ஜாதகரின் வயதிற்கு ஏற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட திருமணம் அவசி யம். திருமணமே ஜாதகரை சிறப்பு பெற்ற மனிதனாக உயர்த்து கிறது.
திருமணம் என்ற இல்லற பந்தத்தில் ஈடுபடும்போதே ஒரு மனிதனின் கர்மா முழு வீச்சில் செயல்படுகிறது. வினை இல்லாமல் விளைவு இல்லை.
ஜாதகரின் வினைப் பதிவிலுள்ள சுப கர்மா நல்லதை நடத்தும். ஒரு குற்றம் நல்லதை தடுக்கும்.
அதன் அடிப்படையில் ஜாதக ரின் 21 தலை முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியமே உரிய வயது திருமணம், காலம் தாழ்ந்த திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலையையும் தீர்மானிக்கிறது. மனிதர்களுக்கு மன உளைச்சலை தருவதில் திருமணம், திருமணத்தடை பெரும் பங்குவகிக்கிறது. உலக மக்கள் தொகையில் ஆண்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும், பெண்களின் விகிதாச்சாரம் குறைவாகவும் இருப்பதால் திருமணத்தடை மிகுதியாக உள்ளது. ஜோதிடரீதியாக திருமணத்தடை என்றவுடன் பலர் 2-ஆமிடமான குடும்ப ஸ்தானத்தையும், 7-ஆமிடமான களத் திர ஸ்தானத்தையும் பெண்களுக்கு எட்டா மிடமான மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்கள். அதேபோல் தோஷரீதியாக செவ்வாய், ராகு- கேது மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமணத்தை எந்த கிரகம் தடை செய்தா லும் பழியை சுமப்பவர்கள் ராகு- கேது, செவ்வாய் மட்டும்தான் என்பது நாம் அறிந்த உண்மை. ஒருவரின் திருமணத்தை நிர்ணயிப்பதில் திருமணம் தொடர் பான பாவகங்களான 1, 2, 7, 8-க்கும், செவ்வாய், ராகு- கேதுக்களுக்கும் சில சம்பந்தம் இருந்தாலும் திருமணம், மாலையிடும் பாக்கியத்தை வழங்குவதில் 3-ஆம் பாவகமே முக்கியத் துவம் வகிக்கிறது. இந்த கட்டுரையில் மூன்றாம் பாவகத்திற்கும் திருமணத்திற்கும் உள்ள சம்பந்தத்தையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
மூன்றாம் பாவகம்
ஒருவருக்கு வெற்றியைத் தருவது ஜனனகால ஜாதகத்தின் லக்னத்திற்கு மூன்றாமிட மான உப ஜெய ஸ்தானம், சகாய ஸ்தானம் முயற்சி ஸ்தானம். லக்ன பாவத்தின் பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பாவகம். ஆக, ஒருவர் வாழ்வில் அனைத்துவிதமான சகாயமும் பெற்றிட மூன் றாமிடம் பலமாக இருப்பது மிக அவசியம்.
அத்துடன் ஆபரணம் மற்றும் கழுத்து, ஒப்பந்தத்தை குறிப்பது மூன்றாமிடமாகும். ஒருவருக்கு கழுத்து எனும் மூன்றாமிடம் சுபத்துவம் பெற்றால் விரைவில் மாலையிடும் யோகம், திருமண ஒப்பந்தம் செய்யும் பாக்கியம் கிட்டும். மூன்றாமிடம் பலம் குறைந்தால் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 சுபத்துவம் பெற்றாலும் காலம் தாழ்ந்தே திருமணம் நடைபெறும். திருமண ஒப்பந்தத்தை குறிக்கும் மூன்றாமிடம் பலம் பெற்றால் மட்டுமே ஆண்- பெண் இருவரும் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட முடியும். மூன்றாமிட மான கழுத்து ஸ்தானம் பலம் (எட்டா மிடத்திற்கு எட்டு) பெற்றால் மட்டுமே பெண்ணில் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.
சுபமாக சுப மங்கலத்தோடு வாழ்பவள் சுமங்கலி. நமது தமிழ் கலாச்சாரத்தில் சாஸ்திரங்களில் திருமாங்கல்யத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். திருமணச் சடங்கின் முக்கிய அம்சம் ஆண்- பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டிவிடுவது தான். எல்லாச் சூழ்நிலையிலும் உனக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் ஆண்- பெண் ணிற்கு தாலி கட்டுகிறான். ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக மரணமடைந்தால் அவளை தெய்வமாக வழிபடுவார்கள். சுமங்கலித் துவம் நிறைந்த பெண்கள் வாழும் குடும்பம் ஒரு கோவிலா கும். பெண்களுக்கு இத்தகைய பாக்கியத்தை வழங்குவது சுய ஜாதகத்தின் மூன்றாமிடமாகும்.
அதனால்தான் திருமணத்திற்குப் பார்க்கப் படும் நட்சத்திரப் பொருத்தத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் மிக முக்கிய பொருத்தமாக கருதப்படுகிறது. 3லிஆம் மிடத்தில் நிற்கும் கிரகம் சம சப்தமாக 3-ஆம்மிடத்தைப் பார்க் கும். 9-ல் நிற்கும் கிரகம் 3-ஆமிடத்தைப் பார்க் கும். எனவே மூன்றாம் பாவகத்துடன் சம்பந் தம் பெறும் நவகிரகங்களுக்கான பரிகாரங் கள் திருமண வாழ்க்கையை சுமூகமாக்கும்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் கர்மா ரீதியாக உற்று நோக்கினால் நிரந்தரமான தீர்வு கொடுக்கமுடியும்.
இதனை ஒரு உதாரண பிரசன்ன, ஜனன ஜாதகத்தின்மூலம் தெளிவாக பார்க்கலாம்.
18-8-2023 அன்று காலை 9.49-க்கு பார்க்கப்பட்ட சோழிப் பிரசன்னம்.
நட்சத்திரம் பூரம். உதய லக்னம் கன்னி. சோழி லக்கனம் தனுசு. பிரசன்னம் பார்க்க 65 வயது மதிக்கதக்கவர் வந்திருந்தார்.
பிரசன்னம் பார்க்கவந்தவர் கொண்டுவந்த பூஜைப் பொருட்கள் குல தெய்வ அனு கிரகத்தை முன்னிறுத்தியது.
சோழி பிரசன்ன பலன்கள்
சோழி லக்னத்தை குரு பார்த்ததாலும் அன்றைய நட்சத்திரம் சுக்கிரனின் பூரம் நட்சத்திரம் என்பதாலும் சுப நிகழ்வுகள், திருமணம் பற்றிய கேள்வியாக இருக்கும்.
சோழி லக்னாதிபதி குரு சனியின் 3-ஆம் பார்வையில் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். ஜாதகர் கவுரவமானவர். செல்வாக்கு, சொல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் நிரம்பியவர்.
சோழி லக்னாதிபதி குரு ராகுவுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்ந்து சனி பார்வை பெற்றதால் ஜாதகருக்கு ஆன்ம பலம் குறையும் வகையில் மன வருத்தம் உள்ளது.
சோழி லக்னாதிபதி குரு 5-ல் ராகுவுடன் நின்று சோழி லக்னத்தை பார்த்ததால் ஜாத கருக்கு பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகமுள்ளது.
5-ஆம் அதிபதி செவ்வாய் (பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி) 9-ஆம் அதிபதி சூரியன் (பாக்கியாதிபதி) அஷ்டமாதிபதி சந்திரன் மற்றும் பாதகாதிபதி புதனுடன் சேர்க்கை பெற்று சனி, குரு பார்வை பெற்றதால் ஜாதகர் பாக்கிய பலன்களை அனுபவிக்க தடை உள்ளது.
ஜாதகர் ஆமாம் எனது ஒரே மகளுக்கு 38 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. என் மகளுக்கு திருமணம் செய்து பேரன்- பேத்தியை பார்க்கவேண்டும். அதற்கு சாத்தியம் உள்ளதா? என்று கேட்டார்.
16-2-1986 அன்று 9.27-க்கு பிறந்த ஜாதகி. பிறந்த ஊர் தெரிவிக்க விரும்பவில்லை.
ஜாதகியின் ஜென்ம லக்னம்
கன்னி. ஜென்ம நட்சத்திரம்
கிருத்திகை. ரிஷப ராசி.
ஜாதகி கன்னி லக்னம்.
அவரின் ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ஐ ஆய்வு செய்தால் லக்னாதிபதி புதன் 6-ல் மறைவு. 2-ல் கேது 8-ல் ராகு. 7-ஆம் அதிபதி குரு தன் வீட்டிற்கு பின் வீடான 6-ல் மறைவு.
குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் 6-ல் மறைவு என மறைவு ஸ்தானங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமா நடப்பில் ராகு தசை செவ்வாய் தசை. 8-ல் நின்ற ராகுவின் தசை. அஷ்டமாதிபதி மற்றும் மாங்கல்ய காரகன் செவ்வாயின் புக்தி.
இது பகை கிரகங்களின் தசை. புக்தி என்றாலும் ஒரு பெண்ணிற்கு மாங்கல்ய பாக்கியத்தை வழங்குபவர் செவ்வாய்.இந்த பெண் ணிற்கு அஷ்டமாதிபதி செவ்வாயே மாங்கல்ய பாக்கியத்தை வழங்க கடமைப் பட்டவர். அப்படி பார்த்தால், இந்தப் பெண் ணிற்கு அஷ்டமாதிபதி புக்தி முடிவதற்குள் .திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
பிரசன்ன ஜாதகத்திற்கும் ஜனன ஜாதகத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் இங்கே நன்கு கூர்ந்து கவனித்தால் வாசகர் களுக்கு ஒரு அனுபவ உண்மை விளங்கும். இந்த ஜாதகிக்கு பிரசன்ன உதய லக்னம் கன்னி. ஜென்ம லக்னமும் கன்னி. பிறந்த தேதி தெரிந்து பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு பிரசன்ன நேத்தை பிறந்த நேரமாக வைத்து ஜாதகம் எழுதினால் மிகத் துல்லியமான ஜாதகம் கிடைக்கும் என்பது தெளிவாகிறது. பிரசன்ன ஜாதகம் ஜனன ஜாதகம் இரண்டும் கர்மாரீதியான ஒரே குறைபாட்டை தெளி வாக பிரதிபலிக்கும். பிரசன்னத்தின்மூலம் கர்மாரீதியான பாதிப்பின் வீரியத்தை தெளிவாக அறியமுடியும்.
சுய ஜாதகத்திலும் பிரசன்ன ஜாதகத் திலும் சனி, சந்திரன் சம சப்தம பார்வை. புனர் பூ தோஷம்.
சனி கர்மா. சந்திரன் நீர். கண்ணீர் விட்டு அழுத ஒருவரின் சாபம் குடும்பத்திற்கு உள்ளது.
சுய ஜாதகத்திலும் பிரசன்ன ஜாதகத்திலும் சனி, செவ்வாய் சம்பந்தம். சுய ஜாதகத்தில் 3லிஆமிடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை.
பிரசன்ன ஜாதகத்தில் 3-ஆமிடத்திலுள்ள சனியை 9-ஆமிடத்திலுள்ள செவ்வாய் பார்க்கி றது. ஆக சனி, செவ்வாய் இணைவு. செவ்வாய், சனி சம்பந்தம் உடன்பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகள்மூலம் சொத்திற்காக ஏற்பட்ட சாபம்.
பிரசன்ன லக்னத்திற்கு 2-ல் கேது. 8-ல் ராகு.
பிறப்பு ஜாதகத்திலும் 2-ல் கேது 8-ல் ராகு.
ஒரு பிரசன்னத்தைப் பொறுத்த வரை பிரச்சனைக்கான மூலகாரணத் தையும் கர்மாவையும் கண்டரிய அஷ்ட மாதிபதி, பாதகாதிபதி, மாந்தி, ராகு, கேதுவின் நிலைப்பாடு மிக முக்கியம். சுய ஜாத கத்திலும், பிரசன்ன ஜாதகத்திலும் அஷ்ட மாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் உள்ளது இந்த கட்டுரையின் சாராம்சம் திருமணத் தடை 3-ஆம் பாவகம் எனும் கழுத்து பாவ கத்தால் எப்படி தடை ஏற்படுகிறது என்ப தைத் தெளிவு படுத்துவதாகும். இந்த பிரசன்ன ஜாதகம், ஜனன ஜாதகம் இரண்டிலும் 3-ஆமிடம் (8-ஆமிடம்) எனும் மாங்கல்ய ஸ்தானத்திற்கு 8 எனும் கழுத்து பாவகத்திற்கு சனி செவ்வாய் எனும் இரண்டு அசுப பகை கிரக சம்பந்தம் உள்ளது மாங் கல்ய தோஷத்தை தெளிவுபடுத்துகிறது.
பரிகாரம்
பரிகாரம் என்ற ஒரு விசயம் இல்லை யென்றால் ஜோதிடரையும். ஜோதிடத்தையும் யாரும் நம்ப மாட்டார்கள். மாங்கல்ய தோஷத்தை மாங்கல்ய தானம் செய்தால் நிவர்த்தி செய்யமுடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த பரிகாரம்.
ஒரே பரிகாரத்தை திரும்ப திரும்ப கூறினால் ஜோதிடருக்கும் ஜோசியத்திற்கும் மதிப்பு கிடையாது.
மாற்றி யோசித்தால் மட்டுமே விதியை வெல்லமுடியும். அதனால்தான் நமது முன்னோர்கள் விதியை மதியால் வெல்லும் சூட்சமம் அறிந்தவர்களுக்கு வினைகள் அண்டாது என்று சொல்லி வைத்தார்கள்.
புனர் பூ தோஷம் கண்ணீர் விட்டு அழுதவர் களின் சாபம், சனி. செவ்வாய் சம்பந்தம் பங்காளின் சொத்து பிரச்சினை மட்டுமல்ல. செவ்வாய் என்பது மாங்கல்யம். ரகசிய திருமணம் செய்து ஒரு பெண்ணை ஏமாற் றிய குற்றம் என்றும் கூறலாம். அதனால் தான் 16 முறை மாங்கல்ய தானம் வழங்கியும் திருமணம் நடக்க வில்லை.
ஒரு பெண் கணவன் எவ்வளவு கொடூர மானவனாக இருந்தாலும் தனது மாங்கல் யத்தை அடமானம் வைக்க விரும்பு வது இல்லை. கஷ்டத்தை சமாளிக்க கண்ணீருடன் மன வேதனையுடன் அடமானம் வைக்கிறாள். 8-ஆமிடம் அவமானம், 8-ஆமிடம் மாங்கல் யம், 8-ஆமிடம் அடமானம்.
விதியை விதிவழி சென்று வெல்ல வேண்டும். ஜாதகர் வசிக்கும் பகுதியில் சிறு சிறு வட்டிக்கடையில் அடமானம் வைத்து மீட்க முடியாமல் தவிக்கும் ஒன்பது பெண் களின் மாங்கல்யத்தை மீட்டு உரியவரிடம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ஒப்ப டைக்க கூறப்பட்டது. புதியதாக திருமணம் செய்பவர்களுக்கு அவர்கள் பெற்ற உதவியின் மதிப்பு தெரியாது. சுமங்கலியாக வாழும் ஒரு பெண் சமுதாயத்தில் இயலாமையால் கூனிக் குறுகுகிறாள். அவள் தனது மாங்கல்யத்தை மறுபடியும் தன் கையில் பெறும்போது தனக்கு உதவிசெய்த குடும்பம் 100 வருடம் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டும் என்று மனதார ஆனந்தக் கண்ணீரோடு வாழ்த்துவாள். இந்தப் பரிகாரம் பாக்கிய பலனை உடனே ஜாதகருக்கு வழங்கும். வீட்டில் மங்கள ஓசை கேட்கும் என்று கூறப் பட்டது. மேலும் அவரின் மகளுக்கு சுய விருப்ப விவாகம் நடக்கும் என்றும் பலன் உரைக்கப்பட்டது. அதே நேரத்தில் சோழி லக்னாதிபதி குரு ராகுவோடு இணைந்ததால் சாதகமானப் பலனை சரணாகதியான இறை வழிபாட்டின் மூலமே அடையமுடியும் என்று கூறப்பட்டது.
கடந்த தை மாதத்தில் ஜாதகத்திக்கு குலத்தாரின் ஆசிர்வாதத்தோடு விருப்ப விவாகம் நடந்தது. நான் நேரில்சென்று மணமக்களை ஆசிர்வதித்தேன். இது என் வாழ்நாளில் நடந்த மறக்க முடியாத சம்பவம்.
இனி அடுத்த வாரம் நவகிரகங்கள் 3லிஆமி டத்தில் நிற்பதால் உருவாகும் மன சஞ்சலத்தை நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.