"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதனை எவ்விதம் கட்டிக்காப்பது, செல்வமானது குறைவில்லாது நிறைவாகப் பெருக என்னசெய்வது என்பதனையும் நாம் அறிந்திருக்க வேண்டும். செல்வத்தைக் கட்டிக்காக்க, செல்வம் பெருக ஜோதிட சாஸ்திரம் ஏதேனும் ஆலோசனைகளை வழங்குகிறதா என்பதனை இங்கே காண்போம்.

ஜோதிடமென்பது மனித சமூகம் வளம்பெற்று வாழவே அமைந்த கலை என்பதனை அத்துறையின் பல்வேறு நூல்களை ஆய்வுசெய்யும்போது அறிந்து கொள்ள முடிகின்றது. முகூர்த்த சாஸ்திரம் என்னும் நல்ல நாட்களைத் தேர்வுசெய்யும் பகுதியாயினும், அது போன்று திருமணத்திற்காகப் பார்க்கப்படும் பத்துப் பொருத்தங்களில் ராசிப் பொருத்தம் என்னும் பகுதியாயி னும் மற்றும் ஜாதகம் பார்க்க வகுக்கப்பட்ட ஜோதிட விதிகள் போன்றவையாயினும் மனிதசமூகம் செல்வ வளம் பெற பல நல்ல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

ff

Advertisment

பொதுவாக முகூர்த்த சாஸ்திரங்களில் தீய காலங்கள் என கூறப்பட்ட ஒன்பது தோஷங்களில் கண்டாந்த காலத்திலும், விஷ்டி என்னும் பத்திரைக் கரணம் வரும் நாட்களிலும், லாடம் வைதிருத தோஷம் என பஞ்சாங்கக் கணிதம்மூலம் கண்டறியப்படும் நாட்களிலும் முகூர்த்தங் கள்- அதாவது சுப காரியங்கள் செய்யாதிருப்பதே நலம். அவ்வாறே இந்த தீய காலங்களில் வாஸ்து செய்தல், முதலீடு செய்தல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். காரணம் நவ தோஷங்களில் விஷ்டி கரணத் தில் சுப காரியத்தைச் செய்தால் அவை முற்றிலும் அழிந்து விடுமென சாஸ்திரம் சொல்கிறது. எனவே விஷ்டி என்னும் பத்திரைக் கரணத்தில் முதலீடு செய்யாதிருப் பது, சுப காரியங்களைச் செய்யாமலிருப்பது பொருளா தார ஏற்றத்தைத் தருமென்று உணர்ந்துகொள்ள முடிகிறது. "விஷ்டியாம் சர்வநாசஞ்சா' என்னும் சொல்லாடல் இதனைத் தெள்ளத்தெளிவாக நமக்குத் தெரிவிக்கிறது.

அதுபோன்று கண்டாந்த நட்சத்திரக் காலங்கள் (அஸ்வினி, மகம், மூல நட்சத்திர முதல் பாதம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர கடைசி பாதம்); அது போன்று திதி கண்டாந்தம் என்னும் பஞ்சமி, சஷ்டி ஆகியவை இடையேயும், தசமி, ஏகாதசி இடையே யும், பௌர்ணமி அல்லது அமாவாசை, பிரதமைக் கிடையான சந்திப்பில் இரண்டு நழிகை என்னும் 48 நிமிட நேரம்; ராசி கண்டாந்தம் என்னும் கடகம்-

சிம்மம், விருச்சிகம்- தனுசு, மீனம்- மேஷம் இடையேயான சந்திப்பில் ஒரு நாழிகை என்னும் 24 நிமிட நேரம் சுபகாரியங்கள் செய்தால் தீவிபத்து, தீராத பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், இந்த காலங்களில் சுப காரியங்கள், புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

Advertisment

இவ்வாறு பஞ்சாங்கத்தில் லாட சக்கர கணிதத்தால் ஒவ்வொரு மாதம் கண்டறியப்படும் நட்சத்திரங்கள் இரண்டு, லாட வைதிருத நட்சத்திரங்கள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த நாட்களில் சுப காரியங்களை செய்யாமலிருப்பது- அதுவும் பண முதலீடு சம்பந்தமான காரியங்கள் செய்யாதிருப்பது பண இழப்பைத் தவிர்ப்பதோடு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கும் வழிவகுக்கும். இதுபோன்று பாவகிரகச் சேர்க்கை, பார்வையுள்ள லக்னங்களும் சுப காரியங்களுக்கு விலக்க வேண்டியவையாகும்.

இவ்வாறு முகூர்த்த சாஸ்திரங்கள் நாம் செல்வநிலையில் வளம்பெற்று விளங்க பல அறிவுரைகளை நமக்கு வழங்குகின்றது.

அதேபோல் ஜோதிடத் துறையில் திருமணப் பொருத்தப் பகுதியைப் பார்த்தோ மென்றால், அங்கும் மனித சமூகம் செல்வ வளம்பெற சில ஆலோசனைகள் கூறப்பட்டிருப் பதைக் காணலாம். அது எவ்வாறென்றால் ஒரு பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசியானது இரண்டாவது ராசியாக அமைந்தால் செல்வம் குன்றிப்போகுமென்று கூறப்பட்டுள்ளது. அதிலும் பெண்- ஆண் இருவருடைய ராசிகளில், பெண்ணின் ராசியானது மீனமாகி, கணவன் ராசியானது மேஷமாக அமைந்தாலும், பெண் ராசியானது கடகமாகி, ஆணின் ராசியானது சிம்ம ராசியாக அமைந்தாலும், பெண் ராசியானது விருச்சிகமாகி, ஆணின் ராசியானது தனுசு ராசியாக அமைந்தாலும் தம்பதிகள் செல்வமற்ற வர்களாக அல்லது பலவகையில் செல்வம் அழியும் நிலையைப் பெற்றவராக இருப்பார்கள் என்று பிரசன்ன மார்க்க நூல் கூறுகிறது.

எனவே எவரொருவர் வாழ்நாளில் செல்வத்தில் ஏற்றம் பெற்று வாழவேண்டும்- செல்வச் செழிப்போடு வாழ வேண்டுமென்று நினைக்கிறார் களோ, அவர்கள் மண மகளைத் தேர்வு செய்யும் போது, மனைவியின் ராசிக்கு இரண்டாவது ராசி தன்னு டைய ராசியாக வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இவ்விதம் ராசிகள் அமைந்து மணமுடித்த தம்பதியினர் அதற்குப் பரிகாரமாக இராமேஸ்வரம் சென்று தம்பதிகளாக புண்ணிய நீராடுவதும், பௌமான ஸூக்தம் தானத்துடன் வேள்வியாக செய்வதும் நன்று. இதனால் தீமைகள் விலகி செல்வ வளம்பெற்றுவாழ வழிசெய்யுமென நூல்கள் கூறுகின்றன.

ஒருவர் தன்னிடமிருக்கும் செல்வம் பெருகவேண்டும்- தங்கம் பெருக வேண்டுமென்று நினைத்தால், அவர் குரு பகவான் உச்சவீட்டில் அல்லது சொந்த வீட்டில் அல்லது நட்புவீட்டில் இருக்கும் போது, குருபகவான் அமர்ந்த ராசியை லக்னமாகக்கொண்டு தங்கம் வாங்குவது, பண முதலீடு செய்தால் அவர்களின் செல்வம் பெருகும்; தங்கம் பெருகும் என்று முகூர்த்த மாதவியம் என்னும் நூல் சொல்லுகிறது. மேலும் லக்னத்தில் குரு பகவானும், நான்கு அல்லது ஏழில் சந்திரனும், பத்தில் சூரியனும் அமைகின்ற வேளை, லக்னத்தில் குரு அமரும்படியாக முகூர்த்தம் அமைத்து செல்வத்தைக் கையாண்டீர்கள் என்றால், பணத்தை முதலீடு செய்தீர்கள் என்றால், தங்கத்தை வாங்கினீர்கள் என்றால் செல்வம் பெருகும்; வாழ்வில் ஏற்றத்தோடு வளம் பெறுவீர்கள் என்று முகூர்த்த சாஸ்திர நூல்கள் சொல்கின்றன.

செல்: 94438 08596