ராமர் தன் தாய் கோசலை, சிற்றன்னை கைகேயி, மனைவி சீதை, வேலைக்காரி கூனி, தனக்கு சம்பந்தமே இல்லாத பாமரப்பெண் மற்றும் சூர்ப்பனகை போன்ற பெண்களால் சிரமங்களை அடைந்தார்.

மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்தில் இரண்யாட்சனைக் கொன்று, அவன் மனைவியை விதவைக் கோலம் பூணச் செய்தார். நரசிம்மாவதாரத்தில் இரண்யகசிபுவைக் கொன்று, நாராயணனின் பக்தையான அவன் மனைவியை கணவனை இழந்து வாழச்செய்தார். வாமன அவதாரத்தில் மகாபலி மன்னனைக் கொன்று தன் பக்தனின் மனைவியை விதவையாக்கினார். மகாவிஷ்ணு இந்த பூமியில் எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு மன்னனைக் கொன்று, அவர்களின் மனைவிகளை விதவைக் கோலத்தில் வாழச்செய்தார். இது பெண் சாபம்.

இராமரின் வம்ச முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன், விஸ்வாமித்திர ருக்கு தான் பட்ட கடனுக்காக தன் மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாசனையும் பணத்திற்காக அடமானம் வைத்தார். மனைவியையும் மகனையும் பிரிந்து வாழ்ந்தார். கட்டிய மனைவியைக் காப்பாற்றாத பாவம் அந்த வம்சத்தில் பிறந்த இராமருக்கு உண்டானது.

பரசுராம அவதாரத்தில், அவரது தந்தை ஜமதக்னி முனிவர், பரசுராமரின் தாயைக் கொல்லவேண்டும் என கட்டளையிட்டார். அதையேற்று பெற்ற தாயைக் கொன்றார் பரசுராமர். அதனால் ஏற்பட்ட தாய் சாபம்! பரசுராமர் தாயை வெட்டிக்கொல்ல முயன்றபோது, அவளுக்கு அடைக்கலம் தந்த பாமரப்பெண் தடுத்ததால், அவளையும் வெட்டிக்கொன்றார். அதனால் உண்டான பாமரப்பெண் சாப தோஷம். இதுபோன்று ஒவ்வொரு அவதாரத்திலும் பெண் களை பாதிப்படையச் செய்ததால், அந்த வினைகள் இராமருக்கு பல பாதிப்புகளைத் தந்தன.

Advertisment

rr

மனிதன் ஒரு பாவச் செயலைச் செய்யும்போது, அது மறைமுகமாகச் செயல்பட்டு பலரையும் பாதிக்கும். மகாவிஷ்ணு மன்னர்களை மட்டும்தான் கொன்றார். ஆனால் அந்த செயலால் கொல்லப்பட்டவரின் மனைவி, மகன், குடும்பம் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். தன்னையறியாமலேயே அவர்களுக்குத் தீமை செய்தாலும், அந்த சாபம் இராமரை அனுபவிக்கச் செய்துவிட்டது. ஒரு பாவம் பலரது சாபத்தைத் தந்துவிடும்.

அயோத்தி மன்னன் தசரதன் தன் இளைய மனைவி கைகேயி பேச்சைக் கேட்டு மகன் இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல கட்டளையிட்டார். அப்போது இராமனைப் பெற்ற தாயான கோசலை தன் மகனைக் காட்டுக்கு அனுப்பவேண்டாம் என்று தன் கணவனிடம் கூறவில்லை. தடுத்துப் போராடவில்லை. இதற்கு என்ன காரணம்?

பரசுராம அவதாரத்தில் தந்தையின் சொல்லை நிறைவேற்ற, பெற்ற தாயென்றும் பாராமல் தாயை வெட்டிக்கொன்றார். அந்தத் தாயின் சாபம், இராமாவதாரத்தில் தாயின் ஆதரவு இராமருக்கு இல்லாமல் தடுத்தது. மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துப் பலரை கொன்றதால், அவர்களது மனைவிகள் விதவையானார்கள்.

இராமனின் தந்தை தசரதன் தன் மகன் இராமனைப் பிரிந்ததால் புத்திர சோகத்தால் இறந்து போனார். தசரதனின் 60 ஆயிரம் மனைவிகளும் விதவையானார்கள். இங்கு ஒரு சூட்சும ரகசியத்தை பிருகு மகரிஷி கூறுகிறார். மகாவிஷ்ணு கொன்றது மன்னர்களை. இந்த பாவத்திற்குரிய தண்டனையை இராமர்தான் அனுபவித்து, தான் மரணமடைந்து சீதையை விதவையாக்கியிருக்க வேண்டும். ஆனால் தசரதன் மாண்டான். இராமன் அயோத்திக்கு பட்டம் சூட்டிக்கொண்டு அரசனாக இல்லாததால், இந்த பாவத் தாக்கம் தந்தை தசரதனைச் சேர்ந்தது. இராமனை தந்தை இல்லாதவனாகச் செய்தது.

இந்த தாய் சாபம்தான் மகாவிஷ்ணுவின் அடுத்த அவதாரமான கிருஷ்ணாவரத்தில் தொடர்ந்து வந்தது. கிருஷ்ணர் பிறந்தவுடன் தாயிடமிருந்து பிரிந்து கோகுலத்தில் வேறொரு பெண்ணான யசோதையிடம் வளரச் செய்தது. கிருஷ்ணாவதாரத் திலும் பெற்ற தாய்ப்பாசம் கிடைக்காமல் செய்து விட்டது.

ஒரு மனிதன் ஒரு பிறவியில் செய்த பாவம் நிவர்த்தி செய்யப்படாமலிருந்தால், அவை அவன் எடுக்கும் அத்தனைப் பிறவிகளிலும் தொடர்ந்து அனுபவிக்கச் செய்யும் என்னும் உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் அனுபவிக் கும் சிரமங்களுக்கு காரண காரியத்தைப் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்பதையே இராமரும் கிருஷ்ணரும் நமக்கு வாழ்ந்து காட்டித் தெரிய வைத்தார்கள்.