எண்- 3 சக்தியைக் குறிப்பதாகும். குரு கிரகத்தின் எண். நமது இந்திய நாட்டின் பெயரெண் 12- 3. இது சமாதானத்தின் எண். எனவேதான் உலகிற்கே சமாதானத்தை எடுத்துக்கூறி வருகிறது.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் யாவரும் மூன்றாம் எண்ணிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள். தேசப்பற்று உடையவர்கள். அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். பிறர் துன்பம்கண்டு கலங்கும் உள்ளம்கொண்டவர்கள். பெரியவர்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் இவர்கள், தன்னைவிட வயதில் குறைந்தவர்கள் தனக்குக் கட்டுப் படவேண்டுமென நினைப்பார்கள். பழமைவாதிகள். இப்படித்தான் வாழவேண்டும் என்னும் கட்டுப் பாட்டுடன் வாழ்பவர்கள்.
பிறரிடமிருந்து எந்தவிதமான உதவியையும் பெறத் தயங்குவார்கள். தன்னை எவரிடத்தும் தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள். சொல், செயல், உழைப்பு ஆகிய மூன்று வழிகளிலும் மேலோங்கி இருப்பர். அவரவர் தகுதிக்கேற்ற திறமைகளையும் பொறுப்புகளையும் வகிப்பார்கள். "எண்ணித் துணிக கருமம்' என்னும் குறளுக்கேற்ப மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக விளங்கும் இவர்களை யாராலும் வெல்ல முடியாது. சிறுவயதிலேயே குடும்பப் பொறுப்பையேற்று நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுவார்கள். குடும்பமென்று வந்து விட்டால் தங்களது எல்லா லட்சியங் களையும் உதறிவிட்டு குடும்பத்துடன் வாழ முற்படுவர். ஆனால் இந்த எண் காரர்கள் ஒருபோதும் துரோகிகளாக இருக்க மாட்டார்கள்.
எண்களின் ஆற்றல் குறைந்து காணப்பட்டால், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளவும் நேரிடும்.
கௌரவப் பதவிகள், ஆலோசகர்கள், பேராசிரியர் கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், வங்கி உயரலுவலர்கள், ஆடிட்டர் கள் போன்ற துறைகளில் இந்த எண்ணில் பிறந்தவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். மேலும் உடற்பயிற்சிக்கூடம் நடத்துதல், வட்டிக்குப் பணம் கொடுதல், மளிகைக் கடைகள், உணவு விடுதிகள், இராணுவம், பிரசங்கம் செய்தல், இறைப்பணி, விளையாட்டுத்துறை, இசைப் பணி ஆகியவற்றில் ஈடுபட்டாலும் புகழ் பெறலாம். ஆனாலும் சமுதாய நன்மைக்குப் பயன்படும் துறைகளில், தொழில்களில்தான் மிகத் திருப்தியடைவார்கள்.
தோல் சம்பந்தமான நோய்கள் வந்தால் எளிதில் குணமடையாது. நரம்புக் கோளாறுகள் ஏற்படக்கூடும். பக்கவாதம், அஜீரணக்கோளாறு ஏற்படவும் வாய்ப்புண்டு.
மூன்றாம் எண்ணில் பிறந்த வர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்த வர்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வார்கள். ஆனாலும் திருமணம் என வரும்போது விதி எண்ணுக்குப் பொருத்தமான எண்ணில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்வது மிகுந்த நன்மையளிக்கும். ஒருவருக் கொருவர் அன்பின்வழியே உலக வாழ்க்கையை வாழ்வர். இவர் களுக்குக் குறைவில்லா செல்வமும் நிறைந்த இறையருளும் கிடைக்கப்பெறும். ஆனால் மூன்றாம் எண்காரர்கள் எட்டாம் எண்காரர்களை மணக்கக் கூடாது. இரண்டாம் எண் காரர்களை மணந்து கொள்ளலாம். மூன்றாம் எண்ணுக்கு இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், ஒன்பதாம் எண்காரர்கள் நன்மைகள் புரியும் மனிதர்களாக வும் இருப்பர். ஆறாம் எண்காரர்கள் செய்யும் உதவிகள் கூட தீமையில் முடியும். ஐந்தாம் எண்காரர்களால் நன்மை- தீமை இரண்டும் கலந்து ஏற்படும். திருமணத் தேதியும் கூட்டு எண்ணும் பொருத்தமான தேதியில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
3, 12, 21, 30; 9, 18, 27 ஆகிய தேதிகளில் திருமணம் செய்துகொள்ளலாம் 5, 6, 8 ஆகிய தேதிகளில் கண்டிப் பாகத் திருமணம் செய்யக்கூடாது.
செல்: 99400 78841