வகிரகங்களில் தலைமை கிரகமாகவும், ராஜகிரகம் என்றும் போற்றப்படும் சூரியனின் ஆதிக்கத்தை முழுமையாகக் கொண்ட நாள் ஞாயிற்றுக்கிழமையாகும். ஆறு சமயங்களில், சௌரம் என்னும் சமயத்தின் தலைவனாக சூரியனே பொறுப்பேற்கிறார்.

ஜோதிடத்தில் பஞ்சாங்கக் கணித முறையில் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற அங்கங் களில் வாரம் என்பது கிழமையைக் குறிக்கும்.

முதலிடம் பெற்றுள்ள இந்த கிழமைகள் மற்றும் இந்தக் கிழமையின் அதிபதிகள் நிகழ்த்தும் அற்புதத்தையும், அவற்றால் நாம் அடையும் பலன் களையும், அந்த நாளில் செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை போன்றவற்றையும், தடைப் பட்ட நிகழ்வுகளை நடத்தவல்ல பரிகாரங்களையும் காணலாம்.

ஒரு மனிதனின் உடலில் வலது கண், மோதிர விரல், எலும்பு போன்ற உறுப்புகளை சூரியன் தன் ஆளுமைக்குக்கீழ் அமைத்திருக்கிறார். அதே போன்று உள்ளுறுப்புகளான ராஜ உறுப்புக்களில் இதயத் தைத் தனதாக்கி உயிர்களை உயிர்பித்துக் கொண்டிருக்கின் றார்.

Advertisment

ee

மானுடம் மட்டுமல்லாமல் உலகத் தோன்றலில் அமைந்துள்ள எல்லா ஜீவராசிகளின் இயக்கத்தையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் சக்தி சூரியனாகும்.

உடலில் அமையப்பெற்ற சராசரி தட்பவெப்ப நிலையே சூரியனின் ஆற்றல்தான். மனித உடலில் ஒரு செல் இறப்பதும் மற்றொரு செல் பிறப்பதும் இந்த தட்பவெப்பத்தைச் சார்ந்தே நிகழ் கிறது. ஆகவே சூரியனின் துணை யின்றி ஓர் அணுவும் அசையாது.

Advertisment

உயிர்கள் தோன்றிய காலம் தொட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கடவுளாகவும், வழிபாட்டின் முதல் பொருளாகவும் சூரியனே விளங்குகிறது.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், அருணனின் துணை கொண்டு, உலகாளும் நாயகன் சூரியனாகும்.

ஒரு ஜாதகத்தில் சூரியன் சுபமாக அமர்ந்து சாதகமான பலன்களை வழங்கும் தன்மையில் இருக்கும் ஜாதகர் அரசு, அரசாங்கம், ஆளுமை, ஆரோக்கியம், ஆயுள் போன்றவற்றில் சிறப்புடன் திகழ்வார். பராக்கிரம தோற்றத்துடன் காட்சியளிப்பார்.

இவர்களுக்குப் பெரும்பாலும் அரசு சார்ந்த வேலையும், தொழில் என்னும் சூழலில் பெரிய தொழிலதிபராகக்கூடிய தன்மையும், தொழிலாளிகள் இவர்களுக்கு இணக்கமாகவே இருக்கும் நிலையும் இயல்பாகவே அமைந்துவிடும்.

மாறாக சூரியனின் நிலை பாதித்த ஜாதகர்களுக்கு பொதுமக்களிடையே கிடைக்கவேண்டிய மரியாதை, கௌரவம், உத்தியோகம், ஆளுமை போன்ற எந்த சூழலையும் கைக்கொள்ள முடியாமல் தவிக்கும் தன்மையை உருவாக்கிவிடும்.

உடல்ரீதியாக ஆரோக்கியக் குறைபாடு, எலும்பு சார்ந்த பிரச்சினைகள், உடலில் கொழுப்புத் தன்மை அதிகமாகி இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாவது போன்றவை நிகழ்கிறது.

இந்தத் தன்மையிலிருந்து ஒரு ஜாதகரை வெளிக்கொண்டு வருவதற்கும், அவர்களுக்குத் தடைப்பட்ட சுப நிகழ்வுகள் மற்றும் உத்தியோகம் தொழில் போன்றவை நல்ல முறையில் நடந்தேறவும் ஞாயிற்றுக் கிழமையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம்.

புராண நிகழ்வுகளில் சூரியனின் துணைக்கொண்டே பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஆதிபராசக்தியிடம் இருந்து அகத்தியருக்குக் கிடைத்து, அகத்தியரிட மிருந்து இராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்ட "ஆதித்ய ஹிருதயம்' ஆகும்.

இந்த ஆதித்ய ஹிருதயத் தின் வலிமையால்தான் இராமபிரான் இராவ ணனை வீழ்த்தினார் என்று புராணங்களில் கோடிடப்பட்டுள்ளது.

செய்யக்கூடாதவை

முதலில் ஞாயிற்றுக்கிழமையில் செய்யக்கூடாதவை என்ன என்பதைக் காணலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நிச்சயமாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு தூங்கும்பட்சத்தில் உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் ரத்தத்தில் இணையும் தன்மை உருவாகும். இதனால் சிந்தனைத் திறனிலும், உடல் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அறிவியல்ரீதியான தகவல்கள் உள்ளன.

மேலும் சூரியனும், சனியும், பகை கிரகங்கள். ஞாயிற்றுக்கிழமையான சூரியனின் ஆளுமைக்கு உட்பட்ட காலத்தில் நல்லெண்ணெய் என்கின்ற சனியின் ஆளுமை இணையும்பொழுது பல வேதியியல் மாற்றங்களை எதிர்வினையாக நிகழ்த்திவிடுகிறது என்பதனால் இதைத் தவிர்க்கவேண்டும். மேலும் இது வருமானத்திலும் பெரிய தடையினை உருவாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்வது சிறப்பு.

அதேபோன்று மண்ணுக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் கருங்கல், இரும்பு, பித்தளை போன்ற எந்தவிதமான பொருட்களையும் ஞாயிற்றுக்கிழமையில் வாங்காமலிருப்பது சிறப்பு. இதற்கும் மேற்கூறிய அதே காரணங்கள்தான்.

மண், மனை, வீடு சார்ந்த அணுகுமுறைகளை ஞாயிற்றுக்கிழமையில் செய்யாமலிருப்பது உத்தமம்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் வேலைகளை ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பிப்பது பல இடர்களை அளிக்கும்.

செய்யக்கூடியவை

ஆலயம் சார்ந்த உழவாரப் பணிகள் செய்யலாம்.

ஆன்மிகம் சார்ந்த பணிகள், வழிபாடு கள், உரையாடல்கள் போன்றவை செய்வது சிறப்பு.

தான தர்மங்கள் செய்வது உயர்வைத் தரும்.

இதுவரை வேலை, தொழில் போன்றவை அமையாத நபர்கள் ஞாயிற்றுக்கிழமையில் வேலைக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து வைத்துக்கொண்டு, மறுநாள் அதற்கான முயற்சி செய்வது சிறப்பினையளிக்கும்.

யோகம், தியானம், வாசி போன்ற வாழ்க்கையை முன்னேற்றும் பயிற்சிகளை ஞாயிற்றுக்கிழமையில் தொடங்குவது இடையூறில்லாத வளர்ச்சியை அளிக்கும்.

தடைப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் சார்ந்த பயணங்களை, ஞாயிற்றுக்கிழமையில் மேற்கொள்ளும் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களின்மூலம் நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஞாயிற்றுக்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்துவரும் நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமையும் அஷ்டமியும் சேர்ந்துவரும் நாட்களிலும் இந்த பரிகாரங்கள் நூறு சதவிகிதம் பலனை அளிக்கும். இந்த நாளுக்காகக் காத்திருக்காமல் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வதும் சிறப்பே.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள்ளான சூரிய ஓரையில் ஓர் வாழையிலையில் கோதுமையைப் பரப்பி, அதன்மேல் இரண்டு ஆலமர இலைகளை வைத்து, அந்த இலையின்மேல், தேங்காய் மூடிகளை வைத்து நெய்தீபமேற்றி வழிபட்டுவர, சகல செல்வமும், வேலை வாய்ப்புகளும், தொழில் சார்ந்த நிகழ்வுகளும் உங்களின்வசம் வந்து சிறப் பளிக்கும்.

மேலும் ஏழு எருக்கன் இலைகளில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில், வெள்ளைத் துணியில் கோதுமை வைத்துக் கட்டப்பட்ட முடிச்சுடன் நெய்யூற்றி, சிவன் ஆலயத்தில் தீபமேற்றிவர அரசியலி லும், அரசு பதவிகளிலும் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் சூழலை சூரியனும் ஞாயிற்றுக்கிழமையும் அருளும்.

இல்லங்களில் நாள்தோறும் சூரிய காயத்ரி மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பதோ அல்லது கேட்பதோ, பெரும் தடையைத் தகர்த்து நல்வாழ்வு அளிக்கும்.

செல்: 80563 79988