மனித வாழ்வில் அனைத் தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங் கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 15-ஆவது நட்சத் திரம் சுவாதியாகும். இது ராகுவின் இரண்டாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் தனது நான்கு பாதங்களையும் சுக்கிரனின் ஆட்சிவீடான- தராசை சின்னமாகக்கொண்ட துலாத்தில் பதியவைத்துள்ளது. இது முழு நட்சத்திரமாக விளங்குவதால் சுக்கிரனின் முழு குணத்தையும் பிரதிபலிக்கும் நட்சத்திரமாக அமைகின்றது.
சமஸ்கிருதத்தில் சுவாதி என்றும். தமிழில் காற்றின் நால், ஜோதி, விளக்கு, மரக்கால், தீபம், பதுமம், வெறும் முகம், காண்டீபம் என்றும் பல பெயர்களால் அறியப்படுகிறது. சீனத்தில் சுவாதியினை கிங் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இது தனி முத்துப்போன்றும், பவளம்போன்றும் காட்சியளிக்கும் ஒற்றை நட்சத்திரமாகும்.
இதன் ராசியாதிபதி சுக்கிரனாக வும், நட்சத்திராதிபதி ராகுவாகவும், நவாம்ச அதிபதிகளாக சுவாதி ஒன்றாம் பாதமென்றால் குருவும், இரண்டென்றால் சனியும், மூன்றென்றால் சனியும், சுவாதி நான்காம் பாதமென்றால் குருவும் என அமையப்பெறுகி றார்கள்.
சந்திரன் சுவாதி நட்சத்திர கோணத்தில் பயணிக்கும் நேரத்தில் பிறப் பவர்கள் தங்களை சுவாதி நட்சத்திரம், துலா ராசி என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள். சுக்கிரன் என்னும் சுகங்கள் சார்ந்த ராசியில், போக காரகன் ராகுவின் நட்சத்திரம் பயணிப்பதனால் இவர
மனித வாழ்வில் அனைத் தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங் கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 15-ஆவது நட்சத் திரம் சுவாதியாகும். இது ராகுவின் இரண்டாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் தனது நான்கு பாதங்களையும் சுக்கிரனின் ஆட்சிவீடான- தராசை சின்னமாகக்கொண்ட துலாத்தில் பதியவைத்துள்ளது. இது முழு நட்சத்திரமாக விளங்குவதால் சுக்கிரனின் முழு குணத்தையும் பிரதிபலிக்கும் நட்சத்திரமாக அமைகின்றது.
சமஸ்கிருதத்தில் சுவாதி என்றும். தமிழில் காற்றின் நால், ஜோதி, விளக்கு, மரக்கால், தீபம், பதுமம், வெறும் முகம், காண்டீபம் என்றும் பல பெயர்களால் அறியப்படுகிறது. சீனத்தில் சுவாதியினை கிங் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இது தனி முத்துப்போன்றும், பவளம்போன்றும் காட்சியளிக்கும் ஒற்றை நட்சத்திரமாகும்.
இதன் ராசியாதிபதி சுக்கிரனாக வும், நட்சத்திராதிபதி ராகுவாகவும், நவாம்ச அதிபதிகளாக சுவாதி ஒன்றாம் பாதமென்றால் குருவும், இரண்டென்றால் சனியும், மூன்றென்றால் சனியும், சுவாதி நான்காம் பாதமென்றால் குருவும் என அமையப்பெறுகி றார்கள்.
சந்திரன் சுவாதி நட்சத்திர கோணத்தில் பயணிக்கும் நேரத்தில் பிறப் பவர்கள் தங்களை சுவாதி நட்சத்திரம், துலா ராசி என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள். சுக்கிரன் என்னும் சுகங்கள் சார்ந்த ராசியில், போக காரகன் ராகுவின் நட்சத்திரம் பயணிப்பதனால் இவர்கள் "பெரிதினும் பெரிது கேள்' என்ற நிலையில், பிரம்மாண்டத்தை உணரும் வல்லமை இயல்பிலேயே பெற்றவர்களாக இருப்பார்கள்.
சுவாதியை காற்று நட்சத்திரம் என்பார்கள். இது நரசிம்மர் அவதரித்த நட்சத்திரம் என சில நூல்கள் கூறுகின்றன. சுவாதியில் பிறந்த வர்களுக்கு தொடைப்பகுதியில் மச்சம் அல்லது மரு இருக்கும்.
வியாபாரமும் செயல்பாடுகளும் இவர்களின் தாரக மந்திரமாகும். உணர்வுகளுக்கு இரண்டாம் பட்சமும், செயல்பாடுகளுக்கு முதலுரிமையும் தரும் நட்சத்திரங்களில் இது முதலாவதாக நிற்கும் நட்சத்திரமாக அமைகிறது. கடும் உழைப்பினை புயல்வேகத்தில் வெளிப்படுத்தும் தன்மைகொண்டது சுவாதி.
நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தில் ஒரு செய்தி உள்ளது. சுவாதி நட்சத்திரம் நடப்பிலுள்ள நாளில் கன்னிகாதானம் நிகழ்த்தினால் அந்தப் பெண் கணவனுக்குத் தகுந்த மனைவியாக வாழ்வை நிறைவு செய்வாள் என்கிறது வேதம்.
சுவாதிக்கு மற்றொரு சிறப் புண்டு. கடலின் அடியில் வசிக்கும் சிப்பிகள் இந்த சுவாதி நட்சத்திரம் உதயமாகும் நாளில் மேல்பரப்பில் பயணித்து, விழும் மழைத் துளியை உள்வாங்குகிறது. இந்த மழைத்துளியே முத்தாக உருவாகிறதென்பார்கள்.
மேஷம் முதல் மீனம்வரை உயிருள்ள பொருட்களை அடை யாளச் சின்னமாக அளித்துள்ளனர். ஆனால் துலாத்திற்கு மட்டும் உயிரற்ற தராசை அடையாளச் சின்னமாக அமைத்துள்ளனர். இங்கு தர்மதேவன் என்று போற்றப்படும் சனிபகவான் உச்சவலிமையைப் பெறுகிறார்.
சுவாதியில் பிறப்பெடுத்த ஒரு ஜீவன் தன்னுள் எப்பொழு தும் ஒரு ரகசியத்தைக் கடைப் பிடித்துக்கொண்டே இருக்கும். இவர்கள் போர்த் தந்திரம் அறிந்தவர் கள். பல அரசவைகளில் படைத் தளபதிகளாக இந்த நட்சத்திரக் காரர்கள் பணியமர்த்தபட்டதாக சான்றுகள் உள்ளன. இவர்கள் காற்றின் இரு நிலைகளான தென்றலாகவும், புயலாகவும் பரிணமிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இந்த நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் போஜனப் பிரியர்கள். ஏழ்மையான வீட்டில் பிறந் திருந்தாலும், இவர்களின் வளர்ச்சி நல்ல உயர்ந்த செல்வ நிலையை உருவாக்கிக் கொடுக்கும். இது மகாலட்சுமி கடாட்சம் பொருந்திய நட்சத்திரம் என்பர்.
இவர்கள் அடைபட்டிருப்பதைவிட வீட்டிற்கு வெளியில் இருப்பதையே அதிகமாக விரும்புவார்கள். இது சனியின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத்திரம். அதனால் தனக்குக் கீழே வேலைசெய்யும் அடி மட்டத் தொழிலாளிகளை நிர்வகிக்கும் திறனும், அவர்களுடனான உறவில் விரிசல்களும் இயல் பிலேயே அமைந்துவிடும். இவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தால் ஒன்றையும் சரிவர செய்யமாட்டார்கள். "மல்டி டாஸ்க்' இவர்களுக்கு ஒத்துவராது.
பிரம்மாண்டமான தொழில், கனரக வாகனங்கள், கெமிக்கல்ஸ் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்து தொழில் மேன்மையை எட்டிப் பிடிப்பார்கள். ஓரிடத்தில் நிலைத்து இருக்கமாட்டார்கள். அனைத் திலும் பிரம்மாண்டத்தை எதிர்பார்ப்பார்கள். பிரம்மாண்டமான தொழிலின்மூலமாக தன்னை உயர்வுபடுத்திக்கொண்டாலும், தொழிலாளிகள் இவர்களின் எண்ணம்போல் நடந்துகொள்ளமாட்டார்கள்.
பீமனுக்கும் ஆஞ்சனேயருக்கும் தனது பலம் தெரியாதென்பதுபோல, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் தங்களின் பலம் அறிய மாட்டார்கள்.
சுவாதி ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் குருவின் வீடான தனுசு வீட்டில் அமையப்பெறும். இதனால் கல்வியில் சிறப்பு, கல்வியினால் சிறப்பு, கல்வி நிறுவனம், டியூஷன் சென்டர், குருவின் தொழில்கள், உயர்ந்த லட்சியங்கள், வெளிநாடு, வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில்கள் போன்றவை அமையும். இவர்கள் ஆராய்ச்சி சம்பந்தப் பட்ட படிப்புகளின்மூலம் தங்களை உயர்வுபடுத்திக் கொள்வார்கள்.
சுவாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் சனியின் வீடான மகரத்தில் அமையப்பெறும். இந்த மகரம் பூமி ராசி. பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்களினால் வரவு, பூமி சம்பந்தப்பட்ட தொழில்கள், பொறியியல் கல்வி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் சிறப்புறுவது போன்றவை அமையப்பெறும்.
சுவாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் சனியின் வீடான கும்ப ராசியில் அமையப்பெறும். இரண்டாம் பாதத்தில் பலன்களே இங்கு பெரும்பாலும் பொருந்தி வந்தாலும், இவர்கள் மோட்டார் வாகனம், எக்ஸ்போர்ட், ரசாயனம், பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி- ஏற்றுமதி செய்வது போன்றவற்றில் சிறப்புறு வார்கள்.
சுவாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் குருவின் வீடான மீனத்தில் அமையப்பெறும். இங்கே சுக்கிரன் உச்சம்பெறுவதனால் அழகியல், அழகியல் சார்ந்த தொழில்கள், அயல்நாட்டு வேலை, அடிமை ஜீவனம், கான்ட்ராக்ட் போன்றவை அமையும். இங்கு புதன் நீசமாவதால் வெளிநாடுகளில் அடிமைத் தொழில் அமைவதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இவர்களும் கல்வியினால் உயர்வுபெறும் சூழ்நிலையும், யோக பாக்கியங்களும்
அடைபவர்களாக இருப்பார்கள்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் பணிசெய்யும் இடங்களிலும் தொழிற் கூடங்களிலும் எருமையின் சின்னத்தை வைப்பது மிக அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகின்றது. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் வெள்ளை நிற பென்சிலால் எருமையின் சின்னத்தை ஓரளவுக்குத் தெரிந்த வண்ணம் வரைந்துவர, மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகுமென்றும், தொழில் சார்ந்த சறுக்கல்கள் நிவர்த்தி செய்யப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
வணங்கவேண்டிய தெய்வம்: சரஸ்வதி தேவி.
வணங்கவேண்டிய விருட்சம்: எருக்கு அல்லது மாதுளை.
வணங்கவேண்டிய தலம்: ஸ்ரீரங்கம்.
அணிய வேண்டிய ரத்தினம்: வைரம்.
(அடுத்த இதழில் விசாகம்)
செல்: 80563 79988