ரிஷப லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்

/idhalgal/balajothidam/taurus-ascendant-dasa-buktip-remedies-prasanna-astrologer-i-anandhi

சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப லக்னத்தினர் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள்.

வசீகரமான பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்கள். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் லக்னாதிபதியாக வருவதால், அழகுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

ஆடம்பரமான, சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவீர் கள். வெண்மை நிறத்தை விரும்புவீர்கள். எந்த கஷ்டத்தையும் தாங்கக் கூடிய சகிப்புதன்மையும் அதிகமிருக்கும். புத்தக வாசிப்பு இவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். லௌகீக வாழ்வில் அதிக பற்றுடையவர். மனோதிடம் மிக்கவர். பிறரிடம் பழகுவதில் தனக்கென்று தனித்துவம் உடையவர். கலைத்திறன் மிக்கவர். மற்றவர்களுக்குமுன் உதாரணமாக வாழ்பவர்.

சுக்கிர தசை

ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரன். இவரே 6-ஆமதிபதி. லக்னாதிபதி சுக்கிரன் என்பதால் பிறரை எளிதில் கவரும் அழகிய தோற்றம் உண்டு. பால்ய வயதில் சுக்கிர தசை சிறு நோய்த் தாக்கத்தைக் கொடுக்கும். இளம் வயதில் சுக்கிர தசை நடந்தால் படித்து முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்கும். மத்திம வயதில் கடன் பிரச்சினையைத் தருவார். எதிரி தொல்லைகளை உருவாக்குவார். எந்த வயதில் சுக்கிர தசை, புக்தி நடந்தாலும் எதிர்பாலினத்தவர் ஈர்ப்பால் பெயருக்கு கலங்கம் ஏற்படும். லக்னாதிபதியே ஆறாமதிபதியாக இருப்பதால் வெளியிலிருந்து எதிரி ஒருவர் வரத் தேவையில்லை. தனக்கு நடக்கும் நல்லது கெட்டதிற்கும் இவரே காரணமாக இருப்பார். இவர்களுக்கு சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெறாமல் இருப்பது சிறப்பு. சுக்கிரன் வலுத்த ரிஷப ல

சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப லக்னத்தினர் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள்.

வசீகரமான பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்கள். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் லக்னாதிபதியாக வருவதால், அழகுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

ஆடம்பரமான, சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவீர் கள். வெண்மை நிறத்தை விரும்புவீர்கள். எந்த கஷ்டத்தையும் தாங்கக் கூடிய சகிப்புதன்மையும் அதிகமிருக்கும். புத்தக வாசிப்பு இவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். லௌகீக வாழ்வில் அதிக பற்றுடையவர். மனோதிடம் மிக்கவர். பிறரிடம் பழகுவதில் தனக்கென்று தனித்துவம் உடையவர். கலைத்திறன் மிக்கவர். மற்றவர்களுக்குமுன் உதாரணமாக வாழ்பவர்.

சுக்கிர தசை

ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரன். இவரே 6-ஆமதிபதி. லக்னாதிபதி சுக்கிரன் என்பதால் பிறரை எளிதில் கவரும் அழகிய தோற்றம் உண்டு. பால்ய வயதில் சுக்கிர தசை சிறு நோய்த் தாக்கத்தைக் கொடுக்கும். இளம் வயதில் சுக்கிர தசை நடந்தால் படித்து முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்கும். மத்திம வயதில் கடன் பிரச்சினையைத் தருவார். எதிரி தொல்லைகளை உருவாக்குவார். எந்த வயதில் சுக்கிர தசை, புக்தி நடந்தாலும் எதிர்பாலினத்தவர் ஈர்ப்பால் பெயருக்கு கலங்கம் ஏற்படும். லக்னாதிபதியே ஆறாமதிபதியாக இருப்பதால் வெளியிலிருந்து எதிரி ஒருவர் வரத் தேவையில்லை. தனக்கு நடக்கும் நல்லது கெட்டதிற்கும் இவரே காரணமாக இருப்பார். இவர்களுக்கு சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெறாமல் இருப்பது சிறப்பு. சுக்கிரன் வலுத்த ரிஷப லக்னத்தினர் சுயதொழிலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் அஷ்டலட்சுமிகளையும் வழிபடவேண்டும்.

ss

புதன் தசை

ரிஷப லக்னத்திற்கு புதன் 2, 5-ஆம் அதிபதி. புதன் தனாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி என்பதால் புதன் தசை ரிஷப லக்னத்திற்குப் பெரும் வாழ்வியல் மாற்றத்தைத் தரும். எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும் புதன் தசை காலத்தில் தன் அடுத்த தலைமுறைக்கும் தேவையான வருமானத்தை சம்பாதித்து விடுவார்கள். இவர்களுக்கு புதன் தசை வரப்பிரசாதம் எனில் அது மிகைப்படுத்தலாகாது. இந்த தசை, புக்திக் காலங்களில் ஜோதிடம், கலைத்துறை, வங்கித்துறை, பங்குச்சந்தை, வணிகம் போன்ற பல துறைகளின்மூலம் நல்லவாய்ப்புகள் தேடிவரும். எந்த வயதில் தசை நடந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பால் ஒரு அவச்சொல் உண்டு. புதன் வலுத்த ரிஷப லக்னத்தினருக்கு காதல் திருமணம் நடக்கும். சிறிய வயதில் திருமணம் நடந்து பேரன், பேத்தியை பார்ப்பார்கள். குலதெய்வ அனுக்கிரகம், பூர்வீகச் சொத்து ஆதாயம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். புதன் அசுப கிரக சம்பந்தம் பெற்று தசை நடத்தினால் காதல், பங்குச் சந்தை வாழ்க்கைப் பாதையை தடம் புரட்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை புதன் ஓரையில் மீனாட்சியம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

சந்திர தசை

ரிஷப லக்னத்திற்கு சந்திரன் 3-ஆம் அதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் சுயமுயற்சியால் வெற்றிமேல் வெற்றி உண்டு. உடன் பிறந்தவர்களால் சகாயமான பலன் உண்டு. பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அதிகம் வைத்திருப்பார்கள். தொழில், உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம்பெறுவார்கள். சிலர் அடிக்கடி வீடு மாற்றுவார்கள். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். 3-ஆமிடம் மணமாலை அணிவிக்கும் கழுத்து என்றால் சந்திரன் சுப வலுப்பெற்றால் உறவுகள்மூலம் மிக இள வயதில் திருமணம் நடக்கும். சந்திரன் அசுப சம்பந்தம் பெற்றால் தாய்வழி உறவுகளால் திருமணத்தை தடை ஏற்படும். சந்திரன் அவசரத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் இளம் வயதில் சந்திர தசை நடந்தால் அவசரத் திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் (ஒப்பந்தம்) செய்யாமல் உடனே திருமணம் போன்ற சம்பவங்கள் நடக்கும். எவ்வளவு துரிதமாக திருமணம் நடந்தததோ அவ்வளவு வேகமாக திருமண பந்தம் முடிந்துவிடும். வெகுசிலருக்கு பலமுறை மணமாலை ஏறி இறங்கும்.

பரிகாரம்: ஒன்பது திங்கட்கிழமை அல்லி மலர்களால் நவகிரக சந்திர பகவானை வழிபடவேண்டும்.

சூரிய தசை

ரிஷப லக்னத்திற்கு சூரியன் நான்காம் அதிபதி. சூரியன் பலம்பெற்று தசை புக்தி நடத்தினால் தாய்வழி உறவுகளின் ஆதரவுண்டு. சுய உழைப்பில் சொத்துக்கள் உருவாகும். சொத்துகள், கால்நடைகள், விவசாயம், ரியல்எஸ்டேட், வாடகை என பல வழிகளில் வருமானம் கிடைக்கும். 16 வகை செல்வமும் நிரம்பி இருக்கும். அரசு உத்தியோகம், அரசுவகை ஆதரவு கிடைக்கும். அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலமும் ஆரோக்கியமும் நிறைந்தவர்கள். சூரியன் பலம் குறைந்து தசை நடத்தினால் ஆரோக்கியம் குறைவுபடும். இதய பாதிப்பு, மன உளைச்சல் இருக்கும். ஆன்ம பலம் குறையும். சொத்துகள் சேராது. தாயின் அன்பு, அரவணைப்பு குறையும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை கண் சிகிச்சைக்கு உதவவும்.

செவ்வாய் தசை

ரிஷப லக்னத்திற்கு செவ்வாய் 7, 12-ஆமதிபதி. செவ்வாய் பலம்பெற்று தசை நடத்தினால் நண்பர்களால், வாழ்க்கை துணையால் சகாயமான பலனுண்டு. தேகசுகம், சமுதாய அந்தஸ்து. நிறைந்த களத்திரம் அமையும். உரிய வயதில் திருமணம் நடக்கும். கூட்டுத் தொழிலால் ஆதாயம் கிடைக்கும். சமூதாய அந்தஸ்தான வாழ்க்கை கிடைக்கும். அசுப பலம்பெற்று தசை நடத்தினால் களத்திர விரயம் உண்டு. தம்பதிகள் தொழில் உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வார்கள். அல்லது வாழ்க்கைத் துணையால் அதிகப்படியான விரயம் இருக்கும். கூட்டுத்தொழில் பெரும் நட்டத்தை ஏற்படுத்தும். உரிய வயதில் திருமணம் நடக்காது. வெளிநாட்டில் வசிப்பார்கள் அல்லது தலை மறைவு வாழ்க்கை வாழ்வார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமை சுக்கிர ஓரையில் துர்க்கை அல்லது காளியை வழிபடவேண்டும்.

குரு தசை

ரிஷப லக்னத்திற்கு குரு 8, 11-ஆமதிபதி. குரு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி. குரு சுப வலுப்பெற்றால் விபரித ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும். அதிர்ஷ்டப் பணம், லாட்டரி, உயில் சொத்து, பங்குச்சந்தை ஆதாயம் கிடைக்கும். தொட்டது துலங்கும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம், ஆதாயம் உண்டாகும். லாபாதியாக குரு சுப வலுப்பெற்றால் எந்த தவறு செய்தாலும் தண்டணையிலிருந்து தப்பி விடுவார்கள். தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன் நிவர்த்தி, கடன் தள்ளுபடி போன்ற சகாயமான பலன்கள் நடக்கும். அஷ்டமாதிபதி என்பதால் அசுப வலுப்பெற்று தசை நடத்தினால் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், தீராத கடன் ஏற்படும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு கால தாமத திருமணத்தை தரலாம் அல்லது திருமணத்திற்குப் பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும். குரு 16 வருடம் கொண்ட பெரிய தசை என்பதால் குரு தசையில் இரண்டு திருமணம் நடக்கும். இளம் வயதில் குரு தசை புக்தி வந்தால் ரகசிய திருமணம் நடக்கும். மத்திம வயதில் இரண்டாம் திருமணம் நடக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை குரு ஓரையில் பிரத்தியங்கரா தேவியை வழிபடவும்.

சனி தசை

ரிஷப லக்னத்திற்கு சனி 9, 10-ஆமதிபதி. பாக்கியாதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி. சனி சுப வலுவுடன் தசை நடத்தினால் பாக்கிய ஸ்தானம் வலிமை அதிகரிக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவு களின் ஆதரவு அதிகரிக்கும். பித்ருக்களின் நல்லாசி கிடைக்கும். வம்சாவழி குலத்தொழிலை நடத்துவார்கள். பூர்வீகத்தில், பூர்வீகச் சொத்தில் வாழ்வார்கள். உயர் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். சனி அசுப பலம்பெற்று தசை நடத்தினால் தந்தை, மகன் உறவில் விரிசல் ஏற்படும். தந்தையின் அன்பை, ஆசியை பெறுவது கடினம். தந்தையும் மகனும் பிரிந்து வாழ நேரும் அல்லது தந்தைக்கு ஆரோக்கியம் குறைவுபடும். பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்காது. பல தலைமுறையாக தீர்க்கமுடியாத பித்ருதோஷம் தொடர்ந்துகொண்டே இருக்கும். பித்ருக்கள் வழிபாட்டை கடைப்பிடிக்க முடியாது. பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலை பல தலைமுறையாக தொடரும் வம்பு, வழக்கு இருக்கும். வெகு சிலருக்கு பூர்வீகம், குலம், கோத்திரம், குலதெய்வம் தெரியாது சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்வார்கள். உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்காது. மத நம்பிக்கை குறையும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் காலதாமதமாகும். சனி பாக்கியாதிபதி என்பதைவிட பாதகாதிபதி என்பதே மிகப் பொருந்தும். சனியும், சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி பெரிய பாதகத்தைச் செய்யமாட்டார் என்று பலர் கூறினால் தான் நின்ற பார்த்த பாவகத்தின் அடிப்படையில் தன் தசை புக்தியில் கடுமையான பாதகத்தை தருகிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. பச்சிளம் குழந்தைக்குக்கூட பாதகம் பாதிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சர்க்கரைப் பொங்கல் படைத்து குலதெய்வத்தை வழிபடவேண்டும். ராகு தசை நடப்பவர்கள் வெள்ளிக்கிழமை சென்னை காளிகாம்பாளை வழிபடவேண்டும். கேது தசை நடப்பவர்கள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடவும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala230623
இதையும் படியுங்கள்
Subscribe