ம் நாட்டைப் பொருத்தவரை ஆண்களுக்குத் தொழில் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இருபத்தைந்து வயதை அடைவதற்குள் ஒருவன் நல்ல வேலையில் சேர்ந்து, முப்பது வயதுக்குள் நிலையான வருமானத்தைப் பெற்றால்தான் திருமணத்திற்குப் பெண் கொடுப்பார்கள். நல்ல மனைவி, குடும்பத்தைப் பாராட்டும்சொந்தங்கள், நண்பர்கள் கூட்டம் என அத்தனையும், நல்ல வேலை அல்லது தொழில் செய்து சம்பாதித்தால் மட்டுமே கிடைக்கும். ஒழுக்கமானவன், நல்லவன், ஆரோக்கியமானவன் என்னும் தகுதியை இன்று பலரும் மதிப்பதில்லை. எப்படி சம்பாதிக்கிறான் என்பதைவிட எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் பொருத்தே மரியாதை கொடுக்கப்படுகிறது.

gg

ஒருவருக்குக் கொடுக்கப்படும் மதிப்பு, மரியாதை அவரின் பதவி, அதிகாரம், அவரிடம் இருக்கும் பணத்துக்காக மட்டுமேதான். இதில் ஏதாவது குறையும்பட்சத்தில் நமக்கான மதிப்பு, அங்கீகாரம் தானாகக் குறையத் தொடங்கிவிடும். பதவியில் இருக்கும்வரைதான் எல்லாம். பணி ஓய்வுபெற்றதும் குடும்பத்திற்குள்ளேகூட நம் பேச்சுக்கு மரியாதை நின்றுவிடும். என்ன வேலை செய்தாலும் நேர்மையாக, நேர்த்தியாக இருந்தால்தான் அந்த தொழிலில் வளர்ச்சிபெற முடியும். சில நேரங்களில் தொழில் சார்ந்த அணுகுமுறைகளை சூழ்நிலைக் கேற்ப எடுக்கவேண்டிய சூழல் அமையும். தொழிலில் எதிரிகள் எப்போதும் நேரில்வந்து மோதமாட்டார்கள். மறைமுகமாக அழிக்கநினைக்கும் சூழ்ச்சிக்காரர்கள் நிறைந்த உலகம். பெரும்பாலும் நம் அருகிலேயே இருந்துகொண்டு நாம் வாழ்வதைக்கண்டு பொறுக்காதவர்கள்தான், நம்மிடம் நெருங்கிப் பழகிக்கொண்டேவாழவிடமாட்டார்கள்.

பெண்ணுக்குத் தகுதி அழகு, ஆணுக்குத் தகுதி சம்பாத்தியம் என்றுதான் பார்க்கப்படுகிறது.

அழகு குறைந்த ஆணாக இருந்தாலும், அவனிடம் பணம் இருந்தால் அழகு நிறைந்த பெண்ணைத் திருமணம் செய்துவைப்பார்கள். "பணம் மட்டுமே தான் வாழ்க்கையா?' என கேள்வி கேட்பவர்களை, "பணம் சம்பாதிக்க துப்பில்லாத நீ தத்துவம்தான் பேசுவாய்' என ஏளனப்படுத்துகிறார்கள். அப்படி யென்றால் மொத்தமும் பணம் என உலகம் மாறி விட்டதா என கேட்கத் தோன்றும். இன்று பணம் இல்லை யென்றால் எதுவும் நடக்காது என்பதை எல்லாரும் உணர்ந்திருக்கிறார்கள். மனிதம் இல்லையென்றாலும் பணம் மனிதனை வாழ வைப்பதாகிவிட்டதே.

தொழில் என ஒன்றிருந்தால்தான் வருமா னம் என்னும் ஒன்றைப்பற்றி யோசிக்கவே முடியும். ஒருவருக்கு அமையும் தொழில்- அதில் வரும் வருமானம் அவரவரின் தொழில் ஸ்தானத்தைப் பொருத்துதான் அமைகிறது. திறமை, முயற்சி, பயிற்சி பெற்றவராயினும் லட்சியத்தை அடைய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான போராட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

நிறைய அறிவாளிகள், திறமைசாலிகள், பொறுமைசாலிகள் உலகில் உண்டு. ஆனால் வெற்றிபெறுபவர்கள் வெகு சிலர்தான். "எனக் குப் பின் இந்தத் தொழிலுக்கு வந்தான். நான்தான் தொழில் கற்றுக்கொடுத்தேன். நான்தான் அவனை வேலைக்கு சேர்த்து விட்டேன். ஆனால் இன்று அவன் பெரும் உச்சத்தை அடைந்துவிட்டான்' என புலம்பும் பலரைப் பார்க்கலாம். ஒருவர் ஜாதகத்தில் பத்தாமிடம் சுப பலம்பெற்றிருந் தால்தான் தொழிலில் எளிதாக வெற்றியடைய முடியும். மற்றவர்கள் தொழில் கிடைக்காமல் அல்லது தொழிலில் வெற்றிபெற முடியாமல் தவிப்பர்.

பத்தாமிடம்

பத்தாமிடத்தில் நின்ற கிரகங்களின் சுபத் தன்மை, பத்தாமிடத்தைப் பார்த்த சுபகிரக வலிமை, பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்ளும் சுபகிரகத்தின் நிலை, பத்தாமதிபதி நின்ற இடம், பத்தாமதிபதியுடன் இணைந்த- பார்த்த கிரகங்களின் வலுத்தன்மையைப் பொருத்தே ஜாதகரின் தொழில் வெற்றியைத் தீர்மானிக்க முடியும். பத்தாமதிபதியுடன் இணையும்- பார்க்கும் ஆதிபத்திய அதிபதி களைப் பொருத்தும் தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். பத்தாமதியுடன் கேந்திர திரிகோணாதிபதி சேர்க்கையானது தொழில் விருத்தியைத் தரும்.

எந்த லக்னக்காரர்களாக இருந்தாலும். பத்தாமதிபதி மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இருக்கக்கூடாது. செய்தொழில் எந்த வகையிலாவது பாதித்து நிம்மதியை இழக்க நேரும். சொந்தத் தொழில் செய்யமுடியாது அல்லது செய்யக்கூடாது. பத்தாமதிபதி மட்டுமின்றி லக்னாதிபதி பலம்பெற்றால்தான் தொழிலில் சிறப்ப டைய முடியும். பத்தாமதிபதி நீசம், வக்ரம், சுபகிரகப் பார்வையின்றி இருந்து பலவீனப் பட்டால் புத்தி மந்தமாகும். தொழிலில் ஆர்வமின்றி சோம்பேறியாக்கி தொழிலைக் கெடுத்துவிடும்.

எந்த வகையில் தொழில் அமையும்?

பத்தாமிடத்தில் நின்ற கிரகம் வலுவானால் அதனைச் சார்ந்த தொழில் அமையும். கூட்டுகிரகங்கள் பத்தில் நின்றாலே பல தொழில் செய்து அலையநேரும். ஒரு பாவ கிரகம் இருக்கலாம். பாவகிரகங்கள் நிற்பது நல்லதல்ல. ஏதாவதொரு துறையென்றால் சாதிக்கலாம். பல்துறை வித்தகரால் சாதிக்க வும் முடியாது; சம்பாதிக்கவும் முடியாது. படித்து முடித்ததும் படிப்பிற்கேற்ப வேலைக் குச் சென்று அதில் முன்னேறி நல்ல வாழ்க்கை வாழவே எல்லாரும் விரும்புவர். ஆரம்பக் கல்வி, உயர்கல்வி ஸ்தானமான இரண்டு, நான்காமிடங்கள், தொழில் ஸ்தானமான பத்தாமிடத்துடன் ஏதாவதொரு வகையில் தொடர்புகொண்டால் மட்டுமே கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கிறது. வெகுசிலரைத் தவிர எல்லாருக்கும் தான் கற்ற கல்விக்கேற்ற வேலை, விரும்பிய- எதிர்பார்த்த வேலை அமைவதில்லை. இரண்டு, நான்காமிடங்கள் வலுப்பெற்றதால் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று உயர்பட்டம் பெற்றிருப்பர். ஆனால் பத்தாமதிபதி தொடர்பின்றியும், பத்தாமதிபதி மறைவிடங்களில் இருந்தாலும் கல்விக்கேற்ற வேலை இல்லாமல் செய்துவிடுகிறது.

தொழிலதிபதி இணையும் ஆதி பத்திய அதிபதிகளே தொழிலைத் தரும்.ஒன்பதாமதிபதி தந்தையைக் குறிக்கிறது. பத்தாமதிபதியுடன் தொடர்புகொண்டால் தந்தைவழி தொழிலைத் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். தந்தை செய்த தொழில், தந்தையால் தொழில் அமையும். பத்திற்கு நான்காமிடம், இரண்டாமிடத் தொடர்பிருந்தால் வீடு, கடை கட்டிவிட்டு அதன்மூலம் வரும் வாடகையால் குடும்பத்திற்கு வருவாய் கிடைக்கும். சிலர் சுக்கிர கலப்பால் ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு விட்டு வருமானம் பெறுவர். சுக்கிரன் பத்தாமிடத்து டன் தொடர்புகொண்டாலே எதாவது கலைசார்ந்த தொழிலுக்கே கொண்டு செல்லும்.

சுக்கிரன் கிரக இணைவைப் பொருத்தே குறிப்பிட்ட தொழில் செய்வர். சுக்கிரன் சனி, ராகு இணைவு- சினிமா சார்ந்த தொழிலுக்கு வருவர். குரு சேர்க்கை தங்கநகைத் தொழிலுக்கு அழைத்துச்செல்லும். சந்திரன் நிலையைப் பொருத்து ஜவுளி வியாபாரமும், குரு, புதன் சேர்க்கை வட்டித் தொழிலையும் தரும்.

சர, ஸ்திர, உபய ராசிகளைப் பொருத்து தொழிலின் நிலைத் தன்மை, செய்தொழில் எப்படிபட்டதென்பதை அறியலாம். பத்தாமதிபதி நின்ற ராசியின் தன்மையைப் பொருத்து நிலம், நீர், நெருப்பு, காற்று சார்ந்த இடங்கள் தொழிலாக அமையும். பத்தாமதிபதி சேரும் கிரகங்களின் காரகர்களால் தொழில் விருத்தி ஏற்படும். பத்தாமதிபதி நின்ற நவாம்ச வீட்டின் கிரகாதிபதியைக் கொண்டும், பத்தாமதிபதி நின்ற சார அடிப்படையிலும் தொழில் அமையலாம். சுபகிரக- அசுபகிரகப் பார்வை, இணைவு, தொடர்பு என பல்வேறு நிலைகளைத் தொகுத்து ஆராய்ந்து ஜாதகரின் தொழிலைக் கண்டறியலாம்.

பத்தாமதிபதி தொடர்புகொண்ட கிரகங்களில் எது வலுப்பெற்றதோ அந்த கிரகத்தின் தன்மையில் தொழில் அமையும். ஜாதகர் இந்த தொழிலைதான் செய்வார் என ஓரளவு பத்தாமிடத்தை வைத்துச் சொல்லிவிடலாம். செய்யும் தொழில் நல்ல முறையில் இருந்தால் எவரும் அடுத்த தொழிலுக்குச் செல்லமாட்டார்கள். சிலருக்கு பத்தாமிடத்தில் அதிக கூட்டு கிரகங்களோ, கூட்டு கிரகங்கள் பத்தாமிடத்தைச் சூழ்ந்தாலோ தொழில் பாதிப்பு ஏற்படும். அல்லது ஒரு தொழிலை நிலையாகச் செய்யமுடியாமல் போய்விடும்.

இதனால் ஜாதகருக்கு தொழில் அமைவதும், அதனைக் கணிப்பதும்கூட சிக்கலையே தரும்.

ஜாதகரின் லக்னம், ராசிக்கு பத்தாமிடத்தின் நிலை, பத்தாமிடத்தின் கிரக அமைப்பைப் பொருத்திப் பார்த்து தொழிலைக் கணித்தல் அவசியம். சனி இரும்புத் தொழில் என்றால், அவர் நான்காமதிபதியுடன் சேர்ந்தால் வாகன இரும்புத் தொழில். அதில் முதலாளியாக இருப்பதும், ஓட்டுனராக- தொழிலாளியாக இருப்பதும் கிரக வலிமை மற்றும் சுபகிரகத்தால் உண்டாகும் சுபத் தன்மையால்தான். இப்படி ஜாதகத்தில் பத்தாமிடம், பத்தாமதிபதியின் ஆட்சி, உச்சபலன்,நின்ற பலன், பார்த்த பலன், சேர்க்கைப் பலன் என பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தி ஜாதகரின் தொழில் வகை, தொழில்நிலையை அறியலாம்.

இந்தக் காலத்தில் புதிது புதிதாக தொழில்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

ஜோதிடர் தான் படித்துத் தெரிந்த அளவே தோராயமாக, இந்த வகை தொழில்செய்ய வாய்ப்பிருக்கிறது என கூறமுடியும். இந்தத் தொழில்தான் செய்கிறார் என்பதை துருவ கணிதத்தில் குறித்து வைத்திருந்தால் பார்த்துச் சொல்லலாம். ஜோதிடர் கற்றுக்கொள்ளும் திறனைப் பொருத்தே தொழில் என்னவென்று துல்லியமாக அறியமுடியும். தொழில் என்னவென்று சொல்வதைவிட, ஜாதகத்தின்மூலம் ஒருவருக்கு தொழில் எப்படி இருக்கும், தொழில் லாபம், தொழில் மாற்றம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுதல்தான் அவசியமானது. அதை விட்டுவிட்டு ஜோதிடரை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தால் வேலை தான் கெடும்.

செய்த வேலை, தொழில் கெட்டு, ஒரு வேலையும் சரியாக அமையாமல், அடுத்து என்ன செய்வதென புரியாமல், ஜோதிடர் களைத் தேடி விடை கண்டுபிடிக்க அலைந்து, ஜோதிடத்தை புதன் பலத்தால் கற்றவர்கள் பலர். அதில் வாக்குபலம் பெற்றவர்களுக்கு, இரண்டாமதிபதி, பத்தாமதிபதியுடன் தொடர்புகொண்டு சுப கிரகத்தால் நன்றாக இருந்தால், கற்ற வித்தையைப் பிறருக்குப் பயன்படும்படி சொல்லி, ஜோதிடத்தைத் தொழிலாக்கி, பிரபல ஜோதிடராகவும் தொழில் செய்து பணம் சம்பாதித்து நல்வாழ்க்கை வாழ்கிறார்கள். ஜோதிடத்தில் பட்டம் பெற்ற பலர் ஜோதிடத் தொழிலுக்கு வராமலும்கூட இருக்கிறார்கள்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் தசாபுக்திகள் நன்றாக அமையும்வரை தொழில் பலருக்கு போராட்டமாகவே இருக்கும். சிலர் படிக்கும்வரை, நல்ல தசாபுக்தி அமைந்து நன்றாகப் படிப்பார்கள். படிப்பு முடிந்ததும், தொழில் ஸ்தானம் கெட்டு தசாபுக்திகளும் சரியாக அமையாதவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

படித்ததைவிட கீழ்நிலைத் தொழில்செய்து அவமானப்பட்டு வாழநேரும். சுய ஜாதகத் தைப் பார்த்து, எப்போது நல்ல தசாபுக்தி வருகிறது என்பதை அறிந்து, அதுவரை பொறுமையாக இருந்து, பணத்தை எதிர் பார்க்காமல், கிடைத்த வேலையில்திறமையை வளர்த்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். நல்ல நேரம் கூடிவந்ததும் தன்னால் முன்னேற்றம் வந்துவிடும்.

அத்தனை வருட அனுபவமும் தொழிலில் உயர்ந்த பதவி, புகழைத் தந்துவிடும்.

பரிகாரம்

கடந்த காலங்களில் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை, வெற்றியாக விமர்சனம் செய்வது அவரது அறிவு, குணத்தைப் பொருத்தே இருந்தது.இன்று ஒருவர்அதிக மாகப் பணத்தை சேர்த்துவிட்டால் போதும்;

அவரே நல்ல மனிதர்; சாதனையாளர்; வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என புகழ்பாட ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் தற்சமயம் பணம் சம்பாதிப்பதே வாழ்வின் லட்சியமாக மாறிவிட்டது. பணக் காரனாவதற்கு யாருக்குதான் ஆசையில்லை? பலருக்கு ஆசை வெறியாகி, அவசரப் படுவதால்தான் ஏமாற்றம், ஆபத்தைத் தந்துவிடுகிறது.சுயஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தை நன்றாக ஆராய்ந்து, பொறுமையாகவும் நிதானமாகவும் தனக் கான நேரம் வரும்வரை காத்திருந்தால் நினைத்த லட்சியத்தை நிச்சயம் அடையமுடியும்.

பத்தாமிடத்திற்கு தொடர்புடைய கிரகங்களை, பத்தாமிடத்தின் வலுப்பெற்ற கிரகத்தைக் கண்டறிந்து, அந்த கிரகத்திற்கு உண்டான பரிகாரங்களை மேற்கொண்டால் கிரகசாந்தி பெற்று தொழில் வளம் பெருகும்.

செல்: 96003 53748