும்; வாத்தியங் களில் உற்சாகம் ஏற்படுத்தும் சப்தங்களை ஏற்படுத்தியும் ஊக்க சக்தியான மாரியம்மனை வழிபடச்செய்து, அடுத்த பருவத்திற்குத் தயாரானார்கள்.

அதேபோல் புரட்டாசி மழைக்காலத் துவக்கத் தில், நீரில் பூமி நனைந்து குளிர்ந்து விதைகள் முளைத்து வருகிற காலம். மனிதனுள்ளும் அம்மாற்றம் ஏற்படும். ஊழிக்கால காற்று மனித மனதிலும் உடம்பினுள்ளும் இனப்பெருக்கத்திற்கான மாற்றம் நிகழும். ஆண்களுக்கு சுக்கிலம் வலிமை பெறும் காலம். ஆண்களின் இனப்பெருக்க சக்தி இக்காலத்தில் வீரியத்துடன் இருக்கும். சுக்கிர சக்தியான பெருமாளை வழிபடல், பிரசாதமான புளி, வெல்லம் சார்ந்த உணவு, காமத்தைத்தூண்ட சந்தனம், சம்பங்கிப் பூ, பச்சைக் கற்பூரம் போன்றவை இனப் பெருக்க செயலான காமத்தை செம்மைப்படுத்தி நல்ல வாரிசுகளைப் பெற வழிமுறைகளை ஏற்படுத்தி னார்கள்.

மார்கழியில் கடுங்குளிர் காலம். பயிர்கள் வளர்ந்து, தன்பயனைத் தருகிற முகவாயில் காலம். மனிதருள் பெண் சக்தியும், சுரோணிதமும் தூண்டி காமம் வலிமையையும் தீவிரமும் பெற்றிருக்கும் காலம், சுரோணிதம் (பெண்மை) வலிமை பெற்றிருக்கும் காலம். ஆதலால்தான் இங்கு வலிமையைத் தூண்டுகிற உளுந்து, பச்சரிசி, நவதானியங்களைப் பயன்படுத்தி செய்கிற களி. இதில் கிடைக்கும் புரோட்டின் சக்தி தசை வலிமையைத் தரக்கூடிய மிக சிறந்த விஷயம்.

பங்குனி வெப்ப காலத்துவக்கம், குளிரில் அடங்கிக் கிடந்த மனமும் உடலும் உற்சாகத்தில் பீறிடும் காலம். தையில் அறுவடை முடித்து, மாசியில் இரண்டாம் பருவ விதைப்பை முடித்து, பங்குனியில் ஊரை சுத்தம்செய்து கிராம காவல் தெய்வ வழிபாடுகள், சக்தி இயக்கமான அம்மன், முருகன் போன்ற தெய்வ வழிபாடுகள் மூலமாகவும், பானகம், சர்க்கரைப் பொங்கல், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்ற உணவுகளின் மூலமாகவும் அடுத்துவரும் கடின வெய்யிலை எதிர்கொள்ள மனதையும் உடம்பையும் எதிர்கொள்ள தயாராக்கிக்கொண்டார்கள்.

செல்: 73394 44035

bala170323
இதையும் படியுங்கள்
Subscribe