உயர்வுக்கு வழி வகுக்கும் நட்சத்திர வழிபாடு! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/star-worship-paves-way-ascension

ஜோதிடவியின்படி பலவிதமான பரிகாரங்களின்மூலம், நலம் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்கான வழிகளும், வாய்ப்புகளும் நமது ஆன்றோர் களால் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

அவற்றுள் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை தனக்கு சாதகமாக மாற்றி செயல்படும் சூட்சுமங்கள் நிறைந்த மலர்கள், பழங்கள், உணவு, உருவம், கோவில்கள் போன்றவற்றை இறையருளால் மானிடத்தின் வசம் வழங்கியுள்ளார்கள்.

ஜாதகரீதியாக ஒரு ராசியில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூன்று நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றிலும், ஒன்பது பாதங்களில் ஏதாவது ஒரு பாதத்திலுமே அமர்ந்து தனது இயக்கத்தினை மேற்கொள்ளும்.

srE

கிரகத்தின் வலிமையானது தான் அமர்ந்து பயணிக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்து மாறுபட்டு பலனை வழங்கும் என்பது நூறு சதவிகிதம் உண்மையான நிலையாகும்.

அதன்படி 12 ராசிகளில் பதிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் தான் ஒன்பது கிரகங்களின் தன்மையை செயல்படுத்துகின்றது.

இதன்மூலம்தான் மனித வாழ்வில் பல நன்மைகள் மற்றும் தீமைகள் நிக

ஜோதிடவியின்படி பலவிதமான பரிகாரங்களின்மூலம், நலம் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்கான வழிகளும், வாய்ப்புகளும் நமது ஆன்றோர் களால் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

அவற்றுள் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை தனக்கு சாதகமாக மாற்றி செயல்படும் சூட்சுமங்கள் நிறைந்த மலர்கள், பழங்கள், உணவு, உருவம், கோவில்கள் போன்றவற்றை இறையருளால் மானிடத்தின் வசம் வழங்கியுள்ளார்கள்.

ஜாதகரீதியாக ஒரு ராசியில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூன்று நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றிலும், ஒன்பது பாதங்களில் ஏதாவது ஒரு பாதத்திலுமே அமர்ந்து தனது இயக்கத்தினை மேற்கொள்ளும்.

srE

கிரகத்தின் வலிமையானது தான் அமர்ந்து பயணிக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்து மாறுபட்டு பலனை வழங்கும் என்பது நூறு சதவிகிதம் உண்மையான நிலையாகும்.

அதன்படி 12 ராசிகளில் பதிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் தான் ஒன்பது கிரகங்களின் தன்மையை செயல்படுத்துகின்றது.

இதன்மூலம்தான் மனித வாழ்வில் பல நன்மைகள் மற்றும் தீமைகள் நிகழ்கின்றன. இதனை கையாளும்பொழுது ஒவ்வொரு நட்சத்திரத்தின் 24-ஆவது நட்சத்திரம் எல்லா பிரச்சினை களையும் தீர்க்கவல்ல நட்சத்திரமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் லக்னத்திற்கு பதினோராம் பாவகத்தில் அமர்ந்துள்ள உடைப்படாத முழு நட்சத்திரமும், சந்திரன் நின்ற ராசியான அதாவது எந்த ராசியோ அந்த ராசிக்கு 11-ஆம் பாவகத்தில் உடை படாத நடு நட்சத்திரமும், வாழ்வில் சூழ்ந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு அற்புதமான மந்திர சாவியாக செயல்படும்.

உற்றுநோக்கும்பட்சத்தில் பதினோராம் பாவகம் என்பது ஒரு மனிதனின் லாப ஸ்தானமாக அமையும்.

இது பொருள்ரீதியாகவும், வருமானம் ஈட்டி உருவாக்கும் சொத்துக்காகவும் மட்டுமல்லாமல் தனது புண்ணியத்தின் பலனை சேமிக்கும் இடமாகவும் திகழ்கின்றது.

புண்ணிய பலனை சேர்க்கும் 11-ஆம் பாவகத்தில் அமர்ந்துள்ள நட்சத்திரம் ஜாதகரின் மொத்த பிரச்சினைகளையும் தீர்க்கவல்ல அமிர்தமாகும்.

மேலும் ஒருவருக்கு எதை சார்ந்த இன்னலோ அல்லது பிரச்சினைகளோ இருக்கின்றதோ அந்தப் பிரச்சினைக்கு ஜோதிடத்தில் வழங்கப்பட்டுள்ள பாவகத் திற்கு பதினோராம் பாவகத்தில் அமைந்துள்ள நட்சத்திரத்தை வழிபடுவதன்மூலமும், குறிப்பிட்ட ஒரு செயலை தனக்கு சாதகமாக மாற்றி வெற்றிபெறும் ஆற்றலை வழங்கும்.

உதாரணமாக கடக லக்னத்திற்கு குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமானால் கடகத்திற்கு ஐந்தாம் பாவகம் விருச்சிகமாக அமையும். அப்பொழுது விருச்சிகத்திற்கு 11-ஆம் பாவகமான கன்னியில் அமையப்பெற்றுள்ள உத்திரம், அஸ்தம், சித்திரை இந்த நட்சத்திரங்களில் உடைப்படாத அஸ்த நட்சத்திரத்திற்கான வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது இவர்களுக்கு புத்திர பேரு உண்டாவது நிச்சயம்.

இதேபோன்று வருமானம் சார்ந்தோ அல்லது திருமணம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்த பாவத்திற்கு பதினோராம் பாவகத் தில் அமையப்பெற்றுள்ள நடு நட்சத்திரத்தை வழிபடும்பொழுதும், அதற்கான பரிகாரங்களை மேற் கொள்ளும்பொழுதும், எந்தவகை யான பிரச்சினையாக இருந்தாலும் தீர்த்துக்கொள்வது உறுதி.

மேலும் இந்த நட்சத்திரங்களை இயக்கும்பொழுது தாரா பலன் ரீதியாக சில பகை நட்சத்திரங்களாக வரும் சூழல் அமையும்.

அதனால் நட்சத்திரங்களுக்காக வழங்கப்பட்டுள்ள உணவை ஜாதகர் உண்ணாமல் தானம் செய்வதன் மூலமே பெரும் இன்னலை தீர்த்துக் கொள்ள முடியும்.

நட்சத்திரங்களுக்கான உணவுகள், விருட்சம், கர்மப்பதிவு, தெய்வம் போன்றவற்றை உபயோகித்து குறிப்பிடும் நட்சத்திரத்தை இயக்கு வது சிறப்பு.

நீங்கள் இயக்கம் நட்சத்திரம் அஸ்வினி யாக இருந்தால் முந்திரி பருப்பினால் செய்யப் பட்ட உணவு தானம் தருவது சிறப்பு. மேலும் சரஸ்வதி படத்தை லேமினேஷன் செய்து தானம் அளிக்கவும்.

பரணி

நெல்லிக்காய் உணவு துர்க்கை படம்

கிருத்திகை

பேரிச்சம்பழம் அனுமன் படம்

ரோகினி

பால்கோவா கிருஷ்ணர் படம்

மிருகசீரிஷம்

தேங்காயினால் செய்யப்பட்ட உணவு பொருள் சந்திரன், சூரிய, சிவன் படம்

புனர்பூசம்

கரும்பினால் செய்யப்பட்ட உணவு ஸ்ரீ ராமர் படம்

சாம்பார் சாதம் மற்றும் ஆப்பிள் தட்சிணா மூர்த்தி படம்

ஆயில்யம்

முருங்கைக்காய் ஆதிசேஷன் படம்

மகம்

கீரை, பச்சரிசி கற்பக விநாயகர் படம்

பூரம்

எலுமிச்சை சாதம் ஆண்டாள் படம்

உத்திரம்

மாதுளை மற்றும் புளிசாதம் ஐயப்பன் படம்

அஸ்தம்

ஆரஞ்சு பழம் சூரியபகவான் படம்

சித்திரை

சர்க்கரைப் பொங்கல் சாத்துக்குடி சக்கரத் தாழ்வார் படம்

சுவாதி

தேன், நரசிம்மர் படம்

விசாகம்

கல்கண்டு, திருச்செந்தூர் முருகன் படம்

அனுஷம்

வெண்பொங்கல் மகாலட்சுமி படம்

கேட்டை

வல்லாரை வராகப் பெருமாள் படம்

மூலம்

கொய்யாப்பழம் ஆஞ்சனேயர் படம்

பூராடம்

காளான் ஜம்புகேஸ்வரர் நீரில் இருக்கக் கூடிய சிவன் படம்

உத்திராடம்

பலாப்பழம் விநாயகர் படம்

திருவோணம்

சீதாப்பழம் மகாவிஷ்ணு படம்

அவிட்டம்

தக்காளி சாதம் அனந்தசயன பெருமாள் படம்

சதயம்

கருப்பு திராட்சை பைரவர் படம்

பூரட்டாதி

மாம்பழம் குபேரன் படம்

உத்திரட்டாதி

அண்ணாச்சி திருப்பதி பெருமாள் படம்c

ரேவதி

கொத்தமல்லி சாதம் சனிபகவான் படம்

மேற்கூறிய உணவுப் பொருட்களைத் தான மாகவும், படங்களை சிறிய அளவில் லேமினே ஷன் செய்து கோவில்களின்மூலம் தானம் செய்வதும் சிறப்பை அளிக்கும்.

செல்: 80563 79988

bala070225
இதையும் படியுங்கள்
Subscribe