ஜாதகர்கள், முக்கியமான விஷயங்களை நடத்துவதற்கு ஜோதிடரை அணுகுவர். ஜோதிடரும், உங்கள் நட்சத்திரத் தைக் கேட்டுக் குறித்துக் கொள்வார். திருமணம், பத்திரப்பதிவு, விதை விதைப்பு, வீட்டில் நடக்கும் சிறு சுப நிகழ்வுகள், மாடு வாங்குவது, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது என ஒரு மனிதருக்கு வாழ்வில் ஆயிரம் நிகழ்வுகள் இருக்கன்றனவே! உங்களில் சிலருக்கு, காலண்டரில் மேளம் படம் போட்டு, சுப முகூர்த்தம் என்று போட்டிருக்கும் நாளன்றே நாமும் செய்துவிடலாமே! எதற்கு ஜோசியரிடம் கேட்கவேண்டும் எனத் தோன்றும்.
ஆனால் அது அப்படியல்ல. குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மட்டுமே நற்பலன் தரக்கூடியதாக அமைந்துள்ளது. இதனை தாரா பலன் எனக் கூறுவர். திருமணப் பொருத்தத்தில் இதுதான் முதலாவதாக வரும். இந்தப் பொருத்தம் இல்லையெனில் அந்த திருமணப் பொருத்தம் மேற்படி பார்ப்பது கிடையாது. சரி; இதனை எவ்விதம் கணக்கிடுதல் வேண்டும்?
உங்கள் பிறந்த நட்சத்திரம் தொட்டு, உங்களுக்கு சுப நிகழ்ச்சி நடத்தும் நாள்வரை எண்ணுதல் வேண்டும். எண்ணிக் கண்ட தொகையை 9-ஆல் வகுக்க வேண்டும். அந்த மீதி ஈவு எண் 2, 4, 6, 8, 9 என வந்தால் அதனை சுபநாளாகக் கருதவேண்டும். இதனை அனுகூல தாரை என்பர்: 1, 3, 5, 7 ஆக வந்தால் அதனை விலக்கிவிட வேண்டும். இதனை பிரதிகூல தாரை என்பர்.
மீதி வரும் எண்களுக்கு என்ன தாரை என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. ஜென்மத் தாரை.
2. சம்பத்து தாரை.
3. விபத்து தாரை.
4. க்ஷேமத் தாரை.
5. பிரத்யக
ஜாதகர்கள், முக்கியமான விஷயங்களை நடத்துவதற்கு ஜோதிடரை அணுகுவர். ஜோதிடரும், உங்கள் நட்சத்திரத் தைக் கேட்டுக் குறித்துக் கொள்வார். திருமணம், பத்திரப்பதிவு, விதை விதைப்பு, வீட்டில் நடக்கும் சிறு சுப நிகழ்வுகள், மாடு வாங்குவது, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது என ஒரு மனிதருக்கு வாழ்வில் ஆயிரம் நிகழ்வுகள் இருக்கன்றனவே! உங்களில் சிலருக்கு, காலண்டரில் மேளம் படம் போட்டு, சுப முகூர்த்தம் என்று போட்டிருக்கும் நாளன்றே நாமும் செய்துவிடலாமே! எதற்கு ஜோசியரிடம் கேட்கவேண்டும் எனத் தோன்றும்.
ஆனால் அது அப்படியல்ல. குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மட்டுமே நற்பலன் தரக்கூடியதாக அமைந்துள்ளது. இதனை தாரா பலன் எனக் கூறுவர். திருமணப் பொருத்தத்தில் இதுதான் முதலாவதாக வரும். இந்தப் பொருத்தம் இல்லையெனில் அந்த திருமணப் பொருத்தம் மேற்படி பார்ப்பது கிடையாது. சரி; இதனை எவ்விதம் கணக்கிடுதல் வேண்டும்?
உங்கள் பிறந்த நட்சத்திரம் தொட்டு, உங்களுக்கு சுப நிகழ்ச்சி நடத்தும் நாள்வரை எண்ணுதல் வேண்டும். எண்ணிக் கண்ட தொகையை 9-ஆல் வகுக்க வேண்டும். அந்த மீதி ஈவு எண் 2, 4, 6, 8, 9 என வந்தால் அதனை சுபநாளாகக் கருதவேண்டும். இதனை அனுகூல தாரை என்பர்: 1, 3, 5, 7 ஆக வந்தால் அதனை விலக்கிவிட வேண்டும். இதனை பிரதிகூல தாரை என்பர்.
மீதி வரும் எண்களுக்கு என்ன தாரை என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. ஜென்மத் தாரை.
2. சம்பத்து தாரை.
3. விபத்து தாரை.
4. க்ஷேமத் தாரை.
5. பிரத்யக் தாரை.
6. சாதகத் தாரை.
7. வத தாரை.
8. மைத்ர தாரை.
9. பரம மைத்ர தாரை.
இந்த தாரைகளுக்கு என அதிபதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜென்மத் தாரை- சூரியன்.
சம்பத்து தாரை- புதன்.
விபத்து தாரை- ராகு.
க்ஷேமத் தாரை- குரு.
பிரத்யக் தாரை. கேது.
சாதகத் தாரை. சந்திரன்.
வத தாரை- சனி
மைத்ர தாரை- சுக்கிரன்
பரம மைத்ர தாரை- செவ்வாய்.
இதில் 1, 3, 5, 7 தாரைகளை விலக்கும்படி கூறியுள்ளனர். அதன் அதிபதிகளை கவனியுங்கள். அவர்கள் சூரியன் ராகு, கேது, சனி என வந்துள்ளனர். இதனால் அந்தத் தாரைகளை சுபத்திற்கு ஆகாதது என கூறியுள்ளனர்.
சில நூல்களில் செவ்வாய் அதிபதியாக உள்ள பரம மைத்ர தாரையை மத்திமம் எனக் கூறியுள்ளனர்.
இந்தத் தாரா பலனை நீங்கள் பஞ்சாங்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். எனினும், உங்கள் நட்சத்திரத்துக்கு சுபமாக உள்ள நட்சத்திரம் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கேது சார நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் என்ற நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், உங்களுக்கான தாரா பலன் நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி என இவை அனுகூல, சுபம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை மத்திமப் பலன் தரும் நட்சத்திரங்கள்.
சுக்கிரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திரமானால் கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், பூனர் பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி இவை நல்லவை செய்ய நல்ல நட்சத்திரம். அஸ்வினி, மகம், மூலம் சுமரான நட்சத்திரம்.
சூரிய சாரம் பெற்ற கிருத்திகை உத்திரம் உத்திராடம் இவை ஜென்ம நட்சத்திரமானால் அஸ்வினி, மகம், மூலம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம் உத்திரட்டாதி இவை தாரா பலனுள்ள சுப நடசத்திரங்கள். பரணி, பூரம், பூராடம் மத்திமப் பலனுடையவை.
சந்திர சாரம் பெற்ற ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் சுப தாரா பலன் பெற்ற நட்சத்திரம் பரணி, பூரம், பூராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி. கிருத்திகை, உத்திரம், உத்திரட்டாதி இவை மத்திமப் பலன் நட்சத்திரங்களாகும்.
செவ்வாய் சாரம் பெற்ற, மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவற்றில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை அனுகூல தாரா நட்சத்திரங்கள். ரோகிணி, அஸ்தம், திருவோணம் இவை மத்திமப் பலன் தருபவை.
ராகு சாரம் பெற்ற திருவாதிரை, சுவாதி, சதயம் இந்நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி இவை நல்லன எல்லாம் தரும் சுப தாரா நட்சத்திரங்கள். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவை மத்திமப் பலனுள்ள நட்சத்திரங்கள் ஆகும்.
குரு சார நட்சத்திரங்களான, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை உங்களின் பிறந்த நட்சத்திரமானால், உங்களின் சுபம் நல்கும் தாரா நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், பூசம், அனுஷம், உத்திராட்டாதி இவை யாகும். திருவாதிரை, சுவாதி, சதயம் இவை மத்திமப் பலன் நட்சத்திரங்கள் ஆகும்.
சனி சார நட்த்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை ஜென்ம நட்சத்திரங்களாயின் உங்களின் தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம் கேட்டை, ரேவதி இவை ஆகும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை மத்திம பலன் நட்சத்திரங்கள் ஆகும்.
புதன் சாரம் பெற்ற நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி இவை உங்கள் பிறந்த நட்சத்திரங்கள் ஆயின். உங்களின் தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர் பூசம், விசாகம், பூரட்டாதி இவை சுபத்தன்மை உடையது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை மத்திமப் பலன் நட்சத்திரங்கள் ஆகும்.
தாரைகளும் பலன்களும்
1. ஜென்மத் தாரை: பொதுவாக நல்லவை நடத்தப்படுவதில்லை. ஜென்ம நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்வார்கள். பரிகாரம் செய்வர். மற்றபடி சுப நிகழ்ச்சிகள் செய்யும் வழக்கமில்லை. வேறு வழியில்லாமல், சில நல் நிகழ்வுகளை நடத்தவேண்டுமெனில், வாழைக்காய் தானம் செய்துவிட்டு, நடத்தலாம் என பரிகாரம் கூறப்பட்டுள்ளது.
2. சம்பத்து தாரை: கல்வி, பணவரவு, வியாபாரம், நிலம் வாங்குதல், ஒப்பந்தம் என வாழ்வின் முன்னேற்றம் சம்பந்த விஷயங்களை மேற்கொள்ளலாம்.
3. விபத்து தாரை: விபத்து, களவு, விரயம் உண்டாகும். இந்நாட்களில் பழம், வெல்லம் தானம் செய்துவிட்டு, முயற்சியை, வேறு வழியில்லாவிடில் மேற்கொள்ளலாம்.
4. க்ஷேமத் தாரை: அனைத்துவித நல்ல நிகழ்வுகளையும் மேற்கொள்ளலாம்.
5. பிரத்யக் தாரை: இதன் அதிபதி கேது. இந்த தாரையில் எந்த விஷயம் மேற்கொண்டாலும் அதில் பிரிவு ஏற்படும். வில்லங்கம், தேக்கம் ஏற்படும். இத்தாரையை பயன்படுத்த வேண்டுமெனில் உப்பு தானம் செய்து விட்டு பயன்படுத்தலாம். கூடியமட்டும் தவிர்ப்பது நலம்.
6. சாதகத் தாரை: எல்லாவித நற்செயல்களும் செய்யலாம்.
7. வத தாரை: சுப காரியங்களை செய்வதைத் தவிர்க்கவேண்டும். இதன் அதிபதி சனி. நஷ்டம், வியாதி, தடங்கல் ஏற்படும். இதற்கு எள் தானம் செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
8. மைத்ர தாரை: சுபங்கள் பல்கிப் பெருகும். ஒன்று வாங்கினால் ஒன்பதாக வளர்ச்சி காணும்.
9. பரம மைத்ர தாரை: விவசாயம், அறுவை சிகிச்சை, எந்திரம், போட்டிகள் இவற்றுக்கு ஏற்றது. இதன் அதிபதி செவ்வாய் என்பது கவனிக்கத்தக்கது. இதனை மத்திமப் பலன் கொடுக்கும் தாரை எனக் கூறுகின்றனர்.
இந்த அவசர யுகத்தில், நின்று நிதானித்து என்றில்லாமல், அவசர அவதியாக சில பல முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கிறது. அப்பொழுதுகளில் இந்த தாரா பலனையும் சற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவசரத்திற்கு தாரா பலனும், ஹோரா பலனும் கைகொடுக்கும்.
செல்: 94449 61845