ந்த பூமியில் பிறக்கும் அனைவரும் மதம், இனம், மொழி என தனித்தனியே பிறந்து வாழ்ந்தாலும், பல செயல்களை அனைவரும் ஒன்று போலவே செய்துதான் வாழ்கிறார்கள். அவரவர் செய்யும் காரியங்கள்மூலமே நன்மை- தீமைகளை அடைகிறார்கள் என்பதே உண்மை.

மனிதர்கள் அனைத்திலும் வெற்றி, பணம், பொருள். கிடைக்கவேண்டும்; தடைகள் விலகவேண்டுமென்று பக்தி, மாந்ரீகம், தாந்ரீகப் பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

கோவில் கோவிலாகச் சென்று கடவுளை வணங்குவது பக்திப் பரிகாரங்களாகும். பூஜை, யாகம், சாந்தி, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் ஏவல், பில்லி, சூனியம் என மந்திரம் கூறிச் செய்யும் செயல்கள் மாந்ரீகப் பரிகாரங்களாகும். ஆனால் தாந்ரீக முறையில் செயல்பட்டு நன்மைகளையடைய யாரும் முறையாக முயற்சிப்பதில்லை என்பதே உண்மை.

தாந்ரீகத்தில், ஒரு காரியம் செய்யத் தொடங்கும் நாள்தான் முக்கியம். எந்த நாளில் எந்த காரியத்தைத் தொடங்கிச் செய்ய வேண்டும்- எதைச் செய்யக்கூடாது என்பதை சப்தரிஷி நாடியில் ரிஷிகள் கூறியுள்ளார்கள். தாந்ரீக முறையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள். நட்சத்திரம், திதி, சஷ்டாஷ்டகம், கரிநாள், மாத சூனிய நாள் என எதையும் பார்க்கவேண்டியதில்லை.

Advertisment

தாந்ரீகப் பரிகாரங்கள் செய்பவர் எதிலும் அவசரப்பட கூடாது. மனதை அடக்கி, புத்தியுடன் அந்தநாளில் காரியம் தொடங்கி தொடர்ந்து செய்யவேண்டும். இந்தப் பரிகாரமுறை ஒரு இனம், மதத்தினருக்கு மட்டும் உரியதல்ல. மனித இனத்தினர் அனைவருக்கும் பொதுப்பலன் தரக்கூடியது.

dd

ஞாயிற்றுக்கிழமையன்று வேலையில் சேருதல், புதிதாகத் தொழில், வியாபாரக் கடைகள் ஆரமபித்தல், மேலும் தொழில் சம்பந்தமான அனைத்து செயல்களையும் தொடங்கினால், அது லாபகரமாக நடந்து, நல்ல பலன்களையும் தரும். தொழில் நிறுவனங் களில் சரியாக வியாபாரம் இல்லையென்றால், சிறிது நாட்கள் அதை மூடிவிட்டு, பின்பு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று திறப்புவிழா செய்யலாம். புதிதாகக் கடை வைக்க விரும்புபவர்கள் தங்கள் கடைக்கு எதிர்ப்புறத் திலோ அல்லது வலது, இடது என இரண்டு பக்கங்களிலோ முடித்திருத்தும் கடை இல்லாத இடத்தில் வைக்கவேண்டும்.

Advertisment

திங்கட்கிழமையன்று விவசாயம் சம்பந்த மான முதல் ஏர் கட்டுதல், விதை விதைத்தல், பயிர் நடவுசெய்தல் போன்ற அனைத்து விவசாயப் பணிகளையும் செய்யவேண்டும். விவசாயிகளின் உழைப்பிற்கேற்ற நல்ல வருமானம் கிடைக்கும். ஏரி, அணைகளிலிருந்து அந்த வருட விவசாயத்திற்கு முதன் முதலாக திங்கட்கிழமையன்று நீர் திறந்து விட்டால், அந்த வருடம் பருவத்தில் நல்ல மழைபெய்து, அணை, ஏரிகளில் நீர் குறையாது. அணைகள் வறண்டு போகாது.

இயற்கை ஆறு வருடத்தில் நான்கு வருடம் நல்ல மழை வளம் தரும். இரண்டு வருடம் சரியான மழை பெய்யாமல், நீர்த்தட்டுப்பாடு, வறட்சி உண்டாகும். புண்ணிய நதி, தீர்த்தங் களில் திங்கட்கிழமையன்று நீராடினால் பாவம் குறையும்.

செவ்வாய்க்கிழமையன்று எதிரிகளிடம் பஞ்சாயத்துப் பேசுதல், வழக்கு போடுதல், வாங்கிய கடனைத் திரும்பக் கொடுத்தல், போர் தொடுத்தல் போன்ற காரியங்களை ஆரம்பித்துச் செய்யவேண்டும்.

புதன்கிழமையில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம். ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கும்போது புதன்கிழமையில் சேர்க்கலாம். இசை, நடனம், நாடகம், சினிமா போன்ற கலைத் தொழில்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கலாம். வேதங் களைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம். வருட விடுமுறை முடிந்து, அடுத்த ஆண்டு கல்வி நிலையங்களை புதன்கிழமை திறந்தால், அந்த வருடம் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். நன்கு படித்து நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். மக்கள் தொடர்பு, தரகு, மண்டி சம்பந்தமான செயல்கள், வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை போன்றவற்றை புதன்கிழமையன்று வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்யலாம். பத்திரிகை சம்பந்தமான தொழில் தொடங்க புதன்கிழமை அதிர்ஷ்ட நாள்.

புதன்கிழமையன்று காதல் நிகழ்வு தொடங்குதல், திருமணம் சம்பந்தமாக பெண்- மாப்பிள்ளை பார்த்தல், பூவைத்தல், நிச்சயம் செய்தல், திருமணம் செய்தல், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றைச் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், திருமண காரியம் மாறிப்போகலாம்; தடையாகும். விரைவில் கணவன்- மனைவியிடையே பாசம் குறையும். கருத்து வேறுபாடு, தாம்பத்தியக் குறைவு உண்டாகலாம். எனவே இது போன்ற காரியங்களை புதன்கிழமை தொடங்கக்கூடாது.

வியாழக்கிழமையன்று திருமண நிச்சயம், பூ முடித்தல், பெண்- மாப்பிள்ளைப் பார்த்தல், ஜாதகப் பொருத்தம் பார்த்தல், சாந்தி முகூர்த்தம், காதல் நிகழ்வுகளைத் தொடங்குதல் போன்ற ஆண்- பெண் மனம் சம்பந்தப்பட்ட செயல்களைத் தொடங்கிச் செய்தால் வாழ்க்கையில் பிரிவு, கருத்து வேறுபாடு, தாம்பத்தியக் குறை போன்றவை உண்டாகாது. அன்பான- அமைதியான வாழ்க்கை ஆயுள் இறுதிவரை தொடரும். சுபகாரியப் பேச்சுவார்த்தை வெற்றியாக முடியும்.

வெள்ளிக்கிழமையன்று, பிறந்த குழந்தைக்கு முதல் மொடடையடித்தல், கோவில்களில் முடி காணிக்கை செலுத்தல், முகச்சவரம், முடி வெட்டிக்கொள்ளுதல், முடியங்காரம் செய்தல், எண்ணெய்க் குளியில் போன்ற செயல்களைச் செய்யலாம்.

சனிக்கிழமையன்று கோவில் வேண்டுதல், பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், முதன்முதல் பூஜை, யாகம், ஹோமம், பரிகார பூஜைகள் செய்தல், தவம், மந்திரோபதேசம் ஆரம்பித்தல் போன்றவற்றைத் தொடங்கிச் செய்தால் நற்பலன் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும். கடவுள் சம்பந்தமான காரியங்களை சனிக்கிழமை தொடங்கிச் செய்யலாம்.

விருந்துண்ணும் நாட்கள்

நமது உறவுகள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உணவுண்ணும் நாட்களைப் பொருத்தே அதன்பிறகு உறவு நீடிப்பது, பகையாவது, உறவற்றுப் போதல் போன்ற பலன்கள் உண்டாகும்.

திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் ஒருவர் வீட்டிற்குச் சென்றோ அல்லது விசேஷங்களிலோ விருந்து சாப்பிட்டால் அவர்கள் வாழ்நாள் இறுதிவரை உயிரும். உடலும்போல் நட்புடன், அந்த இரண்டு குடும்பத்தினரும் உறவகலாமல் இருப்பார்கள்.

வியாழக்கிழமையன்று ஒருவர் வீட்டில் முதன்முதலில் உணவு சாப்பிட்டால் அந்த உறவினர், நண்பர்களுடன் விரோதம், மனவெறுப்பு உண்டாகி பகைவர்களாகி விடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமையன்று முதன்முதலில் உணவுண்டால் ஏதாவதொரு காரணத்தால் உறவு, நட்பு முறிந்து தீராத பகை உண்டாகி விடும்.

செவ்வாய்க்கிழமையன்று உறவுகள், நண்பர்கள் வீட்டில் முதன்முறையாக உணவு சாப்பிட்டால், அதன்பிறகு ஏதாவதொரு காரணத்தால். அவர்களால் தீர்க்கமுடியாத கொடுமையையும், துன்பத்தையும் அனுபவிக்க நேரும், குரூரமான பகை உண்டாகி உறவுகள் முறிந்துபோகும்.

இதுபோன்று உணவுண்பதால் உண்டாகும் பகையை, ரிஷிகள் கூறிய தாந்ரீகப் பரிகாரம் மூலம் எவ்வாறு உறவாக்கிக் கொள்ளலாம் என்பதைக் காண்போம்.

உங்களைப் பகைவர்களாக நினைத்து செயல்படும் உறவுகள், சுற்றத்தார் வீட்டிற்கோ வீட்டு விசேஷசங்களுக்கோ, நீண்டநாட்கள் விலகியிருந்த நீங்களே தேடிச்சென்று திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் முதன்முதலில் உணவு சாப்பிட்டால், அதன் பிறகு இரண்டு குடும்பத்திற்கும், இதுநாள்வரை இருந்த பகையுணர்வு, விரோதம் படிபடியாகக் குறையும். மீண்டும் நல்லுறவும் நட்பும் உண்டாகும். இந்த நாட்களில் ஒருவர் வீட்டில் சாப்பிடும் சோறு உறவாக்கும். கோவில்களில் பிரசாதம், அன்னதானம் வாங்கிச் சாப்பிட்டால் அந்த கோவிலிலிருக்கும் தெய்வமும் அருள்தந்து அனுகூலம் புரியும்.

ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் நமது ரத்த சம்பந்தமான சகோதர- சகோதரி, பங்காளிகள், மனைவிவழி உறவுகள், தாய்வழி- தந்தைவழி உறவுகள், நண்பர்கள் வீடுகளில் சென்று உணவு சாப்பிட்டால். அந்த உறவுகள் பகையாகிவிடும். இந்த நாட்களில் அவர்கள் வீடுகளில் சாப்பிடுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிடவேண்டும். இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று பிரசாதம், அன்னதானம் சாப்பிட்டாலும், பொங்கல் வைத்துப் படைத்து அதைச் சாப்பிடடாலும், அந்த தெய்வமே நமக்குப் பகையாகும். வேண்டுதல் பலிக்காது. குலதெய்வமானாலும் பகை தெய்வமாகும்.

ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு நாட்களில் ஒருவர் பிறந்த நாள், நட்சத்திரம், திதி நாளில் புதிதாகத் தொழில் தொடங்கலாம். விவசாயம் சம்பந்தமான பூமியை உழுவது, விதைவிதைத்தல், பயிர் நடுதல், உரம் போடுதல் போன்றவற்றைச் செய்யலாம். புதிதாக ஆடை, ஆபரணங்களை அணியலாம். வாகனம் வாங்கலாம். பிறந்த நாள்- வாரத்தில் ஒருநாள், பிறந்த நட்சத்திரம், பிறந்த தேதி ஆகிய மூன்று நாட்களை கவனித்து தொடர்ந்து செய்துவந்தால் வாழ்க்கையில் பொன், பொருள், சொத்து, பதவி குறையாமல் அதிகமாகச் சேரும்.

ஒருவர் பிறந்தநாள், நட்சத்திரம், திதி வரும் நாட்களில், எண்ணெய்த் தேய்த்துக் குளித்தல், திருமணம் செய்துகொள்வது, வம்சத்தில் இறந்து போன முன்னோர்களுக்கு திதி, சிரார்த்தம் செய்யக்கூடாது. வியாதி உள்ளவர்கள் மருந்து சாப்பிடத் தொடங்கக் கூடாது. கணவன்- மனைவி தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது.

சப்த ரிஷிகள் கூறியுள்ள முறைகளைக் கடைப் பிடித்து தாந்ரீகப் பரிகாரங்கள்மூலம் நன்மை களை அடைவோம்.

செல்: 93847 66742