நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தியடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
ஜாதகக் கட்டத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களில் முற்பிறப்பைக் குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். இப்பிறப்பை முதல் பாவமும், அடுத்த பிறப்பை ஐந்தாம் பாவமும் தெரிவிக்கும்.
ஜென்ம லக்னத்திற்கு பத்தாமிடமான கர்மஸ்தானம் இந்த பிறவியில் அனுபவிக்கப்போகும் பிராரப்த கர்மங்களைக் குறிக்கும்.
லக்னம் ஜாதகரைக் குறிக்கும். லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்கும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்குத் தந்தையான பாட்டனாரைக் குறிக்கும்.
தந்தை தெய்வத்திற்கு சமமானவர். அவர்வழிபட்ட தெய்வத்தைக் குறிக்குமிடம், ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குலதெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.
பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது.
"கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும்'
என்பது சான்றோர் வாக்கு.
மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த பாவத்திற்கு எதிராகச் செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும்.
இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க வேண்டுமானால், அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் 9-ஆம் பாவகம் குறிக்கும் பித்ரு வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அது நம்மை ஆபத்து மற்றும் இடையூறுகளிலிலிருந்து காப்பாற்றும்.
இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக் குறிக்கும் பத்தாம் பாவத்துக்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்டதெய்வ வழிபாட்டைக் குறிக்குமிடம்.
எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ- தெரியாமலோ செய்யும் வினைகளிலிலிருந்து விடுபட, முதலிலில் நம் பெற்றோர்களை நல்லமுறையில் பேணிக்காத்து, அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழுதும் நமக்குக் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பலன் த
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தியடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
ஜாதகக் கட்டத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களில் முற்பிறப்பைக் குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். இப்பிறப்பை முதல் பாவமும், அடுத்த பிறப்பை ஐந்தாம் பாவமும் தெரிவிக்கும்.
ஜென்ம லக்னத்திற்கு பத்தாமிடமான கர்மஸ்தானம் இந்த பிறவியில் அனுபவிக்கப்போகும் பிராரப்த கர்மங்களைக் குறிக்கும்.
லக்னம் ஜாதகரைக் குறிக்கும். லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்கும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்குத் தந்தையான பாட்டனாரைக் குறிக்கும்.
தந்தை தெய்வத்திற்கு சமமானவர். அவர்வழிபட்ட தெய்வத்தைக் குறிக்குமிடம், ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குலதெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.
பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது.
"கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும்'
என்பது சான்றோர் வாக்கு.
மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த பாவத்திற்கு எதிராகச் செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும்.
இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க வேண்டுமானால், அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் 9-ஆம் பாவகம் குறிக்கும் பித்ரு வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அது நம்மை ஆபத்து மற்றும் இடையூறுகளிலிலிருந்து காப்பாற்றும்.
இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக் குறிக்கும் பத்தாம் பாவத்துக்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்டதெய்வ வழிபாட்டைக் குறிக்குமிடம்.
எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ- தெரியாமலோ செய்யும் வினைகளிலிலிருந்து விடுபட, முதலிலில் நம் பெற்றோர்களை நல்லமுறையில் பேணிக்காத்து, அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழுதும் நமக்குக் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர ஜெபங்களும் சித்தியடைவதில்லை. எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம், தோஷம் நீங்கிய பின்புதான் வேலையே செய்ய ஆரம்பிக்கும்.
பிதுர் தோஷமும் பரிகாரங்களும்
ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் ராகு- கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாகக் கருதப்படும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளைப் பிரதிபலிலிப்பவை. மேலும் ராகு தந்தை வழிப்பாட்டனாரையும் கேது தாய்வழிப் பாட்டனாரையும் குறிக்கும். ராகுவும் கேதுவும் அவரவர் முன்னோர் செய்த பாவ- புண்ணியக் கணக்கினைத் தெளிவாகக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அந்த பாவங்களைத் தீர்க்க முடியுமா முடியாதா என்பதையும் காட்டும்.
பித்ரு தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். தம்பதியினரிடம் நெருக்கம் இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்காது. குழந்தைகள் இருந்தா வற்றாலும் பிரச்சினைகள் ஏற்படும். தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர்கள் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.
ஒருசிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். ஒரு வீட்டில் நான்கு ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷத் தாக்கம் அதிகமாக இருக்கும்.
பாதிப்பு என்பது ஏதாவது ஒரு காலகட்டத்தில் வெளிப்பட்டே தீரும்.ஒரு தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளில் பாதிப்பு ஏற்படும் காலம் மட்டுமே மாறுபடும்.
ஒரு மனிதன் யாருக்கெல்லாம் திதி கொடுக்க வேண்டும்?
தந்தைவழி மூதாதையர் ஆறு பேர்;
தாய்வழி மூதாதையர் ஆறு பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்யவேண்டும்.
பித்ரு வர்க்கம் என்பது- ஆண்கள்: பிதா- தந்தை; பிதாமஹர்- தாத்தா (தந்தையின் தந்தை); ப்ரபிதாமஹர்- தாத்தாவின் தந்தை, பெண்கள்: மாதா- தாயார்; பிதாமஹி- பாட்டி (தந்தையின் தாயார்); ப்ரபிதாமஹி- கொள்ளுப் பாட்டி (தந்தையின் பாட்டி).
மாத்ரு வர்க்கம் என்பது ஆண்கள்: மாதா மஹர்- தாத்தா (தாயின் தந்தை); மாது பிதாமஹர்- தாயின் தந்தையின் தந்தை;
மாது ப்ரபிதாமஹர்- தாயின் தாத்தாவின் தந்தை; பெண்கள்: மாதாமஹி- பாட்டி (தாயின் தாயார்); மாது பிதாமஹி- தாயின் பாட்டி; மாது ப்ரபிதாமஹி- தாயின் கொள்ளுப் பாட்டி.
மேலே கூறிய இந்த 12 பேர் தவிர்த்து, ஆண் வாரிசு இல்லாமல் சாந்தியடைய சிரமப்படும் ஆத்மாக்களான மனைவி, மகன், மகள் (18 வயதிற்கு மேல்), தந்தையின் சகோதர- சகோதரிகள் (அத்தை, சித்தப்பா), தந்தையின் சகோதரரின், மனைவி (பெரியம்மா, சின்னம்மா) உடன்பிறந்த சகோதர- சகோதரிகள், தாயின் சகோதர- சகோதரிகள் (மாமா, பெரியம்மா, சித்தி), தந்தை, தாத்தா போன்றவர்களின் மூத்த- இளையதார மனைவிகள் போன்றவரின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்வது ஒருவரின் கடமை.
அவர்களை வஸு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் வழிபட்டு பித்ரு பூஜை செய்யவேண்டும். தர்ப்பணம் என்ற சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
இயற்கை முறையில் இறந்தவர்களின் ஆத்மாவை வருடாந்தர திதி, அமாவாசை திதி,
தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள், மகாளய பட்ச வழிபாடு, தர்ப்பணங்களில் சரி செய்யமுடியும்.
இயற்கைக்கு மாறாக இறந்தவர்களின் ஆத்மாவை திலஹோமத்தால் மட்டுமே சரிசெய்யமுடியும். ஒரு ஆத்மா உடலைவிட்டு வெளியேறும்போது மனதால் துன்பப்பட்டால், அதன் மனதைத் துன்புறுத்திய நிகழ்வில் திருப்தி ஏற்படும்வரை அதைச் சார்ந்தவர்களைத் தாக்கிக்கொண்டே இருக்கும். அதனால்தான் அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக்கூடாது.
இன்று நகர்ப்புறங்களில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். வீடு மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கு தாய், தந்தை அல்லது மாமனார், மாமியாரைக் கொண்டுவந்து வைத்துவிடுகிறார்கள். வயதான அந்த ஜீவன்கள் படும் பாட்டிற்கு அளவே இல்லை. சொந்த ஊரில் உற்றார்- உறவினர்களுடன் வாழ்ந்து பழகியவர்களுக்கு நகர வாழ்க்கை ஒத்து வருவதில்லை. வேலைக்குச் செல்பவர்களுக்கு தங்களை கவனிக்கவே நேரம் கிடைப்பதில்லை. இதில் பெற்றோரை கவனிக்க ஏது நேரம். பல இடங்களில் அவர்களின் வயதிற்கு மீறிய வேலை கொடுத்து இம்சை செய்கிறார்கள்.
பல பெற்றோர் தங்களின் துன்பங்களை வெளியில் சொல்லிலிலியும், சொல்லமுடியாமலும் மன வேதனையுடன் இறந்துவிடுகிறார்கள்.
இதை இயற்கை மரணத்தில் சேர்ப்பதா? இயற்கைக்கு மாறான மரணத்தில் சேர்ப்பதா? இது இரண்டும் இல்லாத புதுவிதம். இந்த வகை பித்ரு தோஷம் எவ்வளவு திதி, தர்ப்பணம் கொடுத்தாலும் போகாது.
திருப்தி அடையாத ஆத்மாக்கள்- அந்த தலைமுறையையே ஏதோ ஒருவகையில் வேதனைப்படுத்திவிடுகின்றன. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை சாந்தியடையச் செய்து- அவர்களின் முழு ஆசிர்வாதம் வேண்டிச் செய்யப்படும் ஹோமமே இந்த தில ஹோமம். எவர் குடும்பத்தில் முன்னோர்களுக்குரிய தர்ப்பணங்கள் தரப்படவில்லையோ, எவர் தலைமுறையில் இயற்கைக்கு மாறான இறப்பு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்கு திலஹோமமே தீர்வு.
பித்ரு தாக்கம் பரிகாரத்தால் சரி செய்யும் சூழலிலில் இருக்கிறதா? தண்டனை தரக்கூடிய நிலைக்குப் போய்விட்டதா என்பதை பிரசன்னத்தின்மூலம் அறிந்து கொண்டபின் தில ஹோமத்திற்குச் செல்வது நல்லது.
தில என்றால் எள். எள்ளினால் செய்யப்படும் ஹோமம் திலஹோமம். சாதாரணமாக பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணத்திற்கும், திலஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலஹோமம்- ராமேஸ்வரம், திருப்புல்லாணி, திலதர்ப்பணப்புரி (செதலபதி) போன்ற தலங்களில் செய்யலாம்.
ராமேஸ்வரம் பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தியடையைச் செய்யும் தவபூமி.
பரிகாரம் செய்யும்போது கவனிக்க வேண்டியது: உங்களுடைய ஜாதகத்தில் யோகம் பொருந்திய நாளாக இருப்பது சிறப்பு.
தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்யவேண்டும். சந்திராஷ்டம நாளாக இருக்கக்கூடாது.
ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால்கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான தசா, புக்தி, அந்தர காலங்களைத் தவிர்த்தல் நலம்.
திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புக்தி, அந்தர காலமாக இருப்பது மிகச்சிறப்பு. 6, 8, 12 அதிபதிகளின் தசா, புக்தி, அந்தர காலமாக இருக்கக்கூடாது.
மிகப்பெரிய யாகங்கள், பரிகார பூஜை செய்யும்போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச்சிறப்பு.
ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்கச் செய்யும்.
லக்னாதிபதி வலிலிமையுடன் இருப்பவருக்கு திலஹோமத்தின் பலன் ஆறு மாதத்திற்குள் தெரிந்துவிடும்.
பரிகாரம் செய்யும் நாளின் நட்சத்திரத்திற்கு திரிகோணாதிபதிகள் தொடர்பு இருக்கவேண்டும்.
பரிகாரம் செய்யும் கிரகம் கோட்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்றிருக்க வேண்டும்.
மிகப்பெரிய பரிகார பூஜை செய்யும்போது குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, புலால் உண்பதைத் தவிர்த்து, மானசீகமாக காரியசித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பலிலிதமாகும்.
வேதவிற்பன்னர் ஏதோ மந்திரம் சொல்கிறார்;
தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பில்லாததுபோல் எண்ண அலைகளைப் பரவவிட்டு காட்சியாளராக ஈடுபடுவது கூடாது.
ஆத்மார்த்தமாக முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்யவேண்டும்.
திலஹோமம் முடித்தவுடன்- தங்களால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
இது ஒரு சக்தி வாய்ந்த ஹோமம். முழு மனதுடன் செய்யவேண்டும். முறைப்படி செய்யத் தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோக முக்கியமான விஷயம்- நம் வாழ்நாளில் ஒரு ஒருமுறை மட்டுமே இதைச் செய்யவேண்டும். சரியாகச் செய்யப்படும் தில ஹோமம் ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால், காலை 9.00 மணி அளவில்தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி, மறுதினம் ஊருக்குக் கிளம்புவது நல்லது.
லக்னத்திற்கு 9-ஆம் வீட்டுக்குரியவரின் நட்சத்திரம், கிழமை, 9-ஆம் வீட்டில் மாந்தி இல்லாத நாள் இருத்தல் நன்று.
திலஹோமம் என்பது இயற்கைக்கு மாறாக இறந்த நம் முன்னோர்களுக்கு செலுத்தும் அஞ்சலிலியாகும். இது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்படும் ஹோமம் என்பதால், குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டியது அவசியம்.
திலஹோமம் செய்வதன்மூலம் சாந்தியடைய முடியாத மற்றும் அகால மரணமடைந்த ஆன்மாக்களுக்கு விடுதலை கிடைக்கும். இறந்த ஆன்மாக்களுக்கு முக்தி ஏற்படும். ஒரு ஆன்மாவை இறைவனடி சேர உதவிய புண்ணியம் கிடைக்கும்.
செல்: 98652 20406