5-ஆம் எண்காரர்கள் புதுமை விரும்பிகள். புதியதோர் உலகம் படைக்கப் பிறந்தவர்கள். "சீக்கிரம், சீக்கிரம்' என்று மற்றவர்களுக்கு உந்துதல் கொடுப்பவர்கள். ஈஸ்வர சித்தம் மிகுந்தவர்கள். எண்கணித ஜோதிடத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களின் நடுவில், வில், தராசு போன்று நின்று சமமாக பலன்தரக்கூடியது 5-ஆம் எண். புதன் கிரகம் 5-ல் குறிக்கப்படுகிறது. 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 5-ஆம் எண்ணிற்குட்பட்டவர்களாவர். 4-ஆம் எண்காரர்கள் சீர்திருத்தவாதிகள் என்று குறிப்பிட்ட நிலையில், 5-ஆம் எண்காரர்கள் சீர்திருத்தத்தை சமநோக்குடன் ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள்.
இது வசீகரமான எண். மற்ற எல்லா எண்காரர்களையும் வசீகரிக்கும் வல்லமைகொண்டது. இவர்கள் அதிவேகமான குணம் படைத்தவர்கள். வேகமாகப் பேசுவார்கள். அடுத்தவர் களுக்குப் புரியவில்லையென்றால் கோப மடைவார்கள். மற்றவர்களுக்கு பல நாள் யோசனைக்குப்பிறகு தோன்றும் அறிவார்ந்த சிந்தனைகள் இவர்களுக்கு மின்னல் வேகத்தில் தோன்றும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் காதல் உட்பட அனைத்தும் உலகமறிந்த ரகசியமாக இருக்கும்.
எந்தவிதமான அபாயகரமான செயலாக இருந்தாலும், துணிச்சலுடன் செயல்பட்டு முடிப்பர். புதுமையான கண்டுபிடிப்புகள் அனைத்தும் நன்மைக்கே என்ற எண்ணமும், அவற்றைப் பயன்படுத்தும் ஆர்வமும், துடிப்பும் கொண்டவர்கள். நாகரிக மாற்றம் இவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும். மிகச் சிறிய வயதிலேயே யாருடன் அதிக நெருக்கமாகப் பழகினாலும், அவர்களுடைய நல்ல கெட்ட குணங்களை அப்படியே உள் வாங்கிக்கொள்ளும் கொண்டவர்கள். அதனால், நல்ல பழக்க- வழக்கம் கொண்டுள்ளவர்களுடன் நட்பில் இருப்பது மிக அவசியம். இன்று பிடித்த விஷயம் நாளை பிடிக்காமல் போகலாம். தினமும் மனம் மாறுதலை விரும்பும். கஷ்டப்பட்டுக் கிடைத்த வெற்றிகூட சில நாட்களில் சலிப்பை ஏற்படுத்தும். இதனால் திருமண வாழ்விலும் மாறுதலைத் தேடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அதனால், இந்த எண்காரர்களை நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ற துணைவன்- துணைவியை சேர்த்துவைத்தால் நலம் பயக்கும்.
செய்ந்நன்றி மறவாத குணம் நிறைந்த வர்கள். சந்தோஷம்- துக்கம் எதுவானாலும் சிறிது நேரமே பாதிப்பை ஏற்படுத்தும். மனமாற்றமும், மனவேகமும், அஞ்சாத தன்மையும் இவர்களை புது எழுச்சிபெற வைக்கிறது.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் "கண்டதும் காதல்' ரகத்தைச் சேர்ந்த வர்கள். அதேபோல் அவசரப்பட்டு ஊடல் கொள்வதிலும் வல்ல வர்கள். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் களால் மனதார நேசிக் கப்படுவார்கள். 5-ஆம் எண்காரர்களுக்கு 5, 9-ல் பிறந்தவர்கள்மீது காதல் ஏற்படும். மற்றபடி கூட்டு எண்ணுக் கும் பொருத்தமானவர்களை மணந்து கொண்டால் திருமண வாழ்க்கை நீடிக்கும். கூட்டு எண் 5-ஆக இருந்தால் 1, 3, 6, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்து கொள்ளலாம். திருமணம் செய்துகொள்ள வேண்டிய தேதி 9, 18, 27. தேதி, மாதம், வருடம் கூட்டிவரும் தொகை 5, 8-ல் அமையக் கூடாது.
5-ஆம் எண்ணில் பிறந்து கூட்டு எண் 6, 1, 9 எனில் நல்ல உயரமும், பருமனும் உடையவராவர். ஒளி வீசும் முகமும், சுண்டியிமுக்கும் அழகும் கொண்டிருப்பர். பார்வையிலும், பேச்சிலும் காந்த சக்தி இருக்கும். எண்ணின் பலம் குறைந்திருந்தால் உடல் இளைத்து எலும்புக்கூடுபோல் காணப்படுவர். சரியான எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் ஆதிக்க பலம் அதிகரிக்கும்.
எப்போதும் யோசனை செய்தல், மன நிம்மதி குறைதல், தூக்கமின்மை, நரம்பு மண்டல பாதிப்பு, பாரிசவாயு, மூளை பலவீனம், சித்த பிரம்மை, கால்- கை வலிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சரியான எண்ணில் பெயர் அமைத் துக்கொண்டால் நன்மையளிக்கும்.
செல்: 99400 78841