பிரசன்னம் என் றால் உதித்தல் என்று பொருள் படும். ஒருவர் தனது பிரச்சினையினை தீர்த்துக் கொள்ள, ஜோதிடரை அணுகும்பொழுது அவர் வரும் நேரத்தில் அமையப் பெற்ற கிரக நிலையினைகொண்டு பலன் காண்பது பிரசன்ன ஆரூட முறையாகும்.
முற்றிலும் சகுனங்களும், நிமித்தங்களும், உணர்வு களுக்கும், முக்கியத்துவம் அளித்து அதன்மூலம் அற்புத பலனை அறியும் முறையே பிரசன்ன ஆரூட முறைகள் ஆகும்.
இவற்றுள் பலவகை பிரசன்னாருட முறை இருந் தாலும், எட்டு வகையான முறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாகவும், நடைமுறையில் சிறப்பாக வும், இயங்கிவருகின்றது. அவைகள் என் பிரசன்ன ஆரூடம், ஜாம கால பிர சன்ன ஆரூடம், கடிகார ஆரூடம்,ஹோரா பிரசன் னம், தாம்புல பிரசன்ன ஆரூடம், சோழி பிரசன்ன ஆரூடம், அஷ்டமங்கள பிரசன்னம், ஜாமக்கோள் ஆரூடம், ஆகியவை பிரசித்திபெற்ற வகைகளாக கருதப்படுகின்றது.
பிரசன்னம் பார்ப்பதன்மூலம் ஜாதகத்தினால் அறியப்பட முடி யாமல் போன மறை பொருளையும், பிரச்சினையின் தீவிரத்தினையும், அதன் ஆணிவேரையும், அறிய முடியும். ஜாதகம் இல்லாத நபர்களுக்கு இந்தப் பிரசன்ன ஆரூடமுறை பெரிதும் கை கொடுக்கின்றது. இவற்றுள் சுலபமாகவும், நேர்த்தியாகவும், ஆழ்ந்த பிரச்சினையினை அணுகும் சூழ்நிலையினை சிறப்பு மிகுந்த தாம்பூல பிரசன்னம் எடுத்துரைக்கும்.
இந்த தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, நாகவல்- என்று சிறப்பாக அழைக்கப் படுகின்றது. இதில் 11 வகையான தெய்வங்கள் வசிப்பதாக சாஸ்திரம் கூறுகின்றது.
மேலும் இந்த வெற்றிலை என்னும் தாவரம், தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணங்களும், கூறுகின்றன. இந்த மங்களகரமான தாம்பூலம் கொண்டு பார்க்கப்படும் பிரசன்னத்திற்கு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும், குறைவு. ஜோதிடத் தில் ஜாதகம் பார்ப்பதுபோல் அல்லாமல் இதனை ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இரவிலும், பகலிலும், பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு வெற்றிலையில் ஒன்பது நரம்புகளுக்கு மேல் இடம்பெற்று இருக்காது. எனவேதான் வெற்றிலை நவகிரகங்களின் ஆளுமையில் அமைந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. சில வெற்றிலைகளில் ஏழு நரம்புகள் இடம்பெற்று இருக்கும். அவை ராகு- கேது நீங்களாக மீதம் உள்ள கிரகங்களின் தன்மை என்று கூறுவார்கள்.
இந்த தாம்பூல பிரசன்னம் பார்க்க செல்லும் பொழுது, ஜோதிடரிடம் பூஜை பொருட்களை வாங்கிசென்று குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தினை வழிபட சொல்லவேண்டும். ஜோதி டர்கள் அதில் வாசம் செய்யும் 11 தேவதைகளான ருத்ரன், விஷ்ணு, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, பூதேவி, இந்திரன், காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி, ஆகியோர்களை பிரார்த்தித்த பின்னரே, பிரசனத்தின்மூலம் பலன்களை காண வேண்டும். தாம்பூல பிரசன்னத்தில் அன்றைய கிரக நிலையினை கணித்துக்கொண்டு ஜாதகம் பார்க்கவந்தவர் வாங்கிவந்த வெற்றிலை எண்ணிக்கையினை எண்ணி வாங்கிவந்த வெற்றிலையின் எண்ணிக்கை ல2ல5+1/7 என்ற விகிதத்தில் கணிதம் செய்து கொள்ள வேண்டும்.
இதில் 2 என்பது தாயும், தந்தையும், 5 என்பது பஞ்சபூதங்கள், 7 என்பது ராகு, கேது, நீங்களாக மீதம் உள்ள ஏழு கிரகங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கணிதம் செய்யும்பொழுது மீதி
1 வந்தால் சூரியனும்
2 வந்தால் சந்திரனும்
3 வந்தால் செவ்வாயும்
4 வந்தால் புதனும்
5 வந்தால் குருவும்
6 வந்தால் சுக்கிரனும்
0 வந்தால் சனியும் குறிக்கும்.
அன்றைய கோட்சாரத்தில், வந்த எண்ணிக்கைகாண கிரகம், நிற்கும் இடத் தினை ஆரூடமாக போட்டு, பலன் கூறப்படும்.
தாம்புல ஆரூட கிரகம் சூரியன் ஆக வந்தால் துக்கம், துயரம் என்றும். சந்திரன் எனில் சுகம், ஆரோக்கியம் என்றும். செவ்வாய் எனில் சண்டை, பீடை என்றும். புதன் எனில் தொழிலின்மூலம் ஏற்படும் தன வரவு என்றும், குரு என்றால் ஆன்மிகப் பணிமூலம் வரும் வரவு என்றும், சுக்கிரன் என்றால் தன் ஆசைகள் நிறைவேறுதல் என்றும், சனி என்றால் தடை, கஷ்டம், மரண பயமாகவும், எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
மேலும் ஆரூடம் நிற்கும் ராசிகளின் தன்மையினை கொண்டும் சில பலன்கள் எடுக்கப்படும். அவை மேஷம் கலகம். ரிஷபம் தனனாசம். மிதுனம் மிருக பயம், கடகம் சுகம், சிம்மம் வயிறு உபாதை, கன்னி சுபம், துலாம் மிக சுகம், விருச்சிகம் சத்ரு உபாதை, தனுசு ஆத்ம சுகம், மகரம் இடதோஷம், கும்பம் மரண பயம், மீனம் சந்ததி விருத்தி என்ற நிலையிலும் பிரசன் னத்தை ஆய்வு செய்யப்படும்.
தாம்பூல பிரசன்ன ஆரூடத்தில் பயணிக் கும்பொழுது, ஒருநாள் உடைய ஆகஸ் பொழுதினை இரண்டாக பிரித்து, முதல் அகஸ் என்றால் மேலிருந்து 12 வெற்றிலை களும், இரண்டாவது அகஸ் என்றால் கீழிருந்து 12 வெற்றிலைகளையும், எடுத்து கையாள வேண்டும்.
இந்த 12 வெற்றிலைகளும் 12 பாவங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
ஒவ்வொரு வெற்றிலையின் தன்மைகளும் அன்றைய கோட்சாரங்களும், அந்த பாவத் தின் சுப, அசுப நிலையினை எடுத்துரைக்கும்.
வெற்றிலையின் முனையோ அல்லது காம்போ உடைபட்டோ அல்லது கிழிந்தோ இருந்தால் அசுபத்தை எடுத்துரைக்கின்றது.
மேலும் துடைத்தால் செல்லக்கூடிய தூசு களோ, பூச்சிகளோ இருந்தால் பரிகாரத் தின்மூலம் அந்த பிரச்சினை சரி செய்யப்படும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
முதல் வெற்றிலை ஜாதகரின் கீர்த்தி அவரின் சுயத்தன்மை போன்றவற்றையும், இரண்டாவது வெற்றிலை தனம், வாக்கு, குடும்பமாகவும், மூன்றாவது வெற்றிலை தைரியவீரிய, இளைய சகோதரனாகவும், நான்காவது வெற்றிலை சுகஸ்தானமாகவும், வீடு, வாகனம், தாயார் போன்றவையும், ஐந்தாவது வெற்றிலை பூர்வபுண்ணியத் தையும், குழந்தைகளையும், மூத்தோர் களையும், குலதெய்வத்தையும், ஆறாவது வெற்றிலை நோய், உழைப்பு, கடன் போன்றவற்றினையும், ஏழாம் வெற்றிலை பொதுஜன தொடர்பு, கூட்டாளிகள், கலத்திரத்தையும், எட்டாவது வெற்றிலை கண்டங்கள், ஆயுள், மறைமுக செயல்பாடுகள் போன்றவற்றையும் ஒன்பதாவது வெற்றிலை தந்தை, பாக்கியம், உயர் கல்வி, தூரதேச பயணம் போன்றவற் றையும், பத்தாவது வெற்றிலை மாமியார், தொழில், தனக்கான கருமம் போன்றவற்றினையும், பதினோராவது வெற்றிலை சொத்து, மூத்த சகோதரன், இளைய மனைவி போன்றவையும், பன்னிரண்டாவது வெற்றிலை தூக்கம், உடல் சார்ந்த சுகம், கடல்சார் பயணம் போன்றவற்றினையும் குறிக்கும்.
இதில் முதல் வெற்றிலை சிறப்பாகவும் பெரியதாகவும் இருந்தால் எந்தவித தோஷமும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஒன்று, ஐந்து, ஒன்பதாம், வெற்றிலைகள், கிழிந்திருந்தால் பூர்வபுண்ணிய தோஷம், பிரேத சாபம் உண்டு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதல் வெற்றிலையின் நடுவில் துவாரம் இருந்தால் துர்மரணம் அடைந்த பிரேத சாபம் உண்டு.
வெற்றிலையின் பெரிய நரம்பு உள்ள இடத்தில் துவாரம் இருந்தால் இல்லத் தில் கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைந் திருப்பார்கள் என்றும்.ஒன்று, ஐந்தாம், வெற்றிலையின் நுனிப்பகுதி கிழிந்து இருந் தால் சர்ப்ப தோஷம் இருப்பதாகவும். பிர சன்னம் பார்க்க வெற்றிலைகளை கையாளும் பொழுது கை தவறி கீழே விழுந்தால் அசுப சகுனமாகவும். எடுத்துக் கொண்டு வெற் றிலைக்கு வெற்றிலை பலன்களும் கோட்சார நிலைகளோடு இணையும் பொழுது சில அரிய உண்மைகளும் வெளிப்படும்.
மேலும் பிரசன்னத்தில் கையாளும் வெற்றிலை 24 முதல் 35-க்குள் இருந்தால் பூர் வீகத்தை விட்டு வந்து இரண்டு தலைமுறைகள் ஆகிவிட்டது என்றும். 36-க்கும் அதிக மாக இருந்தால் பல தலைமுறைகள் ஆகி விட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.
தாம்பூல பிரசன்னத்திலும் மற்ற பிரசன் னங்களிலும், பாதகாதிபதியும், மகா பாதகாதி பதியும், ஒரு மறைபொருளை கையாண்டு கொண்டிருப்பார்கள், பெரும்பாலும் பாதகாதிபதியோடும், மகா பாதகாதிபதி யோடும், ஆறாம் அதிபதி இணையும்பொழுது செய்வினை தோஷம் இருப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு பாதகாதிபதியும் ஆறாம் அதிபதியும் நான்காம் அதிபதியோடு தொடர்புகொள்ளும்பொழுது வீடு சார்ந்த செய்வினையாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும் பாதகாதிபதியோடு இணையும் கிரகங்களும், பாதகாதிபதி அமர்ந்துள்ள இடமும், பெரும் சிக்கலுக்கும், இன்னலுக்கும், ஆளாகிக் கொண்டிருப்பதை கண்கூடாக காணமுடிகின்றது. பிரச்சினையின் தீவிரம் அதிகமாக இருப்பவர்கள் தாம்பூல பிரசன்னத்தின்மூலம் தங்களது பிரச்சினைகளுக்கு ஒரு தெளிவான தீர்வினை இறையருளாலும், நவகிரகங்களின் அருளாலும் அடையமுடியும்.
செல்: 80563 79988