ரு தாய், சுமார் 36 வயதுள்ள, தன் மகனுடன் ஜீவநாடியில் பலன் காண வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, அவர்களிடம் என்ன காரணமாக நாடியில் பலன் தெரிந்துகொள்ள வந்துள்ளீர்கள் என்றேன்.

ஐயா, "இவன் எனது மகன். இவனுக்கு திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்த்தபோது, ஒவ்வொரு ஜோதிடரும், வெவ்வேறுவிதமான தோஷங்களைக் கூறி அதற்கு பரிகாரம் செய்யச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் செய்துமுடித்தோம். இன்னும் சில ஜோதிடர்கள் இவன் பிறந்த நட்சத்திரம் தோஷமானது, அவ்வளவு சீக்கிரம் திருமணம் முடியாது என்று கூறுகின்றார்கள்.

இவனது 27 வயதில் திருமணம் செய்துவைக்க பெண் தேடத் துவங்கினேன். இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றேன். எனது உறவுப் பெண் இருவர் தங்களைப் பற்றிக் கூறி, தங்களிடம் ஜீவநாடியில் பலன் பார்த்தால், என் மகனின் விதிபற்றியும், திருமண தடைக்கு காரணத்தையும் அறிந்துகொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் எழுத்து வடிவாகத் தோன்றிய அகத்தியர். இந்த தாய் அகத்தியனிடமே பொய் கூறுகின் றாள். இவள் மகனுக்கு ஏற்கெனவே தன் உறவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தாள். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அந்தப் பெண் இவன் மகனுடன் வாழமுடியாது என்று கூறி, மகனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இப்போது இவனுக்கு இரண்டாம் தாரமாக மறுபடியும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க பெண் தேடி அலைகிறாள். இது உண்மையா? இல்லையா? என்று அவளையேக் கேள் என்றார்.

Advertisment

அந்த தாயிடம், அகத்தியர் கூறியதைச் சொல்-, இது உண்மையா என்றேன்.

h

அகத்தியர் கூறியது உண்மைதான். என் குடும்ப உறவு விட்டுப்போகக்கூடாது என்று என் தம்பி மகளையே திருமணம் செய்துவைத்தேன். அவள் இவனுடன் வாழாமல் அவனை விட்டுப்பிரிந்து போய்விட்டாள். இப்போது இரண்டாம் தாரத்திற்கு பெண் தேடி வருகின்றேன்.

அகத்தியரிடம் பொய்தான் கூறினேன். என்னை மன்னித்து, என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைய அவர்தான் வழி காட்டவேண்டும் என்றார்.

இந்த தாய்க்கு "தான்' என்ற அகம் பாவமும், ஆணவ குணமும் உண்டு. இதனை அகத்தியன் என்னிடமே காட்டுகின்றாள். என்னிடம் விதிபற்றி கர்மவினைபற்றி விடை கேட்டுவருபவர்கள் பொய் சொல்ல தேவையில்லை. தங்கள் பிரச்சினையைப் பற்றி, உண்மையைக் கூறினால் நானும் சரியான வழியைக் கூறுவேன். பொய் கூறி பலன் கேட்டால் நானும் பொய்யான பதிலைக் கூறி, தவறான வழிகளைத்தான் காட்டுவேன். இருந்தபோதும் பொய்களைக் கூறுவது மனிதர்களின் குணம் என்பதால் இவளை மன்னித்தேன். இந்த மகனைவிட்டு முதல் மனைவி பிரிந்துசென்ற காரணத்தையும், அடுத்து இவனுக்கு இரண்டாவது மனைவியாக வரப்போகின்ற பெண்ணைப் பற்றிய விவரங்களையும் கூறுகின்றேன். அறிந்துகொள்ளச் சொல் என்று கூறிவிட்டு பலன் கூறத் தொடங்கினார்.

இவள் மகன், தனது முற்பிறவியில், ஒரு பெண்ணை விரும்பி, அவளையே திருமணம் செய்துகொள்வதாக கூறி, சத்தியம் செய்து, அவளுடன் நெருங்கி பழகிவந்தான். இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டில் வசித்தாலும் கணவன்- மனைவிபோலவே வெளியில் வாழ்ந்துவந்தார்கள். இவர்களின் பழக்கம் சுமார் நான்கு ஆண்டுகள் நீடித்தது. இவனுக்கு ஒரு அக்காள் இருந்தாள். இவள் அந்தப் பெண்ணிடம் எனது அக்காளின் திருமணம் முடிந்தவுடன், எனது பெற்றோரிடம், நமது உறவைப் பற்றிக்கூறி அவர்கள் சம்மத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவளிடம் சத்தியம் செய்து நம்ப வைத்துவிட்டான்.

இவன் அக்காள் திருமணம் முடிந்தது. இவனின் பெற்றோர், தங்கள் உறவிலேயே, ஒரு பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்ய முடிவுசெய்தார்கள். இவன் குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கும், பெற்றோருக்கும் பயந்து, தான் விரும்பிப் பழகும் பெண்ணைப் பற்றியும் அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறாமல், குடும்பத்தினர் பார்த்து கூறிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்.

இவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை, இவனுடன் பாசமாக பழகிய பெண் அறிந்துகொண்டாள். இவனை அவளால் மறக்கவும் முடியவில்லை. இவன் தன்னை ஏமாற்றியதை மன்னிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. இனி தனக்கு ஒரு வாழ்வு தேவையில்லை என்று மனம் துணிந்து, வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டாள்.

தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன, அந்தப் பெண்ணின் ஆத்மா, இவன்மீது கொண்ட கோபம் குறையாமல், இப்பிறவியிலும் இந்த மகனைச் சுற்றியே அலைந்து, இவன் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவிடாமல் தடையை ஏற்படுத்திவருகின்றது.

அந்த ஆத்மா சாந்தி அடைந்தால்தான், இவன் குடும்ப வாழ்க்கை மனைவியுடன் சுகமானதாக அமையும். இல்லையேல் இந்த தாய், தன் மகனுக்கு எத்தனை பெண்ணை திருமணம்செய்து வைத்தாலும், அந்தப் பெண் இவனுடன் வாழாமல் பிரித்து வைத்து விடும்.

முற்பிறவியில், இவளால் ஏமாற்றப்பட்டு, நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டு இறந்துபோன அந்தப் பெண்ணின் ஆத்மா, இவன்மீது கோபம் தீர்ந்து, ஆத்ம சாந்தி அடைய, நான் கூறும் பிரார்த்தனையை செய்யச் சொல் என்று கூறி, பிரார்த்தனைகளை செய்யும் முறைகனையும் கூறிவிட்டு, அவனுக்கு அடுத்து, மனைவியாக வரப்போகும் பெண்ணைப் பற்றிய விவரங்களையும் கூறிவிட்டு, அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர், நாடிமூலம் கூறியதைக்கேட்ட தாயும், மகனும் இதுநாள் வரை, இவனின் திருமணத்தடைக்கு காரணம் தெரியாமல், பரிகாரங்களைச் செய்து அலைந்துகொண்டு இருந்தேன். இப்போது தெரிந்துகொண்டேன். அகத்தியர் கூறியபடியே அனைத் தையும் செய்து, அவர் அடையாளம் காட்டிய பெண் அமைந்தால், அந்தப் பெண்ணையே இவனுக்கு திருமணம் செய்து வைக்கின்றேன் என்று கூறி, விடைபெற்று சென்றார்கள்.

செல்: 99441 13267