ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றிருந்தால், அவர் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துவிடுவார். சுக்கிரன் (மனைவி) வக்ரம் பெற்றிருந்தால் மனைவி, கணவனை வெறுத்துப் பிரிந்து சென்றுவிடுவாள். இதேபோன்று, ராகு- கேது கிரகங்களுக்கு ஒருபுறம் குரு இருந்து, அதற்கு எதிர்ப்புறமுள்ள ஏழு ராசிகளில் ஏதாவது ஒரு ராசியில் சுக்கிரன் இருந்தால், கணவன்- மனைவியிடையே பிரிவு ஏற்படலாம்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன் சம்பந்தத்தினால், பூர்வ ஜென்ம மனைவியை மணந்து இருவரும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில், யாராவது ஒருவர் இறந்து போகவோ, ஏதாவது ஒரு காரணத்தில் பிரிந்துபோகவோ நேரும். போனபிறவி குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தார்களோ, அந்த விடுபட்ட கால அளவு மட்டும் இணைந்து வாழ்ந்து பின் பிரிந்துவிட நேரிடும். மேலும் பூர்வ ஜென்மத்தில் அனுபவிக்காத தாம்பத்திய உறவுக்கணக்கு எவ்வளவு மீதம் இருந்ததோ, அவ்வளவு முறை தாம்பத்திய உறவினை அனுபவித்து முடித்துவிட்டால் பிரிவு, இழப்பு ஏற்பட்டுவிடும். பூர்வ ஜென்ம கணவன்- மனைவிக்கு இப்பிறவியில், ஆயுள்கணக்கீடு வருடக் கணக்கில் இல்லை; தாம்பத்திய உறவுக் கணக்கில் உள்ளது.
ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில், ஒரே நட்சத்திர மண்டலத்தில் குருவும், சுக்கிரனும் இருந்து, சுக்கிரன் இருக்கும் நட்சத்திர பாதத்திற்கு அடுத்த பாதத்தில் குரு இருந்தாலும், குரு இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் சுக்கிரன் இருந்தா லும், அவருக்கு பூர்வ ஜென்மத்தில் யார் மனைவியாக இருந்தாளோ, அவளே இவரைத் தேடிவந்து மனம் புரிந்துகொள்வாள்.
அதாவது பெண் இவரைத் தேடிவரும்.
இந்த நிலைக்குக் காரணத்தையும் தெரிந்துகொள்வோம். போன ஜென்மத்தில், இவர் மனைவி இவரை ஒதுக்கிவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். அந்தப் பிறவியில் இவருடன் சேர்ந்துவாழாத அளவு வாழ்நாள் வாழ்க்கையை, இவருடன் அனுபவிக்காத மீதியுள்ள தாம்பத்திய உறவை தீர்த்துமுடிக்க, இந்தப் பிறவியில் பூர்வ ஜென்ம கணவனைத் தேடிவந்து திருமணம் செய்து கொள்வாள். இதுபோன்று குரு, சுக்கிர அமைப்புள்ள, ஜாதகரின் மனைவி, கணவன் மீது அதிக பாசமுள்ளவளாக இருப்பாள். ஆனால் கணவனுக்கு மனைவி மீது பாசம் அதிகம் இராது.
குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்து, குரு இருக்கும் நட்சத்திர பாதத்திற்கு அடுத்த பாதத்தில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது குரு இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் சுக்கிரன் இருந்தாலும் போனபிறவி மனைவியை இவர்தான் தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுபோன்று குரு, சுக்கிரன் அடுத்தடுத்து அமைந்த ஜாதகர் கள், தாங்கள் மனைவிமீது அதிகமான பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் மனைவிக்கு இவர்மீது பாசம் அதிகம் இருக்காது.
குரு, சுக்கிரன் இணைந்திருந்து, திருமணம் தாமதமாகிக்கொண்டே இருக்கும் ஆண்கள், திருமணத்தடை விலக, எவ்வளவு பூஜை, ஹோமம், யாகம், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்தாலும், தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் செய்துவைத்தாலும், பலவிதமான விரதங்கள் இருந்து தானதர்மங்கள் செய்தாலும் திருமணம் நடை பெற கால தாமதமாகிக்கொண்டே செல்லும்.
திருமணத் தடைகள். விலக, குரு, சுக்கிரன் நிலையறிந்து, தனது பூர்வ ஜென்ம மனைவி யார் என்பதையறிந்து, முன்ஜென்மத்தில் மனைவிக்கு செய்த பாவ- சாபம் என்ன என்ற சூட்சும ரகசியத்தை அறிந்து சாபநிவர்த்தி செய்தால் தடை விலகும்; திருமணமும் நடக்கும்.
ஒரு ஆணின் திருமணத் தடைக்குக் காரணமான இன்னும் ஒரு சூட்சும ரகசியத்தையும் அறிவோம். ஆண்களின் ஜாதகத்தில் 1, 5, 9-ஆவது ராசிகளில் குரு, புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருந்தால், இதில் குரு ஜாதகரையும், புதன் அவரின் இளைய தங்கை, தம்பியையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் உதாரண கிரகங்களாகும்.
ஜாதகரைக் குறிக்கும் குரு இருக்கும் நட்சத்திர பாதத்திலோ அல்லது அடுத்த நட்சத்திரத்திலோ புதன் இருந்து, புதன் இருக்கும் நட்சத்திர பாதத்திற்கு அடுத்த பாதத் திலோ அல்லது அடுத்த நட்சத்திரத்திலோ மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரன் இருந் தால், அந்த ஆணுக்கு திருமண வயதில் தம்பி, தங்கை இருந்தால், அவர்களுக்குத் திருமணம் முடிந்தபின்புதான் ஜாதகருக்குத் திருமணம் நடக்கும். மூத்தவருக்குத் திருமணம் செய்துவிட்டு, பின் இளையவர்களுக்கு செய்யலாம் என்று நினைத்தால், ஜாத கருக்கு அவ்வளவு எளிதில் திருமணம் நடக்காது. தம்பி, தங்கையின் திருமணமும் தடைப்பட்டுக் கொண்டே செல்லும்.
ஆண் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் புதன் இருந்து அதற்கு அடுத்த 3-ஆவது ராசியில் சுக்கிரன் இருந்தாலும், தம்பி, தங்கைக்குத் திருமணம் முடிந்தபின்புதான் ஜாதகருக்குத் திருமணம் நடக்கும். இந்த ஜாதகர் மனைவியை அடைய, தம்பி, தங்கையின் திருமணம் தடை செய்யும்.
ஆண்கள் ஜாதகத்தில், குரு, சுக்கிரன் 1, 5, 9-ஆவது ராசிகளில் இணைந்து என்ன பலன்களைத் தருமோ, அதே பலன்களை பெண்களின் ஜாதகத்தில் கணவனைக் குறிப்பிடும் உதாரண கிரகமான செவ்வாயுடன், ஜாதகியைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சுக்கிரன் அமைந்திருந் தால் திருமணத் தடை, கணவன்- மனைவி பிரிவு, இழப்பு, வழக்கு என சந்திக்க நேரிடும்.
பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் அவர் பூர்வஜென்ம கணவனையே இப்பிறவியில் கணவனாக அடைந்து வாழ்வாள். சுக்கிரனுக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இதே வரிசை முறைப்படி ஒரே நட்சத்திர மண்டலத்தில் இருந்தால், தம்பி, தங்கைக்குத் திருமணம் முடிந்தபின்பே இவளுக்குத் திருமணம் நடக்கும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாயுடன் புதன் சம்பந்தம் பெற்றிருந்தால், இவள் ஜாதக விதிப்படி கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்புண்டாகும்.
ஒரு ஆணின் ஜாதகத்தில், குரு இருக்கும் நட்சத்திர பாதத்திற்கு அடுத்த பாதத்தில் மனைவி கிரகமான சுக்கிரன் இருந்து, அதற்கு அடுத்த பாதத்தில் மோட்சம் தரும் கேது இருந்து, இந்த மூன்று கிரகங்கள் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் எந்த கிரகமும் இல்லையென்றால், ஆண் வாரிசு தடைப்பட்டு கணவன்- மனைவி இருவரும் இந்தப் பிறவியிலேயே மோட்சமடைவார்கள். இனி இவர்களுக்கு பூமியில் பிறப்பு கிடையாது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், கேது என மூன்று கிரகங்களும் இதே வரிசைப்படி ஒரே நட்சத்திரத்தில் இருந்து, இந்த மூன்று கிரகங்கள் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில், எந்த கிரகமும் இல்லையென்றால், ஜாதகியும் அவள் கணவனும் இந்தப் பிறவியிலேயே மோட்சமடைவார்கள்.
இராமனின் ஜாதகத்தில் இதுபோன்று அமைந்துள்ள குரு, சுக்கிரன் இணைவு, ராகு- கேது சம்பந்தம் முந்தைய அவதாரங்களில் பிறருக்கு செய்த செயல்களுக்கு உண்டான விளைவுகளைத் தந்து, இராமரையும் சீதையையும் திருமணத்திற்குப்பின் அமைந்த குடும்ப வாழ்வில் சிரமங்களை அனுபவிக்கச் செய்தது.
சித்த ஜோதிட முறையில் உங்கள் ஜாதகப் பலனறிய லக்னம், ராசியைக் கொண்டு பலனறிய வேண்டாம். 12 ராசிகளிலுமுள்ள கிரகங்களை மட்டும் பலனறிய பயன்படுத்திக்கொள்ளவும்.
திருமண முகூர்த்த நாள் பற்றிய பலனறியும்போதும், அன்றைய நாளில் 12 ராசிகளிலுள்ள கிரகங்களின் நிலையைமட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முகூர்த்த லக்னம், ராசி, அன்றைய நட்சத்திரத்தினை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(தொடரும்)
செல்: 99441 13267