ணவன்- மனைவி இருவர், ஜீவநாடியில் பலன்காண வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.

இவள் எனது மனைவி. எங்களுக்கு திருமணம் முடிந்து, ஐந்து வருடங்களாகின்றது. குழந்தை பாக்கியம் தடையாகிக் கொண்டே வருகின்றது. இதுவரை மூன்றுமுறை கர்ப்பம் அடைந்தாள். மூன்றுமுறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. கர்ப்பம் உருவானவுடன், டாக்டர்களிடம் முறையாகச் சென்று, சிகிச்சை எடுத்துகொண்டோம்.

அவர்களும் குழந்தையின் வளர்ச்சி நன்றாக உள்ளதென்று கூறுவார்கள்.

ஆனால் திடீரென்று, கர்ப்பம் கலைந்துவிடும். இது போன்று மூன்றுமுறை கரு கூடி கர்ப்பம் கலைந்துவிட்டது.

ss

ஜோதிடர்கள் பலரிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். அவர்கள் ஏதேதோ, தோஷங்களைக் கூறி, பலவிதமான பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்கள். சில ஜோதிடர்கள் இந்தப் பிறவியில் உங்களுக்கு பிள்ளையே பிறக்காது என்று கூறினார்கள். மேலும் அப்படிப் பிள்ளைப் பிறந்தாலும், அது அற்ப ஆயுளில் இறந்துவிடும் என்று கூறுகின் றார்கள். எங்கள் நிலையை எனது நண்பர் ஒருவரிடம் வருத்தப்பட்டுக் கூறினேன். மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று நானும், எனது மனைவியும் எண்ணியுள்ளோம் என்று அவரிடம் கூறினேன்.

நண்பர், என்னிடம் ஜோதிடர்கள் கூறியதைக் கேட்டு மனம் ஒடிந்து கலங்காதீர்கள். இன்றையநாளில் ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற எண்ணம் உருவாகிவிட்டது. நமது பிரச்சினைக்கு தடை, சிரமங்களுக்கு காரணத்தையுயு, தடை விலக வழிமுறைகளையுயு கேட்டு, நமக்கு ஜோதிடர்கள் வழி கூறுவார்கள் என்று அவர்களிடம் சென்றால், அவர்கள் கிரகங்கள் தோஷ நிலையில் உள்ளது. பரிகாரங்களைச் செய்யுங்கள் என்றுதான் அனைத்து ஜோதிடர்களும் கூறுகின்றார்கள். நமது பிரச்சினைகள் தீர வழி கூறுவது இல்லை. கிரகங்களைச் சொல்லி நம்மை பயம் அடையத்தான் செய்துவருகின்றார்கள்.

Advertisment

ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்களைச் செய்தும், இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பிரச்சினை தீரவில்லையென்றால் அவர்கள் கூறியது அனைத்தும் பொய் என்று நினைத்துக்கொள்ளுங்கள். கவலைப்படாதீர்கள் என்று என ஆறுதல் கூறிய அவர், உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? கருக்கலைய காரணம் என்ன என்று அகத்தியர் ஜீவநாடியில் பலன் கேளுங்கள். அகத்தியர் என்ன கூறுகின்றார் என்று அறிந்துகொண்டு, அதன்பின்பு, எந்த முடிவையும் எடுக்கலாம் என்று கூறி உங்கள் செல்போன் நம்பரைத் தந்தார். அதனால் தான் உங்களை நாடிவந்தேன்.

அகத்தியர்தான் எங்களுக்கு நல்ல வழிகாட்டி. எங்கள் குறையைத் தீர்க்க வேண்டும்'' என்றார்.

ஜீவநாடி ஓலையை பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

Advertisment

இவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டென்று கூறிவிட்டு பலன் சொல்லத் தொடங்கினார்.

குழந்தைத் தடைக்கு பல காரணங்கள் உண்டு. இவர்களுக்கு புத்திரத் தடை ஏற்படக் காரணத்தைக் கூறுகின்றேன். இருவரும் தங்களது முற்பிறவியில், செய்த பாவம்தான், இந்த பிறவியில், புத்திரத் தடையை அனுபவிக்கச் செய்கின்றது.

இந்த மகன் முற்பிறவியில், சித்த மூலிகை வைத்தியம் செய்து வந்தான். சித்தர்கள் நாங்கள், வைத்திய முறையில் மூலிகைகளும், பாஷனங் களையும், ஒரு உயிரைக் காப்பாற்ற, நோய் தீர்க்க மட்டுமே கூறினோம். ஆனால் இவன் பணத்திற்காக, மூலிகைகளைக் கொண்டு, மாதர்களின் கர்ப்பத்தைக் கலைத்து, பணம் சம்பாதித்து சுகமாக வாழ்ந்தான்.

ஒரு தாயின் கர்ப்பத்தில், கரு உருவானபோதே, அது உயிர்பெற்று வளரத் தொடங்குகின்றது. கருவிலுள்ள உயிரைக் கொன்றாலும், பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துகொண்டிருக்கும், மனிதர்களைக் கொன்றாலும், இரண்டும் கொலை செய்த பாவம் (பிரம்மஹத்தி தோஷம்)தான். இவன் முற்பிறவியில், அற்ப ஆயுளில் அந்த உயிரைக் கொன்றதால், உண்டான பாவம், இந்தப் பிறவியில், இவனுக்கு பிறக்க வேண்டிய குழந்தைகளை, மனைவியின் கருவைக் கலைத்துவிடுகின்றது.

இவன் மனைவி யின் முற்பிறவியில், இவளுக்கு மூன்று குழந்தைகள். நான்காவதாக, ஒரு கர்ப்பம் உண்டானது. மூன்று குழந்தை கள் இருக்கும்போது 4-ஆவது குழந்தை வேண்டாம் என்று அந்தக் கருவைக் கலைத்துவிட்டாள்.

அதன்பிறகு இவளின் மூன்று குழந்தைகளில் முதல் குழந்தை இறந்து விட்டது. கருவில் வளர்ந்த குழந்தையைக் கொன்றதால், இவளுக் கும் சிசுஹத்தி தோஷம் பாதிப்பைத் தந்து, கர்ப்பத்தைக் கலையச் செய்கின்றது.

கணவன்- மனைவி இருவரும் தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால், இப்பிறவியில், ஒரு குழந்தையை அடையமுடியாமல் தடுத்து, புத்திர சோகத்தை அனுபவிக்கச் செய்கின்றது.

முற்பிறவியில் நாங்கள் செய்தபாவம், நிவர்த்தி யாகி, ஒரு குழந்தையை அடைய அகத்தியர்தான் வழிகாட்ட வேண்டும் என்றனர்.

முற்பிறவி பாவம் தீர்வதற்கு வழி கூறுகின்றேன். அதனை சரியாகச் செய்தால், பாவம் நிவர்த்தியாகி, அடுத்த ஆறு மாதத்தில், மனைவி கர்ப்பம் தரிப்பாள். நீண்ட ஆயுளுடைய அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியபடியே செய்கின்றோம். எங்கள் மனம் நிம்மதி அடைந்தது என்று என்னிடம் கூறிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்கள்.

ஜோதிடர்கள் கூறும், ராகு- கேது பாம்பைக் கொன்ற தோஷம், புத்திரத் தடையை உருவாக்குவது இல்லை. முற்பிறவியில் செய்த பாவங்களே, குழந்தை பாக்கியத்தை தடுகின்றது என்பதை நானும் புரிந்துகொண்டேன்.