மகனின் இழப்புக்கு அகத்தியர் கூறிய சூட்சும ரகசியங்கள் சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/subtle-secrets-agathiyar-sons-loss-siddhardasan-sundarji-jeevanadi-corrupt

மிழ் நாட்டின் மேற்பகுதி மாவட்டதிலிருந்து, ஒரு தம்பதியர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "எதைப்பற்றி தெரிந்துகொள்ள நாடியில் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

ஐயா, "எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். ஒரு மகனும் இருந்தான். அவனுக்கு 41 வயது, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேலை செய்துவந்தான். ஒருநாள் அவன் இறந்துவிட்டான் என்று தகவல் வந்தது. அந்நாட்டு அரசும், வேலை பார்த்த நிர்வாகமும், மரணத்திற்கு சரியான காரணத்தைக் கூறவில்லை. உயிரோடு வெளிநாடு வேலைக்குச் சென்றவன் சடலமாக வீட்டிற்கு வந்தான்.

என் மகன் இறப்பிற்கு சாஸ்திரம் கூறுபவர்கள், சாமி குறி சொல்பவர்கள், சமுதாய மக்கள் என ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான காரணத்தைக் கூறுகின்றார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டானென்றும், சிலர் விபத்தில் இறந்தான், இன்னும் சிலர் மற்றவர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பலவிதமாக கூறுகின்றார்கள். மகன் இறந்த சோகமும், மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாத நிலையில் மனம் உடைந்து வாழ்ந்து வருகின்றோம். என் ம

மிழ் நாட்டின் மேற்பகுதி மாவட்டதிலிருந்து, ஒரு தம்பதியர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "எதைப்பற்றி தெரிந்துகொள்ள நாடியில் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

ஐயா, "எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். ஒரு மகனும் இருந்தான். அவனுக்கு 41 வயது, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேலை செய்துவந்தான். ஒருநாள் அவன் இறந்துவிட்டான் என்று தகவல் வந்தது. அந்நாட்டு அரசும், வேலை பார்த்த நிர்வாகமும், மரணத்திற்கு சரியான காரணத்தைக் கூறவில்லை. உயிரோடு வெளிநாடு வேலைக்குச் சென்றவன் சடலமாக வீட்டிற்கு வந்தான்.

என் மகன் இறப்பிற்கு சாஸ்திரம் கூறுபவர்கள், சாமி குறி சொல்பவர்கள், சமுதாய மக்கள் என ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான காரணத்தைக் கூறுகின்றார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டானென்றும், சிலர் விபத்தில் இறந்தான், இன்னும் சிலர் மற்றவர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பலவிதமாக கூறுகின்றார்கள். மகன் இறந்த சோகமும், மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாத நிலையில் மனம் உடைந்து வாழ்ந்து வருகின்றோம். என் மகன் இறப்பிலுள்ள மர்மத்தையும், மகன் இறந்த தற்கு காரணத்தையும் அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்தோம்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். இவன் கூறுவது போன்று எந்த காரணத்தாலும் மகனுக்கு மரணம் ஏற்படவில்லை. அவன் சாப்பிட்ட உணவை, அவன் வயிற்றில் குடல் பகுதி கொஞ்சம், கொஞ்சமாக விஷத்தன்மையுடையதாக மாற்றிவந்தது. கொஞ்சம், கொஞ்சமாக உணவால், சேர்ந்த விஷம் உடலில் பரவியதால் மரணம் உண்டானது.

aga

மகன் உயிருடன் இருக்கும்போது, அவன் விரல் நகங்களை கவனித்து பார்த்துப் பார்த்து இருந்தால், இந்த உண்மை தெரிந்திருக்கும். சாப்பிடும் உணவே குடலில் விஷமாகும் நபர்களின் கைவிரல்கள் இட்லிபோல் உப்பலாகிக்கொண்டே வரும். விரல் நகங்கள் இதுபோன்று இருந்தால், சாப்பிடும் உணவே விஷமாகி குடலில், உடலில் சேர்க்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இந்த பூமியில் பிறக்கும், மனிதர்களின் மரணம் பலவிதமான முறைகளில் நிகழ்கின்றது. ஆனால் ஒவ்வொருவரின் மரணத்திற்கும், ஒரு சூட்சுமமான காரணம் உண்டு,

அதன்படிதான் மரணம் உண்டாகும். இந்த மகனின் மரணத்திற்கு இந்த தந்தையும்தான் காரணம். இவர்கள் பிறப்பின் விதிபலன் தான், அவனை மரணமடையச் செய்தது, அதனையும் கூறுகின்றேன்.

அகத்தியன் முன்னே அமர்ந்திருக்கும், இந்த தம்பதியினர், புண்ணிய ஆத்மாக்கள். கலிகால மகான்கள், ஞானிகள், குருமார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் என தங்களைக் கூறிக்கொள்ளும் ஆஸ்தீகவாதிகளுக்கும் கூட இவர்களுக்கு அமைந்தது போன்ற பிறப்பு அமையாது. கணவன்- மனைவி இறந்துபோன மகன் இம்மூவரும் மோட்சப் பிறவிகள். இனி இவர்களின் உயர், உடல், ஆத்மா, ஒரு ஆணின் விந்தில் உருவாகி, தாயின் கர்ப்பத்தில் கருவாகி, சரிரம் எடுத்துப் பிறக்கமாட்டார்கள். இனி பூமியில் பிறவியில்லாதவர்கள். இவர்களின் வம்ச தொடர்ச்சி, இந்த மகன் இறப்பின்மூலம் முடிவடைந்துவிட்டது.

ஒரு ஆண், தன் விந்தின், விதைமூலம், தன் வம்சத்தில் வாரிசுகளை, தொடர்ந்து வளர்ச்சியடைச் செய்கின்றான். பாட்டன் விந்தில் தந்தையும், தந்தை விந்தில் மகனும், மகளின் விந்துமூலம் பேரனும் பிறந்து, அந்த வம்சம் வளர்கின்றது. ஒரு வம்சம் வளர ஆண் மகனே காரணமாகின்றான். பெண் குழந்தைகள் வேறு வீட்டில் வாழச்சென்று, வேறு வம்சத்தின் கருவைச் சுமந்து, அந்த வம்சத்தை வளரச் செய்கின்றாள் என்பதே உண்மை.

இவன் மகனுக்கு 41 வயதாகியும், இவனால் அவனுக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. இவர்களும், மகளும், மோட்சம் அடைய வேண்டிய விதி அமைப்புடன் பிறந்துள்ள தால், வம்சம் வளர துணை செய்யும் ஒரு பெண்ணுடன் திருமணம் முடிக்க தடை உண்டானது. மகனுக்கு திருமணம் நடந்து,

அவனுக்கும், ஒரு ஆண் குழந்தை பிறந் திருந்தால், இவர்கள் வம்சம் வளர்ந்திருக்கும். ஆனால் இவர்களின் மோட்சம், முக்திநிலை தடைப்பட்டு இருக்கும்.

இவர்கள் தங்களின் தாய்- தந்தை, கருவில், கருப்பத்தில் இருக்கும்போதே மோட்சம் பிறவிகள் என விதி தீர்மானித்து பிறந்தார்கள். இவர்களின் விதிப்படிதான் எல்லாம் நடந்தது. தந்தை, தாய், மகன் மூவரும் மோட்சம் அடைவதால் இவனின் வம்சமும் முடிவடைந்தது.

அகத்தியர், எங்களை, மோட்சப் பிறவிகள், பூமியில் பிறவியில்லாதவர்கள், புண்ணிய ஆத்மாக்கள் என்று கூறினார். மேலும் ஞானிகள், மகான்கள், இன்னும் பிறவாவரம் வேண்டும். இனி பிறவியில்லாத நிலைவேண்டும் என்று கடவுளை வணங்கி வேண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு கிடைக்காத பெரும்பேறு, எங்களுக்கு கிடைத்துள்ளது என்பதையும் அறிந்தோம்.

இந்த பூமியில், எங்களைப்போல் கடைசிப் பிறவியாகப் பிறந்து, மோட்சம் அமையக்கூடிய அமைப்புடன், பிறந்துள்ளவர்களை அறிந்துகொள்ளும் சூட்சும ரகசியம் என்ன? என்பதையும், அகத்தியரிடம் கேட்டுக் கூறுங்கள் என்றார்.

இவன் கேள்விக்கு பதிலைக் கூறுகின்றேன் என்ற அகத்தியர், இதுவே கடைசிப் பிறவி யாகப் பிறந்து, மோட்சம் அமையக் கூடியவர் களின் விதி அமைப்பு, வாழ்க்கை நிலை, இவற்றை விளக்கமாகக் கூறுவிட்டு, அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.

என் மகனின் மரணத்திற்குண்டான உண்மையான காரணத்தையும், எங்கள் மூவரின் பிறப்பு ரகசியத்தையும் நன்கு அறிந்து கொண்டோம். என் மகனின் மரணத்தால், உண்டான புத்திர சோகத்தை, படிப்படியாக குறைத்து மனநிம்மதி அடைவோம். குழப்பத் திலும், சோகத்திலும் வாழ்ந்த எங்களுக்கு அகத்தியர் மன சாந்தியை கொடுத்துவிட்டார் என்று கூறிவிட்டு, அகத்தியரை வணங்கிவிட்டு, விடைபெற்று சென்றார்கள்.

செல்: 99441 13267

bala080324
இதையும் படியுங்கள்
Subscribe