பொண்ணு கிடைக்காத
கொடுமைக்கு
நான் இலட்சிய வாதின்னு
பல பேர் பொய் சொல்றானுக...
கல்யாணம் பண்றது மட்டும்தான்
வாழ்க்கையான்னு..
கெத்தா கேட்ட
முக்கால் வாசிப் பேர்
கையாலாகாதவனா
இருந்திருக்கானுகன்னு
இப்பதாங்க புரியுது..
போதும்.. போதும்..
கல்யாணம் ஆகாம கஷ்டப்படுறதுக்கு..
கல்யாணம் பண்ணி
கஷ்டபட நான் தயார்ங்க...
நல்ல வேலை..
காசு இருந்தாதான் பொண்ணு
கிடைக்கும்ன்னு
சொல்லுறதெல்லாம் பொய்யுங்க?..
என்கிட்ட கோடியில பணமிருக்கு..
கோடி போட ஆளில்லாம
போயிடுமோன்னு
இப்ப கவலையா இருக்
பொண்ணு கிடைக்காத
கொடுமைக்கு
நான் இலட்சிய வாதின்னு
பல பேர் பொய் சொல்றானுக...
கல்யாணம் பண்றது மட்டும்தான்
வாழ்க்கையான்னு..
கெத்தா கேட்ட
முக்கால் வாசிப் பேர்
கையாலாகாதவனா
இருந்திருக்கானுகன்னு
இப்பதாங்க புரியுது..
போதும்.. போதும்..
கல்யாணம் ஆகாம கஷ்டப்படுறதுக்கு..
கல்யாணம் பண்ணி
கஷ்டபட நான் தயார்ங்க...
நல்ல வேலை..
காசு இருந்தாதான் பொண்ணு
கிடைக்கும்ன்னு
சொல்லுறதெல்லாம் பொய்யுங்க?..
என்கிட்ட கோடியில பணமிருக்கு..
கோடி போட ஆளில்லாம
போயிடுமோன்னு
இப்ப கவலையா இருக்கு..
இப்படியே போனா..
"என்னை கூப்பிட வரும்
எமன்தான் ஆண்பால்ன்னா..
பாலூத்த வர்றதுகூட
பல்லு போன பெண் பாலா
நிக்கும் போலையே"..
கடுமையான களத்திர தோஷத்தால
கல்யாணமே ஆகாதுன்னு
ஜோசியர் சொன்னதுல இருந்து
இப்படி என்னென்னவோ
தோணுதுங்க...
ஏழு கழுத வயசாகியும்..
எனக்கொருத்தி
ஏன்டா இன்னும் வரலன்னு
எவனை கேட்டாலும்
ஏழாமிடத்துக்கு சாபம் இருக்கு..
பாவம் இருக்குன்னு சொல்றானுக..
நானறிய யாரையும் கெடுத்ததில்லை..
ஆனா..
எவனோ என் முன்னோர்
செஞ்ச கெட்ட செயல்தான்
காரணமாம்...
ஒரு பரிகாரம் இல்ல
ஓராயிரம் பரிகாரம்
செய்ய நான் தயாரா இருக்கேன்..
எனக்கொரு வழிகாட்ட
யாரையாவது அனுப்புங்க
என் ஆண்டவரே...
"பையன் போற போக்க பாத்தா..
பேயாகி பெண் தேடுவான் போல"..
இன்னைக்கு கெஞ்சுற இவன்
ஏழு வருஷத்துக்கு முன்னாடி
என்னெல்லாம் பேசி இருக்கான்
தெரியுமா?..
"லட்சம் இல்லாத பொண்ணுகிட்ட
லட்சணம் இருக்கான்னு பாரு..
அவளை கட்டுனா..
அஷ்ட லட்சுமியும்
உனக்கு ஆசிர்வாதம் செய்யும்''ன்னு
சொன்னேன்..
அன்னைக்கு
காசேதான் கடவுளடான்னு
எனக்கு கவுன்சி-ங் கொடுத்த
காவாüபய தான நீ..
என்னடா பம்முற..டே..
நீதான் தைரியமான ஆளாச்சே..
சொல்லுடா..
தப்புதான்.. தப்புதான்..
அன்னைக்கு
அடிச்சு அட்வைஸ் சொல்ல
எனக்கு ஆüல்லை சித்தரே...
நம்பி வந்துருக்கேன்..
பழச மனசுல வச்சு
பழி வாங்காதீங்க...
கஷ்டமான பரிகாரம்னாலும்
இஷ்டபட்டு இப்பவே செய்யுறேன்...
ம்..
நீ திருந்திட்டேன்னு
சிரிப்பு காட்டாத..
காரியம் ஆகணும்னா
கால பிடிக்கிறவனாச்சே நீ...
கஞ்ச பயலே..
சிம்பிளா
சின்ன பரிகாரம் சொல்லுறேன்..
சிந்திக்காம செஞ்சு பாரு
சீக்கிரத்துல உனக்கு
கல்யாணம் ஆயிடும்...
கரும்பு கட்டு வாங்கி
கணுக்கணுவா வெட்டிக்க..
பத்து துண்டு எடுத்து மாலையாக்கி
வெள்üக்கிழமை
அதிகாலை சுக்கிர ஹோரையில்
கல்யாண விநாயருக்கு மாலையிடு..
மிச்சத்த..
சொந்தகாரங்க கல்யாண வீட்டுல
கொடுத்து
கல்யாணம் ஆனவங்களுக்கா
கொடுக்க சொல்லு..
அடுத்த முகூர்த்தமே
உனக்கு கல்யாணம் நடக்கும்...
இன்னும் பரிகாரம் வேணும்னா
உன் ஜாதகத்தை எனக்கு அனுப்பு..
பேய் பிசாசு இருந்தாலும்
அடிச்சு விரட்டி
அசத்தலான கல்யாணம்
செஞ்சு வச்சுரலாம்..
அப்புறம்..
பேமெண்ட் முக்கியம்
அமைச்சரே...
செல்: 9600353748