கிரகங்களிலே மிகவும் பிரகாச மானதும் ஜொலிக்கும் தன்மை கொண்டதுமான சுக்கிரன் தன் சுழற்சியிலும் அதிவேகமாக சுழலக் கூடியது. மற்ற கிரகங்கள் தன்னச்சில் வலஞ்சுழி யாக சுற்றினால் சுக்கிரன் மட்டும் தன்னச்சில் இடஞ்சுழியாக சுற்றும்.

இந்த மாதிரியான ஒரு மாற்று வழியை கொண்டிருப்பதால்தான் இது சில மாற்று வழிகளை காட்டும் கிரகமாக குறிப்பிடப்படுகின்றது. அதாவது மரணத்தை எந்த நிலையிலும் வெல்ல முடியாது. ஆனால் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு மரணத்தை வென்றுவிடலாம் என்று கூறப்படுகின்றது. சுக்கிரன் சஞ்சீவினி மூலிகையைக் குறிக்கி றது.

காலை நேரத் தில் சூரியன் உதிப்பதற்கு முன்பே பிரகாச மாக வானில் தெரிவ தால்தான் இதற்கு விடிவெள்ளி என்ற பெயரும் உள்ளது. பொழுது விடிந்தது போன்ற ஒரு தோற்றத்தை அந்த விடிவெள்ளி வழங்கும்.

ss

Advertisment

அதுபோன்று ஒப்பனைசெய்து தன் தோற்றத்தை மாற்றிக் காட்டும் அமைப்புகள். அதாவது ஒப்பனை சார்ந்த தொழில்கள் யாவும் சுக்கிரனை குறிக்கும். மனிதர்களில் அதிக ஆடை, அலங் காரம் செய்துகொள்வதும் பிரகாசமாக இருப்பதும் பெண்கள். அதிலும் குறிப்பாக இளம்பெண்களே! அதனால்தான் சுக்கிரன் இளம்பெண்களைக் குறிக்கிறார். ஒப்பனை கலைஞர்கள், ஆடை, அலங்காரப் பொருட் கள் அனைத்தும் சுக்கிரனுக்கு உரியவையே. அதனால்தான் சுக்கிரனை ஆடை, அலங்கார பிரியன் என்றும் கூறுகிறோம்.

குரு என்பவர் பெரும் தனத்தை குறிப்பவர் என்றால் சுக்கிரன் அன்றாடம் கையில் புழங்கும் பணத்தைக் குறிப்பவர். உலோகங்களிலே மிகவும் பளபளப்பாக இருக்கக்கூடியது வெள்ளி மற்றும் நவரத்தினங்களில் அதிக ஜொலிப்பாக இருப்பது வைரம். அதனால்தான் இவை இரண்டுமே சுக்கிர னுக்கு உரியவையாகும்.

பொதுவாக ஜொலிக் கும் பொருட்களாக இருக்கக்கூடிய அத் தனையும் உதாரணமாக ஜரிகை, ஜிகினா, பட்டு வஸ்திரம் அனைத்தும் சுக்கிரனுக்கு உரியவையாகும்.

உடலில் இருந்து உற்பத்தியாகும் விந்து வெண்ணிறமாக இருப்பதால்தான் விந்துவுக்கு காரகமாக சுக்கிரன் குறிப்பிடப்படுகிறார்.

அதேபோன்று அந்த விந்து என்னும் மனித கருவை பாதுகாப்பாக தாங்குவது கருப்பை என்பதால்தான் கருப்பை காரகமாக சுக்கிரன் விளங்குகிறார். மேலும் இதன் பொருட்டே நாம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வீடு போன்றவையும் சுக்கிரனின் காரகத்துவமே ஆகும்.

மனிதரில் ஒப் பனை முகத்திற்கே அதிக முக்கியத் துவம் தரப் படுகின் றது. அத னால்தான் ஒப்பனையைக் குறிக்கும் கிரகமான சுக்கிரன் முகத்தையும் குறிக்கிறார். அதிலும் குறிப்பாக கன்னங்கள் சுக்கிரனுக்கு உரிய காரகமாகும்.

குருவை அடுத்த சுப கிரகமான சுக்கிரன் எந்த ஒரு நிலையிலும் ஜாதகத்தில் தனித்திருப் பது சிறப்பான நல்ல அமைப்பாகும். பாவ கிரகங்களான தேய்பிறை சந்திரன், ராகு- கேது இவர்களின் தொடர்பில் இருக்கும்பொழுது சுக்கிரன் காரகத்துவத்திற்கு பங்கம் ஏற்படு கின்றது.

மேலும் சனியுடன் சேர்ந்தாலும் சுக்கிரன் பொருளாதாரரீதியாக நல்ல அமைப்பு தருகிறது. லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 1, 4, 7, 10-ஆமிடங்களில் இருந்து ஆட்சி, உச்சம் பெறும்பொழுது மாளவிய யோகம் என்னும் சிறப்பான யோகம் ஏற்படுகிறது.

இது ஒருவருக்கு மிக சிறந்த பொருளா தாரத்தையும் கலைத்துறையில் சாதிக்கும் அமைப்பையும் இந்த உலக வாழ்வில் சுகங் களை அனுபவிக்கும் வாழ்க்கையையும் தரும்.

எந்த ஒரு நிலையிலும் ஒரு ஸ்திர ராசிக்கும் சர ராசிக்கும் அதிபதியாக வருவதனால் கேந்திராதிபத்திய தோஷத்தை இவர் வலிந்து கொடுப்பது இல்லை.

அசுர குருவான சுக்கிரன் மிதுன, கன்னி, மகர, கும்ப லக்னங் களுக்கு யோகத்தை வழங்கக்கூடியவர். துலாம் ரிஷபத்திற்கும் லக்னாதிபதி என்ற முறையில் இவர் வலு பெறுவது அவசியமே.

ஒருவருக்கு லக்னத்தில் இருக்கும் சுக்கிரன் முக வசீகரத்தை வழங்குகிறார்.

இரண்டாமிடத்தில் சுக்கிரன் தொடர்பு கொள்ளும் நிலையில் நல்ல குரல் வளத்தை யும் முக அழகையும் ஏற்படுத்துகிறார். 3, 8-ஆம் பாவகத்தில் மறைவு கொள்ளும் நிலையில் சுக்கிரனின் காரகத்துவ குறைவு கள் ஏற்படுகின்றது. 6, 12-ஆம் இடத்தில் இருப்பதுகூட இவருக்கு மறைவு அல்ல. ஏழாம் இடத்தில் இருக்கும்போது நல்ல அழகான வாழ்க்கைத் துணையை தருகிறார். பத்தாமிடத்துடன் தொடர்புகொள்ளும் நிலையில் ஹோட்டல், ஜவுளி, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறைகளில், போக்கு வரத்து சார்ந்த தொழில்களில் மின்ன வைக்கிறார். பத்தாமிடத்தோடு சிம்மம் தொடர்புகொள்ளும் நிலையில் ஜாதக அரசு துறையில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

கலைத்துறை, பொழுதுபோக்கு துறைகளில் சிறப்பாக மிளர சுக்கிரன் ஐந்தாம் பாவகத்தில் தொடர்புகொள்ளுதல் மிக அவசியம். ஒன்பதாம் பாவகம் சுக்கிரனுக்கு உரிய சிறந்த பாவகமே.

பொதுவாக களத்திரத்தை குறிக்கும் காரக கிரகமான சுக்கிரன் அதிலும் குறிப் பாக சுக்கிரன் பெண்களை குறிப்பதால் மனைவி என்னும் மகாலட்சுமியை நன்றாக பார்த்துக்கொண்டாலே வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலோங்கும்.

இந்த உலகவாழ்வின் சுகத்துக்கும் மேன்மைக்கும் விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியும் வழிபாடு செய்துவர சுக்கிரனின் அருள் கடாட்சம் அனைவருக்கும் கிட்டும்.

செல்: 93857 19579