சூரியனின் சிறப்புக்கள்
உலகத்திற்கு ஒளி தரும் எல்லா மதத்தினரும் போற்றக்கூடிய அருட்பெருஞ்ஜோதியாக நவகிரக தலைவனாக திகழ்பவர். இப்படிப் பட்ட சூரியனை உதயத்தின்போது இந்திரனும், உச்சி வேளையில் வாயு பகவானும், மாலை யில் வருணனும், சந்திரனும், இரவில் மும்மூர்த்தி களும், நடு இரவில் குபேரனும் வழிபடும் சிவாய நாராயண மூர்த்தியே போற்றி.
ஆண்- பெண் யாராக இருந்தாலும் ஜெனன காலம் தன் பிறப்பு குறிப்பு படி பிறந்த நேரம், இடம் இதனைக்கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்படி கணிக்கும்போது எந்த தேசம் பிறந்தார் என்பதைக் கொண்டு சூரியன் உதயம்தான் முக்கியம். இதனால் பிறப்பு நேரத்தை உதயாதி நாழிகை என்று கணித்து பின் அந்த ஜாதகருக்கு உண்டான விதி என்னும் லக்னம் அமைக்கபடுகிறது. இதற்கு ஆள்க்ங்ய்ற் என்று பெயர். ஒரு ஜாதகத் திற்கு லக்னம் மிக முக்கியம். அதனை உருவாக்கி தருவது சூரிய பகவான். அந்த லக்னத்தை மையமாக வைத்துதான் 12 பாவங்களும் கணக்கிட்டு உலக விஷயங்களை அதற்குள் அடக்கி பலனை அறிய நாம் ஜோதிட விற்பன்னர்கள் நமக்கு வகுத்து தந்திருக்கிறார் கள். சூரியன் நம் கண்ணுக்கு தெரிந்த கிரகம். இதனை நட்சத்திரம் என்றும் சொல்வதுன்டு. நவகிரகங்களுக்கும் இவர் தலைவனாக இருந்து பிற கிரகங்கள் வான்மண்டலத்தில் இவரை சுற்றிவருகின்றன.
இதனால்தான் நவகிரகங்களில் சில உள் வட்ட கிரகங்கள், வெளிவட்ட கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியனுக்கு ஆதித்தன் பகலவன், பாஸ்கரன், தினகரன், பிரகாசம், ரவி, பிரபாகரன், மிகிரன், சித்திர பானு, பூஜா, பகன், மித்ரன் இப்பெயர்கள் இவருக்கு உண்டு. நம் தந்தைக்கு பிதுர்காரகர் ஆவார். ஒரு ஜாதகத்தில் தந்தையின் அம்சம், அவரது பாசம், அனுசரனை, அவர் தேடிய சொத்து இதனை எல்லாம் அடைய இவர் அனுக் கிரகம் வேண்டும். அது மட்டுமல்ல ஒரு ஜாதகத் திற்கு பூர்வபுண்ணிய 5-ஆமிடம் அதிர்ஷ் டத்தை சொல்லக்கூடிய இடம். அது ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு கிரகங்கள் உண்டு. பொதுவாக காலபுருஷ தத்துவப்படி சூரியன் தான் அந்த அதிர்ஷ்ட பாவத்தை கையில் வைத்திருக்கிறார். இந்த சூரியன் மட்டும் பலமாக இருந்துவிட்டால் ஜெனனத்தில் பூர்வ புண்ணியாதிபதி பலம் இல்லை என்றாலும் இவரது பலத்தால் செல்வமும் செல்வாக்கும் பெறமுடியும். அருட்பெரும் ஜோதியாக இறைவழிபாட்டில் மூன்று மதத்தினருமே குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஞாயிறுதோறும் தேவசபையில்
சூரியனின் சிறப்புக்கள்
உலகத்திற்கு ஒளி தரும் எல்லா மதத்தினரும் போற்றக்கூடிய அருட்பெருஞ்ஜோதியாக நவகிரக தலைவனாக திகழ்பவர். இப்படிப் பட்ட சூரியனை உதயத்தின்போது இந்திரனும், உச்சி வேளையில் வாயு பகவானும், மாலை யில் வருணனும், சந்திரனும், இரவில் மும்மூர்த்தி களும், நடு இரவில் குபேரனும் வழிபடும் சிவாய நாராயண மூர்த்தியே போற்றி.
ஆண்- பெண் யாராக இருந்தாலும் ஜெனன காலம் தன் பிறப்பு குறிப்பு படி பிறந்த நேரம், இடம் இதனைக்கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்படி கணிக்கும்போது எந்த தேசம் பிறந்தார் என்பதைக் கொண்டு சூரியன் உதயம்தான் முக்கியம். இதனால் பிறப்பு நேரத்தை உதயாதி நாழிகை என்று கணித்து பின் அந்த ஜாதகருக்கு உண்டான விதி என்னும் லக்னம் அமைக்கபடுகிறது. இதற்கு ஆள்க்ங்ய்ற் என்று பெயர். ஒரு ஜாதகத் திற்கு லக்னம் மிக முக்கியம். அதனை உருவாக்கி தருவது சூரிய பகவான். அந்த லக்னத்தை மையமாக வைத்துதான் 12 பாவங்களும் கணக்கிட்டு உலக விஷயங்களை அதற்குள் அடக்கி பலனை அறிய நாம் ஜோதிட விற்பன்னர்கள் நமக்கு வகுத்து தந்திருக்கிறார் கள். சூரியன் நம் கண்ணுக்கு தெரிந்த கிரகம். இதனை நட்சத்திரம் என்றும் சொல்வதுன்டு. நவகிரகங்களுக்கும் இவர் தலைவனாக இருந்து பிற கிரகங்கள் வான்மண்டலத்தில் இவரை சுற்றிவருகின்றன.
இதனால்தான் நவகிரகங்களில் சில உள் வட்ட கிரகங்கள், வெளிவட்ட கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியனுக்கு ஆதித்தன் பகலவன், பாஸ்கரன், தினகரன், பிரகாசம், ரவி, பிரபாகரன், மிகிரன், சித்திர பானு, பூஜா, பகன், மித்ரன் இப்பெயர்கள் இவருக்கு உண்டு. நம் தந்தைக்கு பிதுர்காரகர் ஆவார். ஒரு ஜாதகத்தில் தந்தையின் அம்சம், அவரது பாசம், அனுசரனை, அவர் தேடிய சொத்து இதனை எல்லாம் அடைய இவர் அனுக் கிரகம் வேண்டும். அது மட்டுமல்ல ஒரு ஜாதகத் திற்கு பூர்வபுண்ணிய 5-ஆமிடம் அதிர்ஷ் டத்தை சொல்லக்கூடிய இடம். அது ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு கிரகங்கள் உண்டு. பொதுவாக காலபுருஷ தத்துவப்படி சூரியன் தான் அந்த அதிர்ஷ்ட பாவத்தை கையில் வைத்திருக்கிறார். இந்த சூரியன் மட்டும் பலமாக இருந்துவிட்டால் ஜெனனத்தில் பூர்வ புண்ணியாதிபதி பலம் இல்லை என்றாலும் இவரது பலத்தால் செல்வமும் செல்வாக்கும் பெறமுடியும். அருட்பெரும் ஜோதியாக இறைவழிபாட்டில் மூன்று மதத்தினருமே குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஞாயிறுதோறும் தேவசபையில் மெழுகு தீபமேற்றி இயேசு பெருமானை வழிபடு கிறார்கள். முஸ்லிம் மதத்தினர் அகல்விளக்கு ஏற்றி அல்லாவை வணங்குகிறார்கள். இந்துக்கள் குத்து விளக்கேற்றி இறைவன்- இறைவியை வணங்குகிறோம். வள்ளல் பெருமான்கூட உருவ வழிபாடுகள் வேறாக இருந்தாலும் இறைவன் ஜோதி வடிவமே. அதனால் சூரியன் ஒரு ஒளிக்கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பிறந்த மாதம்கூட சூரியனை ஒட்டி யுள்ளதுதான். 12 ராசிகளும் 12 மாதங்களாக மாறும். உதாரணமாக ஒருவர் சித்திரை மாதம் பிறக்கிறார் என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். பங்குனி மாதம் பிறக்கிறார் என்றால் மீனத்தில் இருக்கும். இப்படி சூரியனை வைத்து தமிழ் மாதத்தை அறிந்து கொள்ளலாம். மாதத்தின்மூலமாக சூரியன் ராசியில் எங்கே இருக்கிறார் என்று அறியமுடியும். தமிழ் மாத பிறப்புக்கும் சூரியனுக்கு தொடர்புண்டு. இதில் தைமுதல் ஆனிவரை அந்த ஆறு ராசிகளில் (மகரம்- மிதுனம்) இது உத்தராயணம் ஆகும். ஆடிமுதல் மார்கழிவரை ஆறு ராசிகள் (கடகம்- தனுசு) வரை தட்சிணாயனம் ஆகும். இந்த இரண்டு அயனங்களையும் சூரியனால் அமையப்பெருவது அயனம் என்பதே பயணம் ஆகும். இதில் உத்தராயணம் தேவர்களுக்கு பகல் பொழுதாகவும். தட்சிணாயனம் இரவு பொழுதாகவும் ஒரு வருடம் என்பது ஒரு நாளாக தேவர்களுக்கு அமைகிறது. இந்த சூரியனிடம் அரசு தொடர்பான அனைத்து அங்கீகாரகங் கள் நாட்டை ஆள்வது, மக்களை வழிநடத்தி செல்வது, நிர்வாக பொறுப்பு, இப்படி சூரியன் முக்கிய பொறுப்பேற்கிறார். விவசாயத்திற்கும் கூட குறிப்பிட கூடியவராக இருக்கிறார். இவரது பலத்தை பெற நாம் தினசரி இவரை சூரிய நமஸ்காரம் செய்து வழிபடவேண்டும்.
சூரியனின் பொறுப்புக்கள்
உணவுத்துறை, மருத்துவம், கணிதம், ரசாயனம், காடு, மலை சம்பந்தப்பட்ட பகுதி, தரகு வியாபாரம், எரு, மரங்கள் அரசு நிர்வாகம், பொன் வணிகம், மருந்துக்கடை, ஆலைகள், அரசுமரியாதை, கோதுமை, ரேடியோ, எலெக்ட்ரானிக்ஸ், அரசியல்துறை, நெருப்பினால் உருவாகக்கூடிய பொருட்கள், கம்பளங்கள், காவல், இராணுவம், கவர்னர், டாக்டர், அரசு துறையில் உதவியாளராக பணி புரிபவர்கள். ஐ.ஏ.எஸ், எரிபொருள், கம்யூட்டர், அமிலம், ஆடைகள், காரமான பொருட்கள், மூலிகை ரச வாதங்கள், செம்பு, தந்தம், துப்பாக்கி, பஞ்சலோகம், மின் தொடர்பான சாதனங்கள், விபூதி, கற்பூரம், தமிழ் மருந்துகள், ரத்தின கற்கள்.
நோய்கள்: ரத்தம், பிரஷர், இதயம், எலும்பு, கண், கை- கால் வலிப்புக்கள், தலை சார்ந்த பிணிகள், தோல், மார்பு, காய்ச்சல், வயிற்று போக்கு இந்த வகை பிணிகள் இவரால் ஏற்படும்.
உங்களுக்கு சூரியன் ஜாதகத்தில் எங்கே இருந்தால் சாதகம் பாதகம் சூரியபகவான் மேஷம், சிம்மம், தனுசு, விருச்சிகம் இந்த லக்னங்களில் பிறந்தவர்களுக்கு இவர் யோக கிரகம் ஆவார். ரிஷபம், கும்பம் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவர் மத்திம பலன் தருவார். மிதுனம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளுக்கும் இவர் அசுபர் பாதகமான பலனை தருபவர்.
எந்த லக்னமாக இருந்தாலும் சூரியன் 3, 6, 10, 11-ல் இடம்பெற்றிருந்தால் இவரால் சாதகமே. மேஷம், சிம்மம், தனுசு, விருச்சிகம், ரிஷபம், கும்பம் இந்த லக்னங்களுக்கு 1, 4, 5, 7, 10 அமையும் யோகப் பலன்களைத் தருவார். மிதுனம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளுக்கும் இவர் 3, 6, 8, 12-ல் இருந் தால் யோகம் அல்லது 3, 6, 11-ல் இருந்தாலும் யோகம்.
குறிப்பு: பகல் நேரத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னப்படி 11-ல் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு எத்தோஷம் இருந்தாலும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிவிடும். குறிப்பாக பகலில் 11.00 மணிமுதல் 12.00 மணிக்குள் பிறந்தவர்களுக்கு தோஷங்கள் நீங்கி யோகம் அடைவார்கள். சூரியனால் அஸ்த்தங்க தோஷம் ஏற்படும். ராகு- கேது நீங்களாக சூரியன் நின்றை பாகை யில் இருந்து எந்தெந்த கிரகங்களுக்கு எந்த பாகை என்பது குறிப்பிடபட்டுள்ளது. அந்த பாகைகுள் அக்கிரகம் இருந்தால் அதாவது சூரியன் சஞ்சரிக்கும் ராசியிலே கிரகங்கள் இருந்தால் குறிப்பிட்ட இந்த டிகிரியில் அஸ்தங்கம் ஏற்படும். இது சூரியனால் சில கிரகங்களுக்கு பாதிப்பை தரக்கூடியது. இந்த அஸ்த்தங்கத்தில் கெட்ட கிரகங்கள் இருந்தால் நன்மையே. யோக கிரகங்கள் இருந்தால் யோகம் தடைப் படும். இந்த அஸ்தங்கத்தை தரும் சூரியன் நீசம், பகை, திதி சூன்யம், லக்னத்திற்கு மறை விடத்தில் இருந்தால் அஸ்தங்கம் அவ்வளவாக பரிணமிக்காது. அத்துடன் குருபகவான் 5, 9-ஆம் பார்வையாக சூரியனை பார்த்தால் இந்த அஸ்தங்கம் விலகிவிடும்.
ராகு அல்லது கேதுவோ சூரியனோடு இருந்தால் அஸ்தங்கம் இயங்காது. சூரியன் இதர கிரக நிலைகளின் பலம்கொண்டு இந்த அஸ்தங்கத்தை ஆய்வுசெய்து பலன் அறியவும். சூரியபகவான் மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி, இதில் இவருக்கு மூலத்திரிகோண பலமும் இருக்கு. விருட்சிகம், கடகம், தனுசு, மீனம் நட்பு ராசிகள், துலாம் நீசம், மிதுனம், கன்னி சமம். இதர ராசிகள் பகை. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத் திரத்தின் நாயகன் சூரியன். இதில் ஞாயிற்றுக் கிழமையாக வந்து இந்த நட்சத்திரத்தில் பிறந் தால் சிறப்பு. அவர்களை பார்க்க பிரியப்படு வார்கள். மக்கள் மத்தியில் ஏதேனும் ஒருதுறை யில் மகத்துவமாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் முதல் பாதம், நான்காம் பாதம் புஷ்கராம்ச நடத்திர யோக புள்ளி யாகும். இதில் பிறந்தவர்கள் சாதனையாளர் களே. மக்கள் மத்தியில் எப்பொழுதுமே புகழு டன் விளங்குவார்கள். திதிகளில் சப்தமி அமாவாசை இதில் பிறந்துதாலும் சூரியன் பலம் பொருந்தியவர்களே. நிர்வாகம் எழுத்து, பேச்சு இதில் சாதிக்க கூடியவர்களாக இருப் பார்கள். நித்திய யோகத்தில் சோபனம், ஹர் ஷணம், சுபம். இதில் பிறந்தவர்கள் சூரியனே பிறப்பு யோகியாக வருவார்.
இவர்கள் ஏதேனும் ஒருவகையில் அரசு நிர்வாகத்தில் அங்கம் வகிப்பவர்கள். தந்தையின் மூலமாக பலவித பாக்கியமும் அமையும் கரணங் களில் தைதுலை கரணமும் வணிசை மட்டும் ஞாயிற்றுக்கிழமையாக வந்தால் சூரியன் இவர்களுக்கு பலம் பொருந்தியவரே. இவர்கள் மருத்துவம், அரசு பொறுப்பு, முக்கிய பணிகளில் பேர்புகழுடன் விளங்குவார்கள். இவருக்கு விருத்தா அவஸ்தை கூடாது. இவரது தசை ஆறு வருடம் ஆகும். ஷட்பலத்தில் சூரியன் ஆறுவகையான பலன்களில் மொத்தம் 650 மதிப்பெண்களுக்குமேல் பெற்றால் சூரியன் பலமுடையவரே. ஷட்பல உட்பிரிவில் ஸ்தான பலம் 275 மதிப்பெண், திக்பலம் 58, கால பலம் 87, திருக்பலம் 50, சேஷ்ட்டா பலம் 83, நைசர்க்குக பலம் 100. இதில் இவரே முதலிடம். இத்தகைய மதிப்பெண்களுக்குமேல் ஷட்பல வர்க்க சக்கரம் சூட்சும ஆய்வில் இத்தகை மதிப்பெண்கள் இவருக்கு இருந் தால் இவர் பலம் பொருந்தியவராக மாறி இவரது ஆதிக்கம் தசாபுக்தி அந்தரம் யாவும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
சூரியனின் அருளைபெற சூரிய பிரிதி மற்றும் ஆலயங்கள்
வழிபாட்டு பொருள்: சந்தனம்.
உலோகம்: தாமிரம்.
வடிவம்: வட்டம்.
வழிபாடுகள்: சூரியபகவான். இவர் சிவன் அம்சம் கொண்டவர்.
குறிப்பாக அக்னீஸ்வரர், ருத்ரர் இத்தகைய வழிபாடு உகந்த ஒன்றாகும்.
வசீகர ஸ்தலங்கள்: தமிழ்நாட்டில் ஆடு துறை அருகிலுள்ளது சூரியனார்கோவில், பூம்புகார், அருகிலுள்ளது உச்சி கிழான் கோட்டம், இளங்கோவடிகளால் குறிப்பிட்டு சொன்ன சூரியன் ஆலயம். திருவண்ணாமலை, நெல்லை அருகிலுள்ள பாபநாசம், அக்னீஸ் வரராக காட்சிதரும் ஆலயம் ஆகும். திருக்கழுக் குன்றம்- காஞ்சிபுரம் மாவட்டம், மரகதபுரம்- விழுப்புரம் மாவட்டம், திருப்புகலூர்- நாகை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி- தஞ்சை மாவட்டம்,
ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்னும் இடத்தில் சூரியனுக்கு ஏழு ரதத்துடன் அற்புத மாக வடிவமைக்கபட்ட தனிக்கோவில் உள்ளது. வேலூர் அருகே ஒட்ட நேரி எனப்படும் விநாயக புரத்தில் அமைந்த கோவிலில் உஷா, பிருதியுஷா இரு தேவியருடன் சூரியன் இருக்கி றார். காரைக்குடிக்கு அருகில் சூரக்குடி (குன்றக் குடி) இது சூரியனுக்கு உள்பட்ட கோவில்.
சென்னை மாடப்பாக்கம் தேனுபுரீஸ்வரர் சுயம்பு லிங்கமாக உள்ள இந்த ஆலயத்தில் சிவன் அருகில் தனிச் சந்நிதியாக சூரியன் இருக்கிறார்.
திருவான்மியூர், மருந்தீஸ்வரர் ஆலயம் இங்குள்ள சிவனை சூரியன் வழிபட்டு இருக் கிறார். கோவை ஈச்சனாரி அருகில் மகாலட்சுமி ஆலயத்தில் நான்கு வேதங்களை பிரதிபலிக் கும் வகையில் சூரியன் இருக்கிறார். சூரிய மூலைக்கோவில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் இங்கு தன் ஒளிக் கிரகனங்களை சிவலிங்கத்தின்மீது எப்போதுமே படுமாறு வழிபடுகிறார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், சூரியஸ்தல ஆலயம் உள்ளது. மணல் மேடு தல ஞாயிறு சூரியன் இங்கு சிவனை வழிபட்டு அற்புத சக்திகளை பெற்றிருக்கிறார். திருவாடுதுறை கோமுக்தீஸ் வரர் ஆலயத்தில் உங்க தனிச் சந்நிதியாக சூரியன் அமைந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் சொக்கநாதருக்கு எதிரே சூரியன் இருக்கிறார். திருநாவலூர் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆலயத்திலும் சூரியன் வழிபட் டுள்ளார். சூரியனுக்கு சித்தர்களில் தேரையர் (கேரளா), சிவவாக்கிய சித்தர் (கும்பகோணம்) இவர்கள் வழிபாடும் வெள்ளை எருக்கு, அரசு சிகப்பு மந்தாரை, கொண்ட விருட்சிக ஆலயம் இவருக்கு உரியது. ரத்தினம் மாணிக்கம், உபரத்தி னம் சூரியகாந்த கல். வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். சிவனை வழிபடுவதும் பிரதோஷ விரதமும், நாராயணனை வழிபடு வதும், சத்திய நாராயண பூஜையும் காயத்திரி தேவியை வழிபடுவதும், ஸ்ரீ சரப்பேஸ்வரரையும், ஐய்யப்பனை வணங்குவதும், தினசரி சூரிய நமஸ்காரம் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதங் கள், அமாவாசையில் பிதுர் தர்ப்பணங்கள் செய்வது, ஆதித்ய இருதயம், சூரிய கவசம், போற்றி படிப்பது, சித்திரை மாதம் வழிபாடும் நன்மை.
செல்: 94431 37989