சுமார் 50 வயதுடைய ஒருவர் ஜீவநாடியில் பலன் காணவந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாக பலன் கேட்க வந்துள்ளீர்கள்?' என்றேன்.
"அவர் தான் செய்யும் தொழில் பற்றியும், தற்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும், இந் நிலைக்கு காரணம் அறிந்துகொள்ள, ஜோதிடர்களிடம், பலன் கேட்டபோது, இப்போது நடக்கும் தசாபுக்தி சரியில்லை என்றார்கள். அருள்வாக்கு சொல்பவர் களிடம் பலன் கேட்டபோது, தெய்வ குற்றம் என்றார்கள். மாந்தீரிகளிடம் தொழில் சரிவிற்கு காரணம் கேட்டபோது, வியாபார எதிர்கள் உனக்கு, ஏவல், பில்லி, சூனியம் வைத்து உன் தொழில் சரிந்துவிடச் செய்து விட்டார்கள் என்று ஒவ்வொருவரும், ஒவ்வொருவிதமாக காரணம் கூறினார்கள்.
தொழிலில் உண்டான இந்த முடக்க நிலை மாறி, வியாபாரத்தில் மறுபடியும் உயர்வுபெற, பூஜை, ஹோமம், யாகம், கோவில் வழிபாடு, கிரக சாந்தி, தானம், தர்மம் என பல பரிகாரக்ளைச் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கூறிய அனைத் தையும், அவர்கள் கூறிய முறைப்படியே செய்தேன். ஆனால் எந்த பலனும் கிடைக்க வில்லை. தற்போது தொழில் முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் அறிந்துகொள்ளவும், மறுபடியும் தொழில் நன்கு லாபகரமாகவும் அமையும் வழி கேட்டு, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
அவர் கூறியதை பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் எழுத்து வடிவில் தோன்றி அகத்தி யர் பதில் கூறத் தொடங்கினார்.
ஒருமலையின் மேல் உள்ள கோவிலில், கடை அமைத்து, பூஜைச் சாமான் பொருட் களை வியாபாரம் செய்துவருவதாக கூறினான். தொழில் சரிவு உண்டானதற்கு கிரகங் களோ, தெய்வமோ, ஏவல், பில்லி, சூனியமோ காரண மில்லை. வியாபாரத்தில் இவன் செய்த தவறுதான் காரணம்.
இந்த பூவுலகில் பிறக்கும் அனைத்து மாந்தர்களும், உணவு, உடை, வசிக்க இல்லம் என அனைத்தும் அடைந்து, தங்கள் வாழ்வை செல்வச் சிறப்புடன் அமைத்துக் கொள்ள அவரவர்க்கென்று ஒரு தொழில் யோகத்துடன் பிறக்கின்றார்கள். யாருக்கும் எதுவும் மறுக்கப்படவில்லை. மனிதர்கள் செய்யும் தொழில், வியாபாரம் என அனைத் தும், மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்சபூதங்களை அடிப்படையாகக்கொண்ட பொருட்களை கொண்டே அமைந்துள்ளது என்பதே உண்மை.
இப்பிறவியில் இவன் வாழ்வில் உயர்வு பெற, இவனுக்கு நிர்ணயிக்கப்ட்ட தொழில் காற்று, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் தொழில் கோவில் பூஜைக்குரிய பக்தி, சூடம், சாம்பிராணி, தீப எண்ணை இவற்றை உற்பத்தி செய்தோ, வியாபாரம் செய்தோ பிழைத்து வாழவேண்டும் என்பது இவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட வியாபார விதியாகும். இந்தப் பொருட்களை மட்டும் வியாபாரம் செய்துதான் வாழ்வில் உயர்வை அடைந்தான். ஆனால் கொஞ்சம் ஆசைப் பட்டு, தேங்காய், பழம் இவைகளும் பூஜைப் பொருட்கள்தானே என்று நினைத்து, அவற்றை விவசாயிகளிடம் நேரடியாக சென்றுவாங்கி, மற்ற வியாபாரிகளுக்கு கடனாகக் கொடுத்தான்.
இவன் தேங்காய், வாழைப்பழம் இவற்றை எப்போது வியாபாரம் செய்யத் தொடங்கினோ, அன்றுமுதலே இவனுக்கு தொழிலில் நஷ்டமும், சரிவும் அடையத் தொடங்கிவிட்டது. இவனி டம் பொருட்களை கடனாக வாங்கிய வியாபாரிகள் உரிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார்கள். காற்று, நெருப்பு, சம்பந்தமான பொருட்களால் அடைந்த உயர்வு, மண், சம்பந்தமான பொருட்கள் வியாபாரத்தால் சரிவைத் தந்தது.
ஐயா, "தேங்காய், பழம் இவைகளும் பூஜைக்குரிய பொருட்கள்தானே, இவற்றை வியாபாரம் செய்ததால், நஷ்டம், சரிவு வந்தது என்கின்றாரே, இதன் விளக்கத்தை அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்'' என்றார்.
ஐம்பூதங்களான மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவைகள் ஒன்றுடன், ஒன்று சேராது. ஆனால் ஒன்றைவிட்டு ஒன்று விலகாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். காற்று, நெருப்பு இவை இரண்டும் நட்பு ஆகும். காற்று அணையும் நிலையிலுள்ள நெருப்பை, மறுபடியும் தூண்டி எரிய வைக்கும் தன்மைகொண்டது.
காற்று, நெருப்பு இவற்றுக்கு மண் பகையாகும். எரியும் நெருப்பில் மண்ணைக் கொட்டினால் நெருப்பு அணைந்துவிடும், காற்றின் வேகத்தை தடுக்க மண் சுவர் எழுப்பினால் காற்று தடுக்கப்படும். இதைத்தான் வியாபாரத்தில் ஒவ்வொருவரும் அறிந்து, புரிந்துகொள்ளவேண்டிய சூட்சும ரகசியம். இவன் வியாபாரம் செய்த பத்தி, சூடம், சாம்பிராணி இவை காற்றால் தூண்டப்பட்டு, நெருப்பில் எரிந்து ஆவியாகவும், சாம்பலாகவும் ஆகிவிடும்; திரும்ப கிடைக்காது. ஆனால் மண் சம்பந்தப்பட்ட தேங்காய், பழம் இவை உணவுப் பொருட்கள். பூஜைசெய்து முடித்தவுடன் நமக்கு திரும்ப கிடைக்கும். அவற்றை சாப்பிடுவோம். மண் சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் இவனுக்கு நன்மை தராது. இப்பிறவியில் இவனுக்கு பகையான நன்மை, உயர்வு தராதப் பொருட்களை வியாபாரம் செய்து, நட்டமடைந்தான்.
தொழிலில் தனக்கு நன்மை தரும் வியாபாரத்தை விட்டவனும் கெட்டான்; நன்மை தராத நட்டம் தரும் வியாபாரத்தை தொட்டவனும் கெட்டான் என்பதை புரிந்துகொள்ளச் சொல். இனி, தேங்காய், பழ வியாபாரத்தை செய்யவேண்டாம். பத்தி, சூடம், சாம்பிராணி, தீப எண்ணெய்ப் பொருட்களை இன்னும் எந்தெந்த வகைகளில், பெருக்கி, வியாபாரம் செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுத்தி தொழிலைச் செய்யச் சொல். இவன் இழந்த அனைத்தையும் அடைவான். பொருளாதார உயர்வு உண்டாகும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
ஜீவநாடி படித்து பலன்கேட்க வந்தவர். நான் வியாபாரத்தில் செய்த தவறை புரிந்துகொண்டேன். நானே எனக்கு தொழிலில் எதிரியாகி, இந்த நிலையை அடைந் தேன். அகத்தியர் எனக்கு சரியான வழியைக் காட்டி விட்டார். இனி அவர் கூறியபடியே தொழில், வியாபாரம் செய்வேன் என்று கூறி விடை பெற்றுச் சென்றார். நானும் தொழில் சம்பந்தமான ஒரு சூட்சும ரகசியத்தை தெரிந்து, புரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267