சின்னன்சிறு மாற்றங்களால் பெரும் சிக்கல்கள் தீர்க்கும் பரிகாரங்கள் -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/solutions-solve-big-problems-through-small-changes-melmaruvathur-s-kalaivani

மானுட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அனைத்துமே இறையால் அருளப்பட்டவைகளே.

இவற்றுள் ஜோதிடம், அவற்றைச் சார்ந்த பரிகாரங்கள், அவற்றுடன் தொடர்புடைய வழிபாடுகள் போன்றவை அநேக சிறப்புத் தன்மையை அளித்தாலும் நமது வாழ்வியல் வழிமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதனால் தனப் பிராப்தி மற்றும் குடும்ப சுபிட்சம், அதோடு சேர்ந்து பல நன்மைகளையும் நம்மால் பெற்றுவிடமுடியும்.

மேலும் வீட்டின் சுபிட்சத்திற்குப் பெரும் பங்காற்றும் பெண்களின் முயற்சியால், கிடைக்காத யோகத்தையும் அடைந்துவிட முடியும் என்பதே உண்மை.

ss

ஜாதகரீதியான சில கிரக இணைவுகளும் தோஷங்களும் இடம்பெற்றிருந்தாலும், அவை நம் சிந்தனையின்மூலமும் வீட்டின் சூழ்நிலையின் மூலமாகவும்தான் வாழ்வியல் நிகழ்வுகளாக நம்மை வந்தடையும். உதாரணமாக, ஆறு மற்றும் எட்டாம் அதிபதியின் தசை புக்திக் காலங்களில் கடன்சுமை மற்றும் வழக்குகள் போன்றவை ஏற்படும். அதேபோன்று ராகுவின் தசாபுக்திக் காலங்களில் பேராசை யின் காரணமாக தேவையில்லாத முதலீடுகளின் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தும். இது போன்ற சூழ்நில

மானுட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அனைத்துமே இறையால் அருளப்பட்டவைகளே.

இவற்றுள் ஜோதிடம், அவற்றைச் சார்ந்த பரிகாரங்கள், அவற்றுடன் தொடர்புடைய வழிபாடுகள் போன்றவை அநேக சிறப்புத் தன்மையை அளித்தாலும் நமது வாழ்வியல் வழிமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதனால் தனப் பிராப்தி மற்றும் குடும்ப சுபிட்சம், அதோடு சேர்ந்து பல நன்மைகளையும் நம்மால் பெற்றுவிடமுடியும்.

மேலும் வீட்டின் சுபிட்சத்திற்குப் பெரும் பங்காற்றும் பெண்களின் முயற்சியால், கிடைக்காத யோகத்தையும் அடைந்துவிட முடியும் என்பதே உண்மை.

ss

ஜாதகரீதியான சில கிரக இணைவுகளும் தோஷங்களும் இடம்பெற்றிருந்தாலும், அவை நம் சிந்தனையின்மூலமும் வீட்டின் சூழ்நிலையின் மூலமாகவும்தான் வாழ்வியல் நிகழ்வுகளாக நம்மை வந்தடையும். உதாரணமாக, ஆறு மற்றும் எட்டாம் அதிபதியின் தசை புக்திக் காலங்களில் கடன்சுமை மற்றும் வழக்குகள் போன்றவை ஏற்படும். அதேபோன்று ராகுவின் தசாபுக்திக் காலங்களில் பேராசை யின் காரணமாக தேவையில்லாத முதலீடுகளின் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தும். இது போன்ற சூழ்நிலை கள் வரும் தறுவாயில் வீட்டில் கடைப்பிடிக்கப் படும் சில நிகழ்வுகள், இவற்றி-ருந்து இறையருளால் காப்பாற்றிக்கொள்ள சில வாய்ப்புகளை அளிக்கும்.

ஒருநாளின் தொடக்கத்தில் செய்கின்ற வேலையான கோலமிடுத-ல் தொடங்கி அந்தநாளின் இறுதியான தூங்கச் செல்வது வரை சில உன்னதமான செயல்கள் செய்வதன் மூலம் கிரக அழற்சியி-ருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

இதில் ஆன்மிகமும் அறிவியலும் கலந்தே இருப்பது அனேகர் அறிந்திடாத ஒன்றாகும்.

முதல் வேலையான கோலமிடுதல் என்று கூறியிருந்தேன். அந்தக் கோலம் வீட்டின் சுபிட்சத்திற்கு வித்திடும் முதல் படி. இன்றைய சூழ-ல் அவசர நேரத்தில் வேலையாட்களை வைத்துக் கோலமிடும் அனேகமானோரை காணமுடிகின்றது. எவ்வளவு வேலை இருந்தா லும் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத் தலைவி கோலமிடுவது சிறப்பு. மேலும் கோலப் பொடியை உபயோகிக்காமல் பச்சரிசி யைக் கோலமாவு போன்று அரைத்துக் கொடுக்குமாறு கூறினால் நிச்சயமாக அரைவை மில்-ல் அரைத்துத் தருவார்கள். அதனுடன் சிறிது கிராம்பு, மஞ்சள் கிழங்கு, பச்சைக் கற்பூரம், பட்டை போன்றவற்றை சேர்த்து அரைத்துக் கோலமிட சுக்கிரனின் ஆதிக்கம் வாச-ல் வட்டமிட்டு வாழ்வை வளமாக்கும்.

அடுத்ததாக வீட்டில் வளர்க்கும் துளசி, கற்பூரவள்ளி, வேப்பமரம் இன்னும் சில மரங்கள் மற்றும் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது இல்லத்தில் மகிழ்ச்சியை வழங்கும். இதில் சிலோன் கோல்ட் ஸ்பைடர், தொட்டா சிணுங்கி போன்ற செடிகள் பணம் சார்ந்த தடையை உடைக்கும்.

வீட்டைச் சுற்றி யுள்ள சிறு பறவை களுக்கு இனிப்பு கலந்த பொரி மற்றும் பூந்தி போன்றவற்றை உணவாக அளிக்க கடன் சார்ந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.

பிறகு வீடு துடைக்கும் தண்ணீரில் முத-ல் கல் உப்பு அல்லது கடல் நீர் அல்லது மழை நீர், பேய்மிரட்டி இலைச் சாறு சில துளிகள் சேர்த்துத் துடைத்து, பின்பு சுத்தமான நீரில் ரோஜா அல்லது சந்தன அத்தர் சில துளிகள், பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து மறுமுறை வீட்டை மேலோட்டமாகத் துடைக்க சில தீமை மனம் படைத்தவர்களின் வருகையினால் ஏற்பட்ட அதிர்வுகள் துடைத்தெறியப்படும்.

அதோடு தூபம் போடும் முறையில் குங்கி-யம், வெண்கடுகு, மயி-றகு, மாவிலை, தாமரை விதைப் பொடி போன்றவற்றை சேர்த்து தூபமிட்டுவர, காற்றில் கலந்துள்ள எதிர்மறை சக்திகள் விலகி இல்லம் ஈடேறும்.

மேலும் பூஜையறையில் குலதெய்வத்திற் காக ஒரு மண் கலயத்தில் பானகம் தினந் தோறும் வைப்பது தெய்வ சக்தியை குடும்பத் தில் நிலைநிறுத்தும். அதேபோன்று பூஜை விளக்கு மற்றும் அவை தொடர்பான பொருட்களை அந்த குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே சுத்தம் செய்யவேண்டும். வேலையாட்களின்மூலம் பூஜைப் பாத்திரங்களை சுத்தம் செய்யக்கூடாது.

சமைய-ன்பொழுது சாப்பாட்டிற் காக பயன்படுத்தும் அரிசியில் ஒரு பிடி அரிசியை தினந்தோறும் ஒரு வெண்கலப் பாத்திரத்தில் போட்டுவைத்து, மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று யாருக்காவது தானமளிக்க அன்னபூரணியின் ஆசியும் முன்னோர்களின் அருளும் நிச்சயமாகக் கிட்டும்.

சமையலறையின் சூடான பாத்திரங் களைப் பிடித்து இறக்குவதற்காகப் பயன்படும் கரித்துணி, பிடித்துணி, கந்தை என்று அழைக்கப்படும் துணிகள் நாம் பயன்படுத்தி கிழிந்த துணிகளை உபயோகிக்காமல் அதற்காக பிரத்தியேக மாக ஒரு புதுத்துணியை வாங்கி வைப்பது மிகச்சிறந்த செயலாகும்.

தினந்தோறும் நாம் பயன்படுத்தும் நாட்காட்டி தாள்களை கிழித்துக் கசக்கி எறியாமல் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு மேலே நிறுத்தி வைப்பது நம் மனநிலை யில் பெரிய ஒரு மாற்றத்தை அருளும். மேலும் காலண்டர் பிறர் இலவசமாகக் கொடுப்பதைப் பெரும்பாலும் வாங்கா மல் தவிர்ப்பது சிறப்பு. நமது இல்லத் திற்கான நாட்காட்டியை நாமே செலவு செய்து வாங்குவது சந்திரனின் ஆதிக் கத்தை பலப்படுத்தும் ஒரு செயலாகும்.

விளக்கு காலை- மாலை என்று இரு வேளைகளும் ஏற்றவேண்டும். அதில் விளக்கெண்ணெயை சேர்த்து ஏற்றுவது பல குடும்பம் சார்ந்த சிக்கல்களையும் நோய்களையும் தீர்க்கும்.

ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பவர்கள் தங்களின் வாழ்க்கையை மிக எளிமையாகக் கொண்டுசெல்வது மற்றும் நெல்-க்காய் சாறு அருந்துவது, பிறருக்கு செருப்பு தானம் செய்வது போன்றவை சனியின் தீய சூழ--ருந்து விடுபட வைக்கும்.

இதுபோன்ற சிறுசிறு விஷயங்களில் வீட்டுப் பெண்கள் தங்களின் கவனத்தை செலுத்தி வரவிருக்கும் பேராபத்தையும் பெரும் இடரையும் தகர்த்து தனிப்பெரும் ஆளுமையாகத் திகழலாம்.

செல்: 80563 79988

bala240125
இதையும் படியுங்கள்
Subscribe