முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரட்டாதி- 4.

செவ்வாய்: அவிட்டம்- 3.

Advertisment

புதன்: ரேவதி- 1.

குரு: பரணி- 3.

சுக்கிரன்: சதயம்- 2.

சனி: சதயம்- 4.

ராகு: ரேவதி- 2.

கேது: அஸ்தம்- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மிதுனம்.

19-3-2024 பகல் 1.37 மணிக்கு கடகம்.

22-3-2024 அதிகாலை 1.27 மணிக்கு சிம்மம்.

dd

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய்- சுக்கிரன், சனி சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கேது 6-ல் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாமிருந்த இடம் தெரியாமல் மறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருந்து மன மகிழ்ச்சி ஏற்படும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகுவுடன் 12-ல் இருப்பதால் வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஆதரவு மிகமிக திருப்திகரமாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுமூலம் ஆதாயம் தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது லட்சுமிநரசிம்மரை தரிசிப்பது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றா லும் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய ஒரு வாய்ப்புகளும், உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் விலகக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோக ரீதியாக உங்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமும், ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் 10-ல் சூரியன் சேர்க்கைப்பெற்று சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்ககூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சுக்கிரன், சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்கள்மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உறவினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக விலகி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் எதிர் பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சிதரக் கூடிய ஒரு இனிய செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிபெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறன்பட செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர் கள் உயர்கல்விக்காக மேற் கொள்ளக்கூடிய முயற்சிகளில் பரிபூரண வெற்றி கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். நவீனகரமானபொருட்களை வரும் நாட்களில் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விநாயருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் வெளியே செல்கின்றபொழுது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். மனைவி, பிள்ளைகள்வகையில் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் அவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகமிக நல்லது. உங்கள் ராசிக்கு 10-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்ற காரணத்தால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் மற்றவரிடம் வீண் பேச்சைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையும். முருகப்பெருமானுக்கு அர்ச்சனைசெய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான செவ்வாய், சுக்கிரன் இணைந்து 7-ல் அமைந்து தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டு இருப்பதால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அரசு உத்தரவுகள் தற்போது கிடைத்து மன நிம்மதி உண்டாகும். கூட்டாளியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு பேசுவது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் மதிப்பும், மரியாதையும் அடைவது மட்டும் இல்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களுடைய ஆதரவை பெறுவீர்கள் என்றாலும் தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களும், அசையும்- அசையா சொத்துகள் வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மையைத் தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாமிருந்த இடம் தெரியாமல் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஒருசிலருக்கு சட்டரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையக்கூடிய நேரமாக தற்போதைய காலங்கள் இருக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், உடன் வேலை செய்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி மன நிம்மதி அடையக்கூடிய அனுகூலங்களும் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய வாய்ப்புகளும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலமும் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, துர்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்று.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் வரும் நாட்களில் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறும் அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்லபண்பை புரிந்து கொண்டு உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். குருபகவான் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலமாக தொழில் வளர்ச்சிக்கான ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குகூட அவர்கள் தகுதிக்கு ஏற்ப நல்லவாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், ஒரு சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய யோகமும் உண்டு. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகி மனமகிழ்ச்சி உண்டாகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது சிறப்பு.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். புதன், சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில்கூட சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். கூட்டாளிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் அவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தவிர்ப்பது நல்லது. சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் அதிகப்படியான அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக கூட எதிர்பாராதவகையில் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முற்பகல் காலத்தில் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவுகள் ஏற்படும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் அடையக்கூடிய யோகமுண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபமேற்றுவது நற்பலனை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்வை செய்வதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக இருந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி உண்டாகும். சூரியன், புதன் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் இருந்தாலும் அதில் ஒரு ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு பெரிய இடத்து நட்பு கிடைப்பதால் தொழிலை விரிவு படுத்தமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சாதகமான நிலை ஏற்படும். உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதி உண்டாகும். கடினமான பணியைகூட நீங்கள் தலையிட்டு சுலபமாக செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். செவ்வாய் மதியத்திற்குபிறகு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் முடிந்தவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது அனுகூலமான பலனைத் தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு இருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் விலகுவதுடன் பிறருக்கு தந்த வாக்குறுதிகளைத் தற்போது காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். நல்ல நட்புகள் கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சனி, செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது தற்போதைக்கு நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள்மூலமாக இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்த தேக்க நிலை விலகி நல்ல மதிப்பினை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் முன்னேற்றமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிலும் நிதானமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சனிபகவானுக்கு நீலநிற பூக்களால் அர்ச்சனைசெய்வது, இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய், 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உங்களது செயல்களில் நிதானமும்- முக்கியமாக முன்கோபத்தை குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனுகூலங்கள் தடைப்படக்கூடிய நேரமாகும். வயது மூத்தவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பெண்களுடைய ஆதரவு சிறப்பாக இருந்து அதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் சுப காரிய முயற்சிகளில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, இரவு நேர பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது இருக்கக்கூடிய நிலையே ஒரு சிறப்பான நிலையாகும். முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்த்து நல்லபெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை மற்றவரிடம் பேச்சைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. காலபைரவரை வழிபாடு செய்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மைத் தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத் தோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசு வகையில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. செவ்வாய்- சனி சேர்க்கைப்பெற்று 12-ல் இருப்பதால் உடன்பிறந்தவர்களிடம் பேச்சை குறைப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னசின்ன பிரச்சினை இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடிய வாய்ப்புகளும், மேற்கல்விக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய ஒரு சூழலும் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருகருக்கு அர்ச்சனைசெய்வது மிகவும் நல்லது.