தாரா பலன் மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/tara-balan-melmaruvathur-s-kalaivani

தாரை என்றால் அனுதினமும் சந்திரன் பயணிக்கும் நட்சத்திரம் என்று பொருள். நம் வாழ்வியல் பயணத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களும், வெற்றியினை நோக்கி செல்லுமா? அல்லது தோல்வியின் வசம் பயணிக்குமா என்பதனை அறிவதே தாரா பலன் எனப்படும்.

ஒரு ஜாதகரின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளான பொருளாதாரம், திருமணம், தொழில், கல்வி, புதுமுயற்சிகள் போன்றவற்றினை துவங்கும் நாளில், அந்த நாளின் நட்சத்திரமானது ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு சாதகமா? அல்லது பாதகமா என்பதை தாரா பலன் கொண்டு அறிவதோடு மட்டுமல்லாமல், சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

தாரைகள் மொத்தம் ஒன்பதாக வகுக்கப்பட்டதோடு, அவைகளுக் கென்று ஒவ்வொரு கிரகத்தையும் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. அவை:

1. ஜென்ம தாரை: சூரியன்.

2. சம்பத்து தாரை: புதன்.

3. விபத்து தாரை: ராகு.

4. சேம தாரை: குரு.

5. பிரத்தியேகத் தாரை: கேது.

6. சாதக தாரை: சந்திரன்.

7. வதைத் தாரை: சனி.

8. மைத்ர தாரை: சுக்கிரன்.

9. பரம மைத்திர தாரை: செவ்வாய் என ஜோதிடவியலில் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த தாரா பலன் ஏதன் அடிப்படையில் கணிப்பது என்றால்? ஒருவர் பிறந்த நட்சத்திரத் தில் இருந்து ஒன்பது கூட்ட நட்சத்திரங்களான அனுஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்களை வைத்துக்கணக்கிடப்படும். ஒரு மிகமிக எளிய கணித முறையாகும்.

அஸ்வினி ஜென்ம நட்சத்திரம் என்றால் அதே கேதுவின் நட்சத்திரங்களான மகமும், மூலமும், அணு ஜென்ம, திரி ஜென்ம, நட்சத்திரங்களாக வரும்.

பரணி ஜென்ம நட்சத்திரம் என்றால், பூரமும், பூராடமும், அனுஜென்ம, திரி ஜென்ம, நட்சத்திரங்களாக வரும்.

நமது அன்றா

தாரை என்றால் அனுதினமும் சந்திரன் பயணிக்கும் நட்சத்திரம் என்று பொருள். நம் வாழ்வியல் பயணத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களும், வெற்றியினை நோக்கி செல்லுமா? அல்லது தோல்வியின் வசம் பயணிக்குமா என்பதனை அறிவதே தாரா பலன் எனப்படும்.

ஒரு ஜாதகரின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளான பொருளாதாரம், திருமணம், தொழில், கல்வி, புதுமுயற்சிகள் போன்றவற்றினை துவங்கும் நாளில், அந்த நாளின் நட்சத்திரமானது ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு சாதகமா? அல்லது பாதகமா என்பதை தாரா பலன் கொண்டு அறிவதோடு மட்டுமல்லாமல், சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

தாரைகள் மொத்தம் ஒன்பதாக வகுக்கப்பட்டதோடு, அவைகளுக் கென்று ஒவ்வொரு கிரகத்தையும் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. அவை:

1. ஜென்ம தாரை: சூரியன்.

2. சம்பத்து தாரை: புதன்.

3. விபத்து தாரை: ராகு.

4. சேம தாரை: குரு.

5. பிரத்தியேகத் தாரை: கேது.

6. சாதக தாரை: சந்திரன்.

7. வதைத் தாரை: சனி.

8. மைத்ர தாரை: சுக்கிரன்.

9. பரம மைத்திர தாரை: செவ்வாய் என ஜோதிடவியலில் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த தாரா பலன் ஏதன் அடிப்படையில் கணிப்பது என்றால்? ஒருவர் பிறந்த நட்சத்திரத் தில் இருந்து ஒன்பது கூட்ட நட்சத்திரங்களான அனுஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்களை வைத்துக்கணக்கிடப்படும். ஒரு மிகமிக எளிய கணித முறையாகும்.

அஸ்வினி ஜென்ம நட்சத்திரம் என்றால் அதே கேதுவின் நட்சத்திரங்களான மகமும், மூலமும், அணு ஜென்ம, திரி ஜென்ம, நட்சத்திரங்களாக வரும்.

பரணி ஜென்ம நட்சத்திரம் என்றால், பூரமும், பூராடமும், அனுஜென்ம, திரி ஜென்ம, நட்சத்திரங்களாக வரும்.

நமது அன்றாட நிகழ்வில் நாள்காட்டியின் உதவியினைகொண்டு அமைக்கப்படும், முகூர்த் தங்கள் அனைவருக்கும் சாதகமாக அமையாது.

ஆனால் பொதுவாக இதன் அடிப்படை யிலேயே முகூர்த்தங்கள் குறிக்கப்படுகின்றன.

tt

இதனால் சில இன்னல்களையும் சந்திக்கக் கூடிய சூழல் உருவாகின்றது. கொடுக்கப்பட்ட முகூர்த்தத்தில் வரும் நட்சத்திரம் தாரா பலன் அற்றதாக இருந்தால் சுபநிகழ்ச்சியை எண்ணி குறிக்கப்படும் முகூர்த்தம் சுபத்தை நோக்கி நகராது.

தாரா பலன் பார்ப்பதற்கான அட்டவணை முறை மிக எளிது. பிறந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிவரும் ஒன்பது நட்சத்திரங்களின் துணைக் கொண்டே இந்த தாராபலனை அறியமுடியும். இதில் ஒரு சந்தேகம் வரலாம். நட்சத்திரம் மொத்தம் 27 அல்லவா, இதில் எப்படி ஒன்பது நட்சத்திரத்தை மட்டும் எடுக்கமுடியும் என்கின்ற வினா எழுவதற்கு வாய்ப்பு உண்டு. அஸ்வினி என்ற நட்சத்திரத்தில் ஜெனித்திருந்தால் மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களும் ஜென்ம நட்சத்திரமாகவே வரும். இதேபோன்று மற்ற நட்சத்திரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஜென்ம தாரை என்பது ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றாரோ அந்த நட்சத் திரத்தினை ஜென்ம தாரை என்று அழைக்கப் படும். இந்த தாரை வரும் நாட்களில் மணமானது ஒருநிலைப்படாமல் அலைபாயும் சூழலில் இருக்கும். இதன் ஆதிக்கம் நிறைந்த கிரகம் சூரியன் ஆகும். இதனால் ஜென்ம தாரை வரும் நாட்களில் திருமணம், தொழில் துவங்குவது போன்ற புதிய முயற்சிகளோ, நீண்டதூரப் பயணமோ, செய்யாமல் இருப்பது சிறப்பு.

மேலும் ஆண்களுக்கு ஜென்ம தாரை வரும் நாட்களில் திருமணமும், சாந்தி முகூர்த்தமோ, அமைக்கக்கூடாது. ஆனால் பெண்களுக்கு ஜென்ம தாரை வரும்நாளில் சாந்தி முகூர்த்தம் குறிக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் தலைமை வகிக்கும் சூழல் உருவானால் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். நகை வாங்குவது, வித்யாரம்பம் செய்துகொள்வது சிறப்பான பலனை அளிக்கும். பொதுவாகவே இது ஒரு மத்திம பலன் தரும் தாரையாகும். தவிர்க்கமுடியாத சூழலில் இந்த தாரையில் ஏதேனும் ஒரு நல்லவை செய்யவேண்டுமெனில் வாழைக்காய் தானம் செய்துவிட்டு செயலினை செய்யலாம்.

சம்பத்து தாரை என்பது பெயருக்கு ஏற்றபோல் சகல சம்பத்தையும் அளிக்கும் தாரையாக அமையும். இதன் ஆதிக்கமாக புதன் கிரகம் வருகின்றது. வழக்கத்தில் பொருளாதார ரீதியான அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த சம்பத்து தாரை மேன்மை பொருந்தியதாக அமையும். பொதுவாகவே புதனின் காரண மான பத்திரப்பதிவு, கையெழுத்து போடுதல் போன்றவைகளும், வங்கி கணக்கு தொடங்கு வது, வங்கியின்மூலம் கடன் வாங்குவது, உயில் எழுதுவது, கடன் அடைப்பது, பேச்சு வார்த்தைக்கு செல்வது, அரசாங்கம் சம்பந்தமான காண்ட்ராக்ட், கல்வி, உயர்கல்வி, மற்றவர்களிடம் உதவி கேட்பது போன்றவை இந்த தாரையில் சிறப்பாக அமையும்.

விபத்து தாரை என்பது மூன்றாவதாக வரும் தாரையாகும், இதில் நமக்கு ஒரு சந்தேகம் வரும், விபத்து தாரை என்றால் நமக்கு விபத்து நிகழுமோ? என்று நிச்சய மாக இல்லை. நாம் எதிர்பார்க்கும் உதவியோ, வாய்ப்புகளோ, நம்மை புறக்கணிக்கும். மேலும் சொத்து, கல்யாணம், முதலீடு சம்பந்தமான விஷயங்களை இந்த தாரையில் செய்யும் பொழுது அதிகபட்சமாக தோல்வியே நிகழும் என்பதனை நிதர்சனத்தில் காணமுடிகின்றது. இந்த தாரைக்கு அதிபதியாக பாவ கிரகமான ராகு வருவதனால் தேவையில்லாமல் சில சம்பவங்களை நிகழ்த்தும். என்பதனால் அன்றாட நிகழ்வை மட்டும் செய்து புதிய முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது சிறப்பினை தரும். சூழ்நிலை காரணமாக இந்தநாளில் ஒரு காரியம் செய்தே ஆகவேண்டுமெனில், பழங்கள் தானம் அளித்துவிட்டு காரியத்தை தொடங்கலாம்.

சேம தாரை நான்காவதாக வரும் இதற்கு குரு ஆளுமை கிரகமாக வருகின்றார். மாபெரும் சுபகிரகம் என்பதனாலும், குரு நிதி, குழந்தை, சம்பந்தமான காரகம் பெற்றவர் என்பதனாலும், இதை சார்ந்த நிகழ்வுகள் இந்த தாரையில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மேலும் பொருளாதார, குழந்தையின்மைக்கான சிகிச்சை, தொழில், உயர்கல்வி, நகைகள் வாங்கு வது, போன்றவை செய்ய உகந்த தாரையாகும்.

பிரத்தியேகத் தாரை என்பது ஐந்தாவது தாரையாக வரும். இதற்கு கேதுபகவான் பொறுப்பேற்கின்றார். கேது தடை கிரகம் என்பதனால், இந்த தாரையில் மேற்கொள்ளும் அனைத்தும் தடையை உருவாக்கி தோல்வி யினை தழுவும் சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்கும். குறிப்பாக இந்த பிரத்தியேகத் தாரை வரும்நாளில் திருமணம் செய்யக்கூடாது. இது பெரும் பாதிப்பினை தருகின்றது. மேலும் எந்தவித புதுமுயற்சியினையும் செய்வதைத் தவிர்க்கவேண்டும். ஆனால் ஆன்மிகம், யோகம், தியானம், தீட்சை போன்ற அக வாழ்விற் கான பயணங்கள் வெற்றியினை தரும். தவிர்க்க முடியாத சூழலில் இந்த தாரையில் ஒரு நிகழ்வினை செய்ய நேர்ந்தால் உப்பு தானம் செய்துவிட்டு செய்யவும்.

சாதக தாரை என்பது ஆறாவது தாரை யாக வருகின்றது. இதற்கு சந்திரன் பொறுப் பேற்கின்றார். பெயருக்கு ஏற்றால்போல் எல்லாம் சாதகமாகவே அமையும். குறிப்பாக சந்திரனின் காரகங்களான உணவு, குளிர்பானம், கிணறு வெட்டுவது, முத்து எடுப்பது, விவசாயம் சம்பந்தமான தொழில், தியானம், தீட்சை வாங்குவது போன்றவை வெற்றிபெறும். எல்லாவித புதுமுயற்சிகளும் இந்த தாரையில் செய்துகொள்ளலாம்.

வதைத் தாரை என்பது ஏழாவது தாரை யாகும். இது சனியின் ஆதிக்கம் பெற்ற தாரை யாகும். இது ஒரு சுபதாரை கிடையாது. எந்த முயற்சியும் தடையினை ஏற்படுத்தும் ஒரு சிறிய முயற்சிகூட பலன் அளிக்காமல் வதைத்து செல்லும். தவிர்க்கமுடியாத சூழலில் இந்த தாரையை உபயோகிக்க நேர்ந்தால் எள்ளு தானம் செய்துவிட்டு செயலினை தொடங்கலாம்.

மைத்ர தாரை எட்டாவது தாரையாக வரும்.

ஜோதிடத்தில் பெரும்பாலும் எட்டு என்பது சிறப்பு கிடையாது. ஆனால் தாராபலனில் எட்டாவது தாரை மிக அற்புதமான சுபத் தன்மை வாய்ந்த தாரையாக அமைகின்றது. இந்த நாளில் நகை, துணிமணிகள் வாங்குவது, தொழில் அமைத்துக்கொள்வது, திருமணம், சாந்தி முகூர்த்தம்போன்ற சுக்கிரனின் காரக மான அனைத்தையும் செயல்படுத்திக் கொள்வது சிறப்பு.

பரமமைத்திர தாரை ஒன்பதாவது தாரை யாக வரும். இதனை செவ்வாய் ஆள்கின்றது, இந்த தாரையும் சுபமான தாரையாகும் இது செவ்வாயின் ஆதிக்கம்கொண்டு விளங்குவதனால், பூமி சம்பந்தமான நிகழ்வுகள், விவசாயம், விளையாட்டு பொருட்கள் வாங்குவது, விளையாட்டில் சேர்ந்துகொள்வது, சகோதரனுடன் ஆன பாகப்பிரிவினை செய்து கொள்வது, விவசாயத்திற்கான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவது, அறுவை சிகிச்சை செய்துகொள்வது போன்றவை நன்மையினை அளிக்கும்.

ஜாதகரீதியான முரண்பட்ட தசாபுக்தி நடப்பில் இருந்தாலும் இந்த தாராபலனை கொண்டு செய்யப்படும் முயற்சிகள் பெரும் பாலும் நன்மையை அளிக்கும்.

செல்: 80563 79988

bala220923
இதையும் படியுங்கள்
Subscribe