கிரகங்கள் சில விவரங்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/some-details-planets-s-vijayanarasimhan

சூரிய பாதையில், சூரியன் மிக அதிகமாக மின்காந்த அலைகளைக் கொண்டதாகும். நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்ட பால்வெளி மண்டலத்தில், சூரிய பாதையானது ரம்யமான இரவில் நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் துகள்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை சூரியனை அதே திசையில் சுற்றிவருகின்றன. சூரியனின் வடதுருவத்தில் மேலிருந்து கீழாக நோக்குகையில், சரியான கடிகாரச் சுற்றில் மாறுபட்டு சுற்றுவதுபோல் காட்சியளிக்கின்றன. கிரகங்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன.

ராசி மண்டலத்திலிருக்கும் சக்தி களை கிரகித்துத் திரும்ப அனுப்பும் "ரிலே' நிலையங்களாகக் கோள்கள் செயல்படுகின்றன. நாம் கிரகங்களின் விதவிதமான கலப்புகளாலும், சக்திகளாலும், பாகைகளாலும் கட்டுப் படுத்தப்பட்டுள்ளோம். முதன

சூரிய பாதையில், சூரியன் மிக அதிகமாக மின்காந்த அலைகளைக் கொண்டதாகும். நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்ட பால்வெளி மண்டலத்தில், சூரிய பாதையானது ரம்யமான இரவில் நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் துகள்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை சூரியனை அதே திசையில் சுற்றிவருகின்றன. சூரியனின் வடதுருவத்தில் மேலிருந்து கீழாக நோக்குகையில், சரியான கடிகாரச் சுற்றில் மாறுபட்டு சுற்றுவதுபோல் காட்சியளிக்கின்றன. கிரகங்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன.

ராசி மண்டலத்திலிருக்கும் சக்தி களை கிரகித்துத் திரும்ப அனுப்பும் "ரிலே' நிலையங்களாகக் கோள்கள் செயல்படுகின்றன. நாம் கிரகங்களின் விதவிதமான கலப்புகளாலும், சக்திகளாலும், பாகைகளாலும் கட்டுப் படுத்தப்பட்டுள்ளோம். முதன்முதலில் நாம் பூமியில் பிறக்கும்போதே நமது மூச்சோடு கலந்துவிடும் இந்த கிரக சக்திகள், நம் ஒவ்வொருவருக்கும் குத்தப்படும் கிரகத்தின் முத்திரையாகும். இந்த சுவாசமானது தன்னுடன் கிரக சக்திகளைக்கொண்டு, நம் வாழ்நாளில் கடைசி மூச்சுள்ளவரை தொடர்கிறது. ஒவ்வொரு கிரகத்திற்குமுள்ள தனது தனி காந்த அலைகளைச் செலுத்தி கிரக சக்தியாகி, அதுவே நாம் பிறக்கும்போது நம் ஜாதகமாகப் பிரதிபலிக்கிறது அல்லது பதிவு செய்யப்படுகிறது.

dd

எனவே, இந்த கிரகங்கள் ஒரு "ஏரியல்' போல் கிரக சக்திகளை கிரகித்து, அதை நாம் உணர்வோடுள்ளபோதும் இல்லாதபோதும் நம்மோடு இணைத்து வைக்கிறது. நம்மைச்சுற்றி நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை நம்மை நினைக்க வைக்கிறது.

ஒளி கிரகங்களான சூரிய- சந்திரர் களை கிரகங்களென்று அழைக்க முடியாவிட்டாலும், அவை, மிக முக்கியமான கிரகங்களாகத்தான் கருதப்படுகின்றன. மற்ற ஐந்து கிரகங்களில் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவிலுள்ள சுற்றில் புதனும் சுக்கிரனும் இருப்பதால் அவை உட்கிரகங்கள் என்றும்; பூமியின் வெளிச்சுற்றில் இருக்கும் குரு, செவ்வாய், சனி ஆகியவை வெளிக்கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதற்கும் வெளிச்சுற்றிலுள்ள யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை வேத ஜோதிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ராகு- கேதுக்கள் உண்மையான கிரகங்கள் அல்ல. அவை நிழல் கிரகங்களாகும்.

கிரகங்கள் பல வழிகளில் பிரிக்கப்படலாம். குரு, புதன், சுக்கிரன், சந்திரன் மிருதுவான கிரகங்கள். அதேபோல் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியவை கடினமான கிரகங்களாகும். கிரகங்கள் தேவ சபையிலும், அசுர சபையிலும் இடம்பெறுகின்றன. சூரியன், சந்திரன், குரு, குஜன் (செவ்வாய்) தேவ சபையையும், சனி, புதன், சுக்கிரன்

அசுர சபையையும் அலங்கரிக்கின்றனர்.

கோள்களின் சமஸ்கிருதப் பெயர் கிரக. கிரக என்பதற்கு பல சுவாரஸ்யமான அர்த்தங்கள் உண்டு. கிரக என்றால் கிரகித்தல் அல்லது தாங்குதல் என்று பொருள். வேத முனிவர்கள், கோள்கள் நமது உள்ளுணர்வை கிரகிக்கும் சக்தியுடையது என்கின்றனர். மனிதனைப் பிடித்தாட்டும் பேய் என்று பிறிதொரு பொருளுமுண்டு. ஒரு சுவையான ஆராய்ச்சிமூலம், கோள்களின் சக்திகள், இருவேறு பார்வைகள் கொண்டதாகிறது. ஒன்று, நம் நினைவுகளையும், உணர்வுகளையும், செயல்களையும் உருவாக்கு கிறது. மற்றொன்று நம் வாழ்க்கையில் ஒளிக் கதிர்களை வீசுகிறது.

அதன்மூலமாக நம் வாழ்வு மற்றும் வளத் தையும் உயர்த்தி, நமது பாவங்களையழித்து, அறிவொளி ஏற்றுகிறது.

இந்த ஒன்பது கோள்களின் ஜோதிடம், மிகவும் பக்திமயமான, விஞ்ஞானமயமான, பூமியில் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்ணாடியாகி, நாம் இருட்டிலிருந்து மீள்வதற்கான ஒளியையும், சுய அறிவையும் பெறுவதற்கான சக்தியையும் அளிக்கிறது.

வேதரிஷிகளின் கூற்றுப்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு அடிப்படை ஒலியலையை ஏற்படுத்துகிறது. இந்த ஒலியலையைக் கற்பதே அடிப்படை பீஜ மந்திர ஒலி யாகும். மந்திரம் என்பது- தியான நிலையில் உபயோகிக்கப்படும் ஒலி மற்றும் பக்திமயமான பூஜா காரியங்களில் ஒலிக்கப்படும் ஒலியாகும். இதன்மூலமாக உள்ளுணர்வின் உயர்ந்தநிலையை அடையமுடிகிறது.

ஒரு தனி மனிதனுடைய பிறந்த தேதி, நேரம், இடம் மற்றும் அந்த நேரத்திலுள்ள கோள்களின் நிலையைக்கொண்டு, இந்திய ஜோதிடம் அவனது விதியையும், குணநிலைகளையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

செல்: 97891 01742

bala251122
இதையும் படியுங்கள்
Subscribe