இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (20) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-20-siddhardasan-sundarji-jeevanadi-observational

"பாலஜோதிடம்' வாசகர்கள் பலர், புராணங்களுக்கும், இதிகாசங் களுக்கும் வேறுபாடு உண்டா என கேட்கின்றனர்.

புராணங்களும் இதிகாசங்களும் மனிதர்கள் வாழ்வில் பாவ- சாபப் பதிவுகளால் உண்டாகும் சிரமங்கள், தடைகள் நீங்குவதற்கு வழிகாட்டும் கருத்துகளைக் கூறும் நூல்களா அல்லது கடவுள் வழிபாடு, பிரார்த் தனைகள் பற்றிக்கூறும் நூல்களா என்றும் கேட்கின்றனர்.

இதுபோன்று இன்னும் பல வினாக் களுக்கும், சித்தர்கள் கூறும் உண்மையான விளக்கத்தையும், பதிலையும் அறிவோம்.

புராணங்கள் என்றால் காலத்தால் தொன்மையானது, மிகவும் பழமையானது, புராதனமானது என்று பொருளாகும். ஆதியில் முதல் புராணம் யாரால் எழுதப் பட்டது? அதன்பிறகு 18 புராணங்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதை அறிவோம்.

இந்த பூமியில் காலக் கணக்கீடு தொடங்கிய முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மாவினால் 100 கோடி கிரந்தங்களைக்கொண்டு "பிராம்மம்' என்னும் பெயரில் ஒரு நூல் எழுதப்பட்டது. இதுவே முதல் புராண நூலாகும்.

ஒவ்வொரு யுகத்திலும் வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை நிலை பற்றிய வரலாற்றையும், இந்த பிராம்மம் என்னும் புர

"பாலஜோதிடம்' வாசகர்கள் பலர், புராணங்களுக்கும், இதிகாசங் களுக்கும் வேறுபாடு உண்டா என கேட்கின்றனர்.

புராணங்களும் இதிகாசங்களும் மனிதர்கள் வாழ்வில் பாவ- சாபப் பதிவுகளால் உண்டாகும் சிரமங்கள், தடைகள் நீங்குவதற்கு வழிகாட்டும் கருத்துகளைக் கூறும் நூல்களா அல்லது கடவுள் வழிபாடு, பிரார்த் தனைகள் பற்றிக்கூறும் நூல்களா என்றும் கேட்கின்றனர்.

இதுபோன்று இன்னும் பல வினாக் களுக்கும், சித்தர்கள் கூறும் உண்மையான விளக்கத்தையும், பதிலையும் அறிவோம்.

புராணங்கள் என்றால் காலத்தால் தொன்மையானது, மிகவும் பழமையானது, புராதனமானது என்று பொருளாகும். ஆதியில் முதல் புராணம் யாரால் எழுதப் பட்டது? அதன்பிறகு 18 புராணங்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதை அறிவோம்.

இந்த பூமியில் காலக் கணக்கீடு தொடங்கிய முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மாவினால் 100 கோடி கிரந்தங்களைக்கொண்டு "பிராம்மம்' என்னும் பெயரில் ஒரு நூல் எழுதப்பட்டது. இதுவே முதல் புராண நூலாகும்.

ஒவ்வொரு யுகத்திலும் வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை நிலை பற்றிய வரலாற்றையும், இந்த பிராம்மம் என்னும் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு பல ரிஷிகள், முனிவர்கள் தங்கள் சுய கருத்துகளையும் சேர்த்து, பிராம்மம், பாத்துமம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பவிஷ்யத்து, பிரம்மகைவர்த்தம், லிங்கம், வராகம், வாமனம், ஸ்காந்தம், கவுர்மடம், மாச்சியம், காரூடம் என்று 18 புராணங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுகத்தில் எழுதிவைத்துள்ளனர்.

புராணக் கதைகளில், ஒருவர் மற்றவர்களுக்குத் தன் மனம், வாக்கு, சரீரத்தால் பாவங்களை, தீமைகளைச் செய்து, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் வருந்தி விட்ட வாக்கு சாபங்கள், செய்த பாவங்களைத் தீர்த்துமுடிக்க வேண்டி, பல பிறவிகள் பிறக்கும். கடவுள்கள் ஆனாலும், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இந்த பூமியில் பிறப்பவர்கள் அனுபவிக்கும் நன்மை- தீமைகளும், அவர்களின் வாழ்க்கை வரலாறும் விரிவாகக் கூறப் பட்டுள்ளது.

ramar

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்புக்குக் காரணமான முற்பிறவி பாவ- சாபங்களையும், முதல்பிறப்பு, காலம், வம்சம், குலம், வம்ச வாரிசுகள் விவரம், ஒவ்வொரு பிறவியிலும் மேலும், மேலும் செய்யும் செயல்கள்- அதனால் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்கள், தடைகள், இழப்புகள் என அனுபவித்து, செய்த பாவங் களை, பெற்ற சாபங்களை நிவர்த்திசெய்து, பூமியில் பிறவித் தொடர்ச்சியை முடித்து, மோட்சமடைய வழிமுறைகள் என பிறப் பின் தொடக்கம்முதல் பிறவி முடியும்வரை, ஒரு மனித ஆத்மாவின் செயலையும், நிலையையும் பற்றிய அனைத்தையும் கூறுவது புராணக் கதைகளாகும். இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் ஒரு புராணம் உண்டு. தன் குலம், வம்சம், முற்பிறவி வாழ்வுநிலை என தன் புராணத்தை அறிந்தவனே தன்னையறிந்து வாழ்ந்து, தன் பாவ- சாபங்களைத் தீர்த்துக்கொள்ளமுடியும் என்பதை புராணங்கள் கூறுகின்றன.

உதாரணமாக, விஷ்ணு (வைஷ்ணவ) புராணத்தில் மகாவிஷ்ணு இம்மண்ணுலகில் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன் என எட்டு அவதாரங்களை எடுத்துப் பிறக்கக் காரணங்களையும், ஒவ்வொரு அவதார காலம், பிறப்பின் நிலை, குலம், பிறருக்குச் செய்த தீமை, பாவங்கள், அதனால் அவதாரத் தொடர்ச்சி, ஒவ்வொரு பிறவியிலும் அனுபவித்த சிரமங்கள், இறுதியாக அனைத்து பிறவி பாவ- சாபங்களை நிவர்த்திசெய்த வழிமுறைகள், அவதாரப் பிறப்புக் கணக்கை முடித்து மோட்ச நிலையை அடைந்ததுவரை அனைத்து விவரங்களையும், தெளிவாகக் கூறுகிறது. இதேபோன்றுதான் 18 புராணங்களும் ஒவ்வொருவரின் பிறவி நிலை, வாழ்க்கை நிலையை ஆதிமுதல் அந்தம்வரை முழுமை யாகக் கூறுகின்றன.

ஒரு தனிமனிதன் தன் முற்பிறவிகளில் செய்த பாவங்கள், அவன் வம்ச முன்னோர் கள் செய்த பாவங்கள், அதற்குரிய தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து வாழ்ந்து, இறந்துபோன விவரங்கள்வரை, ஒரு தனிமனிதனைப் பற்றிய வரலாற்றை மட்டும் கூறுவது இதிகாச நூல்களாகும்.

இராமனின் வரலாற்றைக் கூறும் காவியமான இராமாயணம், கிருஷ்ணரின் வாழ்வின் செயல்களைப் பற்றிக் கூறும் மகாபாரதம் என இவை இரண்டும் இதிகாசங்கள் எனக் கூறப்படுகின்றன. இவை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

இராமாயண காவியத்தில் மகாவிஷ்ணு, மச்சம்முதல் பரசுராமன் வரை, எடுத்துப் பிறந்த அவதாரங்களில் மற்றவர்களுக்குச் செய்த பாவங்கள், அவர்களால் பெற்ற சாபங்களுக்குரிய தண்டனைகளை, ஏழாவது அவதாரமான இராமாவதாரத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அனுபவித்தார்- இராமாவதாரத்தில் அவர் செய்த செயல்களைப் பற்றிய விவரங்கள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

மச்சாவதாரம்முதல் இராமாவதாரம் வரையுள்ள ஏழு அவதாரங்களில் செய்த அனைத்து பாவங்களையும், பெற்ற சாபங்களையும், தனது எட்டாவது அவதாரப் பிறப்பான கிருஷ்ணாவதாரத்தில், தனது சுயஅறிவைப் பயன்படுத்தி, நடைமுறைச் செயல்கள்மூலம் எவ்வாறு நிவர்த்திசெய்து பிறப்பின் கணக்கை முடித்து, மண்ணுலகில் மனிதப் பிறவியில்லாத நிலையை அடைந்தார் என்றும், ஒரு மனிதன் ஆத்மா, முற்பிறவி பாவ- சாபங்களை நிவர்த்திசெய்யும் வழிமுறைகளையும் மகாபாரதம் கூறுகிறது.

மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரம் அவரின் கடைசி அவதாரமாகும். இனி அவதாரப் பிறப்பு அவருக்கு கிடையாது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஒரு மனிதன் இந்த பூமியில் ஏழு பிறவிகள் பிறந்து பாவங்கள் செய்து வாழ்ந்து, 8-ஆவது பிறவியில் தனது அனைத்து பாவ- சாபங்களையும் நிவர்த்திசெய்து மோட்சமடைவான் என்று கூறப்படு கிறது. இதனையே சித்தர் பெருமக்களும் "ஏழு பிறவி பிறந்திளைத்தேன்' என்று கூறுகிறார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala270522
இதையும் படியுங்கள்
Subscribe