லகில் வாழ்வியில் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு முழுக்காரணமும் கோட்சார நகர்வுகளே ஆகும். நல்ல நிலையில் செல்லும் கிரகங்கள் மனிதர்களுக்கு நல்லன எல்லாம் தருகிறது. தீய நிலையில் செல்லும் கிரகங்கள் அவை சம்பந்தமான எதிர்மறை நிகழ்வுகளை நடத்திவிடுகிறது.

கஜகேசரி யோகம், சந்திரமங்கள யோகம், அதியோகம், தர்மகர்மாதிபதி யோகம், விபரீத ராஜயோகம், நீசபங்கராஜ யோகம் என இவை பொதுவான நல்ல நன்மை தரும் யோகங்கள். கோட்சாரத்தில் சில ராசிகளில், சில பொழுதுகளில் இந்த நன்மை தரும் அமைப்பு உண்டாகி ஜாதகர்களுக்கு நன்மை தரும்.

இதுபோல சில தீமை தரும் யோகங்களும் அவ்வப்போது, கோட்சாரத்தில் குறிக்கிடும். தற்போதைய கோட்சாரத்தில் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகம் எனும் தீய யோகம் பெறுகிறார்.

சரி, பாப கர்த்தாரி யோகம் என்றால் என்ன, ஒரு சுபக் கிரகமானது, இரு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக் கொள்வதே பாப கர்த்தாரி யோகமாகும்.

நடப்பு கோட்சாரத்தில் சுக்கிரன் எனும் சுபக்கிரகம் சனி மற்றும் ராகு என இரு பாபர் இடையே மாட்டிக்கொள்கிறார். இது எப்போதிலிருந்து எப்போது வரை நடப்பில் உள்ளது.

வாக்கியப்படி, சுக்கிரன் மார்கழி 15-ஆம் தேதி, 2024, டிசம்பர் 30-ஆம் தேதி கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

அங்கு ஏற்கெனவே சனி உள்ளார்.

அதற்கடுத்த ராசியான மீனத்தில் ராகு உள்ளார். எனில் டிசம்பர் 30-ஆம் தேதியிலிருந்தே சுக்கிரன் பாபகர்த்தாரி யோகம் பெறுவார் என்றால் இல்லையென்ற பதிலே கிடைக்கும். இது பொதுவாக பார்த்தால், சுக்கிரன் சிக்கலில் மாட்டிக்கொண்டது போன்ற தோன்றினாலும், உண்மை யில் டிகிரி, நட்சத்திர பாதக் கணக்குப் படி, சுக்கிரன் கும்ப ராசியில் நுழைந்த வுடன், அவர் பாப கர்த்தாரி யோகத் தில் சிக்கவில்லை.

2024, டிசம்பர் 30 அவிட்டம்- 3- கும்பம்.

2025, ஜனவரி 1 அவிட்டம்- 4- கும்பம்.

2025, ஜனவரி 4 சதயம்- 1- கும்பம்.

இதன்பிறகு, 2025 ஜனவரி 7-ஆம் தேதி மார்கழி 23-ஆம் தேதி சதய நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் நுழைகிறார். அங்கு அதே சதய 2-ஆம் பாதத்தில் சனி நிலை கொண்டுள்ளார். எனவே நிஜமாகவே 2025 ஜனவரி 7-ஆம் தேதிமுதல், சுக்கிரன் பாப கர்த்தாரி யோகம் பெறுவார்.

2025 தை 15 ஜனவரி 28-ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு சென்று விடுவார். அங்கு ராகு நகர்ந்து கொண்டுள்ளார். எனவே சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தைத் தொடர்வார்.

மீனத்தில் சுக்கிரன் உச்சமடைவார் என்பது கவனித்தக்கது.

எனினும், மாசி 20, மார்ச் 4-ஆம் தேதி சுக்கிரன் வக்ரநிலை அடைகிறார். அதனால், உச்ச சுக்கிரன் வக்ரம்பெற்று, நீச நிலைக்கு சென்றுவிடுவார்.

சுக்கிரன் 2025 வைகாசி 17, மே 31-ஆம் தேதியில் சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுவார்.

(சித்திரை 4 ஏப்ரல் 17-ல் சுக்கிரன் வக்ரநிவர்த்தி பெற்று, மறுபடியும் உச்ச நிலையை அடைவார்.)

12

ஏப்ரல் 26-ல் ராகு தன் இருப்பிடத்தை மாற்றி கும்ப ராசிக்கு சென்றுவிடுவார்.

திருக்கணிதப்படி 2025, மார்ச் 29 சனி, மீன ராசிக்கே போய், அங்கு ராகு+சுக்கிரனோடு தங்குகிறார். இந்த கணக்குப்படியும் சுக்கிரனின் நிலை டேன்ஜர்தான்.

Advertisment

எது எப்படியிருப்பினும், 2025, ஜனவரி யிலிருந்து, மே மாதம் கடைசிவரை, சுக்கிரன் பாப கர்த்தாரி யோகம் பெற்று படாதபாடு படப் போகிறார். அதில் நோ டவுட்.

பாப கர்த்தாரி யோகம் பெற்ற சுக்கிரன் என்ன செய்வார்.

சுக்கிரன் திரைப்பட உலகைக் குறிப்பவர். திரைப்படத்துறை முழுவதும் குறிப்பிட்ட சிலரின் கை பிடிக்குள் சென்றுவிடும்.

Advertisment

அவர்களில் சிலர் சட்டப்புறம்பான நபர்களாக இருப்பர். அவர்கள் சொல்படிதான் திரையுலகம் நடக்கும். சில நடிகைகள் பிறரின் கட்டுப்பாட்டுக்குள் மாட்டிக்கொண்டு படாதபாடுபடுவர்.

சுக்கிரன்- பொன், வெள்ளி, வைர வியாபாரத்தைக் குறிப்பார். எனவே இதன் விலைகள், சிலரின் நடவடிக்கையால் நிலையற்றதாகிவிடும். சிலசமயம் இவற்றில் தட்டுப்பாடும் ஏற்படும்.

சுக்கிரன்- உணவு, அடுக்குமாடி வீடுகள், வங்கி, சுற்றுலா, வாகனங்கள், வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்கள் என சொகுசான பொருட்களைக் குறிப்பார். இவைசார்ந்த விற்பனையை எந்தவழியில் மேன்மையாக கொண்டுசெல்வது என ஒரு தடுமாற்றம் ஏற்படும். எனவே ரியல் எஸ்டேட் சார்ந்தோரும், வீடு வாங்க நினைப்ப வர்களும், 2024, டிசம்பர் 30-க்குள் ஒரு அட்வான்ஸ் மாதிரி கொடுத்து, உறுதி செய்துகொள்ளுங்கள்.

சுக்கிரன் இளம் பெண்களைக் குறிப்பார். குறிப்பாக திருமணம், வெளிநாட்டு வேலை, பணியில் சேர்வது, பணி மாற்றம் இவற்றை டிசம்பர் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்துவிடுங்கள். முடியாவிட்டால் 2025 ஏப்ரல் மாதம் மாறுதல் செய்துகொள்ளவும். இளம் நடிகைகளும், புது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, மேற்கண்ட தேதிகளை நினைவில் கொள்ளவேண்டும்.

சுக்கிரன், மீன ராசியில் இருப்பதால், வெளிநாட்டுப் பயணங்கள் ரொம்ப இம்சை தரும்.

சுக்கிரன் சற்று காதல் சார்ந்த காரக முடையது. எனவே காதல் விஷயம் பெண்களை கொண்டு எதிர்மறை தொழில் செய்வோர் என இவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். கண்டிப்பாக கம்பி எண்ணும் நிலை உண்டு.

சுக்கிரன், இந்த கோட்சாரப்படி, மீனம் எனும் கடல் ராசி சம்பந்தம் கொள்கிறார். எனவே கடல் கடந்து பயணம், மீனவர்கள் என இவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

12 ராசிக்காரர்களும் யாரிடம் மாட்டிக்கொள்ளப் போகிறார்கள்

மேஷ ராசி

திருமணம் முடிந்து, வெளிநாடு செல்பவர்கள், அங்குள்ள குடும்பத்திடம் அல்லது நிதி நிறுவனத்திடம் மாட்டிக் கொள்வர்.

ரிஷப ராசி

வேலையில் ஏற்படும் பதவி உயர்வால் விழி பிதுங்குவர். அல்லது பெண் அரசியல்வாதி வழக்குகளில் மாட்டிக்கொள்வர்.

மிதுன ராசி

வாரிசுகளின் தொழில் முதலீடு, பங்கு வர்த்தகம், கலைத்துறை, பூர்வீக தொழில் இதில் ஏதோ ஒன்று உங்களின் கண்ணை நோண்டுவதுபோல் படாய்படுத்தும்.

கடக ராசி

உங்கள் தாயாருக்கு கிடைக்கப்போகும் பதவி உயர்வு அல்லது அரசியல் மேன்மை, பிறந்த இட கோவில் இவை உங்களை ஆட்டிப் படைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் உடன்பிறந்த சகோதரிக்கு வரும் இன்னல் அல்லது வேலை செய்யும் பெண் இவர்களால் மண்டை காய்ந்து போய் விடுவீர்கள். சில ஒப்பந்தங்கள் அதிர்ச்சி தரும்.

கன்னி ராசி

உங்களின் திருமண விஷயம் அதிரி புதிரியாகி, அதனை எவ்வாறு கையாள்வது, எவ்விதம் மீள்வது எனத் தெரியாமல் பைத்தியம் பிடித்த நிலைக்கு வந்துவிடுவீர்கள். கூடவே உங்கள் தந்தையின் உடல்நிலை சீர்கேடும் சேர்ந்துகொள்ளும்.

துலா ராசி

இந்த பாக்கு வெட்டி சுக்கிரன். உங்களுக்கு ஒரு நன்மை தருவார். இதுவரையில், உங்களை பாடாய்படுத்திக்கொண்டிருந்த எதிரிகள் சின்னாபின்னமாகி விடுவர். கூடவே நீங்களும் ஒரு வழக்கில் சிக்கனாலும், அது உங்களை ரொம்ப பாதிக்காது.

விருச்சிக ராசி

காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மிகுந்த இன்னலை, படபடப்பை எதிர் கொள்ளக்கூடும். கலைத்துறையில் திருமண மான தம்பதிகளின் பிரிவு மிகுந்த விமர்சனம் பெறும்.

தனுசு ராசி

உங்கள் நண்பர்களின் வீட்டுக்கடன் சம்பந்தமான விஷயம், உங்கள்புறம் திரும்பி, பூதாகரமான பிரச்சினை ஆகிவிடும்.

மகர ராசி

கலைத்துறையில் தொழில் செய்யும் அனைத்து தரப்பினரும், வதந்திகள், வம்புகள், கோள் சொல்லும் ஆட்கள் இவர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மனநலமும் உடல்நலமும் குன்றிப்போக நேரிடும். உங்கள் இளைய சகோதரியின் காதல், விஷயங்களால், வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்படும்.

கும்ப ராசி

உங்கள் பெற்றோர்களால் ஒரு புறம் இன்னலும், நிதி நிலைமையின் கீழான புழக்கம் இன்னொரு புறமும் மாட்டிவிட்டு பிழிந்து எடுக்கும்.

மீன ராசி

உங்களைப் பற்றிய மிக மோசமான வதந்தியும், உங்களிடம் பணிபுரியும் பெண் தொழிலாளர் சார்ந்த ஒரு மோசமான விஷயமும் சேர்ந்து, உங்களை தவறான முடிவு எடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். மீன ராசி பெண்கள், உங்கள் கணவரின் உடல்நிலையிலும் சற்று கவனமாக இருங்கள்.

சுக்கிரன் என்றதும் மகாலட்சுமித் தாயார் நினைவுக்கு வருவார். எனினும் மேற்கண்ட கோட்சாரக் காலத்தில், சுக்கிரனுடன் சனியும், ராகுவும் சம்பந்தம் பெறுகின்றனர்.

எனவே உங்களுக்கு ஆகிவந்த காளியை, துர்க்கையை, மகா மாரிகளை வணங்குவது சாலச் சிறந்தது.

(கோட்சாரப் பலன் எனும்போது ராசியை மட்டுமே கணக்கில் எடுக்கவேண்டும்).

செல்: 94449 61845